அரசின் அனைத்து ஐடில்ஃபிட்ரி திறந்தவெளி இல்ல உபசரிப்புகளை நடத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு மோதலின் சாத்தியமான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு விவேகத்துடன் செலவிடுவதற்கான ஒரு எச்சரிக்கையான நடவடிக்கை இது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ஹரி ராயா ஐடில்ஃபிட்ரிக்கு அரசாங்கம் எந்த திறந்தவெளி இல்லத்தையும்…
பிஎன் ஆதரவாளர்களிடமும் நியாயமாக நடந்து கொள்வதாக குவான் எங் வாக்குறுதி
முதலமைச்சர் லிம் குவான் எங், தமது பினாங்கு மாநில அரசாங்கம், ஞாயிற்றுக் கிழமை தேர்தலில் பிஎன் -னுக்கு ஆதரவு அளித்தவர்கள் உட்பட மாநிலத்தில் உள்ள எல்லா குடி மக்களிடமும் நியாயமாக நடந்து கொள்ளும் என வாக்குறுதி அளித்துள்ளார். பினாங்கு மாநில முதலமைச்சராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று பதவி உறுதிமொழி…
உத்துசானின் முதல்பக்கச் செய்தியால் ஆத்திரமடைந்த வலைமக்கள் டிவிட்டரில் சாடல்
இன்றைய உத்துசான் மலேசியா, ‘Apa lagi Cina mahu?’(சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்) என்ற தலைப்பில் அதன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா உள்பட பலரையும் ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. அவர்கள் டிவிட்டரில் பதிவிட்டு தங்கள் ஆத்திரத்தைக் கொட்டியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் …
தேர்தல் மோசடிகளை புலனாய்வு செய்யும் குழுவுக்கு ராபிஸி தலைமை தாங்குவார்
13வது பொதுத் தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள வேளையில் தேர்தல் மோசடிகளைப் புலனாய்வு செய்யும் குழுவுக்கு புதிய பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்குவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். "தேர்தல் ஆணையம் நியாயமான காரணங்களை தெரிவிக்கும்…
சிலாங்கூர் மந்திரி புசாரை பெயர் குறிப்பிடுவதை பக்காத்தான் தாமதிக்கிறது
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அதன் நடப்பு பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வழி நடத்துவாரா இல்லையா என்பது மீது இன்னும் முடிவு எடுக்கப்படாததால் அவருடைய நிலைமை இன்னும் தெளிவாகவில்லை. அடுத்த தவணைக் காலத்துக்கு யார் மந்திரி புசாராக இருக்க வேண்டும் என்பது மீது விரைவில் கூட்டம்…
‘பக்காத்தானுக்கே புத்ரா ஜெயாவை ஆளும் தகுதி உண்டு’
பொதுத் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட்டே கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கும் தகுதி படைத்தது. “நாங்கள் வாக்குகளில் 51.4 விழுக்காட்டைப் பெற்றோம். பிஎன்னுக்குக் கிடைத்தது 48.6 விழுக்காடுதான். ஆனால், அரசாங்கத்தை அமைக்க எங்களுக்குப் போதுமான இடங்கள் இல்லை. அது எப்படி?”, என்று பினாங்கு பக்காத்தான் தலைவர் லிம்…
பேராக் மந்திரி புசாராக ஜாம்ரி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்
13வது பொதுத் தேர்தலில் சிறிய பெரும்பான்மை மூலம் அதிகாரத்தைப் பெற்ற டாக்டர் ஜாம்ரி அப்துல் காதிர் பேராக் மாநிலத்தின் 12வது முதலமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். அவர் கோலா கங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்காண்டிரியாவில் பேராக் அரசப் பேராளர் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா முன்னிலையில் இன்று காலை மணி…
புதிய மலாக்கா முதலமைச்சராக இட்ரிஸ் ஹரோன் நியமிக்கப்பட்டார்
அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹரோன் மலாக்கா மாநில புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை நிர்வாகம் செய்த முகமட் அலி ருஸ்தாமுக்குப் பதில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். இட்ரிஸ் இன்று காலை மலாக்கா யாங் டி பெர்துவா நெகிரி முன்னிலையில்…
