இன ரீதியான பிரச்சனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை எதிர்கொள்ளும் போது, இந்திய சமூகமும் மலேசியாவிலுள்ள இதர சிறுபான்மையினரும் தற்காப்பு நிலையில் இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் லத்தீஃபா கோயா வலியுறுத்தியுள்ளார். நேற்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹாலில் நடைபெற்ற மன்றம் ஒன்றில்…
எம்பி: மரியா பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டது ஏன்? விளக்கமளிப்பது…
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாமீது கொடூர பாதுகாப்புக் குற்றச் சட்டம்(சோஸ்மா) 2012 பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து விளக்கமளிக்க மறுக்கும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை எதிரணி எம்பி ஒருவர் சாடினார். ஜாஹிட் நேற்று, உயர்நிலை பாதுகாப்பு மிரட்டல்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட அக்கொடூரச் சட்டம் மரியாவைத் தடுத்து …
பெர்சே பேரணி கைது: மேலும் அறுவர் விடுதலை, ஆனால் மரியா…
பெர்சே பேரணியின்போது கைதானவர்களில் மூன்று பக்கத்தான் ஹராபான் பிரதிநிதிகளும் மூன்று சமூக ஆர்வலர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர். “டாங் வாங்கி போலீஸ் நிலையத்தைவிட்டுப் புறப்படுகிறோம்” என பத்து எம்பி தியான் சுவா டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு படத்தையும் பதிவேற்றியிருந்தார். அதில் அவருடன் அம்பாங் எம்பி சுரைடா கமருடின், பாசிர் …
பெர்சேக்கு ஆதரவு தேட தேவாலயம் சரியான இடமல்ல -கெராக்கான் இளைஞர்கள்
கெராக்கான் இளைஞர் தலைவர் ஒருவர், சமயத்தை அரசியலுடன் கலக்காதீர் என்று பெர்சே 5 பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஊக்குவித்த தேவாலயங்களுக்கு நினைவுறுத்தினார். கடந்த வாரம் சில தேவாலயங்கள் பேரணி நடப்பதற்கு முன்னதாக வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தி குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கே ஆதரவு தெரிவித்ததாக கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி …
பெர்சே கைது: எண்மர் விடுவிக்கப்பட்டனர்; மரியா தனி அறைச் சிறையில்…
கடந்த வெள்ளிக்கிழை பெர்சேயிக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட கடுமமையான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் எண்மர் இன்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள்: ஸாப்வான் அனாங், மன்டீப் சிங், முகமட் லூக்மான் நுல் ஹாகிம் ஸுல் ரஸாலி, எஸ். அருட்ச்செல்வன், வோங் சீ வாய், லீ காய் மிங், அனிஸ்…
ஸாகிட்: ஏன் மரியா சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதற்கு…
பெர்சே 5 பேரணி நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதா க பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா அவரது பெர்சே அலுவலகத்தில் போலீசார் மேற்கொண்ட ஒரு திடீர் சோதனையின் போது தண்டனை சட்டத் தொகுப்பு செக்சன் 124C இன் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்…
டிஎன்50, 2020 தூரநோக்குக்கு மாற்றாக அல்ல, கைரி
2050 தேசிய உருமாற்றம் கொள்கை (டிஎன்50) 2020 தூர நோக்குக்கு மாற்றானது அல்ல என்று இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். பிரதமர் நஜிப் ரசாக்கின் சிந்தனைப்படி டிஎன்50 இன் முதல் கட்டம் எதிர்கால மலேசியாவைப் பற்றி இளைஞர்கள் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக்கொள்ள வகைசெய்கிறது…
உத்துசான்: மகாதிரால் மலாய்க்காரர்களை பெர்சே பக்கம் திருப்ப முடியவில்லை
பேர்சே 5 பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர் சீனர்கள். அவர்கள் டிஎபி ஆதரவாளர்கள். இது மகாதிராலும் அவரது ஆதரவாளர்களாலும் மலாய்க்காரர்களை அதிகம் கவர முடியவில்லை என்பதைக் காட்டுகிறது என்று அம்னோ நாளிழதான உத்துசான் மலேசியா கூறுகிறது. பெர்செ 4 க்கிற்கு வந்திருந்தவர்களை விட பெர்சே 5 இல் பங்கேற்றவர்களின்…
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜாக்கீர் நாயக்கிற்கு மலேசியா சிவப்புக் கம்பளம்…
-மு. குலசேகரன், நவம்பர் 20, 2016. சர்ச்சைக்குறிய மத போதகரான ஜாக்கீர் நாயக், தலைமையேற்றிருந்த இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியத்திற்கு இந்திய அரசாங்கம் சட்டவிரோத இயக்கனமென கூறி 5 வருடத்திற்கு தடை விதித்துள்ளது. இதன் வழி அவரின் நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டன. மதத்துவேஷம், இளைஞர்களுக்கு வன்முறைப் போதிப்பது, இனங்களுக்கிடையிலான…
