மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்திற்கு மத்தியில் பொதுமக்களின் சுமையைக் குறைக்க, புடி மதானி RON95 (Budi95) பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் ரிம 1.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை பராமரிக்க அரசாங்கம் பாடுபடும். "RON95 விலையை எங்களால் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.…
புதிய வாக்காளர் பதிவில் எட்டு மடங்கு அதிகரிப்பு: நம்ப முடியவில்லை
2016 மூன்றாம் காலாண்டில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்திருந்ததைக் கண்டு ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமட் வியப்படைகிறார். 2013- இலிருந்து புதிதாக வாக்காளர்களாக பதிந்து கொள்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டிலும் 70,000 என்ற அளவில்தான் சீராக இருந்து வந்துள்ளது என்றாரவர். “(இப்போது …
முகைதின்: அம்னோவும் பாஸும் இணைவது ஹராபானுக்கு நல்லதுதான்
அம்னோவும் பாஸும் ஒன்றிணையட்டும் அதுதான் பக்கத்தான் ஹராபானுக்கு நல்லது என்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின். அப்போதுதான் பக்கத்தானால் கூடுதல் இடங்களை வெல்ல முடியுமாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹராபான் மும்முனைப் போட்டியை எதிர்நோக்க வேண்டியிருக்காது. “அவர்கள் …
கோலாலும்பூர் கட்டிடங்களில் இனி கார் நிறுத்த இடம் இருக்காதா?
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக கட்டிடங்களில் கார் நிறுத்தும் இடங்களுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்தி விடலாமா என்று ஆலோசிப்பதாக த சன் நாளேடு நேற்று கூறியது. இப்போதெல்லாம் வளர்ந்த நாடுகளில் நகரங்களில் உள்ள கட்டிடங்களில் கார் நிறுத்த இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என்று தெரிவித்த கூட்டரசுப் …
ஹாடி விரைவாக குணமடைய கிட் சியாங் வாழ்த்து
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதைப் பாராட்டிய டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், அவர் விரைவாக உடல் நலம் பெற வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டார். நேற்று தேசிய இருதய சிகிச்சைக் கழக(ஐஜேஎன்)த்தில் ஹாடியின் பழுதடைந்த வால்வைச் சீர்படுத்தும் …
டிஐ-எம்: பிரதமரும் அமைச்சர்களும் எம்ஏசிசி-இடம் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்
உயர்நிலையில் எல்லாம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடப்பதை உறுதிப்படுத்த பிரதமரும் அமைச்சர்களும் துறைத் தலைவர்களும் தங்கள் சொத்து விவரங்களை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்திடம் அறிவிக்க வேண்டும் என்கிறது ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல்- மலேசியா(டிஐ-எம்). எம்ஏசிசி தலைவர் அவருடைய சொத்து விவரங்களை நாடாளுமன்றத்திடம் அறிவிக்க வேண்டும் என டிஐ-எம் தலைவர் அக்பார் சத்தார் …
எம்சிஎ ஒப்பந்தத்தின் வழி கம்யூனிச ஊடுருவல், அலறுகிறது பெர்காசா
மசீசவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) கையொப்பமிட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தின் வழி நாட்டிற்குள் கம்யூனிச ஊடுருவல் ஏற்படும் என்று பெர்காசா ஆபத்து சங்கை ஊதுகிறது. அந்த ஒப்பந்தமும் ஒத்துழைப்பும் நிச்சயமாக கம்யூனிச தத்துவத்தையும் அதன் விரிவாக்கத்தையும் கொண்டுவரும். அது நாட்டிற்கு ஆபத்தானது. இதுவரையிலான இந்த இரு அமைப்புகளுக்கிடையிலான…
மகாதிர்: பாஸ் கட்சியின் நோக்கம் மலாய்க்காரர்களின் வாக்குகளை உடைப்பதாகும்
மலேசிய அரசியலில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான பாஸின் முடிவு இறுதியில் மலாய்க்காரர்களின் வாக்குகளைச் சிதைத்து அம்னோவுக்கு வெற்றியைத் தருவதாகும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார். பாஸ் அம்னோவுடன் சேர்ந்துகொள்கிறதோ இல்லையோ, ஹரப்பானுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை குறைக்கும் என்பதோடு அதனுடைய வாக்குகளையும் இழக்கும் என்றாரவர். "ஹரப்பான்…
