ஊராட்சிமன்ற உறுப்பினர் நியமங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும், குவா கியா சூங்

ஊராட்சிமன்றங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் பிரபுத்துவ முறைக்கு எதிராக அரசு சார்பற்ற அமைப்புகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று சுவாராம் என்ற மனித உரிமை கழகத்தின் ஆலோசகர் டாக்டர் குவா கியா சூங் கூறுகிறார். ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் நியமங்கள் செய்யப்படும் முறையை தங்களுடைய “தனிச்சலுகை” என்று பாரிசான் மற்றும் பக்கத்தான்…

மஇகா தலைமையகக்தின் முன்பு மெட்ரிகுலேசன் மாணவர்கள் மறியல்

-அ. திருவேங்கடம், ஜூன் 20, 2013. மெட்ரிகுலேசன் துறையினர் நிர்ணயித்துள்ள அடிப்படைக் கல்வித் தகுதியை விட பன்மடங்கு சிறப்பு கல்வி அடைவு நிலைகளைப் பெற்றிருக்கும் நம் இன மாணவர்கள் இன்னும் நூற்றுக் கணக்கானோர் அக்கல்வி வாய்ப்பு வழங்கப் படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் புதன்கிழைமை துணைக் கல்வி அமைச்சர்…

சனிக்கிழமை பேரணியில் தேவை என்றால் இராணுவம் போலீசுக்கு உதவும்

சனிக்கிழமை, கோலாலும்பூர் பாடாங் மெர்கோக்கில் மாற்றரசுக் கட்சியினர் நடத்தும் பேரணியை எதிர்கொள்ள போலீஸ் ஆயத்தமாக உள்ளது. நாட்டில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநிறுத்துவது போலீசின் பொறுப்பு என்று உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை இயக்குனர் சாலே மாட் ரசீட் கூறினார். “போலீசால் அமைதியைக் கட்டிக்காக்க முடியும். தேவையானால் இராணுவத்தின்…

பாடாங் மெர்போக்கில் கூடாரமிட்டுத் தங்க என்ஜிஓ-கள் திட்டம்

சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) தலைமையில்  பல என்ஜிஓ-கள்,  கோலாலும்பூர் 505 கறுப்புப் பேரணியை நீட்டித்து நடத்தும் நோக்கில் சனிக்கிழமை தொடங்கி மேலும் இரண்டு இரவுகளுக்கு பாடாங் மெர்போக்கிலேயே கூடாரமிட்டுத் தங்க முடிவு செய்துள்ளன. பேரணிக்கு வருவோர், அதற்குத் தயாராக வர வேண்டும் என்று எஸ்ஏஎம்எம் இன்று…

அன்வார்: ஒற்றுமைக்காக நஜிப் என்றும் தூது அனுப்பியதில்லை

ஒற்றுமை அரசாங்கம் அமைக்கலாம் என்று பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அதிகாரப்பூர்வமாக சொன்னது இல்லை என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். ஆனால், அரசியல் வட்டாரங்களில் “தனிப்பட்ட முறையில் அது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம்” என்பதை அவர் மறுக்கவில்லை. அரசியலில் இப்படிப்பட்ட வதந்திகள் சகஜம்தான் என்றாரவர்.…

கெராக்கானை தட்டி எழுப்புகிறார் அதன் இடைக்காலத் தலைவர்

கெராக்கான் இடைக்காலத் தலைவர் சாங் கொ யவுன், கட்சி உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் சோர்ந்து போய்விட்டார்கள்”,என்றாரவர். கடந்த மாதம் கோ சூ கூன் பதவி விலகியதை அடுத்து  சாங் (படத்தில் வலமிருப்பவர்) இடைக்காலத் தலைவரானார். “மனம் தளரக்கூடாது. அரசியல்…

தண்டா புத்ரா, இண்டர்லாக் ஆகியவற்றை நியாட் ஆட்சேபிக்கும்

நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு, சர்ச்சைக்குரிய  தண்டா புத்ரா திரைப்படம், சர்ச்சைக்குரிய இண்டர்லாக் நாவல் ஆகியவற்றுக்கு  எதிராக அடுத்த திங்கட்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு கூடி  ஆட்சேபிக்க ஏற்பாடு செய்து வருகின்றது. அன்றைய தினம் 13வது நாடாளுமன்றம் முதன் முறையாக கூடுகின்றது. மூன்று கோரிக்கைகளுடன்…

எம்ஏசிசி-யின் நாட்ஸ்ரி EAIC பணிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டார்

இரண்டு போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களை விசாரிக்கும் பணிக்குழுவிலிருந்து  EAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் தனது முதுநிலை உதவி  இயக்குநர் முகமட் நாட்ஸ்ரி இப்ராஹிமை நீக்கியுள்ளது. அந்தப் பணிக்குழு சம்பந்தப்பட்ட எந்த வேலையிலும் முகமட் நாட்ஸ்ரி சம்பந்தப்படக் கூடாது என நேர்மை ஆணையம் முடிவு செய்துள்ளது…

