நேற்றிரவு லாஹாட் டத்து, லெம்பா மக்சினாவில் ஏற்பட்ட நீர் பெருக்கத்தைத் தொடர்ந்து மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மேலும் மூவரைக் காணவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், 25 மற்றும் 58 வயதுடையவர்கள், மலையேற்றத்திற்காக அந்தப் பகுதிக்குள் நுழைந்த 17 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
நஜிப்பின் பேச்சு இனப் பேரிடருக்கு வழிகோலும்: சைபுடின் தாக்கு
நேற்று அம்னோ பொதுப்பேரவையில் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ஆற்றிய உரை இனப் பேராபத்தை உண்டு பண்ணும் வகையில் அமைந்திருந்தது என முன்னாள் கல்வித் துணை அமைச்சர் கூறினார். அப்படி ஓர் உரையாற்றிய நஜிப்பை முன்னாள் அம்னோ எம்பியும் இப்போது பக்கத்தான் ஹராபானின் தலைமைச் செயலாளருமான சைபுடின் அப்துல்லா …
தன்னார்வ ரோந்து படையைக் கலைப்பீர்: பினாங்குக்கு ஐஜிபி வலியுறுத்து
போலீஸ் நடவடிக்கை எடுக்குமுன்னர் பினாங்கு அரசு மாநில தன்னார்வ ரோந்து படையைக் கலைப்பது நல்லது என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் அறிவுறுத்தினார். “அதை வைத்திருப்பதில் பயனில்லை, எப்படியும் அது சட்டவிரோதமானது என்று அறிவிக்கத்தான் போகிறோம்”, என்று காலிட் இன்று பினாங்கில் கூறினார். “மாநிலப் பாதுகாப்பையும் …
கேஎல் மேயர்: பேருந்து முனையம் முன்பே அம்னோவுக்கு விற்கப்பட்டு விட்டது
புத்ரா பேருந்து முனையம் பல ஆண்டுகளுக்கு முன்பே அம்னோவுக்கு விற்கப்பட்டு விட்டதாக கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசீஸ் கூறினார். “அதை அம்னோவுக்கு விற்றோம். அது பற்றிய விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால், கடந்த ஆண்டில் அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே அது அம்னோவுக்கு விற்கப்பட்டது”, …
ஓப்ஸ் வாட்டர் நடவடிக்கையில் எம்ஏசிசி மொத்தம் ரிம114 மில்லியன் ரொக்கத்தையும்…
சாபா நீர் துறை ஊழல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் வாட்டர் நடவடிக்கைகளில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக மொத்தம் ரிம114.5 மில்லியன் ரொக்கத்தையும் அசையும் அசையா சொத்துகளையும் கைப்பற்றியுள்ளது. அந்த நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அறிவித்தபோது எம்ஏசிசி இதைத் தெரிவித்தது. “எம்ஏசிசி அதன் விசாரணைகளை விரைவில் …
தெங்கு ரசாலி: ஓராங் அஸ்லிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பது…
குவாங் மூசா எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, தம் தொகுதிவாழ் ஓராங் அஸ்லிகளின் கோரிக்கைகள் தமக்குப் புரிகிறது என்றுரைத்து அதே நேரத்தில் அவர்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளவும் கூடாது என்றும் வலியுறுத்தினார். இன்று அம்னோ பொதுப்பேரவைக் கூட்டத்துக்கிடையே செய்தியாளர்களிடம் தெங்கு ரசாலி பேசினார். மரம் வெட்டுவோரைத் தடுக்க …
நஜிப்: டிஏபி மலாய்க்காரர்களுக்கு எதிரி; இஸ்லாத்துக்கு எதிரி
இன்று காலை அம்னோ பொதுப்பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், டிஏபி பூமிபுத்ராக்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு மிரட்டல் என்று குறிப்பிட்டார். டிஏபி ஆட்சிக்கு வந்தால் அது இஸ்லாத்தைச் “சிறுமைப்படுத்தும்” என்றாரவர். “நாங்கள் (அம்னோ) அதை அனுமதியோம். “நாங்கள் மூண்டெழுந்து (இஸ்லாத்தைக்) காப்போம்”, என …
ஐஜிபி: மரியா துப்பாக்கித் தோட்டவைக் கையில் பிடித்திருக்கக் கூடாது; தடயம்…
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கொலை மிரட்டலாக வந்த துப்பாக்கித் தோட்டா ஒன்றைக் கையில் ஏந்தி அனைவரிடமும் காண்பித்தது தவறு எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கண்டித்தார். அவரது செயலால் அதிலிருந்த தடயம் அழிந்து விட்டது என்றாரவர். “அடுத்த முறை இப்படி எதையும் …
போலீஸ் மோப்ப நாய்க்கும் பயிற்றுநருக்கும் பாராட்டுப் பதக்கங்கள்
செகாமாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த எட்டு-வயது மோப்ப நாய்க்கும் அதன் பயிற்றுநரான லான்ஸ் கார்ப்பரல் ஹாடின் இங் காங்கும் பாராட்டுப் பதக்கங்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிடிஆர்எம் முகநூல் பக்கத்தில் ஒரு செய்தி காணப்படுகிறது. மூராட் என்ற அந்த நாய், நவம்பர் 16-இல் போலீசாரால் தேடப்பட்டு வந்த ‘கேங் காப்பாக்’ …
கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களுக்கு ஆதரவாக ஓராங் அஸ்லிகள் நீதிமன்றத்தில்…
கிளந்தான், குவா மூசாங் உள்பகுதியில் மரம் வெட்டுவோரைத் தடுக்க முனைந்ததற்காக கைது செய்யப்பட்ட 41 ஓராங் அஸ்லி சமூகப் போராட்டவாதிகள் விசாரணைக்காக இரண்டு நாள் தடுத்து வைக்கப்பட்டனர். நேற்று பிற்பகல் பாலா, பெரியாஸ் ஸ்டோங் செலாதான் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் அவர்கள் அமைத்திருந்த தடுப்பு அரண்களை போலீசாரும் வனத்துறை …
பெர்சேயாலும் மகாதிர், சோரோஸாலும் பேராபத்து: அம்னோ பிரிவுகள் ஆண்டுக் கூட்டத்தில்…
நேற்றிரவு அம்னோவின் நடப்பில் துணைத் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ஆற்றிய உரையைத் தொடர்ந்து இவ்வாண்டு அம்னோ பிரிவுகளின் ஆண்டுக் கூட்டங்களில் பெர்சே மீதும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அமெரிக்கக் கொடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோர்மீதும் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதைப் பார்க்கிறோம். மகாதிர் எதிரணியில் சேர்ந்து…
முக்ரிஸ்: என் தந்தையின் செல்வாக்குடன் நஜிப் அவரது செல்வாக்கை ஒப்பிட…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோவில் அவரது செல்வாக்கை அவருக்கு முன்னவரான டாக்டர் மகாதிர் முகம்மட்டின் செல்வாக்குடன் ஒப்பிடுவது தேவையற்றது என்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா துணைத் தலைவர் முக்ரிஸ். “மகாதிர் கட்சியிலிருந்து வெளியேறி நீண்ட காலம் ஆயிற்று. அதனால் மகாதிரின் செல்வாக்கு குறித்து கேள்வி எழுப்ப …
ஐஜிபி: மரியா திரும்பவும் கைது செய்யப்படும் சாத்தியம் உண்டு
போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் , பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதை மறுக்கவில்லை. இன்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் மரியாமீது அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழும் போலீஸ் விசாரணை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “பிபிஏ-இன்கீழ் விசாரணை செய்து …
டத்தோ பட்டம் கொண்ட அரசு அதிகாரி தடுத்து வைப்பு
குத்தகை வழங்கிய விவகாரத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில் டத்தோ பட்டம் பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவர் விசாரணைக்காக நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார். நேற்று பிற்பகல் மணி 2க்கு அவரைக் கைது செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவரது வங்கிக் கணக்கையும் முடக்கி வைத்தது. அவரது வங்கி …
காலிட்: அன்னிய நிதியுதவி தொடர்பில் மேலும் பலர் கைதாகலாம்
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறும் விசயத்தில் அனைத்துத் தரப்புகளுக்கும் கவனம் தேவை என எச்சரித்துள்ளார். பெர்சேயும் மகளிர் அமைப்பான எம்பவரும் கோடீஸ்வரர் சோரோஸின் ஓபன் சொசைடி அறநிறுவன(ஓஎஸ்எப்)த்திடமிருந்து நிதி பெற்றதன் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதை போலீஸ் தலைவர் சுட்டிக்காட்டினார்.…
அம்னோவின் தோல்வி மலாய்க்காரர்களுக்கும் தோல்விதான் – அம்னோ நிர்வாகச் செயலாளர்
அம்னோ தோல்வி கண்டால் மலாய்க்காரர்கள் அவர்களின் கெளரவத்தையும் இறையாண்மையையும் இழப்பார்கள் என்று அக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் அப் ரவுப் யூசோ கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்நாட்டில் மலாய்க்காரர்கள்தாம் பெரும்பான்மை என்றாலும் அரசியல் அதிகாரத்தைப் பொருத்தவரை மலாய்க்காரர்கள் சிறுபான்மையினராக ஆகிவிடும் அளவுக்கு மலாய் அரசியல் வலிமை பிரிந்து கிடக்கிறது; பலர் இதை …
