ஏஜியைக் குறைகூறும் காணொளி தொடர்பில் மலேசியாகினி தலைமை செய்தியாசிரியர் மீது…

இன்று   கோலாலும்பூர்    செஷன்ஸ்    நீதிமன்றத்தில்   மலேசியாகினி  தலைமைச்  செய்தியாசிரியர்   ஸ்டீபன்  கான்,   கினிடிவியில்   பதிவேற்றம்  செய்யப்பட்டு   பொதுமக்களால்    பார்க்கப்பட்ட   ஒரு  காணொளி   தொடர்பில்   தம்மீது   சுமத்தப்பட்ட   இரண்டு  குற்றச்சாட்டுகளை   மறுத்து   விசாரணை   கோரினார். அக்காணொளி   கைருடின்    அபு    ஹசான்   நடத்திய     செய்தியாளர்     கூட்டத்தின்   ஒளிப்பதிவு.     “கைருடின்:  அபாண்டி  அலி  …

கினிடிவிக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர்ந்து கைருடின் கேட்கிறார்: ஏஜி அபாண்டி…

  அம்னோ முன்னாள் தலைவர் கைருடின் அபு ஹசான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்ததை வீடியோவில் பதிவேற்றம் செய்திருந்ததற்காக கினிடிவி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கைருடின். அச்செய்தியாளர் கூட்டத்தில் 1எம்டிபி விவகாரத்தை அபாண்டி கையாண்ட…

கினிடிவி இயக்குநர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்

  மலேசியாகினியின் துணை நிறுவனமான கினிடிவி மற்றும் அதன் இரு இயக்குநர்கள் மீது நாளை கோலாலம்பூர் சிறப்பு சைபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இது கடந்த ஜூலை மாதத்தில் "மற்றொருவரை புண்படுத்தும் குற்றத்தன்மையுடைய" இரு வீடியோக்களை பதிவேற்றம் செய்தது சம்பந்தப்பட்டதாகும். இவ்விரு வீடியோக்களும் - ஒன்று மலாய் மொழியிலும்…

மலாக்கா அம்னோ ஆள்கள் சிவப்புச் சட்டை பேரணியில் கலந்து கொள்ளக்…

மலாக்கா   அம்னோ   தொடர்புக் குழு    அதன்  அடிநிலை   உறுப்பினர்கள்    சனிக்கிழமை   பெர்சே   பேரணிக்கு   எதிரான   சிவப்புச்   சட்டைகள்   பேரணியில்  கலந்து  கொள்ளலாம்   என்று   விடுத்த   உத்தரவை   மீட்டுக்  கொள்ள   வேண்டுமென   அம்னோ   தலைமைச்   செயலாளர்    தெங்கு   அட்னான்  தெங்கு   மன்சூர்   கேட்டுக்கொண்டிருக்கிறார். “கடிதத்தை   மீட்டுக்கொள்ளும்படியும்   சிவப்புச்   சட்டைப் …

தெரு ஆர்ப்பாட்டங்கள் நம் கலாச்சாரம்தான்: பிரதமருக்கு மரியா நினைவுறுத்து

தெரு   ஆர்ப்பாட்டங்கள்    நம்  கலாச்சாரத்தின்   ஒரு  பகுதியாகவே  இருந்து   வந்துள்ளன    என்று   கூறிய   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லா  நாடு   சுதந்திரம்  பெறுவதற்குமுன்   அம்னோ   பிரிட்டிஷாரை   எதிர்த்து   ஆர்ப்பாட்டம்  செய்தது   உண்டு    என்றார். இன்று   காலை    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்   தெரு   ஆர்ப்பாட்டங்கள்   நம்  கலாச்சாரமல்ல  …

‘நன்கு அறியப்படாத நிறுவனங்களுடன்’ சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது…

சூரிய   ஆற்றல்  நிறுவனக்  குழுமம்   ஒன்றுடன்   டிஎன்பி   செய்து  கொண்ட   ஒப்பந்தம்   குறித்த   தகவல்களை   புத்ரா  ஜெயா      வெளியிட   வேண்டும்.  அத்திட்டத்தின்   மதிப்பு,  ஏன்  அந்த  நிறுவனங்கள்   தேர்ந்தெடுக்கப்பட்டன   என்ற  விவரங்களும்   வெலியிடப்பட   வேண்டும். அக்குழுமத்தில்   இடம்பெற்ற   மூன்று   நிறுவனங்களுக்கும்   சூரிய  ஆற்றலிலிருந்து   மின்சாரம்  தயாரிக்கும்   துறையில்   முன்அனுபவம்  …

