சமீபத்திய மாநிலத் தேர்தலில் சீன சமூகம் கபுங்கன் ராக்யாட் சபாவை (GRS) நிராகரித்ததாகக் கூறுவது தவறாக வழிநடத்துகிறது என்று அதன் துணைத் தலைமைச் செயலாளர் ஆர்மிசான் முகமது அலி கூறுகிறார். அத்தகைய கூற்றுக்கள் ஏன் தவறானவை என்பதை விளக்க, தனது பாப்பர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பந்தாய் மானிஸ்…
ஷாரிஸாட் ‘குடும்பத்தின் கட்டுக்குள் உள்ள ‘ சிங்கப்பூர் ‘கொண்டோ’-க்களைத் தற்காக்கிறார்
முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் அஜில் தமது குடும்பத்தினர் சிங்கப்பூரில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளைக் ( 'கொண்டோ'-க்கள்) கொள்முதல் செய்ததைத் தற்காத்துள்ளார். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக கொடுக்கப்பட்ட அரசாங்க நிதி அவற்றை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனமான என்எப்சி…
“சுலு ஊடுருவலுக்கு டாக்டர் மகாதீரும் அடையாளக் கார்டு திட்டமுமே காரணம்”
சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு விரைவாகக் குடியுரிமை வழங்கிய 'அடையாளக் கார்டு திட்டமும்' அந்தத் திட்டத்தில் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் ஈடுபாடு எனக் கூறப்படுவதும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கும் சுலு துப்பாக்கிக்காரர்களுக்கும் இடையில் லஹாட் டத்து இழுபறிக்கு முக்கியமான காரணம் எனப் பழி சுமத்தப்பட்டுள்ளது. அடையாளக் கார்டு திட்டத்தை…
அன்வார்: நல்ல தலைவர்கள் ‘குட்டி நெப்போலியன்களை’ அடக்கி வைப்பர்
பக்காத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம், நல்ல தலைமைத்துவம் சமத்துவம் பேசும் பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையின்படி நடக்காத அரசுப்பணியில் உள்ள ‘குட்டி நெப்போலியன்களை’ அடக்கி வைக்கும் என்றார். பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார், நேற்று தம் கட்சியின் ஜோகூர் பாரு தொகுதி ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடலில்…
‘புரொஜெக்ட் ஐசி-க்கு மகாதிர் ஒப்புதல் இருந்தது’- முன்னாள் டிஓ
முன்னாள் சண்டாகான் மாவட்ட ஆட்சியர் (டிஓ) ஹஸ்ஸானார் இப்ராகிம் 1980-களில் ‘புரொஜெக்ட் ஐசி’-இல் தாமும் சம்பந்தப்பட்டிருந்ததை ஒப்புக்கொண்டார். அத்திட்டத்துக்கு அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஒப்புதல் இருந்ததாக தாம் கேள்விப்பட்டதாகவும் அவர் கூறினார். 1980-களில் தாம் ஒரு “இரகசிய கூட்டத்தில்” கலந்துகொண்டதாகவும் அதில் அப்போதைய உள்துறை அமைச்சராக…
சிலாங்கூர் மந்திரி புசார், முன்னாள் எம்ஏசிசி தலைவர் மன்னிப்புக் கேட்டதை…
முன்னாள் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் அகமட் சைட் ஹம்டான் 2009ம் ஆண்டு தாம் விடுத்த ஒர் அறிக்கை தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமிடம் திறந்த நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். அகமட் சைட்டின் அறிக்கையை வெளியிட்ட…
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு 2ஆம் கட்ட நிதியளிப்பு
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அப்துல் காலிட் தலைமையில் ஷா ஆலாம் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு பெரும் நிகழ்வொன்றில் சிலாங்கூர் மாநில பாக்கத்தான் ராக்யாட் அரசு மாநிலத்திலுள்ள 84 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் 26 இலட்சத்து 65 ஆயிரம் ரிங்கிட்டை மானியமாக வழங்கியது. முதல்…
தமிழினத் துரோகிகளாக மாறாதீர், மனோகரன் எம்பி எச்சரிக்கை
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவும் மலேசியத் தமிழர்களின் மனிதாபிமான செயலுக்கு யாரும் மாசு கற்பிக்க வேண்டாம். எட்டப்பர்களாக மாற வேண்டாம் என்று தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய தமிழர்ப் பணிப்படைக் குழு துணைத் தலைவருமான எம். மனோகரன் கேட்டுக்கொண்டார். ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்திற்கும்…
