செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அயல் நாட்டவர்களுக்கு தங்கள் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ள்ளது. ஜேபிஜே அமலாக்க இயக்குனர் கிஃப்லி மா ஹாசன் கூறுகையில், நேற்றிரவு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும்…
‘கொலை செய்ததை ’ ஒப்புக்கொண்ட டுடெர்ட்டேமீது குற்றச்சாட்டு கொண்டுவரப்படுமா?
டாவோ சிட்டி மேயராக இருந்த போது, ‘சொந்தக் கைகளால்’ குற்றவாளிகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டேமீது குற்றஞ்சாட்டப்படும் அபாயமிருப்பதாக பிலிப்பீன்ஸ் செனட்டர்கள் இருவர் தெரிவித்தனர். திங்கள்கிழமை மணிலாவில் வணிகர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய டுடெர்ட்டே, டாவோ சிட்டியின் மேயராக இருந்த போது குற்றவாளிகளைக் …
ரோஹின்யா பேரணியில் கொதித்தெழுந்த பாஸ் இப்போது வாயை மூடிக் கொண்டிருப்பது…
பாஸ் இளைஞர் பகுதித் தலைவர் நிக் அப்டு நிக் மாட் எங்கு போனார் என்று வினவுகிறார் அமனா இளைஞர் துணைத் தலைவர் பயிஸ் பாட்சில். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் போன்ற தலைவர்கள் கலந்துகொண்ட ரோஹின்யா ஒற்றுமைப் பேரணி முடிந்து ஒரு …
எக்ஸ்போ மிலானோவில் பிரதமரின் படம் அகற்றப்படவில்லை
கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற எக்ஸ்போ மிலானோவில் மலேசிய காட்சிக்கூடத்திலிருந்து பிரதமர் நஜிப் ரசாக்கின் படம் அகற்றப்பட்டது என்று கூறப்படுவதை அனைத்துலைக வாணிப மற்றும் தொழில் அமைச்சும் மலேசிய வெளிநாடு வாணிக மேம்பாட்டு கோர்புரேசனும் (மாடிரேட்) மறுத்துள்ளன. இன்று அமைச்சும் மாடிரேட்டும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் பிரதமரின் படம்…
ஹராபான் -பெர்சத்து உடன்பாட்டுக்கு அன்வார் வரவேற்பு
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) பக்கத்தான் ஹராபானுடன் ஒத்துழைக்க உடன்பாடு கண்டிருப்பதை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் வரவேற்றார். இனி, அதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார். நேற்று பெர்சத்து பக்கத்தான் ஹராபானில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளுடனும் தேர்தல் கூட்டணி …
ரொஹின்யா விவகாரம்மீது அவசரக் கூட்டத்துக்கு ஓஐசி அறைகூவல்
இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு நிறுவனம் (ஓஐசி) மியான்மாரில் ரொஹின்யா விவகாரம் குறித்து அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஓஐசி தலைமைச் செயலாளர் யூசுப் அல்- ஒதைமின், “ரொஹின்யா சமூகத்தின் மனித உரிமைகள் ஒடுக்குப்படுவதையும் மீறப்படுவதையும்” கண்டித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “அனைத்துலகச் சமூகத்தில் உறுப்பு …
‘ஒரே சீனா’ கொள்கையில் குறுக்கீடு அமைதியைக் கெடுக்கும்: சீனா எச்சரிக்கை
சீனாவின் தைவான் விவகார அலுவலகம், “ஒரே சீனா” கொள்கையில் மாற்றம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அது தைவான் நீரிணையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கெடுக்கும் என்று எச்சரித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் ட்ரம்ப் தைவான் அதிபர் ட்சாய் இங்-வென்னுடன் தொலைபேசி வழி பேசியதற்கே ஆத்திரங் கொண்டிருக்கும் சீனா, …
ஆய்வாளர்கள்: ஹராபான் -பெர்சத்து உடன்பாடு வெற்றிபெற பாஸின் உதவியும் தேவை
பக்கத்தான் ஹராபானும் பார்டி பிரிபூமி பெர்சத்து(பெர்சத்து)வும் அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்னைத் தோற்கடிக்க விரும்பினால் அவை பாஸ் கட்சியையும் தங்களுடன் சேர்த்துக்கொள்வதே உசிதமாகும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. “பாஸின்றி அவற்றுக்கு(பிஎன்னை எதிர்ப்பது) கடினமாக இருக்கும்”, என யுனிவர்சிடி மலேசியா சரவாக் விரிவுரையாளர் ஜெனிரி அமிர் கூறினார். பாஸைச் …
