மகாதிர் நாளை தாய்லாந்துக்குப் பயணம்- இது 7வது பிரதமரான பின்னர்…

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாளை தொடங்கி தாய்லாந்துக்கு இரண்டு-நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். மகாதிர் மே 10-இல் பிரதமான பின்னர் தம்மை அண்டை நாடுகளுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும் முகமாக பயணங்கள் மேற்கொண்டு வருகிறார் என்றும் அதில் ஒரு பகுதிதான் இவ்வருகை என்றும் வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் கூறிற்று.…

ஜாஹிட் ‘விடுப்பில் செல்ல வேண்டியதில்லை’- அனுவார்

அம்னோ உயர்த் தலைவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால் அவர்கள் விடுப்பில் செல்ல வேண்டுமென்ற நிலையான நடைமுறை(எஸ்ஓபி) கட்சித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி-க்குப் பொருந்தாது. அம்னோ ஆளும் கட்சியின் ஒரு பகுதியாக இருந்தால் மட்டுமே அது பொருந்தும் என்று அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார். மே 9…

பினாங்கு நிலச்சரிவு சம்பவம் : கட்டுமானத் தொழிலாளர்களின் உயிர் அவ்வளவு…

மலைப்பகுதிகளில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தக்கோரும் அழைப்பை வரவேற்பதாக, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. “அக்டோபர் 19-ல், 7 உயிர்களைப் பலிகொண்ட, புக்கிட் குக்குஸ், சாலை கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, மோசமான பணி பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் விளைவாக…

டெக்சி சேவையை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்- ஜாம் காட்டம்

டெக்சி ஓட்டுனர்களை “ஏமாற்றுப் பேர்வழிகள், மிரட்டிப் பணம் பறிப்பவர்கள்” என்று வருணித்த முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின், டெக்சி சேவையை முற்றாக ஒழித்துக்கட்டுவது நல்லது என்றார். டெக்சி ஓட்டுனர்கள் “முகம் கொடுத்துப் பேசுவதற்கு ஏற்ற மனிதர்கள் அல்லர்” என்பதால் கிரேப் வாடகைக் கார் சேவை மட்டுமே போதும்…

ஹிஷாம்: சீனா செல்வேன், லோ லோ-வைக் கொண்டு வருவேன்

1எம்டிபி விவகாரத்துக்கு ஒரு முடிவுகாண விரும்பும் ஹிஷாமுடின் உசேன், அதற்காக தொழிலதிபர் லோ லோ-வை-  அவர்  எங்கு மறைந்திருந்தாலும்-   தேடிப் பிடித்துவர முன்வந்தார். யாருடைய கோரிக்கையுமின்றி தாமே இப்பணியைச் செய்ய முன்வருவதாக முன்னாள் தற்காப்பு அமைச்சர் கூறினார். “1எம்டிபி விவகாரம் முடிவுக்கு வர வேண்டும், நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும்…

மகாதிர்: அரசாங்கம் மாறியபோதே ஊழல் கட்டுப்படுத்தப்பட்டது

அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு பரவலாக நிலவிய ஊழல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, மக்கள் இப்போது ஊழல் பற்றிப் பேசுவதே இல்லை என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். ஏனென்றால், ஏதோ காரணத்துக்காக அரசாங்கத்தை அணுகும் பொதுமக்களும் நிறுவங்களும் வணிகர்களும் ஊழல் பற்றிய அச்சமின்றிப் பேச்சு நடத்த முடிகிறது. “இப்போது நிறுவனங்களும்…

தமிழ்ப்பள்ளிகள் சீரமைப்புடன் சீராகச் செயல்படும் – கல்வி அமைச்சர்!

