ரெடாட்ரூடைடு அல்லது "ரெட்டா" என்ற மூலப்பொருளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மலேசியாவில் பயன்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை ரெடாட்ரூடைடு அடங்கிய எந்தவொரு தயாரிப்பும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. ரெடாட்ரூடைடு,…
பிடிபிடிஎன் -னுக்கு வரவேண்டிய கடன்கள் பெருகுகின்றன
மலேசியாவில் இலவசப் பல்கலைக்கல்வியை வழங்குவது மீது அரசியல்வாதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி கடன் நிதி நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன்கள் அளவு பெருகிக் கொண்டே போகின்றன. 2012 ஆகஸ்ட் 31 வரை அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 45.41 பில்லியன் ரிங்கிட் கடன்களில் பெரும்பகுதியை…
பத்துமலை ‘கொண்டோ’ அனுமதியில் பக்காத்தானுக்கும் பங்கு உண்டு என்கிறார் சோர்
பத்துமலை 'கொண்டோ' திட்டம் அங்கீகரிக்கப்பட்ட விஷயத்திலிருந்து பக்காத்தான் ராக்யாட் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களை முழுமையாக விலக்கிக் கொள்ள முடியாது என வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சோர் சீ ஹியூங் கூறுகிறார். அந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டதில் அவர்களுக்கும் ஓரளவு பங்கு உண்டு என்றார் அவர். செலாயாங் நகராட்சி…
‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற டாக்டர் மகாதீர் கோரிக்கையை ஹாடி நிராகரித்தார்
ஹுடுட் சட்டம் முஸ்லிம் அல்லாதார் உட்பட அனைவருக்கும் அமலாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனையை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் வெவ்வேறான தண்டனைகள் விதிக்கப்படுவது நியாயமற்றது எனக் கருதப்படுவதோடு இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானதும் என்று…
பினாங்கில் ஜனவரி மாதம் ஊராட்சி மன்றத் தேர்தல்களா ?
2012ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றத் தேர்தல் ( பினாங்குத் தீவு, பிராவின்ஸ் வெல்லெஸ்லி) சட்டத்தை மாநில அரசாங்கம் வரும் ஜனவரி மாதம் அமலாக்கும். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அந்த விஷயம் மீது தகவல் கொடுக்கப்பட்டு தேதி நிர்ணயம் செய்யப்படும் என ஊராட்சி மன்றம், போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றுக்குப்…
பிரஞ்சு வழக்குரைஞர்களுடைய வருகை மீது மௌனம் சாதிக்கும் அமைச்சரை சுவாராம்…
இரண்டு பிரஞ்சு வழக்குரைஞர்கள் இந்த நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என உறுதி அளிக்கத் தவறியுள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனை மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் சாடியுள்ளது. "அவர்கள் நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அந்த விவகாரம் மீது அமைச்சர் ஏன்…
மகாதீர்: பாஸ் ஹுடுட் சட்டத்தை ‘எல்லோருக்கும் அமலாக்க வேண்டும்’
இஸ்லாத்தின் போதனைகளுக்கு இணங்க நியாயமாக இருக்க வேண்டுமானால் ஹுடுட் சட்டத்தை முஸ்லிம் Read More
பிரதமராக ஹாடி ? தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மலேசியப் பிரதமராக வேண்டும் என்ற யோசனை மீது தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனப் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "எந்தப் பிரச்னையும் இல்லை. அது ஒரு விவகாரமே அல்ல. நாம் அந்த யோசனையை விவாதிக்க முடியும்," என…