2016 ஜனவரி- செப்டம்பரில் ரிம150.8 பில்லியன் முதலீடு
மலேசியாவில் 2016 ஜனவரிக்கும் செப்டம்பருக்குமிடையில் தயாரிப்பு, சேவை, மூலப் பொருள் துறைகளில் மொத்தம் ரிம150 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் செய்யப்பட்ட ரிம156.6 பில்லியன் முதலீட்டுடன் ஒப்பிட்டால் இது 3.7 விழுக்காடு குறைவுதான் என்றாலும் இது 117,550 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என வர்த்தக, …
அன்வார்: எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தமில்லை
தாம் செய்திருந்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தாலும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெறும் தம்முடைய முயற்சி நிற்காது, தொடரும் என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். “எல்லாம் முடிந்து விடவில்லை. சட்டப்படி அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து என் வழக்குரைஞர்களுடன் விவாதிப்பேன்”, என அன்வார் கூறினார்.…
அன்வாரின் விடுதலை முயற்சி பலனின்றிப் போனது
குதப்புணர்ச்சி II குற்றச்சாட்டையும் தண்டனையையும் நீதிமுறை மேலாய்வு செய்யக்கோரி பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அது நிராகரிக்கப்பட்டதால் எதிரணித் தலைவருக்கு இனி 2018 நடுப்பகுதிவரை சிறைதான். அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை நியாயமானதுதான் என்றும் அவருக்கு எதிராக பாகுபாடு எதுவும் …
Unilateral conversion is an attempt at cultural hegemony
-S. Thayaparan, December 11, 2016. “In all the ills that befall us, we are more concerned by the intention than the result. A tile that falls off a roof may injure us more seriously,…
ஹரப்பான், பெர்சத்து தேர்தல் உடன்படிக்கை
ஹரப்பான் கூட்டணியின் மூன்று பங்காளிக்கட்சிகள் மற்றும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து ஆகியவற்றுக்கிடையில் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு எதிராக நேரடிப் போட்டியை உறுதிசெய்வதற்கான ஓர் ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஹரப்பான் உறுப்புக் கட்சிகளான பிகேஆர், டிஎபி மற்றும் அமனா ஆகிய மூன்றும் அடுத்தப்…
கைருடின், மாத்தியாஸ் சோஸ்மா சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரும் மேல்முறையீடு…
பத்து கவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் மற்றும் அவரது வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் ஆகிய இருவரையும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் விசாரிக்க அரசு தரப்பு வழக்குரைஞர் செய்திருந்த மேல்முறையீட்டை மேல்முறையீடு நீதிமன்றம் இன்று…
ஒரே ஒரு கப்பல்தான் இப்போது காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடுகிறது
காணாமல்போன எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர்வதற்கு MV Fugro Equator கப்பல் இன்று மேற்கு ஆஸ்திரேலியாவின் ப்ரிமேண்டல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. 2014 மார்ச் 8-இல் 239 பேருடன் காணாமல்போன எம்எச் 370 விமானம் ஆழ்க்கடலின் பள்ளமான பகுதிகளில் கிடக்கிறதா என்று அது தேடிப் பார்க்கும். ஆழ்க்கடல் …
முகைதினின் சமரச முயற்சியை பாஸ் ஏற்கவில்லை
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு எதிராக ஒன்றுபட்ட எதிரணியை உருவாக்குவதற்காக, பாஸ், டிஏபி, அமனா ஆகியவற்றுக்கிடையில் சீர்கெட்டுக் கிடக்கும் உறவுகளைச் சீர்படுத்திக் கொடுக்க பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா முன்வந்தது. சிலாங்கூர் பாஸ் ஏற்பாடு செய்திருந்த ‘மெகா செராமா ரக்யாட்’ நிகழ்வில் பெர்சத்து அந்த யோசனையை முன்வைத்தது. ஆனால், …