சோஸ்மா சட்டத்தின் கீழ் தமக்கு எதிரான விசாரணையை போலீஸ் நிறுத்தி…
சோஸ்மா சட்டம் 2012 இன் கீழ் தம் மீது மேற்கொண்ட விசாரணை நிறுத்தப்படும் என்று போலீஸ் அவரிடம் தெரிவித்தாக மரியா கூறினார். பத்து நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்ட பின்னர் இன்று மரியாவை போலீஸ் விடுதலை செய்தது. "என்னிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் அவர்கள் என்னை விடுதலை…
மரியா விடுதலை செய்யப்பட்டார்
சோஸ்மா சட்டத்தின் கீழ் பத்து நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்யப்பட்டு தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலிருந்து இன்று மதியம் அவர் விடுவிக்கப்பட்டார் என்று மரியாவின் வழக்குரஞர் அம்பிகா தெரிவித்தார். "முதலில்,…
பாஸ்: ஷியாரியா சட்டத் திருத்த விவகாரத்தில் முஸ்லிம்-அல்லாதார் நியாயமாக நடந்து…
ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல்) சட்டம் 1965-இல் திருத்தம் செய்வதற்கு முஸ்லிம்- அல்லாதார் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தால் 1976ஆம் ஆண்டு சட்டச் சீரமைப்பு (திருமண, மணவிலக்கு)ச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முஸ்லிம்களும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என பாஸ் எம்பி ஒருவர் எச்சரித்துள்ளார். பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் …
பெர்சே 5 பேரணி தொடர்பாக மேலும் 4 ஹராபான் தலைவர்களிடம்…
மேலும் நான்கு பக்கத்தான் ஹராபான் தலைவர்கள் பெர்சே 5 பேரணி தொடர்பான விசாரணைக்காக இன்று போலீஸ் நிலையம் சென்றனர். பக்கத்தான் ஹராபான் செயலக உறுப்பினர் சைபுடின் அப்துல்லா, பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நோர்லெலா அரிப்பின், செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம், அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் …
பெர்சத்துவைச் சேர்த்துக் கொள்வது குறித்து ஹராபான் விவாதிக்கும்
பக்கத்தான் ஹராபான் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) வை எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உறுப்புக்கட்சியாக சேர்த்துக் கொள்வது குறித்து அடுத்த வாரம் விவாதிக்கும். பார்டி அமனா நெகரா(அமனா) துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப், பெர்சத்து சேர்வதால் டிஏபி, பிகேஆர், அமனா ஆகியவை அடங்கிய பக்கத்தான் ஹராபான் மேலும் வலுப்பெறும் …
அரசாங்கம் அரசியல் நன்கொடைச் சட்டத்தை அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் கொண்டுவர…
பாஸும் அதன் பங்காளிக் கட்சியான பார்டி ஈக்காத்தான் பங்சா மலேசியா(ஈக்காத்தான்)வும் அரசியல் நன்கொடை மற்றும் செலவினச் சட்டத்தை (பிடிஇஏ) விரைவில் கொண்டுவர வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த உத்தேச சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாத மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பாஸ் துணைத் …
தாஜுடின் ஆதரவாளர்கள் 11 பேரும் ஒரு நாள் லாக்-அப்பில் வைக்கப்பட்டு…
வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் செய்ததற்காக தடுத்து வைக்கப்பட்ட 11 பேரையும் போலீசார் விடுவித்துள்ளனர். அந்த பதினோரு பேரும் ஒருநாள் லாக்- அப்பில் வைக்கப்பட்டு சனிக்கிழமை விடுவிக்கப்பட்டதை ஒரு போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தியதாக ஓரியெண்டல் டெய்லி கூறியது. எட்டு ஆடவர்களும் மூன்று பெண்களும் அடங்கிய அக் கும்பல் வெள்ளிக்கிழமை …
நிலச் சரிவுகளால் சிரம்பான் மக்கள் அச்சம்
சிரம்பான் தாமான் செனாவாங் பகுதி குடியிருப்பாளர்கள் இருவர், கடந்த சில நாள்களாக அடிக்கடி நிகழும் நிலச் சரிவுகள் குறித்து அச்சம் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வீடுகள் விழுந்து விடுமோ என்ற அச்சம்தான். அவர்களில் ஒருவரான நஸ்ரி முகம்மட் ரெட்ஸா,36, நவம்பர் 16-இல் தன் வீட்டுக்குப் பின்புறமுள்ள சாக்கடை தடுப்புச் சுவர் …