மொனாஷ், ‘சட்ட விரோத பேரணி’ மின்னஞ்சலுக்காக மன்னிப்பு கேட்டது

மலேசிய   மொனாஷ்  பல்கலைக்கழகம்,   “சட்ட  விரோத  ஒன்றுகூடல்களில்”  கலந்துகொள்ளும்   மாணவர்களுக்கு   எதிராக   ஒழுங்கு    நடவடிக்கை  எடுக்கப்படும்   என்று   எச்சரிக்கும்   மின்னஞ்சல்   ஒரு   நினைவூட்டல்தான்   என்று   கூறியது. அந்த  மின்னஞ்சல்   எழுதப்பட்டிருந்த  முறைக்காக    அது   மன்னிப்பு   கேட்டுக்கொண்டது. “சட்டவிரோத   ஒன்றுகூடல்கள்   தொடர்பாக   மொனாஷ்   பல்கலைக்கழக   மாணவர்களுக்கு   விடுக்கப்பட்ட    அறிக்கை    எழுதப்பட்டிருந்த  …

பேரணிகளுக்கிடையில் மோதலைத் தவிர்க்க சட்டமுண்டு: போலீசுக்கு நினைவுறுத்து

பெர்சேயும்   சிவப்புச்   சட்டையினரும்   ஏக   காலத்தில்   பேரணி   நடத்துவதைத்   தடுக்க   சட்டத்தில்   இடமுண்டு    என்று   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்குக்கும்   போலீசுக்கும்   நினைவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்  பேரணியால்     சச்சரவு   மூளுமென்று   நினைத்தால்  அதை  வேறொரு  நாளில்  அல்லது   வேறொரு   இடத்தில்   நடத்துமாறு    சம்பந்தப்பட்ட   போலீஸ்   மாவட்டத்தின்      பொறுப்பதிகாரி   உத்தரவிடலாம்   என  …

பெர்சே, சிவப்புச் சட்டையினருக்கு எதிராக வணிகர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சனிக்கிழமை   நடத்தத்   திட்டமிடப்பட்டிருக்கும்   பெர்சே  மற்றும்   சிவப்புச்   சட்டைப்   பேரணிகள்    எதிரானது    என்று   நம்பப்படும்   ஒரு     மனுவை   மத்திய    கோலாலும்பூர்   பகுதியில்   தொழில்   செய்யும்   வணிகர்கள்  நீதிமன்றத்தில்   தாக்கல்   செய்துள்ளனர். அது   நேற்று    தாக்கல்   செய்யப்பட்டதாக   தெரிகிறது. அம்மனு   இன்று  மாலை  மணி  4க்கு   கோலாலும்பூர்   உயர்   நீதிமன்றத்தில் …

சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யாதீர்: டிஏபி, அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…

பினாங்கு    சட்டமன்றம்     தொடங்கி    ஒரு   மணி   நேரம்கூட    ஆகவில்லை   அவையில்   குழப்படி    செய்த  ஒரு   டிஏபி   பிரதிநிதிக்கும்    அம்னோ  பிரதிநிதிக்கும்   சட்டமன்றத்   தலைவர்   லாவ்   சூ   கியாங்      கடும்   எச்சரிக்கை   விடுத்தார். கேள்வி   நேரத்தின்போது   ஆர்.எஸ்.என். ராயரும் (டிஏபி-ஸ்ரீ டெலிமா),   ரோஸ்லான்     சைடினும் (பிஎன் -பினாங்   துங்கால்)   வாக்குவாதத்தில்  …

பெர்சே தினத்தன்று மகாதிர் வெளிநாட்டிலிருப்பார், ஆனால் அவரது ஆதரவு உறுதி

  வரும் சனிக்கிழமை, பெர்சே 5 பேரணி நாள், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் வெளிநாட்டில் இருப்பார். இது முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இருப்பினும். அவர் தமது முழு ஆதரவையும் பெர்சேயின் இலட்சியத்திற்கு அளித்துள்ளார். மேலும், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வின் முழு ஆதரவும் பெர்சேயிக்கு உண்டு.…

ஜமால்: சிகப்புச் சட்டையினர் என்ன செய்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை

  சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5 பேரணியில் வேட்கையால் உந்தப்பட்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு உத்தரவாத்ம் அளிக்க முடியாது என்று சிகப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் இன்று கோலாலம்பூர் பிடபுள்யுடிசிக்கு வெளியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். பெர்சே 5 பேரணி அமைதியாக…

சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால் நிதிச் சுமை அதிகரிக்கும்: மகாதிர்…