“எஸ்ஆர்சி பணம் ரிம்10.02 மில்லியன்” அம்னோவும் பிஎன்னும் நஜிப்பிடமிருந்து பெற்றன,…
அம்னோவும் பிஎன்னும் மொத்தம் ரிம10.02 மில்லியனை பிரதமர் நஜிப்பிடமிருந்து பெற்றன என்று பிகேஆர் உதவி தலைவர் ரஃபிஸி ரமலி கூறுகின்றார். இப்பணம் 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பெர்ஹாட்டிடமிருந்து வந்ததாக அவர் மேலும் கூறினார். எஸ்ஆர்சியை நஜிப்பின் தலைமையிலான நிதி அமைச்சு 2012 ஆம்…
அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்களாம்: கார்டியன் செய்தி
மலேசிய குடிநுழைவுத்துறை மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளும் அரசியல் புகலிடம் நாடி வந்தோரும் தாகம் தீர்க்கக் கழிவறை நீரை அருந்த வேண்டியிருப்பதாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. “எங்களுக்கு உணவுடன் ஒரு சிறு கோப்பையில் தண்ணீரும் கொடுக்கிறார்கள், அது இல்லை என்னும்போது கழிவரை நீரைத்தான் குடிக்கிறோம்”, என 18-வயது …
கிட் சியாங்: அம்னோ உதவியின்றி பாஸ் 40 இடங்களை வெல்ல…
பாஸ் 40 நாடாளுமன்ற இடங்களையும் 5 மாநிலங்களையும் கைப்பற்றுவது முடியாத செயல் என்று கூறும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், ஒருவேளை அம்னோ ஒத்துழைத்தால் அது சாத்தியமாகலாம் என்றார். “பல்முனைப் போட்டி நிலவும் 14வது பொதுத் தேர்தலில் அரை டஜன் இடங்களுக்குமேல் பாஸினால் வெல்ல முடியும் …
ஸக்கீர் விவகாரத்தில் மஇகாவுக்கு எதிராக பெர்காசா போர் முரசு கொட்டுகிறது
மலாய்க்காரர் உரிமைக்காகப் போராடும் பெர்காசா இன்று மஇகாவுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளது. மஇகா முஸ்லிம்களின் உணர்ச்சிகளை மதிக்கவில்லை என்று அது கூறிக்கொண்டது. மஇகாவை நிராகரிக்கக் கோரும் பரப்புரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் தொகுதியான சிகாமட்டில் தொடங்கும் என்று பெர்காசாவின் தலைமைச்…
சிலாங்கூரில் பாஸின் பங்கு குறித்து பிகேஆர் நாளை விவாதிக்கும்
பிகேஆரின் உயர் தலைவர்கள் நாளை ஒன்று கூடுகிறார்கள். அக்கூட்டத்தில் சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இனி பாஸின் பங்கு என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை பாஸ் எக்ஸ்கோ-கள் மூவரைச் சந்தித்தபோது நடந்தது என்னவென்பதை சிலாங்கூர் மந்திரி புசார் …
பாஸ் எக்ஸ்கோகள் சிலாங்கூர் சுல்தான் பின்னே ஓடி ஒளியக்கூடாது: மாபுஸ்
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று பாஸ் கட்சியினர் அதிலிருந்து விலக சிலாங்கூர் சுல்தான் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மானுக்கு கட்சியின் இன்னொரு தலைவர் அறிவுறுத்தியுள்ளார். ஏனென்றால், சிலாங்கூர் அரசுக்குத் தலைமை ஏற்றுள்ள பிகேஆருடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ள முடிவு …
ஏஜி குறித்த காணொளிக்காக மலேசியாகினி சிஇஓமீது வழக்கு
கினிடிவி இணையத்தளத்தில் மனதைப் புண்படுத்தும் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்தார் என்று மலேசியாகினி தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன்மீது கோலாலும்பூர் சைபர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மலேசியாகினியின் தலைமைச் செய்தியாசிரியர் ஸ்டீபன் கான்மீதும் கடந்த ஆண்டு நவம்பரில் இதேபோன்று குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது முன்னாள் பத்து கவான் …
ஜோகூர் கிராம மக்களின் துயர் தீர்க்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?…
பார்டி அமனா நெகாரா துணைத் தலைவர் சாலாஹுடின் ஆயுப், ஜோகூர் பாரு கம்போங் பக்கார் பத்து கிராமத்துவாசிகளின் துயர் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்கும் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டினைச் சாடினார். அந்தக் கிராமத்து மக்கள் அவர்கள் குடியிருப்பதாகக் கூறப்படும் அரசு நிலத்தைக் காலி செய்ய வேண்டுமென்று …
சீனப் பயணத்தில் நஜிப்பின் மகன்களுக்கு என்ன வேலை?