சிறையிலிருந்து வெளிவர அன்வாருக்கு நாளை கடைசி வாய்ப்பு
குதப்புணர்ச்சி II குற்றச்சாட்டை நீதிமுறை மேலாய்வு செய்யக்கோரி பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்துகொண்ட விண்ணப்பம்மீது கூட்டரசு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கும். மலாயா தலைமை நீதிபதி சுல்கிப்ளி அஹமட் மகினுடின் தலைமையில் ஐவரடங்கிய நீதிபதிகள் குழு அத்தீர்ப்பை வழங்கும். அக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற நீதிபதிகள்: சாபா, சரவாக் …
பிகேஆர் சரவாக்: ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை நிறுத்த சரவாக் சட்டத்தை…
சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவதை நிறுத்துவதற்கு மஜிலிஸ் இஸ்லாம் சரவாக் சட்டத்தைத் திருத்தும்படி சரவாக் மாநில அரசை பிகேஆர் சரவாக் தலைவர் பாரு பியன் கேட்டுகொண்டுள்ளார். சட்டம் 2001, செக்சன் 69 ஒரு சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் ஒப்புக்கொண்டால் அவனை இஸ்லாத்திற்கு மத மாற்றம்…
சரவாக் மலையில் 33 மலையேறிகளைக் காணோம்
சரவாக் பாவ் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் திரிங்கூசில் உள்ள பிரிக் மலையேறச் சென்ற 33 பேரடங்கிய மலையேறிகளைச் சனிக்கிழமையிலிருந்து காணவில்லை. நேற்றே அக்குழுவினர் மலையேற்றத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருக்க வேண்டும். அவர்கள் திரும்பாததைக் கண்ட ரோய்லிங் கென் என்பார் இன்று காலை பாவ் மாவட்ட …
நியாயத்தை வலியுறுத்த திருமணச் சீரமைப்புச் சட்டத்தை ஆதரிப்பீர்: எம்பிகளுக்கு வலியுறுத்து
முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டச் சீரமைப்பு(திருமண, மணவிலக்கு)த் திருத்தத்துக்கு(எல்ஆர்கே) ஆதரவளித்து எல்லாக் குடிமக்களுக்கும் நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “மற்றவர்களிடம் நியாயமாக நடந்துகொள்வது என்பது நீங்கள் அவர்களிடம் எதை எதிர்பார்ப்பீர்களோ அதை அவர்களுக்குச் செய்து விடுவதுதான். “மற்றவர்கள் உங்களிடம் …
சாபா குனாக்கில் ஆயுதந் தாங்கிய இருவர் சுட்டுக்கொலை
இன்று அதிகாலை குனாக் செம்பனைத் தோட்டமொன்றில் போலீசார் ஆயுதமேந்திய இரு குற்றவாளிகளைச் சுட்டுக் கொன்றதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். அச்சம்பவம் உலு திங்காயு தோட்டத்தில் நடந்ததாக காலிட் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். “இன்று காலை குனாக், உலு திங்காயு தோட்டத்தில் …
மாணவர்களைப் பாராட்ட வேண்டும் தண்டிக்கக் கூடாது: யுஎம்முக்கு பிகேஆர் உதவித்…
மலாயாப் பல்கலைக்கழகம் (யுஎம்) தங்காப் எம்ஓ1 பேரணியில் கலந்துகொண்ட நான்கு மாணவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தண்டிப்பதற்குப் பதில் மாணவர்களின் செயலை எண்ணிப் பல்கலைகழகம் பெருமை கொள்ள வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறினார். “அம்மாணவர்கள் (தங்காப்எம் ஓ1) …
துவாங்கு அப்துல் ஹாலிமுக்கு அரச மரியாதைகளுடன் வழியனுப்புச் சடங்கு
துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா-வும் துவாங்கு ஹாஜா ஹமினாவும் ஐந்தாண்டுக்காலம் பேரரசராகவும் பேரரசியாகவும் பதவி வகித்துவிட்டு இன்று சொந்த மாநிலமான கெடாவுக்குத் திரும்பினர். துவாங்கு அப்துல் ஹாலிம், 89, 2012 ஏப்ரல் 11-இல் மாட்சிமை தங்கிய பேரரசராக பதவியேற்றார். பேரரசர் தம்பதிகளுக்கு நாடாளுமன்றச் சதுக்கத்தில் சகல அரச …
டிரம்ப்: அமெரிக்கா “ஒரே சீனா” கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை
தைவான் "ஒரே சீனாவின்" ஒரு பகுதி என்ற அமெரிக்காவின் நீண்டகால கொள்கையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் "ஒரே சீனா" கொள்கை குறித்து டிரம்ப் கூறியுள்ள கருத்து சீனாவின் எதிர்ப்பைத் தூண்டும்…