நஸ்ரி: இனவாதத்துக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்

சுற்றுலா,  பண்பாட்டு   அமைச்சர்     நஸ்ரி    அப்துல்    அசீஸ்,   இனங்களைப்   பழிப்போருக்கு    எதிராக   தேச  நிந்தனைச்   சட்டத்தைப்  பயன்படுத்தலாம்   என்றார். “விரும்பத்தகாத   சம்பவங்கள்   நடப்பதைத்   தடுக்க   தேச   நிந்தனைச்   சட்டத்தைப்  பயன்படுத்தலாம். “இந்நாட்டில்   ஒரு   இனம்   சீற்றம்  கொள்ளும்  வகையில்   பேசுவது    தேச   நிந்தனைச்   சட்டத்தின்கீழ்   குற்றமாகும்”,  என்று   நஸ்ரி  …

எஸ்எம்யுஇ கோப்புகள் இங்கே, 1எம்டிபி கோப்புகள் எங்கே? ஜமாலிடம் இயோ…

சிலாங்கூர்   அரசின்   ஸ்கிம்  மிஸ்ரா    உசியா   இமாஸ்(எஸ்எம்யுஇ)  திட்டத்திலிருந்து     பணம்  கையாடப்பட்டிருப்பதாக    சுங்கை   புசார்   அம்னோ   தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுஸ்   குற்றம்   சாட்டியதை   அடுத்து  டமன்சாரா   உத்தாமா    சட்டமன்ற   உறுப்பினர்   இயோ   பீ  பின்   இன்று   எஸ்எம்யுஇ   கோப்புகளைக்   ஊடகங்களிடம்  காண்பித்தார். “ஜமாலின்   குற்றச்சாட்டுகளை    மறுக்கிறேன். இதோ  …

மலேசியாவில் இனப் பாகுபாடு இன்னும் நிலவுகிறது

இனப்பாகுபாட்டைக்  காண்பிக்கும்   சம்பவங்கள்   நாட்டில்   தொடர்ந்து   நடைபெற்றுக்கொண்டுதான்   இருக்கின்றன.  என்ஜிஓ-வான   பூசாட்  கோமாஸின்   அறிக்கை   அப்படித்தான்   கூறுகிறது. தேசிய    ஒற்றுமையை    மேம்படுத்த   1மலேசியா   கோட்பாடு    அறிமுகப்படுத்தப்பட்டது,   தேசிய    ஒற்றுமை    ஆலோசனை    மன்றம்    அமைக்கப்பட்டது    ஆனாலும்,  இனவாதம்தான்   மக்களைப்   பிரித்தாள்வதற்கு    இன்னமும்   கடைப்பிடிக்கப்படுகிறது    என    பூசாட்   கோமாஸின்   2016   மலேசிய  …

நஸ்ரி-மகாதிர் விவாதத்திற்கு புதிய தேதி, இடம், நஸ்ரி முன்மொழிகிறார்

  ஆவலோடு எதிர்பார்க்கப்படும் நஸ்ரி-மகாதிர் விவாதத்தின் ஏற்பாட்டாளர்கள் விவாதம் நடைபெறவிருக்கும் புதிய இடத்தை நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்ற மகாதிரின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலையில் இல்லை. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய நஸ்ரி, விவாதத்தை அதை ஏற்பாடு செய்யும் சினார் ஹரியானின் ஷா அலாம் அலுவலகத்தில் ஏப்ரல்…

கிட் சியாங்: பாஸ் தனித்து போட்டியிட்டு பெரும் வெற்றி பெற…

  பாஸ் கட்சி தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு பெரும் வெற்றி கண்டதாக வரலாறு இல்லை. அது இதர முக்கிய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைத்தால் அல்லது ஒரு கூட்டணியில் உறுப்பியம் பெற்றிருந்தால் பெரிய வெற்றி பெற முடியும். பதிவேடுகளின் தகவல்படி பாஸ் தனித்துப் போட்டியிட்டால் அது 13 அல்லது அதற்கும்…

ஜைட்: பாஸுடன் ஒத்துழைப்பு பிஎன்னின் வீழ்ச்சிக்கு வழிகோலும்

பாஸ்   கட்சியுடன்   ஒத்துழைப்பது    பிஎன்னின்    வீழ்ச்சிக்கு     வழிவகுக்கும்   என   முன்னாள்   சட்ட   அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்   இன்று   கூறினார். அந்த  இஸ்லாமியக்   கட்சியுடன்    நட்பு   பாராட்டுவதன்   மூலம்   பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்கும்    அவரின்   கூட்டமும்    அவர்களின்   அழிவுக்கு    அவர்களே   வழி  தேடிக்  கொள்கிறார்கள்     என  ஜைட்   அவரது …