திட்டங்களுக்காக  பெருந்  தொகைகளைக்  கடனாகப்  பெறும்  புத்ரா   ஜெயாவின்   பழக்கத்தினாலும்  ரிங்கிட்டின்   மதிப்பு   தொடர்ந்து   குறைந்து   வருவதாலும்    நாடு   நொடித்துப்  போகும்   நிலை   உருவாகும்   என   டாக்டர்  மகாதிர்  முகம்மட்    எச்சரிக்கிறார். இப்படிப்பட்ட   கடன்களுக்கு  மலேசியர்கள்   எதிர்ப்புத்    தெரிவிக்க   வேண்டும். அக்கடன்கள்   எதிர்காலத்தில்   மிகப்  பெரிய  நிதிச்  சுமையாக   …

‘சட்டவிரோத பேரணி’யில் கலந்துகொண்டால் தண்டனை: மொனாஷ் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை

மொனாஷ்  பல்கலைக்கழக   மாணவர்கள்   சட்ட  விரோத   பேரணிகளில்   கலந்து  கொண்டால்   கட்டொழுங்கு   நடவடிக்கையை   எதிர்கொள்ள   நேரும்   என  அப்பல்கலைக்கழகம்    எச்சரித்துள்ளது. இந்த   மின்னஞ்சல்    எச்சரிக்கையைப்  பல்கலைக்கழகப்  பதிவாளர்   சுசிலா   நாயர்,   நேற்று      மாணவர்களுக்கு   அனுப்பியிருந்தார். “மலேசிய   சட்டங்களை   மீறும்   சட்டவிரோத   ஒன்றுகூடலில்/ அது  தொடர்பான   நடவடிக்கையில்   ஈடுபட   வேண்டாம்  …

‘ஏழைகளை எண்ணிப் பாருங்கள்’: சிறைத் தண்டனை பெற்ற ரபிசியின் வேண்டுகோள்

 பாண்டான்    எம்பி    முகம்மட்  ரபிசி   ரம்லி,    தம்    ஆதரவாளர்கள்    தாம்   சிறைக்குச்  செல்லும்  நிலை   ஏற்படலாம்    என்பதை   நினைத்து  கவலையுற   வேண்டாம்    என்று   வலியுறுத்தினார். மக்களால்   தேர்ந்தெடுக்கப்பட்ட   பிரதிநிதி    என்ற  முறையில்    தம்   கடமைகளைச்  சரிவர   செய்திருப்பதாலும்   இறைவனுக்கு    ஆற்ற  வேண்டிய  கடமைகளை   நிறைவேற்றி  இருப்பதாலும்   சிறையிலும்    தம்மால்  …

பெர்சே 5 டி-சட்டையில் டாக்டர் மகாதிர்: பேரணிக்கு வாரீர் என…

1 நிமிடம்  37 வினாடிகள்    ஓடும்    காணொளி   ஒன்றில்,    முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்   தேர்தல்   சீரமைப்புக்குப்   போராடும்  பெர்சே   கூட்டமைப்பை    விளம்பரப்படுத்த    வந்தவர்போல்   பெர்சே  5   டி-சட்டையில்   காட்சி  அளித்தார். வரும்   சனிக்கிழமை    பெர்சே  5  பேரணியில்   மலேசியர்   அனைவரும்   கலந்து  கொள்ள  …

பணக்கார பிகேஆர் இளைஞர் தலைவருக்கு எதிராக எம்எசிசி மற்றும் வருமான…

  அம்பாங் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆடம் ரோஸ்லி எதிராக அவரது சொத்துகள் பற்றி எம்எசிசி மற்றும் வருமான வரி இலாகாவில் அம்னோவைச் சேர்ந்தவர்கள் புகார் செய்கிறார்கள். அம்பாங் அம்னோ தொகுதி தலைவர் இஸ்மாயில் கிஜோ மற்றும் சிகப்புச் சட்டைகள் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் ஆகியோர்…

இந்திரா வழக்கு: ரிதுவான் நாட்டில்தான் இருப்பதாகவே அவரின் வழக்குரைஞர்கள் நம்புகிறார்கள்

கே.பத்மநாதன்   @  முகம்மட்  ரிதுவான்   அப்துல்லா   அவரின்  ஆக  இளைய   மகள்  பிரசன்னா   திக்‌ஷாவை  இன்று   நீதிமன்றம்   அழைத்து  வராமல்  நீதிமன்றத்தை    அவமதித்தார்   என்பது   ஒரு  புறமிருக்க,  அவர்      இன்று   கூட்டரசு   நீதிமன்ற   வழக்கிலும்  முன்னிலை   ஆகவில்லை.   ஆனாலும்,  அவர்   மலேசியாவில்தான்   இருப்பதாக    அவரின்    வழக்குரைஞர்கள்   நம்புகிறார்கள். “நேற்று …

