சமீபத்திய மாநிலத் தேர்தலில் சீன சமூகம் கபுங்கன் ராக்யாட் சபாவை (GRS) நிராகரித்ததாகக் கூறுவது தவறாக வழிநடத்துகிறது என்று அதன் துணைத் தலைமைச் செயலாளர் ஆர்மிசான் முகமது அலி கூறுகிறார். அத்தகைய கூற்றுக்கள் ஏன் தவறானவை என்பதை விளக்க, தனது பாப்பர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பந்தாய் மானிஸ்…
பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் சுதந்திரம் கொடுக்குமாறு கல்வியாளர்கள் வேண்டுகோள்
பல்கலைக்கழகங்களில் கல்வித் தரம் வீழ்ச்சி அடைவதைத் தடுக்க பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் சுதந்திரம் வழங்குமாறு பல கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த உயர் கல்விக் கூடங்களுக்கு சொந்த நிர்வாக, நிதி விவகாரங்களை நிர்வாகம் செய்வதற்கு அப்பாலும் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என சமூகவியலாளரான அப்துல் ரஹ்மான் எம்போங் கூறினார். அரசு…
Ops Daulat பகுதியில் ஆயுதமில்லாத சுலு ஆடவர் ஒருவர் கைது
பெல்டா சஹாபாட் தோட்டத்தில் Ops Daulat நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியில் ஆயுதமில்லாத சுலு பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படைகள் இன்று காலை மணி 6.30 அளவில் கைது செய்துள்ளன. அந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிக்காரகள் இன்னும் மறைந்திருப்பதாக நம்பப்படுகின்றது. அடையாளப் பத்திரங்கள் ஏதும் இல்லாத அந்த ஆடவர்…
தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா மாரடைப்பால் இறந்ததை சவப் பரிசோதனை உறுதி…
தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா மாரடைப்பால் இறந்ததை நேற்றிரவு நடத்தப்பட்ட சவப் பரிசோதனை உறுதி செய்துள்ளது. சுங்கை பூலோ மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு பின்னர் பாலாவின் நல்லுடல் நேற்றிரவு மணி 11.40 வாக்கில் ரவாங்கில் உள்ள அவரது குடும்பத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பாலாவின் நண்பரான ராஜா பிள்ளை கூறினார். இன்று பிற்பகல்…
சொங் இயு-வின் மகன் புக்கிட் பெண்டேராவில் போட்டியிடுவார்
முன்னாள் பினாங்கு முதல்வர், காலஞ்சென்ற டாக்டர் லிம் சொங் இயுவின் புதல்வர் சியன் செங், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. லிம்மின் நான்கு மகன்களில் ஆக இளையவரான சியன் செங், தந்தையைப் பின்பற்றி தீவிர அரசியலில் குதிக்கிறார் என த ஸ்டார் நாளேடு கூறிற்று.…
2 ஆவது எஸ்டி-இல் சம்பந்தமுண்டு என்பதை சிசில் எப்ரேஹம் ஒப்புக்கொண்டாராம்
தனியார் துப்பறிவாளர்(பிஐ) பி.பாலசுப்ரமணியம் செய்த இரண்டாவது சத்திய பிரமாணத்தை(எஸ்டி) வழக்குரைஞர் சிசில் எப்ராஹம் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். பிரதமரின் உத்தரவின்பேரில் அவ்வாறு செய்ததை அவரே தம்மிடம் தெரிவித்ததாக வழக்குரைஞர் அமெரிக் சிங் சித்து கூறினார். காலஞ்சென்ற பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞரான அமெரிக், இன்று கோலாலும்பூரில் நடைபெற்ற மலேசிய வழக்குரைஞர் மன்ற ஆண்டுக்கூட்டத்தில்(ஏஜிஎம்)…
சுலு சுல்தான் பேராளர் : அஸ்ஸிமுடி இன்னும் சபாவில் இருக்கிறார்
சபா மீதான தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அந்த பிரதேசத்திற்குள் ஊடுருவிய ராஜா மூடா அஸ்ஸிமுடி கிராம் இப்போது எங்கு இருக்கிறார் என்பது மீது மலேசிய அதிகாரிகளும் சுலு சுல்தான் பிரதிநிதிகளும் முரண்பாடான தகவல்களை வெளியிட்டுள்ளனர். சுலு சுல்தானின் பட்டத்து இளவரசருமான அஸ்ஸிமுடி தமது ஆதரவாளர்களைக் கைவிட்டு…
மிக்க நன்றி பாலா, உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
"ஏற்றத்தாழ்வான உங்கள் போராட்டம் வீணாகி விட்டதாக சிலர் சொல்லலாம். முடிவு எப்படி இருந்தாலும் சில போராட்டங்களை நடத்தத் தான் வேண்டும்" தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா 53வது வயதில் காலமானார் விஜய்47: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் இனிமேல் இல்லை. அவரை எந்த இடத்தில் வைப்பது என்பது பலருக்கு தெரியாமல்…
