பெர்காசா-வை எண்ணி வேள்பாரி கவலையுறவில்லை

பெர்காசா   தமக்கு   எதிராக   போர்க்கொடி    உயர்த்தியிருப்பது  குறித்து    கவலைப்படவில்லை    என்கிறார்   மஇகா   பொருளாளர்  எஸ்.    வேள்பாரி. “நான்  ஏற்கனவே   தெளிவாக    சொல்லி  விட்டேன்.   நான்  அவர்களைப்    பற்றி  நியாயமற்ற    கருத்து     தெரிவித்திருந்தால்    பெர்காசா,      தெரு   ஆர்ப்பாட்டமெல்லாம்    செய்யாமல்     என்மீது   தாராளமாக     வழக்கு    தொடுக்கலாம். அது    என்மீது    அவர்கள்    கூறியுள்ள   …

நெல் விளையும் நிலத்தில் சிலாங்கூர் பாஸ் தலைவர்களுடன் அஸ்மின் கலந்துரையாடல்

இன்று   செகிஞ்சானில்    சிலாங்கூர்   மந்திரி    புசார்    அஸ்மின்   அலி,  சிலாங்கூர்   பாஸ்    தலைவர்களுடன்    ஆழ்ந்த  கலந்துரையாடலில்   ஈடுபட்டிருக்கக்   காணப்பட்டார். அஸ்மினும்   மற்ற    மாநில   அரசுத்  தலைவர்களும்    சிலாங்கூர்    ஆட்சியாளர்    ஷராபுடின்   இட்ரிஸ்     நெல்  விளையும்  பூமிக்கு   வருகை   மேற்கொள்வதையொட்டி    அங்கு   குழுமி   இருந்தனர். மந்திரி    புசார்   சிலாங்கூர்    பாஸ்   …

கைருடின்: உயர் அதிகாரிகளைக் கைது செய்த எம்ஏசிசிக்குப் பாராட்டுகள் ஆனாலும்……

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்    அண்மைக்காலமாக   உயர்   அதிகாரிகள்   பலரைக்   கைது     செய்து    பாராட்டத்தக்க  வகையில்   செயல்பட்டு    வந்துள்ளது    என்றாலும்   1எம்டிபிமீது     நடவடிக்கை     எடுக்காதவரை    அது   நம்பத்தக்கதுதானா    என்ற   சந்தேகம்    ஒரு   பக்கம்    இருக்கவே    செய்யும்   என்கிறார்   கைருடின்    அபு  ஹசான். “ஊழலை  எதிர்ப்பதில்   தீவிரம்   காட்டும்   எம்ஏசிசி   தலைவருக்குப்  …

கள்ளத் தொடர்பால் வெந்தது முதுகு

நேற்று  சுங்கை   பூலோவில்   கம்போங்  பாயா    ஜராஸ்   ஹிலிரில்    15  பேர்   சேர்ந்து   ஒரு   ஆடவரைத்   தாக்கியதில்   அவர்   படுகாயமடைந்தார். அந்த  25வயது  ஆடவரின்  முகத்திலும்   உடலிலும்   காயங்கள்   இருந்தன.   அவரது  முதுகுப்  பகுதியும்   கழுத்தும்    இடது   தோள்பட்டையும்   சுடுநீர்    ஊற்றப்பட்டதால்   வெந்து   போயிருந்தன. தாக்குதலில்   ஈடுபட்டதாக    சந்தேகிக்கப்படும்   …

மக்களவையில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை பெற முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும், பாஸ்…

  அரசியல் இஸ்லாதை வலுப்படுத்த முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நாடாளுமன்ற மக்களவையில் முஸ்லிம்கள் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாஸ் முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் இஸ்லாம் வலுப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை இஸ்லாத்தின் குரல்களாக இருக்க வேண்டும் என்று பாஸின் தகவல் பிரிவுத்…

மஇகா தலைமையகத்தில் பெர்காசா கொடிகள் பறக்கின்றன

மலாய்க்காரர்கள் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசாவின் கொடிகள் மஇகா தலைமையகத்தின்முன் பறக்க விடப்பட்டன. அது மஇகாவிற்கு விடப்பட்ட ஓர் எச்சரிக்கையாகும். இந்த நடவடிக்கைக்குத் தலைமையேற்றிந்தவர் பெர்காசாவின் இளைஞர் தலைவர் அஸ்ருல் அக்மால் ஷஹாருடின். பறக்கவிடப்பட்டிருந்த அக்கொடிகளின் கீழ் நின்று கொண்டு அஸ்ருல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மஇகாவின் பொருளாளர்…