பினாங்கில் சொத்துகளுக்கு 6 விழுக்காடு மதிப்பீட்டு வரி விலக்கு

பினாங்கில்  சொத்துரிமையாளர்கள்  நிம்மதி   பெருமூச்சு   விடுவார்கள். சொத்துகளுக்கான   மதிப்பீட்டு   வரியில்   6  விழுக்காடு   விலக்களிக்கப்படுவதாக   மாநில   அரசு   அறிவித்துள்ளது. இதனை   அறிவித்த   முதலமைச்சர்     லிம்   குவான்     எங்,  கூட்டரசு   அரசாங்கம்   2015  ஏப்ரலில்   அமல்படுத்திய       பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)யால்   மக்களுக்கு   ஏற்பட்டுள்ள  பொருளாதாரச்  சுமையைக்  குறைக்க    இந்த  வரி …

ஜிஎல்சி இயக்குனரும் மேலும் இருவரும் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டனர்

அரசுத்தொடர்பு   நிறுவன(ஜிஎல்சி)த்தின்   இயக்குனர்   ஒருவரும்   அவரின்  இளவலும்  39.9 மில்லியன்  ஊழல்   தொடர்பான   விசாரணைக்கு   உதவியாக  ஏழு   நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டனர். 50வயது  இயக்குனர்   ஒரு   ‘டத்தோ’வுமாவார்.  அவர்   நேற்று   மாலை  மணி   5  அளவில்   ஷா  ஆலமில்  மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய(எம்ஏசிசி)த்தால்   கைது   செய்யப்பட்டார். அவர்  இன்னொரு  …

அமனா 50,000 பேரை பெர்சே 5 பேரணிக்கு அழைத்துவரும்

பார்டி   அமனா   மலேசியா,  வரும்   சனிக்கிழமை   கோலாலும்பூரில்   நடைபெறும்   பெர்சே   5  பேரணிக்கு   50,000  உறுப்பினர்களையும்   ஆதரவாளர்களையும்    திரட்டி  வருவதாக   உறுதியளித்துள்ளது. அத்துடன்   அக்கட்சி   55  வழக்குரைஞர்களையும்   50  மருத்துவர்களையும்   30  செய்தியாளர்களையும்  20  படப்பிடிப்பாளர்களையும்   ஏற்பாடு   செய்திருப்பதாக   அமனா    தலைமைச்   செயலாளர்   முகம்மட்   அனுவார்  தாகிர்   செய்தியாளர்களிடம்  …

முன்னாள் -இசி தலைவர் 14வது பொதுத் தேர்தலில் போட்டி?

பார்டி  பிரிபூமி    பெர்சத்து  மலேசியா (பெர்சத்து)  உதவித்   தலைவர்   அப்துல்   ரஷிட்   ரஹ்மான்,   அடுத்த    பொதுத்    தேர்தலில்   போட்டியிடும்  சாத்தியத்தை    மறுக்கவில்லை. “நீங்கள்  நாட்டை   மாற்ற  நினைத்தால்,    நிச்சயமாக   ஆட்சியில்    இருக்க   வேண்டும். “குறிப்பிட்ட   இடங்களில்    வெற்றிபெற   முடியும்    என்ற   எண்ணம்   இருக்குமானால்   ஏன்   போட்டியிடக்  கூடாது?  எங்கு  …

நாடாளுமன்ற சட்டவிலக்கை வலுப்படுத்த அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்: பிஎன்…

பிஎன்  நாடாளுமன்ற   உறுப்பினர்   ஒருவர்,   அரசமைப்பில்   திருத்தம்   செய்து    நாடாளுமன்ற   உறுப்பினர்களுக்குள்ள   சட்டவிலக்கை   வலுப்படுத்தலாம்   என  முன்மொழிந்தார்.  அரசமைப்பில்   அப்படி   ஒரு   திருத்தம்   கொண்டுவர      நாடாளுமன்றத்தில்    எதிரணியினரின்   ஒத்துழைப்பு   தேவைப்படும். நாடாளுமன்ற   சட்டவிலக்கு   என்பது   தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்   மேற்கொள்ளப்படும்   விசாரணைகள்   தவிர்த்து    மற்ற   வகை   விசாரணைகளிலிருந்து  எம்பிகளைப்  …