அனைத்து வகைகளிலும் கல்வியின் தரத்தையும் ஆசிரியர்களின் ஈடுபாட்டையும் உயர்த்த கல்வி அமைச்சு பல நிலைகளில் செயல்படும். அதன் ஈடுபாடு உயர்நிலை சிந்தனைக்கு மட்டும் தலைசாய்க்காமல் கீழ்நிலை மக்களின் ஆலோசனைகளுக்கும் கருத்துகளுக்கும் போதுமான முக்கியத்துவத்தை அளிக்கும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் உறுதி அளித்தார். நேற்றுக் காலை, புத்ராஜெயாவில்…

பிகேஆர் தேர்தலில் தவறிழைத்தவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

பிகேஆர் தேர்தல் குழுவும் கட்டொழுங்குக் குழுவும் கட்சித் தேர்தலில் தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வெளிப்படையாகவும் நியாயமாகவும் முறையாகவும் நடத்தப்பட வேண்டும் ஏன்பதுதான் கட்சித் தலைமைத்துவத்தின் உத்தரவு என்று பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “எல்லா…

கொதிக்க வைக்காத குழாய் நீர் பாதுகாப்பானதா? சுகாதார துணை அமைச்சர்…

  குழாயிலிருந்து நீரை நேரடியாக குடிக்கலாமா? அது பாதுகாப்பானதா? குடிக்கலாம் மற்றும் பாதுகாப்பானது என்பதை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை நம்பவில்லை. மாறாக, குழாய் நீரை குடிப்பதற்கு முன்பு அதை முதலில் கொதிக்க வைக்க வேண்டும், ஏனென்றால் அந்த நீர் பழைய மற்றும் துரு…

மகாதிருடன் தகராறு செய்த வாடகைக்கார் ஓட்டுனர்கள் நாசவேலைக்காரர்கள், டெக்சி சங்கம்…

  லங்காவியில் பிரதமர் மகாதிருடன் நடந்த ஒரு சந்திப்பில் அவருடன் தகராறில் ஈடுபட்ட வாடகைக்கார் ஓட்டுனர்கள் நாசவேலைக்காரர்களாக இருக்கலாம் என்று டெக்சி சங்கம் கூறிக்கொண்டது. மகாதிருடன் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து வெளிநடப்பு செய்தவர்கள் அச்சங்கத்தின் (பெர்ஜிவா) உறுப்பினர்கள் அல்ல என்று அதன் தலைவர் ஜய்லானி இசாய்சுலுடின் கூறினார். அந்த…

ஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை

பிகேஆர் தேர்தல்: தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று வாக்களிப்பு நடைபெற்ற நெகிரி செம்பிலானிலும் மலாக்காவிலும் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக வாக்களிப்பு நடைபெறும் நாளில் அன்றைய இரவே தேர்தல் குழு முடிவுகளை அறிவித்து விடும். குழுத் தலைவர் ரஷிட்…

அஸ்மின்: மின் வாக்களிப்புப் பிரச்னைகளால் கட்சியின் பெயர் கெடுகிறது

பிகேஆர் நடப்புத் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி, கட்சியின் மின் வாக்களிப்பு முறையில் ஏற்படும் பிரச்னைகளால் கட்சியின் பெயர் கெடுவதாகக் கூறினார். இன்று சுங்கை துவாவில் வாக்களிப்பைப் பார்வையிட்ட அஸ்மின், மின் வாக்களிப்பில் மீண்டும் பிரச்னைகள் எழாமல் கட்சியின் தேர்தல் குழு உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்…

டெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்பு: பதவி துறக்கத் தயார்- மகாதிர் அறிவிப்பு

பிரதமர் டாக்டர் மகாதிருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற டெக்சி ஓட்டுனர்கள் அவர் கிரேப் வாகனச் சேவையைத் தடைசெய்ய மறுத்ததை அடுத்து வெளிநடப்புச் செய்தனர். இன்று காலை லங்காவியில் நடைபெற்ற அக்கூட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சிறு சலசலப்பு ஏற்பட்டதாக…

நாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது, வேதமூர்த்தி

இனம், மொழி, சமயம், பண்பாடு, பால், பருவம், உடற்பேறு, பணி உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் வேறுபாடுகளையும் கடந்து நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது. இத்தகையப் போக்கு மலேசியாவை உலக அரங்கில் இன்னும் உயர்த்தி வைக்கும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி…

இரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு நல்லது – ஆய்வாளர்

பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார்கள் ஆகியோரின் பணி இரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் என்று வரையறுப்பது மக்களுக்கும் மாநிலங்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் பரிந்துரை என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார்கள் மாறுவதால் மக்களுக்குப் புதிய மேம்பாட்டுச் சிந்தனைகள், வியூகங்கள் போன்றவை கிடைக்கும் என…

நிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது

கனத்த மழையின் காரணமாக, இன்று அதிகாலை 4.45 மணியளவில் நிறுத்திவைக்கப்பட்ட, ஜாலான் புக்கிட் குக்குஸ் நிலச்சரிவு சம்பவத்தில் புதையுண்டவர்களைத் தேடும் பணியை, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுவினர் (எஸ்.ஏ.ஆர்.) மீண்டும் தொடங்கினர். புத்ராஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குழுவின் தலைவர் மோர்னி மமாட், இரண்டாவது நாளாக,…

டத்தோ விருதுகள் பெறுவதற்கு விதிமுறைகள் தேவை: காடிர் பரிந்துரை

மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின், பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் டத்தோ விருதுகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்த சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது நல்லது என்கிறார். டிஏபி, அதன் கட்சியினர் பணியில் இருக்கும்போது விருதுகளை வாங்கிக்கொள்ளக் கூடாது பணிக்காலம் முடிந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறது. பக்கத்தான் ஹரப்பானின்…

குழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று சரியே என்கிறது ஸ்பான்

தேசிய நீர்ச்சேவை ஆணையம்(ஸ்பான்), நம் நாட்டுக் குழாய் நீரை அப்படியே குடிக்கலாம், ஆபத்தில்லை என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் கூறியதை ஆதரிக்கிறது. “குழாய் நீரை நேரடியாக அருந்தலாம் என்று சேவியர் அண்மையில் டேவான் ரக்யாட்டில் கூறியதை ஸ்பான் அப்படியே ஆதரிக்கிறது. “உலக…

கெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய் லெக்

பிஎன்னிலிருந்து விலக  முடிவெடுத்த கெராக்கானுக்கு மசீச-வைவிட துணிச்சல் அதிகம் என மசீச முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறினார். மே 10 இல், 14வது பொதுத் தேர்தலில் பிஎன் பெரும் தோல்விகண்டபோதே மசீச அக்கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்றாரவர். “கெராக்கானுக்குத் துணிச்சல் அதிகம். நெருக்கடியான…

ம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர், மத்திய செயற்குழு தேர்தல்…

2018-2021 தவணைக்கான துணைத் தலைவர், மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் கட்சியின் 21 மத்தியச் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, மஇகா பிரதிநிதிகள் இன்று மாலை 4 மணி அளவில் வாக்களிக்க உள்ளனர். மஇகா துணைத் தலைவர் பதவிக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்தியச் செயற்குழு உறுப்பினருமான எம்…

நிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர் காயம், 10 பேர்…

பினாங்கு, பாயா தெருபோங், ஜாலான் புக்கிட் குக்குஸ்-இல் ஏற்பட்ட நிலச்சரிவில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருவர் மாண்டனர். ஒருவர் படுகாயத்திற்கு ஆளான வேளை, 10 பேர் மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று மாலை தொடங்கி இன்று மதியம் வரை பெய்த தொடர் கடும் மழையால், இன்று மதியம் 1.56…

டோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு கோரினார்

நாடாளுமன்றம் | பொதுப் பணித்துறை அமைச்சர், பாரு பியான், டோல் சாவடிகள் அகற்றும் பிரச்சனை தொடர்பிலான அவரின் அறிக்கை திமிர்த்தனமாக கருதப்பட்டதால் மன்னிப்பு கோரினார். “எனது அறிக்கை …… தலைப்புச் செய்தியில் இடம்பெற்றது, திமிர்த்தனமாகக் கருதப்பட்டதை நான் உணர்கிறேன். “நான் அந்த அர்த்ததில் அதனைக் கூறவில்லை. தவறாக அச்சொல்லைப்…

வாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு தீபக் சவால்

  தாம் தொடர்ந்துள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்ய அவர்களுடைய வழக்குரைஞர்களுக்கு கட்டளையிடாமல், நீதிமன்றத்திற்கு வந்து தம்மை எதிர்கொள்ளும்படி நஜிப் ரசாக் மற்றும் ரோஸ்மா மன்சோர் ஆகியோருக்கு கம்பளி வணிகர் தீபக் ஜைகிஷான் சவால் விட்டுள்ளார். அத்தம்பதிகளுக்கு எதிராக தாம் தொடுத்துள்ள இரண்டு வழக்குகளுக்கும் தம்மிடம் போதுமான ஆவண மற்றும்…