பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜாப்ருல் அஜீஸ் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். தெங்கு ஜாப்ருல் இந்தப் பதவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு ஜாப்ருல் நாட்டின் செழுமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் இந்த பொறுப்பை விடாமுயற்சியுடனும்…
‘டிஎன்பி ஐபிபி-க்களுக்கு செலுத்தும் 3.5 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடியும்’
புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் ஐபிபி என்ற சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் டிஎன்பி கொடுக்கும் 3.47 பில்லியன் ரிங்கிட்டை அந்தக் கூட்டணி மிச்சப்படுத்தும். இவ்வாறு பிகேஆர் முதலீட்டு, வர்த்தகப் பிரிவுத் தலைவர் வோங் சென் கூறியிருக்கிறார். 'மின்சக்தி ஒதுக்கீட்டு ( reserve ) அளவைக் குறைப்பதின்…
சிப்பாங் பூசை மேடை உடைப்பு : மஇகா ஆர்ப்பாட்டத்தில் வெறும்…
அண்மையில் சிப்பாங்கில் வீட்டுக்கு வெளியில் 8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடை சிப்பாங் நகராண்மைக் கழகத்தினால் உடைக்கப்பட்டதை கண்டித்து சிலாங்கூர் மாநில அரசு பணிமனைக்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மஇகா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்தியிருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார்…
டோனி புவா: நில அபகரிப்பு குறித்து நஜிப் விளக்க வேண்டும்
எம்பி பேசுகிறார்: அம்னோ தலைவர்கள் சிலாங்கூரில் நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்க மறுப்பதும் அது பற்றி எதுவும் தெரியாது என்று நாடகமாடுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. 2004-இல், ஆரா டமன்சாராவில் 87,188 சதுர அடி நிலம் மிகக் குறைந்த விலையில் சுபாங் அம்னோவுக்கு விற்கப்பட்ட விவகாரத்தை செவ்வாய்க்கிழமை நாங்கள்…
சுவாராம் மீதான விசாரணையை சிசிஎம் தொடருகின்றது; 7 ஊழியர்களுக்கு அழைப்பு
சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் சுவாராம் மீதான புலனாய்வு அறிக்கைகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குக் கடந்த மாதம் அனுப்பி விட்ட போதிலும் அது சுவாராமுக்கு எதிரான விசாரணையை இன்னும் தொடருவதாகத் தோன்றுகிறது. சிசிஎம் அதிகாரிகள் இன்று சுவாராம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதே அவ்வாறு கருதுவதற்கான காரணமாகும். "எல்லாம்…
‘தெங்-கின் இஸ்லாமியமயக் கருத்து இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்துகிறது’
பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் 'இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்தும்' மனிதர் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி கூறியிருக்கிறார். பினாங்கு இஸ்லாமிய மயத்தை நோக்கிச் செல்கிறது என தெங் விடுத்துள்ள அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார். "குறுகிய…
தீபக் குறிப்பிட்ட மர்மப் பெண்மணி ‘புதிய தகவல்’ அல்லவா? என்ஜிஓ…
அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ) ஜிங்கா 13, சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் முதலாவது சத்திய பிரமாணத்தை (எஸ்டி) மாற்றி இரண்டாவது சத்திய பிரமாணம் ஒன்றைச் செய்ததில் ‘தெரிந்த பெண்மணி’ ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீபக் ஜெய்கிஷன் குறிப்பிட்டிருப்பதே மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்குவதற்குப் போதுமான காரணமாகும் என்கிறது. “தீபக்,…
இப்போது அஞ்சுவது யார் என அம்னோ வினவுகின்றது
ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பொது Read More
சிப்பாங் ஏஇஎஸ் கேமிராக்களைத் ‘திரையிட்டு மூடிவைக்கும்’ பணியை எம்பிஎஸ் செய்யாது