முன்னாள் எம்ஏசிசி தலைவர் சிலாங்கூர் எம்பி-இடம் மன்னிப்பு கேட்பார்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த்தின் முன்னாள் தலைவர் அஹ்மட் சைட் ஹம்டான், நாளை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009 ஹரி ராயா ஹாஜியின்போது காலிட் 24 மாடுகளைத் தானம் செய்ததில் அதிகார அத்துமீறல் நிகழ்ந்திருக்கலாம்…
முகைதின்: 2008 வீழ்ச்சிக்கு பிஎன்-னின் எல்லாக் கட்சிகளையும்தான் குறை சொல்ல…
2008 தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு அம்னோவே அடிக்கடி குறை சொல்லப்பட்டாலும் மற்ற பங்காளிக்கட்சிகளுக்கும் அதில் பங்குண்டு என அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார். “பிஎன்னின் பிம்பம் சிதைந்ததற்கு அம்னோ மட்டும் காரணம் அல்ல. மற்ற பங்காளிக் கட்சிகளும்தான் காரணம். அவற்றில் சில நம்மைவிட பெரிய பிரச்னைகளை…
பிஎன்-உடன் தேர்தல் ஒப்பந்தம் ஏதுமில்லை என்கிறார் வேதமூர்த்தி
"பிரதமர் ஹிண்ட்ராப்பை அழைத்தால் - ஹிண்ட்ராப் அவரது அங்கீகாரத்துக்கு தனது பெருந்திட்டத்தைச் சமர்பிக்கும். ஆனால், அவர் (பிரதமர்) இன்று வரை அதனை செய்யவில்லை." "என்றாலும் பக்காத்தானிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் பதிலுக்கும் பிஎன் பதிலுக்கும் இடையில் பல முக்கிய வேற்பாடுகள் உள்ளன. பிஎன் எங்கள் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால்…
சீனர்-அல்லாத தொகுதியில் போட்டியிடத் தயாரா? கிட் சியாங்குக்குச் சவால்
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜோகூரில் களமிறங்குவார் என்று கூறப்படும் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், சீனர்கள் பெரும்பான்மையாக இல்லாத ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்வருவாரா என்று சவால் விடுத்துள்ளார். போட்டியிடும் இடத்தை லிம் அடிக்கடி மாற்றிக்கொள்வது அவர் பொறுப்பற்ற…
அஸ்ரி பிகேஆர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவது சந்தேகமே
பிரபல சமய அறிஞர் அஸ்ரி சைனல் அபிடின், வரும் தேர்தலில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிடுவார் என்றுதான் முதலில் பேச்சு அடிப்பட்டது. ஆனால், இப்போது அது சந்தேகம்தான். அஸ்ரி இரண்டு வாரங்களுக்குமுன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்திருக்கிறார். அதைப் பார்க்கையில் தேர்தலில் போட்டியிடுவதில் அவருக்கு ஆர்வம் இருப்பதுபோல் தெரியவில்லை…
பிஎன் ஆதரவு செராமாவுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்தனர்
பினாங்கு பெனாந்தி, குவார் பெராஹு தேசிய இடைநிலைப் பள்ளியில் நேற்றிரவு நடைபெற்ற பிஎன் ஆதரவு செராமா ஒன்றுக்கு இடையூறு செய்ய பிகேஆர் ஆதரவாளர்களையும் உள்ளூர் கிராம மக்களையும் கொண்ட ஒரு கும்பல் முயற்சி செய்த போது குழப்பம் ஏற்பட்டது. லஹாட் டத்து சம்பவம் பற்றியும் மலாய் பைபிள்களில் 'அல்லாஹ்'…
‘இலவசக் கல்வியால் மலேசியா போண்டியாகிவிடாது’
உங்கள் கருத்து ‘இலவசக் கல்வி வழங்குவது நல்லதுதான். ஆனால், அதில் ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும்.பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் குறைந்தபட்ச தகுதியாவது கொண்டிருக்க வேண்டும்’ பிடிபிடிஎன்-னைத் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையேல் நாடு நொடித்துப் போகும் என்கிறார் ரபிஸி ஜிஎச்கொக்: பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சொல்வதில்…
PNB ஊழியர்களுக்கு கூடுதல் போனஸை பிரதமர் அறிவித்தார்
PNB எனப்படும் Permodalan Nasional Berhad-ன் 200,000 நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கு 2012ம் ஆண்டுக்குக் கூடுதலாக மேலும் ஒரு மாத போனஸ் வழங்கப்படும். அதனை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அந்த PNB குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடுமையாக உழைக்கவும் கடந்த 35 ஆண்டுகளில் அடைந்த சாதனையை…