நாளை பிற்பகலுக்குள் விவாதத்துக்கு ஏற்பாடு செய்வீர்: நஸ்ரிக்கு மகாதிர் கெடு

தங்களுக்கிடையில்   விவாதம்     நடைபெற   வேண்டுமானால்,  சுற்றுலா,  கலாச்சார   அமைச்சர்    நஸ்ரி   அப்துல்   அசிஸ்   நாளை   பிற்பகலுக்குள்   அதற்கான   ஏற்பாடுகளைச்    செய்ய   வேண்டும்    என    டாக்டர்   மகாதிர்   முகம்மட்    கூறினார். வரும்   சனிக்கிழமை  பிற்பகல்    கோலா   கங்சார்   மக்தாப்   ரெண்டா  சயின்ஸ்  மாரா(எம்ஆர்எஸ்எம்) வில்   விவாதம்   நடத்த   போலீஸ்   அனுமது  …

இது போலீஸ் ராஜ்யமல்ல , விவாதத்தில் பங்கேற்பேன்: நஸ்ரி சூளுரை

தமக்கும்    முன்னாள்     பிரதமர்    டாக்டர் மகாதீர்    முகம்மட்டுக்குமிடையிலான   விவாதத்துக்கு   அனுமதி   அளிக்க   மறுத்த   போலீசாரின்   முடிவைச்    சுற்றுலா,  கலாச்சார     அமைச்சர்    நஸ்ரி   குறைகூறினார். எது   எப்படியாயினும்     வரும்   சனிக்கிழமை  பிற்பகல்    கோலா   கங்சார்   மக்தாப்   ரெண்டா  சயின்ஸ்  மாரா(எம்ஆர்எஸ்எம்)   செல்லப்போவதாக    அவர்   உறுதியுடன்  கூறினார். “எப்போதிருந்து   இது   போலீஸ்  …

நஸ்ரி- மகாதிர் விவாதத்துக்கு போலீஸ் அனுமதி இல்லை

மார்ச்   25-இல்   கோலா  கங்க்சாரில்    முன்னாள்     பிரதமர்    டாக்டர் மகாதீர்    முகம்மட்டுக்கும்   சுற்றுலா,  கலாச்சார     அமைச்சர்    நஸ்ரி    அசிசுக்குமிடையில்      நடைபெறவிருந்த   விவாதத்துக்கு    போலீஸ்   அனுமதி  கிடைக்கவில்லை. “அந்நிகழ்வுக்கான   காரணங்களையும்    பாதுகாப்பு,  பொது  ஒழுங்கு,   பொதுமக்களின்   சுதந்திரம்    ஆகியவற்றைப்   பரிசீலித்த   பின்னர்    கோலா  கங்சார்    மாவட்ட    போலீஸ்   தலைவர்    அஹ்மட் …

ஹாடி தீர்மானம் தொடர்பில் முஸ்லிம்- அல்லாத பிஎன் கட்சிகள் பிரதமரைச்…

பிஎன்   உறுப்புக்   கட்சிகள்  இவ்வாரம்   பிரதமரும்   பிஎன்  தலைவருமான   நஜிப்   அப்துல்   ரசாக்கைச்  சந்தித்து      1965  ஷியாரியா   நீதிமன்ற( குற்றவியல்  நீதி)த்   திருத்தச்   சட்டம்    அல்லது   சட்டம்   355 குறித்து  விவாதிக்கப்  போவதாக   மஇகா   தலைவர்   டாக்டர்   எஸ்.  சுப்ரமணியம்   கூறினார். “நாங்கள்   காத்திருப்போம்.  கூட்டம்   நடந்த  பின்னர்தான்  …

“மதி அற்ற” மந்திரி கேள்வி கேட்டவரை வெளியே சந்திப்போம் என்கிறார்

  1எம்டிபி பற்றிய விசாரணையில் பிரதமர் நஜிப் சந்தேகிக்கப்படுகிறவரா என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி மந்திரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குமிடையில் பெரும் வாக்குவாதத்தில் முடிந்தது. டிஎபி (பூச்சோங்) நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ இரண்டாவது நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனியிடம் கேள்வி கேட்டபோது சூடு கிளம்பியது. முதலில்,…