சிப்பாங் முனிசிபல் மன்றம் (எஸ்பிஎஸ்), தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களைத் திரையிட்டு மூடும் பணியைத் தான் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளது. அதைச் செய்யுமாறு குத்தகையாளருக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. சிலாங்கூர் அரசு இதற்குமுன் அறிவித்ததுபோல், முனிசிபல் மன்றம் அந்த வேலையைச் செய்யப்போவதில்லை என்பதை எம்பிஎஸ் தலைவர் முகம்மட் சயுத்தி பின்…
நாடற்றோர் பிரச்னைக்கு உடனே தீர்வு : அன்வார் சூளுரை
பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம், 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் நீண்டகாலமாக இருந்துவரும் நாடற்றோர் பிரச்னைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்றார். நேற்றிரவு கெடா, பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு கூட்டத்தில் பேசிய அன்வார், இவ்விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மலாய்மொழி மேன்மைக்கும்…
ராபிஸி, மூசா ‘ஆதாரங்களுடன்’ செவ்வாய்க்கிழமை ஹாங்காங் செல்கிறார்
சபா முதலமைச்சர் மூசா அமான் 'வழங்கிய' வெட்டுமரச் சலுகைகளுக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் 'மேலும் விவரங்களை' கொடுப்பதற்காக பிகேஆர் குழு ஒன்று செவ்வாய்க் கிழமை ஹாங்காங் செல்கிறது. பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்கும் அந்தக் குழு, அந்தப் பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட…
நில அபகரிப்பு: மீண்டும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது
"நாம் அவர்களுடைய கூர்மையான வர்த்தகச் சிந்தனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். 'சமூக நோக்கங்களுக்காக' பெறப்பட்ட நிலத்தை 'கொண்டோ'-வாக மாற்றிய கலையை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" அந்த நிலம் கெளானா ஜெயா அம்னோவிடம் கொடுக்கப்பட்டது என சுபாங் அம்னோ சொல்கிறது அடையாளம் இல்லாதவன்#85701391: உண்மையில்…
சிப்பாங் பூசை மேடை உடைப்பு : கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கிறேன்!
சிப்பாங்கில் பூசை மேடை உடைக்கப்பட்டதைக் கண்டித்து இன்று சா ஆலமிலும் சிப்பாங்கிலும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை தாம் வரவேற்பதாக, சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தெரிவித்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களைப் பற்றி செம்பருத்தி வினவியபோது கருத்துரைத்த கா. ஆறுமுகம், "உரிமை என்பது போராட்டத்தின் எல்லை…
மூசா: போட்டிக் கட்சிகளின் செராமாக்கள் அருகருகே நடத்தப்படக் கூடாது
அரசியல் செராமாக்கள் அருகருகே நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது, அவ்வாறு அனுமதித்தால் கோம்பாக்கில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நிகழ்ந்ததைப் போன்று மோதல்களே மூளும் என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறுகிறார். தாம் மலாக்காவில் மாவட்ட போலீஸ் தலைவராக இருந்த போது போட்டிக் கட்சிகளின்…
‘அம்னோ மருட்டல்கள்’ காரணமாக பக்காத்தான் பேரணி வேறு இடத்துக்கு மாற்றம்
மலாக்காவில் வரும் சனிக்கிழமையன்று பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்திருந்த Himpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சிப் பேரணி) கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரை அம்னோ மருட்டியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "அந்த இடத்தை வாடகைக்கு விடுவதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை…
தவறு செய்த போலீஸ்காரர்களை அடையாளம் காண முடியவில்லை என்கிறார் முன்னாள்…
பெர்சே 3.0 பேரணியின் போது தமக்குக் காட்டப்பட்ட 10 வீடியோக்களை பல முறை பார்த்த போதும் அவற்றிலிருந்து போலீசார் முரட்டுத்தனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு போலீஸ் அதிகாரியைக் கூட முன்னாள் டாங் வாங்கி ஒசிபிடி முகமட் சுல்கார்னெயின் அப்துல் ரஹ்மானால் அடையாளம் காட்ட முடியவில்லை. "உதவியாளர்கள் தொடக்கம்…