தேசியப்பள்ளிகளிலும் ஓர் இனத்தவரே, ஒப்பாரி வைக்கும் அம்னோ இளைஞர் தலைவர்

  இன்றையத் தேசியப்பள்ளிகள்கூட ஓர் இனம் சார்ந்தவைகளாகிவிட்டன என்று கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் தலைவர் முகமட் ரஸ்லான் முகம்மட் ராபீ கூறுகிறார். நேற்று தித்திவங்சாவில் நடைபெற்ற ஒரு டிஎன்50 (TN50) கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒருவர் ஒரே-வகைப் பள்ளி முறையை வலியுறுத்தி அதில் மலேசியாவின் பல்வேறு சமூகங்களின் அடையாளங்களும்…

‘அன்வார் 7வது பிரதமர்’-அறிவிப்பு அட்டைகளுடன் காணப்பட்டார்கள் ஹராபான் தலைவர்கள், ஆனால்…….

நாட்டின்   அடுத்த   பிரதமர்   யார்   என்றால்     அன்வார்  இப்ராகிம்தான்   பக்கத்தான்   ஹராபான்   தலைவர்கள்   பெரும்பாலோரின்   முதன்மைத்   தேர்வு   என்பது   தெளிவாக  தெரிகிறது. இன்று   ஷா  ஆலமில்,   பிகேஆர்   தேசிய   காங்கிரசில்  சுமார்   ஆயிரம்    பிகேஆர்   பேராளர்கள்   கலந்து  கொண்ட   கூட்டத்தில்,  பிகேஆர்    தலைவர்கள்   ‘அன்வார்  7வது  பிரதமர்’   என்ற  …

பிகேஆர் நவீன தாலிபான்களிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்

  பிகேஆர் இளைஞர் காங்கிரஸில் பேசிய ஒரு பிகேஆர் இளைஞர் பிரிவு பேராளர் நவீன தாலிபான்களிடமிருந்து கட்சி ஒதுங்கி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நாட்டு அரசியல் கட்சிகளில் இந்த தாலிபான்களைக் காணலாம் என்று பினாங்கு பேராளர் ஃபஹாமி ஸைனால் கூறினார். அவர்கள் தங்களுடைய சுயநலன்களுக்காக சமயத்தைப் பயன்படுத்துகின்றனர்…

செகிஞ்சானை மசீசவிடமிருந்து எடுத்துக்கொள்ள முயல்கிறதா அம்னோ?

பல  தகிடுதத்தங்கள்  செய்து  அரசியலில்   பெயர்  போட   முனைந்திருப்பவர்   சுங்கை   புசார்   அம்னோ   தலைவர்    ஜமால்   முகம்மட்  யூனுஸ். அண்மையில்   அவர்   செகிஞ்சான்   சட்டமன்றத்   தொகுதிக்கான   வேட்பாளர்களின்   பெயர்களை     அறிவித்து   ஒரு  பரபரப்பை    ஏற்படுத்தினார்.   அத்தொகுதியில்   காலங்காலமாக   மசீசதான்   போட்டி   போட்டு   வந்துள்ளது. ஜமால்  சுங்கை     புசார்    மசீச …

பிகேஆர் இளைஞர்கள்: எதிரணி உள்சண்டையால் ஆதரவாளர்கள் வெறுப்படைந்துள்ளனர்

எதிரணியினர்   தங்களுக்கிடையில்    கருத்து  வேறுபாடுகளுக்குத்   தீர்வு  காண  முடியாதிருப்பது  கண்டு  அதன்  ஆதரவாளர்கள்   வெறுப்படைந்துள்ளதாக   பிகேஆர்  இளைஞர்   தலைவர்    நிக்   நஸ்மி   நிக்   அஹமட்   கூறினார். “விரும்பினாலும்    சரி  விரும்பாவிட்டாலும்    சரி,  13வது   பொதுத்   தேர்தலில்   நம்மீது   நம்பிக்கை  வைத்த      வாக்காளர்களில்   பெரும்பகுதியினர்    எதிர்க்கட்சிகளின்   இப்போதைய   நிலை   கண்டு       …