பெர்சத்து, ஹரப்பான் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது

  பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றம் இன்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவை (பெர்சத்து) எதிரணியின் ஓர் உறுப்பினராக ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அத்துடன், அது டாக்டர் மகாதிர் அறிவித்திருந்த நான்கு பரிந்துரைகளை விவாதிக்க ஒப்புக்கொண்டுள்ளது. பக்கத்தான் ஹரப்பான் அனுவலகம் இந்த முடிவைத் தெரிவிக்க பெர்சத்துவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பும்…

ஹராபான், பெர்சத்துவை உறுப்புக் கட்சியாக ஏற்றது; கூட்டணியைப் பதிவுசெய்யவும் இணக்கம்

பக்கத்தான்   ஹராபான்    தலைவர்    மன்றம்,   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியாவை (பெர்சத்து)   எதிரணிக்   கூட்டணியின்   உறுப்புக்   கட்சிகளில்   ஒன்றாக        ஒருமனதாய்   ஏற்றுக்  கொண்டதுடன்   டாக்டர்   மகாதிர்   அறிவித்திருந்த    நான்கு    பரிந்துரைகளை   விவாதிக்கவும்   ஒப்புக்கொண்டது. “இம்முடிவை    பிபிபிஎம்(பெர்சத்து)-  முக்குத்    தெரிவிக்க  பக்கத்தான்   ஹராபான்   செயலகம்     விரைவில்  கடிதம்   அனுப்பும்”,  என  …

சும்மாத்தான் போட்டியிட்டாராம், தோற்றுப்போன நிக் அப்டு கூறும் சமாதானம்

பெங்காலான்  செப்பா   பாஸ்   தொகுதித்   தேர்தலில்   போட்டியிட்டு   படுதோல்வி   அடைந்த    நிக்   அப்டு    நிக்    அப்துல்    அசிஸ்    தாம்   விளையாட்டாகத்தான்   போட்டியிட்டதாகக்   கூறினார். ஒரு  காலத்தில்   பெங்காலான்   செப்பாவுக்குத்   தலைவராக   இருந்தவர்   காலஞ்சென்ற   அவரின்   தந்தையும்  பாஸ்  ஆன்மிகத்   தலைவருமான      நிக்   அப்துல்     அசிஸ்    நிக்   மாட்    என்பது   …

நஸ்ரி: மகாதிர் அதிகாரத்துவ பதவியில் இல்லை, அதனால் நேரலை ஒளிபரப்பு…

டாக்டர்   மகாதிர்   முகம்மட்    எதிரணியில்   அதிகாரத்துவப்   பதவி    எதிலும்   இல்லை   என்பதால்   அவருடன்   தாம்    நடத்தும்   விவாதத்தை     எந்தத்   தொலைக்காட்சி    நிலையமும்   நேரலையாக  ஒளிபரப்பாது  எனச்  சுற்றுலா,   பண்பாட்டு   அமைச்சர்    முகம்மட்  நஸ்ரி   அப்துல்   அசீஸ்   கூறினார். வரும்   சனிக்கிழமை     கோலா   கங்சாரில்    நடைபெறுவது      அரசாங்கமும்   எதிரணியும்   சம்பந்தப்பட்ட  …

நாட்டில் கொள்ளையோ, கொள்ளை-அங்கலாய்க்கிறார் கிட் சியாங்

மலேசியா   “கொள்ளையடிக்கும்   கலாச்சார”த்தில்  சிக்கிக்   கொண்டு    தவிப்பதாக   அங்கலாய்க்கிறார்   டிஏபி   பெருந்   தலைவர்   லிம்   கிட்   சியாங்.   பண   அரசியலிலும்   ஊழலிலும்   ஈடுபட்டதாகக்  குற்றஞ்சாட்டப்பட்டு   அமைச்சர்   பதவியிலிருந்து    அகற்றப்பட்ட    ஒருவர்  பிறகு    பெல்டா  தலைவராக     நியமிக்கப்பட்டதே   இதற்குத்   தகுந்த    சான்று    என்றவர்    சுட்டிக்காட்டினார். “இன்றும்   அவர்   பெல்டா    குழுமத்தின்  …

பொருளாதாரக் கீழறுப்புச் செயல்களை நிறுத்துவீர்: நஜிப் வேண்டுகோள்

பொருளாதாரத்தை     அரசியலாக்குவதையும்    அதைக்   கீழறுப்புச்    செய்யும்   வேலைகளையும்  உடனே    நிறுத்த    வேண்டும்     எனப்    பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.   அதனால்   நாட்டுக்குக்   கெடுதல்தான்    உண்டாகும்     என்றார். “இது   தொடர்வது   நல்லதல்ல.  அரசியல்   கருத்துவேறுபாடுகள்   இருக்கலாம்.  ஆனால்,  தேசிய   நலன்களைக்   கட்சி    அரசியலில்   பணயக்  காய்களாக   வைத்து    ஆடக் …