பக்காத்தான் ‘பொய்களை’ முறியடிக்கும் இயக்கத்தை பிஎன் இளைஞர்கள் தொடங்கினர்
பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பக்காத்தான் ராக்யாட் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு பெரிய அளவிலான இயக்கத்தை பிஎன் இளைஞர்கள் தொடங்கியுள்ளனர். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதும் அந்த இயக்கத்தில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு-உடனும் தமது நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக்…
ரௌடிக் கும்பல் தியான் சுவா சென்ற காரைத் தாக்கியது, ஒருவர்…
பல்வேறு வலச்சாரி அரசு சாரா அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் எனக் கூறிக் கொண்ட 50 பேரடங்கிய கும்பல் ஒன்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வை ஏற்றியிருந்த காரை நேற்றிரவு தாக்கியது. நேற்றிரவு மணி 11.15 வாக்கில் பினாங்கு சீனர் நகர மண்டபத்திலிருந்து தியான் சுவா புறப்பட்ட போது அந்தச்…
2000 ஏக்கர் நிலம் யார் பெயரில் பதிவாகப் போகிறது?
எம். குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 15, 2013. கடந்த வாரம் பேரா மாநில மந்திரி புசார் ஜம்ரி 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு ஒப்படைக்கப் பட்டுவிட்டதாகவும் , ஒரு புதிய அறவாரியத்தை அமைத்து, அதன் உறுப்பினர்கள் அந்த நிலத்தை மேம்படுத்தி அதில் கிடைக்கும் வருமானம்…
கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் அடிக்கடி ஜோகூர் செல்கிறார் என்றால் அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவர் வரும் பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில்தான் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது. அது பற்றி ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், திங்கள்கிழமை ஜோகூர் பாருவுக்கு அருகில் ஸ்கூடாயில் டிஏபியின் 47-வது…
தனியார் துப்பறிவாளர் பாலா காலமானார்
தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் ரவாங்கில் காலமானார். அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ரவாங்கில், பிற்பகல் மணி 1.40க்கு அவரது வீட்டில் பகலுணவு அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. “(காலையில்) சுபாங் ஜெயாவுக்கு மருத்துவ சோதனைக்குச் சென்று திரும்பிய பாலா நன்றாகத்தான் இருந்தார்.…
‘சவப் பெட்டி சம்பவம் சுவா-வின் லஹாட் டத்து கருத்துடன் தொடர்புடையதாக…
மலாக்கா பிகேஆர் தலைமையகத்துக்கு முன்பு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உருவப்படத்துடன் போலிச் சவப்பெட்டி ஒன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டது. கறுப்புத் துணி மூடப்பட்ட அந்த பாலிதின் பொருளினால் தயாரிக்கப்பட்ட அந்த போலி சவப்பெட்டியை கட்சி ஊழியர் ஒருவர் கண்டு பிடித்ததாக மலாக்கா மாநில பிகேஆர் தகவல்…
டிஏபி இணையத் தளம் கடந்த வாரம் மூன்று முறை தாக்கப்பட்டது
டிஏபி இணையத் தளம் கடந்த வாரம் மூன்று முறை அரசியல் நோக்கத்திற்காக பிஎன் ஆதரவாளர்கள் வழங்கிய நிதி உதவியுடன் விநியோகச் சேவை மறுப்பு (DDOS) தாக்குதலுக்கு இரையானதாக கூறப்பட்டுள்ளது. டிஏபி இணையத் தளத்தின் அமெரிக்க சர்வர் (dapmalaysia.org)கடந்த வாரம் மூன்று முறை தாக்கப்பட்டதாக அதன் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர்…
பொதுத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சிகள் பற்றிய ஆதாரத்தை துணைப் பிரதமர்…
"ஒழுங்கைச் சீர்குலைத்து எதிர்வரும் தேர்தலுக்கு இடையூறு" செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தாம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மீதான ஆவண ஆதாரங்களை காட்டவோ அல்லது அது குறித்து விவரிக்கவே துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மறுத்து விட்டார். "சரியான நேரம் வரும் வரையில் காத்திருங்கள்" என அவர் சொன்னார். தமது குற்றச்சாட்டுக்கு…
உத்துசான்: ஊடுருவல்காரர்கள் பொதுத் தேர்தலின் போது தாக்கத் திட்டமிட்டிருந்தனர்