ஆலயத்தில் நடக்கப்போவது பிரார்த்தனை ஸாகிர்-எதிர்ப்புப் பேரணியல்ல- துணை முதலமைச்சர்

பினாங்கின்  இரண்டாவது    துணை முதலமைச்சர்   பி.இராமசாமி    இந்து    ஆலயமொன்றில்   ஏற்பாடு   செய்யப்பட்டிருக்கும்   நிகழ்வு   இஸ்லாமிய  சமய   போதகர்   ஸாகிர்   நாய்க்கு  எதிரான   பேரணி   என்று   கூறப்படுவதை  மறுத்தார். அது  இந்துக்களுக்கான   ஒரு  பிரார்த்தனைக்   கூட்டம்.  ஸாகிர்,   பெர்லிஸ்  முப்தி   முகம்மட்  அஸ்ரி    சைனுல்     அபிடின்   போன்றோரின்   பேச்சால்   மனம்  …

ஜூலை 4-இல் சரவாக், புஜுட் இடைத்தேர்தல்

சரவாக்கின்  புஜுட்டில்   ஜூலை   4-இல்   இடைத்  தேர்தல்    நடைபெறும். தேர்தல்   ஆணையம்  இதனை    அறிவித்தது.       வேட்புமனு   தாக்கல்    செய்யும்   நாள்   ஜூன்  20. ஆஸ்திரேலிய   குடியுரிமை    வைத்திருந்ததற்காக    டிஏபி-இன்  டாக்டர்   திங்    தியோங்   சூன்   சட்டமன்ற   உறுப்பினர்   தகுதியை   இழந்ததை    அடுத்து   புஜுட்  தொகுதி   காலியானது. மே12-இல்   அவரது  …

பூச்சோங் கொள்ளை, கற்பழிப்பு: சந்தேக பேர்வழி 12வது மாடியிலிருந்து விழுந்து…

மே   11-இல்,  பூச்சோங், பண்டார்    கின்ராரா   சூதாட்ட மையத்தில் கொள்ளையடித்ததுடன்   அங்கு பணி புரிந்த  பெண்ணைக்  கற்பழித்ததாக   சந்தேகிக்கப்படும்   இரு ஆடவர்களில் ஒருவன்  நேற்றிரவு   கோலாலும்பூர்  ஸ்ரீ   செமராக்   மக்கள்   வீடமைப்புத்   திட்டத்தில்   12வது   மாடியிலிருந்து கீழே விழுந்து மாண்டான். இரவு     மணி    10.10க்கு   அவன்   வீட்டைச்  சுற்றி …

தெனகானித்தா: மில்லியன்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமான தொழிலாளர்களாக்க வேண்டும்

  வெளிநாட்டு தொழிலாளர்களை சட்டப்பூர்வமான தொழிலாளர்களாக்கும் புத்ராஜெயாவின் கொள்கை அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று தெனகானித்தா இன்று புத்ராஜெயாவை வலியுறுத்தியது. இமிகிரேசன் இலாகாவின் இந்த முயற்சியை வரவேற்கிறோம் என்று கூறிய தெனகானித்தாவின் செயல்முறை இயக்குனர் குலோரீன் டாஸ், மலேசியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்படாத…

பாஸ்: கிளந்தானில் வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்

  தேர்தல் பதிவேட்டிலிருந்து வாக்காளர்கள் பெருமளவில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர் என்று கிளந்தான் பாஸ் இன்று கூறிக்கொண்டது. வாக்களர்கள் இடமாற்றம் செய்யப்படுவது கிளந்தான் பாஸை வீழ்த்துவதற்கான முயற்சியாக இருக்கக்கூடும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான முகமட் ஃபாட்ஸில் ஹசான் கூறினார். பெருமளவில் வாக்காளர்கள் இடமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக புக்கிட் பானாவ்…

பிரயாணத் தடைக்கு எதிரான மரியாவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

  கடந்த ஆண்டு மே மாதத்தில் தென்கொரியாவுக்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து பெர்சே 2.0 தலைவர் மரியா சின் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற மறுஆய்வு மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று நிகாரித்து தீர்ப்பு வழங்கியது. இமிகிரேசன் சட்டம் 1959 செக்சன் 59A(1) உள்துறை அமைச்சர் மற்றும் இமிகிரேசன்…

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் தொடர்ந்து இருக்க பாஸ் முடிவு