‘தேர்தல் மோசடியை’ ஆட்சேபித்து நாளை பக்காத்தான் பேரணி நடத்தும்
நாட்டின் தேர்தல் நடைமுறையை சீர்திருத்தும் பொருட்டும் தாம் தோல்வி கண்ட தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்தும் 'தீவிரமான இயக்கம்' ஒன்றைத் தாம் வழி நடத்தப் போவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார். அதற்காக அவர் முதலில் இந்த வாரம் தமது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளும் பேரணி ஒன்றுக்கும் அவர்…
பிஎன் அரசாங்கத்தில் மசீச-வின் பங்கு தொடர வேண்டும் என்கிறார் கைரி
பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைத் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு கொள்வதில்லை என செய்துள்ள முடிவை மசீச மறுஆய்வு செய்ய வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் கேட்டுக் கொண்டுள்ளார். மசீச-வை வாக்காளர்கள் ஆதரிக்காததால் அந்த சமூகத்தின் பேராளர்கள் இல்லாமல் பிஎன் அரசாங்கத்தை…
அன்வார்: இன்னொரு ‘செப்டம்பர் 16க்கு’ முயற்சி செய்யப் போவதில்லை
பிஎன்-னை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்கு 'செப்டம்பர் 16' பாணியில் இன்னொரு கட்சித் தாவலுக்கு முயற்சி செய்யப் போவதில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். என்றாலும் ஆட்சி புரிவதற்கு பிஎன்-னுக்கு உள்ள சட்டப்பூர்வநிலை இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொள்ள…
‘பாதிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பிஎன்-னை நிராகரித்துள்ளனர்’
உங்கள் கருத்து : "நகர்ப்புற-கிராமப்புற பிளவு தெளிவாகத் தெரிகிறது. நகரங்களில் வசிக்கும் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை பக்காத்தான் பெற்றுள்ளது. அதே வேளையில் பிஎன் கிராமப்புறங்களில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை வென்றுள்ளது. பிஎன் புத்ராஜெயாவை தக்க வைத்துக் கொண்டது அடையாளம்…
சிலாங்கூரில் பக்காத்தான் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது
பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டணியான பக்காத்தான் ரக்யாட், சிலாங்கூரில் 56 சட்டமன்ற இடங்களில் 46-ஐக் கைப்பற்றி ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்த 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னால் 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அம்மாநிலத்துக்கான முழு முடிவும் வெகு நேரம் கழித்துத்தான் தெரிய வந்தது. ஆகக் கடைசியாக அறிவிக்கப்பட்டது சுங்கை பினாங்…
பேராக் பக்காத்தான்: ‘ஆவி வாக்காளர்களே’ தோல்விக்குக் காரணம்
பேராக்கில் குறுகிய தோல்விகண்டு பக்காத்தான் ரக்யாட், மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. மாநில பக்காத்தான் தலைவர் முகம்மட் நிஜார் ஜமாலுடின் ‘ஆவி வாக்காளர்களும்' வாக்காளர்கள் தொகுதி மாற்றம் செய்யப்பட்டதும்தான் தங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். பேராக் சட்டமன்றத்தின் 59 இடங்களில்…
நஜிப் இஸ்தானா நெகாராவில் பிரதமராகப் பதவி உறுதி மொழி எடுத்துக்…
நஜிப் அப்துல் ரசாக் இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய் ரோங் ஸ்ரீ-யில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா முன்னிலையில் இன்று மாலை மணி 4.07க்கு பிரதமராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அந்தச் சடங்கின் போது ராஜா பரமைசுரி அகோங்…
அன்வார்: என்னுடைய வேலை இன்னும் முடியவில்லை
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அரசியலிலிருந்து ஒய்வு பெறுவது குறித்து இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை. காரணம் நேற்றைய சர்ச்சைக்குரிய தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் தோல்வி கண்ட பின்னர் மலேசிய அரசியல் களத்தில் தமது வேலை 'இன்னும் முடியவில்லை' என அவர் கருதுகிறார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் ஆணைய…