ஒலிம்பிக் தின ஒட்டம் ‘புகை மூட்டத்தினால்’ தள்ளி வைக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர் பாடாங் மெர்போக் திடலில் ஜுன் 23 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஒலிம்பிக் தின ஒட்டம் "புகை மூட்டம்" மோசமடைந்து வருவதால் தள்ளி  வைக்கப்பட்டுள்ளது. மலேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் கலந்தாய்வு செய்த பின்னர் அந்த ஒட்டத்தை  உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தள்ளி வைப்பது என முடிவு  செய்யப்பட்டதாக மெக்டொனால்ட்…

மசீச மூன்று ஆண்டுகளுக்கு ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினரை இடைநீக்கம்…

ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டதின் மூலம் கட்சி  நிலையை மீறியதற்காக தனது முன்னாள் தேசிய அமைப்புச் செயலாளர் தீ சியூ  கியோங்-கை மசீச மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. அந்த மூன்று ஆண்டு கால இடைநீக்கத்தை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு  பரிந்துரை செய்ததாகவும்…

‘பிலிப்பினோ குடியேறி என் தந்தை பெயரைத் திருடிக்கொண்டார்’

முன்னாள் செபாங்கார் எம்பி எரிக் என்சின் மஜிம்புன், பிலிப்பினோ குடியேறி ஒருவர் தம் தந்தையின் பெயரைத் திருடி வைத்துக்கொண்டார் என சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று சாட்சியமளித்தார். “அது பற்றி அதிகாரிகளுக்கு எழுதினேன்.அவரது அடையாள அட்டையின் பிரதியை அனுப்பினார்கள்”. அதில் அவரது பெயர் ‘ஜெரோமி…

கெராக்கான்: IPCMC இல்லாமல் குரோனர் நீதிமன்றத்தை அமைப்பது ‘அறிவுக்கு ஒப்பாதது’

தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க கைதிகளை விசாரிப்பதற்குத் தனி  லாக்-அப் மையங்களை அமைக்கும் யோசனையும் குரோனர் நீதிமன்றங்களை  அமைக்கும் யோசனையும் போலீசாரைக் கண்காணிக்கும் அமைப்பு இல்லாத  சூழ்நிலையில் 'அறிவுக்கு ஒப்பாக' இருக்காது என கெராக்கான் உதவித் தலைவர் ஏ  கோகிலன் பிள்ளை கூறுகிறார். ஆகவே போலீஸ் புகார்கள், தவறான…

‘புத்ராஜெயா தனது கொல்லைப்புறத்தில் கள்ளக் குடியேறிகளை வைத்துக் கொள்ளட்டும்’

சபாவில் சட்ட விரோதமாக குடியுரிமை கொடுக்கப்பட்ட குடியேற்றக்காரர்கள் மீது  நடவடிக்கை எடுக்க முடியாது என்பதில் புத்ராஜெயா பிடிவாதமாக இருந்தால்  அவர்களை அது கூட்டரசு அரசாங்கம் அமைந்துள்ள தீவகற்ப மலேசியாவில்  வைத்துக் கொள்ளலாம் என SAPP தலைவர் யோங் தெக் லீ கூறுகிறார். சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை…

‘IPCMC இல்லாமல் குரோனர் நீதிமன்றம் பலவீனமாக இருக்கும்’

ஒவ்வொரு மாநிலத்திலும் நிரந்தர குரோனர் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதை 29  அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணியான 'அரசாங்க வன்முறையை நிறுத்துங்கள்  அமைப்பு' வரவேற்றுள்ளது. ஆனால் விசாரணைகள் சுதந்திரமாகவும் இருக்காது என்பதால்   அது தடுப்புக் காவல் மரணங்களை திறமையாக விசாரிக்க முடியாது என அது கூறியது. IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான…

சிலாங்கூரில் தேர்தல் மோசடியை ஆராய ஆணையம் அமைக்கப்படும்

சிலாங்கூர் அரசு, கடந்த பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் குறைகூறப்பட்டிருப்பதை ஆராய ஒரு ஆணையத்தை அமைக்கப்படும் என  அறிவித்துள்ளது. “அப்படி ஒரு ஆணையம் அமைக்க  1950 விசாரணை ஆணையச் சட்டம் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது”, என மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராகிம்  இன்று ஓர் அறிக்கையில்…

டிஏபி: கேஎல்ஐஏ2 தாமதமாவதற்கு உண்மை காரணம் என்ன?