எம்ஏசிசி புதிய தகவல் கிடைத்தால் பாலாமீதான விசாரணையை மீண்டும் தொடங்கும்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தனியார் துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியம் விவகாரம் மீதான Read More
கட்டுப்பாட்டை தாம் இழந்ததாகக் கூறப்படுவதை அம்பிகா மறுக்கிறார்
பெர்சே 3.0 பேரணியின் போது கூட்டத்தினர் மீதான கட்டுப்பாட்டை தாம் இழந்து விட்டதாகக் கூறப்படுவதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மறுத்துள்ளார். அந்த நிலைக்கு போலீசாரே காரணம் என அவர் சொன்னார். கலைந்து செல்லுமாறு தாம் விடுத்த வேண்டுகோளை சிலர் மட்டுமே கேட்க முடிந்த போதிலும் கூட்டத்தினர்…
‘முன் கூட்டிய எச்சரிக்கை, ஒடுக்குமுறை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதைக் காட்டுகின்றது’
பெர்சே 3.0 பேரணி மீது போலீசார் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாக செபுத்தே எம்பி தெரெசா கோக் நம்புகின்றார். அந்த நடவடிக்கைகளுக்கு ஐந்து நிமிடம் முன்னதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரி ஒருவரிடமிருந்து தமக்கு எச்சரிக்கை கிடைத்ததே அவ்வாறு நம்புவதற்கான காரணம் என அவர் சொன்னார்.…
மே 13 மருட்டல்கள் தொடர்பில் அரசு சாரா அமைப்புக்கள் அகோங்கிடம்…
மே 13 இனக் கலவரம் மீது அம்னோ தலைவர்கள் 'மருட்டல்கள்' விடுத்துள்ளதைத் தொடர்ந்து அகோங்கிடம் மகஜர் ஒன்றை நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுவும் மற்ற அரசு சாரா அமைப்புக்களும் சமர்பிக்கும். அந்தத் தகவலை நியாட் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம் நேற்று வெளியிட்டார். பக்காத்தான்…
தேசத் துரோகம் மீதான புலனாய்வில் போலீசார் மலேசியாகினி மடிக்கணினியை பறிமுதல்…
அரசமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி மலேசியாகினியில் தெரிவித்த கருத்துக்கள் சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக தேசத் துரோகத்தன்மை உடையவை எனக் கூறப்படுவது மீது தாங்கள் மேற்கொள்ளும் புலனாய்வில் ஒரு பகுதியாக போலீசார் மலேசியாகினி செய்தி இணையத் தளத்தின் மடிக்கணினி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். அந்த புலனாய்வு தொடங்கப்பட்டு…
‘அமைதிப் பேச்சு’ செராமாவில் வன்செயலைத் தடுக்கவில்லை
கோம்பாக்கில் அன்வார் இப்ராகிமின் செராமாவுக்கு முன்னதாக கோம்பாக் அம்னோ தலைவரும், பாஸ் தலைவரும் சந்தித்துப் பேசினார்கள். என்றாலும் அப்பேச்சுகள் இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் நிகழ்வதைத் தடுக்கவில்லை. செராமாவுக்கு இரண்டு நாள் முன்னதாக அன்வார் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குறுஞ்செய்தி கோம்பாக் அம்னோ உறுப்பினர்களுக்குப் பரவலாக…
‘அந்த நிலம் கிளானா ஜெயா அம்னோவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுபாங்…
"சமூக நோக்கங்களுக்காக" முந்திய சிலாங்கூர் அரசாங்கத்திடமிருந்து மலிவாக பெறப்பட்ட நிலத்தில் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி கட்டப்பட்டுள்ளது மீது எழுந்துள்ள பிரச்னைக்குப் பதில் அளிப்பதை சுபாங் அம்னோ இப்போது கிளானா ஜெயா அம்னோ இடைக்காலத் தலைவர் யாஹ்யா பூஜாங்-கிடம் தள்ளி விட்டுள்ளது. சுபாங் அம்னோ தொகுதியின் தலைமையகத்தைக் கட்டுவதற்காக…
‘10,000 தொழிலாளர்களுக்கு நீதிமன்றத்துக்கு செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது’
2001ம் ஆண்டுக்கும் 2011ம் ஆண்டுக்கும் இடையில் 'தவறாக நீக்கப்பட்ட' 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வழக்குகளை தொழிலியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று நியாயம் பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தொழிலாளர் தலைவர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதலாளிகளுடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுக்கள் தோல்வி கண்ட பின்னர் அந்த…