‘இதோ நஜிப்பின் ஏழு பெரிய பாவங்கள்’
"அந்தப் பாவங்கள் மிக மிக நீளமானவை. அதானல் அவற்றைப் புத்தகமாக வெளியிடுவது பற்றி எதிர்த்தரப்பு பரிசீலிக்க வேண்டும். அந்தப் புத்தகம் நிச்சயம் நல்ல விற்பனையாகும்" எதிர்த்தரப்பின் ஏழு பெரிய பாவங்கள் பற்றி நஜிப் கேஎல்: முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதிப்பது பக்காத்தான் ராக்யாட்டின் ஏழு…
நீதிக்காகப் போராடிய துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபம்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மார்ச் 17, 2013. தனியார் துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் மறைவினால் அவர் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கும் துன்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்காகவும், நீதிக்காகவுமான அவரின் போராட்டத்தில் உயிர் நீத்த அன்னாரின் ஆத்மா சாந்தியடை…
சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் கிராம் உறவினர்களும் அடங்குவர்
2012ம் ஆண்டுக்கான சொஸ்மா எனப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 104 பேரில் ஜமாலுல் கிராமின் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர் என சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் தகவல் வெளியிட்டுள்ளார். அந்தக் குடும்ப உறுப்பினர்கள் இந்த நாட்டில் வேறு பெயர்களுடன் வசித்துள்ளனர்.…
இன்னொரு ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்; இது வரை 62 எதிரிகள் கொல்லப்பட்டனர்
கம்போங் தஞ்சோங் பத்துவில் இன்று பாதுகாப்புப் படைகள் Ops Daulat நடவடிக்கையில் மேலும் ஒரு சுலு பயங்கரவாதி ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளன. அவரையும் சேர்த்து மொத்தம் 62 எதிரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சுல்கிப்லி காசிம் தெரிவித்தார். இன்று காலை மணி 9.55க்கும் 10.15க்கும்…
டாக்டர் மகாதீர்: கெடா ஆதாயம் கிழக்கு மலேசிய இழப்புக்களை ஈடு…
கெடாவில் பிஎன் மீண்டும் வெற்றி பெறுவது சபா, சரவாக்கில் ஏற்படக் கூடிய நாடாளுமன்ற தொகுதி இழப்புக்களை ஈடு கட்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "கடந்த காலத்தில் கெடாவில் உள்ள 15 நாடாளுமன்ற இடங்களில் 14ல் நாம் வெற்றி பெறுவோம். ஆனால் 2008ல் எப்படியோ…
தியான் சுவாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன. கெடா லுனாஸில் நேற்றிரவு பத்து அன்னாம் பிஎன் நடவடிக்கை மய்யத்துக்கு அருகில் 100 இளைஞர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பட்டம் செய்தனர். இரவு 11 மணி வாக்கில் செராமா நிகழும் இடத்தை சென்றடைந்த தியான் சுவா மீது அவர்கள்…
பிடிபிடிஎன் -னை நிறுத்தாவிட்டால் அது நாட்டை நொடித்துப் போகச் செய்து…
பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதியை கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ நிறுத்த வேண்டும் இல்லை என்றால் அது நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார். ஊழியர் சேம நிதி வாரியம் (இபிஎப்), Permodalan Nasional Berhad…
அமெரிக் வெளியிட்ட தகவல்: நஜிப் அவர்களே நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்…
"அந்தத் தகவல் நமது நீதி பரிபாலன முறையை பாதிக்கும். சட்டமும் மக்களும் பகடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன." 'இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை வரையுமாறு சிசிலுக்கு நஜிப் உத்தரவிட்டார்' கலா: காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் வெளியிட்ட இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை (அது, அவரது முதலாவது சத்தியப் பிரமாணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது)…