குறைந்த கட்டண விமானச்சேவை முனையமான கேஎல்ஐஏ2-ஐக் கட்டி முடிப்பதில் ஏற்பட்டுள்ள “மிகப் பெரிய தாமதத்துக்கு”ப் பின்னணியில்  உள்ள  உண்மைகளை  மலேசிய விமானநிலைய  ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) விளக்க வேண்டும்  என்று டிஏபி கோரியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை   அம்முனையத்தைக் கட்டி முடிப்பதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டது.  அது 2014 ஏப்ரல்…

முன்னாள் ஸ்ரீ காடிங் எம்பி ஜோகூர் சட்டமன்ற சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பல அறிக்கைகளை வெளியிட்ட  முன்னாள் ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ், ஜோகூர் சட்டமன்ற சபாநாயகராக  பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார். அவரது மனைவி அஜிஸா ஸாக்காரியா பாரிட் ராஜா சட்டன்றத் தொகுதிக்கான  உறுப்பினராக முதல் தவணைக் காலத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.…

நம் நாட்டில் நிகழும் விஷயங்கள் வெட்கத்தை அளிக்கின்றன

'அம்னோ உட்பூசல் மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும். அதனால் தமது  நிலையை பாதுகாத்துக் கொள்ள நஜிப் அன்வாருடன் அமைதியை நாடுகின்றாரா  ?' அன்வார் ஜகார்த்தாவில் நஜிப்பின் சதுரங்க ஆட்டத்தை நிராகரித்தார் அகமட்: தேர்தல் தகராற்றைத் தீர்ப்பதற்கு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் பேச்சு நடத்த பிரதமர் நஜிப் ரசாக்…

மூவாரில் காற்றின் தரம் மோசமடைந்ததால் பள்ளிகள் மூடப்பட்டன

மூவாரில் காற்றின் தரம் புகைமூட்டத்தின் காரணமாக ‘அபாய எல்லை’யைத் தொட்டு விட்டது என இன்று காலை சுற்றுச்சூழல் துறை (டிஓஇ) இணையத்தளம் கூறியது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, மூவாரில் காலை 7 மணிக்கு 331 ஆக இருந்ததாம். 301 என்ற நிலையைத் தாண்டுவது அபாயகரமானது எனக் கருதப்படுகிறது. 201-க்கு…

அன்வார் 5 ஆண்டுகள் காத்திருக்கலாம்; மக்களால் முடியாது

ஆட்சிமாற்றத்துக்காக மேலும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க மக்களுக்குப் “பொறுமை” இல்லை என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா. “அன்வார் காத்திருப்பார், மற்ற தலைவர்களும் காத்திருப்பார்கள். ஆனால், மலேசிய மக்களுக்கு மேலும் ஐந்தாண்டுகள் காத்திருக்கும் பொறுமை இல்லை. “மேலும் ஐந்தாண்டு விரயத்தை நம் பொருளாதாரம் தாங்காது. மாற்றம் தேவை…

கைரி: அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டியை வரவேற்கிறேன்

எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கான  போட்டி தொடர்பில் தாம் 'திறந்த' நிலையை பின்பற்றுவதாக இளைஞர் தலைவர்  கைரி ஜமாலுதின் சொல்கிறார். அந்தப் பதவிக்கு போட்டி இருந்தாலும் அது தமக்குப் பிரச்னை இல்லை என்றும்  அந்தப் பதவிக்கு போட்டியிட விரும்பும் யாரையும் தாம் வரவேற்பதாகவும்…

பேரணிக்கு பிரச்சாரம் செய்ய சாலைப் பிரிப்பில் ‘திடீர் கும்பல்’ உறுப்பினர்கள்…

சனிக்கிழமைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு முன்னதாக '505 திடீர்  கும்பலை' சேர்ந்த 15 ஆர்ப்பாட்டக்காரர்கள் கோலாலம்பூரில் ஜாலான் துன்  பேராக்கில் வழக்கத்துக்கு மாறான முறையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது நடவடிக்கை அந்தப் பகுதியில் சென்ற காரோட்டிகளின் கவனத்தை  ஈர்த்தது. மஸ்ஜித் ஜாமெய்க் எல்ஆர்டி நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை…

ஒலிம்பிக் நாள் ஓட்டத்துக்கான இடமாற்றம் ஒரு ‘சதியா’?

மலேசிய ஒலிம்பிக் மன்றம் நடத்தும் ஒலிம்பிக் நாள் ஓட்டம் ஜூன் 23-இல் டாட்டாரான் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கடைசி நேரத்தில் அது பாடாங் மெர்போக்குக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது. இதைக் காரணம்காட்டி ‘505 கறுப்புப் பேரணி’யை அங்கு நடத்துவதற்கு இடம் கொடுக்க டிபிகேஎல் மறுப்புத் தெரிவிக்கலாம். அதற்காகத்தான்…