பிறப்பைப் பதிவு செய்வதில் நிகழ்ந்த தவறு சிறுவன் குடியுரிமை பெறத்…

டான்  ஜியா  இயி   குடியுரிமை   பெறுவதில்   சிக்கலை    எதிர்நோக்குகிறான்.  அந்த   11-வயது   சிறுவன்   அவனின்   பெற்றோர்    அவர்களின்   திருமணத்தைப்   பதிவு   செய்த   ஒரு   நாளைக்கு   முன்னதாக   பிறந்தவன்  என்பதால்  அவனுக்குக்  குடியுரிமை   கொடுக்க    தேசிய  பதிவுத்   துறை(என்ஆர்டி)   மறுத்து   விட்டது. டான்,  மலேசியரான    டான்   பான்  குவானுக்கும்    இந்தோனேசிய  …

ஹாடி உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி கூறுகிறார் சைபுடின்

  பாஸ் தலைவர் அவருடைய கட்சியின் தேர்தல் நோக்கங்களை சமீபத்தில் வெளியிட்டதற்காக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசூதியன் இஸ்மாயில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் கூறியதாக வெளியான சில அறிக்கைகளை அப்துல் ஹாடி மறுத்துள்ளார் என்று ஷா அலாமில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறிய…

நாஸிர்-மகாதிர் விவாதம்: ஆர்டிஎம் ஒளிபரப்பாது, சாலே கூறுகிறார்

  எதிர்வரும் மார்ச் 25 இல் அனைவராலும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அமைச்சர் நாஸிர் மற்றும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஆகிய இருவருக்கிடையில் நடைபெற விவாதத்தை ஆர்டிஎம் ஒளிபரப்பாது. தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் அந்த விவாதம் இரு தனிப்பட்டவர்களுக்கிடையிலானது என்றார். "என்னைப்…

மலேசிய வழக்குரைஞர் மன்றம் “பார்” வேண்டும் என்று வாக்களித்தது

  இன்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் அதன் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அதன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து மதுபானம் வழங்குவதற்கு ஆதரவாக வாக்களித்தது. அம்மன்றத்தின் நிகழ்ச்சிகளில் மதுபானம் வழங்குவதற்கு எதிராக வழக்குரைஞர் முகமட் அமிர் ஷாரில் பஹாரி முகமட் நூர் முன்மொழிந்த தீர்மானம் மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. தீர்மானத்திற்கு…

‘அரசாங்கம் முழு விவரங்களைப் பெற முயல்வதில்லையே, பிறகு எப்படி 1எம்டிபிமீது…

முழு   விவரமும்     தெரியாமல்     1எம்டிபிமீது      நடவடிக்கை    எடுக்க    இயலாது      என்று   கூறியுள்ள   இரண்டாம்   நிதி  அமைச்சர்   ஜொஹாரி  அப்துல்    கனியைச்   சாடிய       பெட்டாலிங்  ஜெயா   உத்தாரா  எம்பி  டோனி   புவா,    அரசாங்கம்தான்   முழு   விவரம்    அறிய    எந்த  முயற்சியும்   செய்வதில்லையே    என்பதைச்   சுட்டிக்காட்டினார். “எவர்மீதும்   குற்றம்  சாட்டுமுன்   முழுக் …

பிஎன் பங்காளிகள் எச்சரிக்கையையும் மீறி சட்டம் 355 திருத்தத்தைத் தாக்கல்…

பிஎன்  ஆளும்  கட்சி   உறுப்புக்   கட்சிகள்   வேண்டாம்   என்று   எச்சரித்திருந்தாலும்  அரசாங்கம்   ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்   நீதி)ச்  சட்டத்தைத்   திருத்தம்   செய்ய    சட்டவரைவைக்    கொண்டுவருவதில்    உறுதியாக   இருப்பதாய்த்    துணைப்  பிரதமர்    அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி    கூறினார். “அரசாங்கம்   தானே   சட்டம்   355(திருத்தத்தை)-ஐ  விரைவில்     நாடாளுமன்றத்தில்    தாக்கல்    செய்யும்”,   என்றவர்   கூறியதாக  …