சொய் லெக் கட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார்
விரைவில் நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலிலிருந்து தாம் ஒதுங்கியிருக்கப் போவதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளார். இன்று வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில் அதனைத் தெரிவித்த சுவா, தமது பதவியைத் தக்க வைத்துள்ள போட்டியிடாததற்கான காரணத்தைக் கூறவில்லை. அவர் தேர்தலில் மோசமான அடைவு நிலைக்கு மசீச…
நாடாளுமன்ற, சட்டமன்ற இருக்கைகள் விபரம்
மொத்த இருக்கைகள் 222, அரசாங்கம் அமைக்க 112, மூன்றில் இரண்டு பங்கு 148
13வது பொதுத் தேர்தல் : தற்போதைய அதிகாரப்பூர்வமற்ற நிலவரம்
இரவு மணி 2.30: நாடாளுமன்ற இருக்கைகள் பாரிசான் 129, பக்கத்தான் 80. பேராக் மற்றும் திரங்கானு மாநிலங்கள் இரவு மணி 2.03: மிகக் குறைவான பெரும்பான்மையில் பாரிசான் பேராக் மாநில ஆட்சியை தொடரும் (பிஎன் 31, பக்கத்தான் 28). திரங்கானு மாநிலத்தில் அதற்கு இரண்டு பக்கத்தானைவிட இரு கூடுதல் இருக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன (பிஎன் 17, பக்கத்தான் 15). மஇகா வேட்பாளர்கள்…
லெம்பா பந்தாய் வாக்காளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்ததாக புகார்
நாட்டின் போட்டிமிகுந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான லெம்பா பந்தாயில், பிஎன், வாக்குகளுக்கு ரொக்கப் பணம் கொடுத்ததாக நேரில் கண்டவர்கள் புகார் செய்துள்ளனர். ஸ்ரீபந்தாய் ஸ்கோலா ரெண்டா அகாமாவிலும் எஸ்கே பங்சாரிலும் அவ்வாறு நடந்ததாக அத்தொகுதிக்கான நடப்பு எம்பி நுருல் இஸ்ஸாவின் உதவியாளர் பாஃமி பாஃட்சில் (வலம்) தெரிவித்தார். 20திலிருந்து…
தேர்தலில் 80 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்
13வது பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 12,992,661 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர் அந்தத் தகவலை தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிட்டது. மலேசிய வரலாற்றில் இவ்வளவு அதிகமான விழுக்காட்டினர் வாக்களித்துள்ளது இதுவே முதன் முறையாகும். 1964ம் ஆண்டு 78.9 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதுடன் ஒப்பிடுகையில் 13வது தேர்தலில் வாக்களித்தவர்…
‘சந்தேகத்துக்குரிய வாக்காளர் வாக்களித்த பின்னர் பணம் கோரினார்’
வாக்களித்த பின்னர் தங்கள் சாவடியில் பணம் கேட்ட சபாவைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவரை சிலாங்கூர் பண்டானில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தேர்தல் ஊழியர்கள் விசாரித்துள்ளனர். Taski Abim Taman Mawar வாக்குச் சாவடிக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிகேஆர் சாவடியில் பிற்பகல் ஒரு மணி வாக்கில் மஸ்லான் சுல்கிப்லி…
தேர்தல் ஆணையம் : வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாருமில்லை
வாக்குச் சாவடிகளில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் காணப்பட்டதாக புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைக் கொண்ட அனைவரும் குடிமக்கள் என்றும் அதனால் அவர்கள் சட்டபூர்வ வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) வலியுறுத்துகிறார். "எங்கள் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாரும் இல்லை. நாங்கள் எங்கள் வாக்காளர்…
‘வாக்களிக்கும் என் உரிமையை யாரோ திருடி விட்டார்கள்’
கூலாயிலும் கிள்ளானிலும் பல வாக்காளர்கள் தங்கள் பெயரில் யாரோ ஒருவர் வாக்களித்து விட்டதால் தாங்கள் வாக்களிக்க முடியாமல் போய் விட்டதாக கூறிக் கொண்டுள்ளனர். அவர்கள் இசி என்ற தேர்தல் ஆணையத்தில் புகார் செய்கின்றனர். கூலாயில் வாக்களிப்பதற்காக காலை 10 மணிக்கு SJK(C) Batu வாக்குச் சாவடிக்கு 42 வயதான…