சீனாவுக்கு வருகை அளித்துள்ள பிரதமர் நஜிப்புடன் அவரது மகன் நோராஸ்மானும் வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ்சும் சென்றுள்ளது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. சீனா, ஹாங்ஸாவ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நஜிப்புடன் அவரது மகன்களும் பங்கேற்றது குறித்து மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா விளக்கம் அளிக்க…
எஸ்ஆர்சி புலனாய்வு அறிக்கையை எம்ஏசிசி இன்னும் ஒரு மாதத்தில் ஏஜியிடம்…
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து ரிம42 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றி விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மீதான விசாரணையை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் ஒரு மாதத்துக்குள் முடித்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. சட்டத்துறைத்துறை(ஏஜி)த் தலைவர் அபாண்டி அலி இதைத் தெரிவித்தார். புத்ரா ஜெயாவில் …
பின்னிரவில் நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவது பற்றிய சுல்தானின் அறிவுரைப் பின்பற்றுங்கள்,…
நாடாளுமன்ற கூட்டங்கள் நள்ளிரவுக்குப் பின்னரும் நடத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் மீது பழிபோடாமல் சுல்தான் கூறிய அறிவுரைக்கேற்ப நடந்துகொள்ளுமாறு மக்களவைத் தலைவர் பண்டிகர் மூலியாவை எதிரணி பக்கத்தான் ஹரப்பான் இன்று கேட்டுக்கொண்டது. நாடாளுமன்றத்தின் மக்களவைக் கூட்டம் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 80 நாள்களுக்கு நடப்பதை உறுதி செய்வதும் இதில் அடங்கும் என்று…
புஜுட் தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து பின் கைப்பற்றும் என்று ஸாகிட் நம்புகிறார்
சரவாக் மாநிலத்தில் புஜுட் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் அத்தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து பாரிசான் நேசனல் கைப்பற்றும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார். இத்தொகுதியை பின் வெற்றி கொண்டால், சரவாக் சட்டமன்றத்தில் அதன் எண்ணிக்கை தற்போதைய 72 லிருந்து 73 க்கு…
டிஎபியின் தொல்லையை நிறுத்துவதற்காக பாஸ் சிலாங்கூர் அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்கும்
டிஎபியின் தொல்லைகளை நிறுத்துவதற்காக பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சிக்குழுவில் இருப்பார்கள் என்று பாஸ் சிலாங்கூர் கமிஷனர் சாலேஹென் முக்கீ கூறிக்கொண்டார். பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவிலிருந்து அதன் உறுப்பினர்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படாததற்கு இதுதான் பாஸ் கட்சியின் மிக…
நீதியான போராட்டத்தில் கெஅடிலான் கட்சி தொடர்ந்து பங்கெடுக்கும்
இந்நாட்டு மக்களின் நலனைக் கருதியே, அடுத்த பொதுத்தேர்தலில் பல்முனைப் போட்டிகள் உருவாவதைத் தவிர்க்க கெஅடிலான் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. எந்த மாதிரியான சவால்களை எதிர்நோக்கினாலும் அதன் பணி தொடரும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற…
குவான்: சிலாங்கூர் ஆட்சிக்குழுவிலிருந்து பாஸ் கட்சியினர் விலக வேண்டும் என்பது…
பாஸ் பிகேருடன் உறவுகளை முறித்துக்கொள்ள முடிவு செய்ததை அடுத்து சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று பாஸ் கட்சியினர் விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்வது சரியான முடிவுதான் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். இதன் தொடர்பில் இதற்குமுன் தாம் கருத்துச் சொன்னதில்லை என்று குறிப்பிட்ட லிம், அம்மூவரையும் …
அன்வார்: பிகேஆர்-பாஸ் உறவுமுறிவுக்கு கூறப்படும் காரணம் சரி இல்லை
பாஸ் பிகேஆருடன் உறவுகளை முறித்துக் கொண்டதற்குக் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை என அன்வார் இப்ராகிம் கூறுகிறார். ஷியாரியா குற்றவியல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் முயற்சிகளுக்கு பிகேஆர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அது குற்றஞ்சாட்டியிருப்பது “உண்மையல்ல” என்று அன்வார் கூறினார். “நானும் …