ஹாடி பிரதமராக வேண்டும் என பாஸ் உலாமா பிரிவு விருப்பம்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளர் எனக் கோத்தா பாருவில் 58வது பாஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய தேவான் உலாமா என்றழைக்கப்படும் பழமைப் போக்குடைய பிரிவை பிரதிநிதித்த ஹைருண் நிஸாம் மாட் ஹுசேன் கூறியுள்ளார். "நமது தோக் குரு இல்லை என்றால்…
‘ஒன்றுபட்டு ஆளும்’ கோட்பாடு வழி ‘பிரித்து ஆளும்’ பிஎன் -னுக்கு…
பக்காத்தான் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டரசு அதிகாரத்தை ஏற்க பாஸ் தயாராக இருப்பதாக 58வது பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார். மலேசியர்களுக்கு 13வது பொதுத் தேர்தல் திருப்பு முனையாகும். புத்ராஜெயாவுக்கு புதிய பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தை தெரிவு…
பாலியல் வல்லுறவு விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் பதவி விலக…
பினாங்கில் மூன்று போலீஸார் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் தாம் பதவி விலகப்போவதில்லை என்று கூறுகிறார் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். “அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டோம். இதற்குமேல் என்ன செய்ய வேண்டும்? இதுதானே நம் நாட்டின் நடைமுறை”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். அவ்விவகாரத்துக்குப் பொறுப்பேற்று…
அரசாங்கத்தில் தொடர்ச்சி இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு நஜிப் சீனர் அமைப்புக்களுக்கு வேண்டுகோள்
அரசாங்கத்தை தேர்வு செய்வதில் தொடர்ச்சி முக்கியம் என்பதை மக்களுக்கு விளங்க வைப்பதற்கு உதவுமாறு சீனர் அமைப்புக்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "அமெரிக்க மக்கள் உறுதியற்ற நிலையைக் காட்டிலும் தொடர்ச்சி முக்கியம் எனக் கருதியதால் அவர்கள் அதிபர் ஒபாமாவை மீண்டும் தேர்வு செய்தனர்," என அவர்…
பாஸ் தனது பாதையிலிருந்து விலகவில்லை என சுரா ( syura…
புத்ராஜெயாவைக் கைப்பற்றும் ஆர்வத்தில் பாஸ் கட்சி தனது பாதையிலிருந்து விலகிச் சென்று விட்டதாக கூறப்படுவது குறித்த தனது மௌனத்தை அந்தக் கட்சியில் வலிமை வாய்ந்த உயர் நிலை அதிகாரத்தைக் கொண்ட சுரா ( syura ) மன்றம் கலைத்துள்ளது. பாஸ் கட்சி தனது போராட்டத்துக்கு இன்னும் உண்மையாக இருப்பதாக…
முஸ்லிம் அல்லாத ஒரே பேராளர் பாஸ் மிதவாதத்தை ஆதரிக்கிறார்
58வது பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள முஸ்லிம் அல்லாத ஒரே பேராளரான கே தீபகரன் பாஸ் கட்சியின் மிதவாதப் போக்கைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். அந்தக் கட்சி தீவிரவாதக் கட்சி என பிஎன் குற்றம் சாட்டுவதை அவர் நிராகரித்தார். பாஸ் கட்சிக்கு எதிரான எண்ணம் 2008 பொதுத்…
அன்வார்: பணமாய் கொட்டுகிறது, ஆனால் பிஎன் வெளியேற்றப்படுவது நிச்சயம்
மக்கள் அடுத்த ஆண்டில் அரசாங்கம் கொடுக்கும் அன்பளிப்பை வாங்குவதற்குக் காத்திருக்கிறார்கள். அதே வேகத்தில் ஆளும் கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். “மக்கள் பிஆர்1எம் (1மலேசியா உதவித்தொகை ரிம500)-மை வாங்கிக் கொண்டாலும் பிஎன்னைப் பதவியை விட்டிறக்குவது உறுதி”, என நேற்றிரவு…
‘நெடும் நடைப் பயணத்தில்’ கலந்துகொள்ளும் மூத்த குடிமக்களுக்குப் பாராட்டு
குவாந்தானிலிருந்து கோலாலும்பூருக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஹிம்புனான் ஹிஜாவ் நெடும் நடைப்பயணத்தில் மூத்த Read More
உங்கள் கருத்து: போலீஸ் படையில் கட்டொழுங்குச் சீர்குலைவு மோசமடைகிறது