சபா கம்போங் தண்டுவோ-வில் ஊடுருவிய ஆயுதமேந்திய சுலு கிளர்ச்சிக்காரர்கள் உண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தங்கள் தாக்குதலைத் தொடங்கத் திட்டமிட்டிருந்ததாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் மக்கள் உதவியுடன் தேர்தல் காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை குழப்பத்தில் ஆழ்த்த அந்த ஊடுருவல்காரர்கள் எண்ணம் கொண்டிருந்தனர் என…
வோங் தாக்: நான் பசுமை இயக்கத்திலிருந்து விலக மாட்டேன்
அடுத்த பொதுத் தேர்தலில் பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தாம் டிஏபி சின்னத்தைப் பயன்படுத்திய போதிலும் தாம் நாட்டின் பசுமை இயக்கத்தை பிரதிநிதிப்பதாக ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக் கூறியிருக்கிறார். ஆகவே ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் பதவியைத் தாம் துறக்க வேண்டிய அவசியமில்லை என அவர் சொன்னார்.…
துணைப் பிரதமர்: தண்டாபுத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தவறு…
சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் போட்டுக் காட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அது பொது மக்களுக்கு திரையிடப்படக் கூடாது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். "அந்தத் திரைப்படம் பொது மக்களுக்கு காட்டப்படவில்லை. ஆனால் சில பிரிவினருக்கு மட்டுமே திரையிடப்பட்டுள்ளது." "சில பொறுப்புள்ள…
அம்னோவுக்குச் செலுத்தும் வாக்கு மகாதீருக்குப் போடும் வாக்காகும்
'பிரதமர் நஜிப்பும் அம்னோவும் மகாதீருக்கு கட்டுப்பட்டிருக்கும் வரையில் ஆளும் கட்சியில் எந்த அரசியல் சீர்திருத்தமும் இருக்காது' மூசா ஹித்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது சிகியூ முவார்: நீங்கள் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து உங்களை எங்களுக்கு தெரியும். நீங்கள் நியாயமான மனிதர். உங்கள்…
‘ஆகவே, அம்னோவைக் குறை சொல்வதும் இனிமேல் தேச நிந்தனையாகும்’
"அம்னோ எப்போது தேசிய அமைப்பானது? அதற்கு எதிராகச் சொல்வது எப்போது தேச நிந்தனைக்கு இணையானது ? தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்துறைத் தலைவர் உண்மையில் முட்டாள். அவதூறு சொன்னதற்காக தியான் சுவா மீது நீதிமன்றத்தில் வழக்குப் போட அம்னோவுக்கு எல்லா உரிமையும்…
சுலு சுல்தான் ஆதரவாளர்கள் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்
கடந்த புதன்கிழமையன்று தாவி தாவி மாநிலத்துக்கு அப்பால் பிலிப்பின்ஸ் கடற்படை தடுத்து வைத்த சுலு சுல்தான் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 35 பேர் மீது பிலிப்பின்ஸ் அரசாங்கம் பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமத்தவிருக்கிறது. "அவர்களுக்கு எதிராக பொருத்தமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான ஏற்பாடுகளை கூட்டுக் குழு ஒன்று செய்து வருகிறது,"…
குற்றம்செய்யும் டெக்சி ஓட்டுனர்களைப் பிடிக்க வேண்டும், கெராக்கான் வலியுறுத்து
அமெரிக்கச் சுற்றுப்பயணி ஒருவர், பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான சம்பவம் அதிகாரிகள் டெக்சி ஓட்டுனர்களை அதிகம் கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கெராக்கான் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் சியா சூன் ஹாய் கூறினார். சியா இன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் டெக்சி ஓட்டுனர்கள் பயணிகளுக்கு எதிராக செய்யும் குற்றச்செயல்கள்…
பக்காத்தான் கொள்கை அறிக்கைக்கு ‘சித்திர விளக்கம்’
கேலிச்சித்திர ஓவியர்கள் ஒரு குழுவாக அமைந்து பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையைச் விளக்கச் சித்திரங்களாக்கி நாடு முழுக்கக் கொண்டு செல்வர். “நாங்கள் அனைவரும் சுயேச்சையாக செயல்படும் கேலிச் சித்திர ஓவியர்கள். தனிப்பட்ட முறையில்தான் இதைச் செய்கிறோம். பணத்துக்காக செய்யவில்லை, எந்தவொரு கட்சியும் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிடவும்…