பிகேருடன்    உறவுகளை    அறுத்துக்கொண்டாலும்    சிலாங்கூர்   ஆட்சிக்குழு(எக்ஸ்கோ)வில்    உள்ள   அதன்   மூன்று   பிரதிநிதிகளும்  அதில்     தொடர்ந்து       இருப்பார்கள்   என   பாஸ்    அறிவித்துள்ளது. அம்மூவரும்   எக்ஸ்கோவில்   தொடர்ந்து   இருப்பது    என்ற  முடிவை    பாஸ்   மத்திய   செயல்குழு   இன்று   அதன்   கூட்டத்தில்    முடிவு     செய்ததாக   அக்கட்சியின்   தலைமைச்    செயலாளர்   தகியுடின்    ஹசான்   கூறினார்.…

போலீஸ் கார்ப்பரல் வீட்டில் ரிம800,000 கண்டெடுப்பு

மலாக்காவில்   ஒரு   போலீஸ்   கார்ப்பரலின்   வீட்டிலிருந்து     மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்  (எம்ஏசிசி)    ரிம800,000  கண்டெடுத்தது. சம்பந்தப்பட்ட  அந்த   கார்ப்பரல்   மலாக்காவில்   சட்டவிரோதமாக   செயல்படும்    சூதாட்ட    மையங்களிடலிருந்தும்   உடம்புப்பிடி   மையங்களிலிருந்தும்   பாதுகாப்புப்   பணம்   வசூலிப்பது   தொடர்பில்    கைதான  10வது   நபராவார். மலாக்கா   போலீஸ்    தலைமையகத்தில்   பணிபுரியும்   அந்த    52-வயது    ஆடவர்    …

டேவிட் தியோவைத் தாக்கியதற்காக நகைச்சுவைக் கலைஞர் மாட் ஓவர் வருத்தப்படவில்லை

நேற்றிரவு   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   முன்னிலையில்   இயக்குனர்   டேவிட்   தியோவைத்    தாக்கியதற்காக   நகைச்சுவைக்  கலைஞர்   சுலைமான்  யாசின்   வருத்தப்படவில்லை. தியோவுக்கு  “மரியாதை” கற்றுத்தரத்தான்   அப்படிச்   செய்ததாக   மாட்   ஓவர்   என்ற   பெயரில்  பிரபலமாக    விளங்கும்    அந்த   நகைச்சுவைக்  கலைஞர்    சொன்னதாக    மலாய்   நாளேடான    ஹரியான்   மெட்ரோ  கூறியது.…

ரபிசி: எஸ்ஆர்சி பணத்தில் ரிம2.6 மில்லியன் ஊடகப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது

எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்   நிறுவனத்தின்   பணம்  எங்கெங்கெல்லாம்    சென்றது   என்பதை  அம்பலப்படுத்தும்    முயற்சியில்  ஈடுபட்டுள்ள  பிகேஆர்   உதவித்    தலைவர்    ரபிசி   ரம்லி,  அதில்   ரிம2.6  மில்லியன்  சில   ஊடக  நிறுவனங்களுக்குச்    சமூக   வலைத்தளங்களில்  பரப்புரை  செய்வதற்காகக்    கொடுக்கப்பட்டது    என்றார். அப்படிப்   பணம்   பெற்ற   நிறுவனங்களில்   ஒன்று   2014,   ஜூலை   22-இல்  …

அம்னோ-சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தம் பற்றி பெர்காசாவுக்கு எதுவும் தெரியாதாம்

  அம்னோவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) ஒருபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது பற்றி பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலிக்கு எதுவும் தெரியாதாம். "ஒரு வேளை, நான் கவனிக்காமல் இருந்து விட்டேன். ஒருவரும் என்னிடம்   சொல்லவில்லை...ஆனால், அதில் பயிற்சி திட்டம் எதுவும் இருக்கிறதா? எனக்குத் தெரிந்த வரையில்…

இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை உயர்கிறது

  ரோன்95 மற்றும் ரோன்97 ஆகியவற்றின் விலை 1 லீட்டருக்கு தலா 7 சென் இன்று நள்ளிரவிலிருந்து கூடுகிறது. சில்லறை விலை ரோன்95 1 லீட்டருக்கு ரிம2.08; ரோன்97 1 லீட்டருக்கு ரிம2.36. டீசல் விலை 4 சென் கூடி, 1 லீட்டர் ரிம1.99 க்கு விற்கப்படும்.