'பல ஆண்டுகளாக போலீஸ் படையில் நிலவுகின்ற கட்டொழுங்குச் சீர்குலைவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் அதிகரித்து விட்ட அத்துமீறல்களுக்கு அந்த பாலியல் வல்லுறவு சம்பவம் உதாரணமாகும்' மூன்று போலீஸ்காரர்கள் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது உங்கள் அடிச்சுவட்டில்: இந்த வழக்கு விசாரணைக்குச் சென்றாலும் கூட பழக் கூடையில் ஒர்…
மலேசிய சிவில் சமூக இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும், ஜிபிஎம்
-சைட் இப்ராகிம், ஜிபிஎம் மாநாடு இயக்குனர், நவம்பர் 17, 2012. கடந்த 55 ஆண்டு காலத்தில் மலேசியா மேம்பாடற்ற நிலையிலிருந்து ஒரு மேம்பாடடைந்த நாடாக முன்னேறியுள்ளது. 1957 மற்றும்1963 ஆம் ஆண்டுகாலத்தில் துடிப்பு மிக்க மக்களைக் கொண்ட, பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்ட, புதியதோர் தேசிய நாடாக மலேசிய உருவெடுத்தது.…
சிலாங்கூர் ஆட்சி மன்றம்: தலைவர் இடமாற்றம் மீது செலாயாங் நகராட்சி…
செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் ஜைனல் அபிடின் ஆலாலா திடீரென இட மாற்றம் செய்யப்பட்டது மீது நடவடிக்கை எடுப்பதை செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்களிடம் விட்டு விடுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறியுள்ளார். அந்த விவகாரம் தொடர்பில் செலாயாங் நகராட்சி மன்றத்துக்கு முழு சுயாட்சி…
‘விஷமத்தனமான’ உத்துசான், என்எஸ்டி கட்டுரைகள் மீது ஆஸ்திரேலியர் போலீசில் புகார்…
அரசாங்க ஆதரவு நாளேடுகளான உத்துசான் மலேசியாவும் என்எஸ்டி என்ற நியூ ஸ்ட்யிரட்ஸ் டைம்ஸும் தம்மைப் பற்றி தவறான 'விஷமத்தனமான, வெறுப்பைத் தருகின்ற' கட்டுரைகளை வெளியிட்டதாகக் கூறி ஆஸ்திரேலிய செனட்டர் நிக்கோலஸ் செனபோன் போலீசில் புகார் செய்துள்ளார். அந்தப் புகார் இன்று ஜாலான் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்தப்…
பாஸ்: ‘பிசாசுகள் கட்சி’ பற்றி டாக்டர் மகாதீரே விளக்க முடியும்
பாஸ் கட்சியின் இன்றைய ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வருணிக்கப்பட்ட 'பிசாசுக் கட்சி' பற்றிய விளக்கத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மட்டுமே தர முடியும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறியுள்ளார். "மகாதீரைப் போய்க் கேளுங்கள். அதனைச் சொன்னது மகாதீர், அந்த சொல்லை உருவாகியவர்…
அம்னோ சேவை மையத்தில் சாயம் வீசியடிக்கப்பட்டது
புக்கிட் அந்தாராபங்சாவில் உள்ள அம்னோ சேவை மையம்,காலிகளின் அட்டகாச செயல்களுக்கு இலக்காகியுள்ளது. அதன்மீது Read More
சிஎம்: டிஏபி தலைவரின் முடிவை வைத்தே வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்
முதலமைச்சர் லிம் குவான் எங், பெங்காலான் கோட்டா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் லாவ் கெங் ஈ-ஐ மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதா, இல்லையா என்பதை முடிவு செய்யுமுன்னர் லாவின் அடைவுநிலை குறித்து மாநில டிஏபி தலைவர் சொள கொன் இயோ-வின் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறார். எனவே, லாவ் மீண்டும் போட்டியிட விரும்பினால்,…
கைரி கட்சிப் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவார் ஆனால் தேர்தலில் போட்டியிடுவது…
அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின் அபு பக்கார், கட்சிப் பதவியைத் தற்காக்க போட்டியிடுவார் ஆனால் பொதுத் தேர்தலில் களமிறங்குவதில் அவருக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. தம் விருப்பத்தை கைரி அல்லது கேஜே என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவர், பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கிடம்…