கேஎல்சிசி நோக்கி 20ஆயிரம் மஞ்சள் சட்டையினர்
கோலாலும்பூரில் ஜாலான் அம்பாங் அருகில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் , கேஎல்சிசியைச் சுற்றியுள்ள பகுதி மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. பெர்சேயின் உத்தரவுக்கிணங்க அதன் ஆதரவாளர்கள் கேஎல்சிசியை நோக்கிக் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள். பிற்பகல் மணி 3.30 அளவில் சுமார் 20ஆயிரம் பேர் அங்குக் கூடியிருந்தனர். …
‘நல்ல கூட்டம்’ என்று மகாதிர் பாராட்டு
டட்டாரான் மே பேங் வந்த டாக்டர் மகாதிர் முகம்மட் பெர்சே 5 பேரணிக்கு நிறைய பேர் திரண்டு வந்திருப்பதாக பாராட்டினார். “நிறைய பேர் வந்துள்ளனர். அரசாங்கம்தான் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் உரிமையைக் கோழைத்தனமாகத் தடுக்கப் பார்க்கிறது. இந்த உரிமை அரமைப்பிலேயே இருக்கிறது”, என்றாரவர். பேரணியில் சீனர்கள்தான் அதிகமா என்று …
மரியாமீது சோஸ்மா குற்றச்சாட்டு, அவருடன் கைதான 9 பேருக்குத் தடுப்புக்…
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா பாதுகாப்புக் குற்ற(சிறப்பு நடவடிக்கை)ச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ் செய்தியில் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரும் அதை உறுதிப்படுத்தினார். அவருடன் கைதான இதர ஒன்பது பேரும் விசாரணைக்காக இரண்டு நாள்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இதனிடையே, …
சிவப்புச் சட்டை: ஜமாலும் இதர இருவரும் நான்கு நாள் தடுத்து…
சிவப்புச் சட்டை அணித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசை நான்கு நாள் தடுத்து வைக்க அம்பாங் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அம்பாங் பாயிண்ட் சம்பவத்துக்காக அவரும் மற்ற இருவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அம்மூவரும் ஷா ஆலம் தடுப்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக அவர்களின் சட்ட ஆலோசகர் …
டட்டாரான் மெர்டேகாவை நோக்கிச் செல்லும் கிட் சியாங், குவான் எங்
இன்று பிற்பகல் மணி இரண்டுக்கு பிரிக்பீல்ட்ஸ் போக்குவரத்து மற்றும் விற்பனை மையத்தில் நூற்றுக்கணக்கான பெர்சே பங்கேற்பாளர்கள் காணப்பட்டனர். டட்டாரான் மெர்டேகா நோக்கிச் செல்வதற்குமுன் பலர் உணவகங்களை நாடிச் செல்ல மேலும் பலர் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே, லிம் கிட் சியாங், லிம் குவான் எங் உள்பட டிஏபி தலைவர்கள் …
பெர்சே டி-சட்டையில் விமான நிலையம் வந்திறங்கினார் மகாதிர்
சூடான் நாடு சென்றிருந்த டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று பிற்பகல் மணி ஒன்றுக்கு மலேசியா திரும்பினார். மகாதிர் பெர்சே டி-சட்டை அணிந்து விமானத்திலிருந்து இறங்கும் படமொன்றை வலைப்பதிவாளர் பிர்டுஸ் அப்துல்லா பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், மகாதிர் வந்திறங்கியது சுபாங் விமான நிலையமா, கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையமா என்பது …
பெர்சே ஓர் எதிரணி இயக்கம்: அஸலினா சாடல்
பெர்சே மக்களைத் தூண்டிவிட்டு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறதாம். பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் கூறினார். அந்தத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இப்போது ஓர் எதிரணி இயக்கமாக மாறிவிட்டது என்றவர் சொன்னார்.
‘சிவப்புச் சட்டையினர் அமைதி விரும்பிகள் என்பதை நிரூபித்து விட்டோம்’
சிவப்புச் சட்டையினர் அவர்களின் ஒன்றுகூடும் இடமான பாடாங் மெர்போக் சென்றடைந்தனர். அந்த அணியினர் அசம்பாவிதம் ஏதுமின்றி அந்த இடத்தைச் சென்றடைந்தது அவர்கள் அமைதியை விரும்புவர்கள் என்பதைக் காண்பிப்பதாக அம்னோ இளைஞர் செயல்குழு உறுப்பினர் அர்மண்ட் அழா கூறினார். அடுத்து என்ன என்று வினவியதற்கு “ஓய்வெடுக்கப் போகிறோம்” என்றார். “நாங்கள் …
அம்பிகா: தடுத்து நிறுத்தினாலும் பெர்சேக்கு ‘வெற்றியே’
பங்சாரில் கூடிய பெர்சேயின் மஞ்சள் சட்டையினர் டட்டாரான் மெர்டேகா நொக்கி ஊர்வலமாக சென்றபோது ஜாலான் ட்ரேவர்சில் போலீஸ் தடுப்பு அரண் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து அணிவகுத்துச் செல்ல அனுமதிக்குமாறு போலீஸ் அதிகாரிகளுடன் பேசிப்பார்த்தார். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த வழியில் …
கோலாலும்பூர் தெருக்களில் பெர்சே மற்றும் சிவப்புச் சட்டையினர்
பெர்சேயும் சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் தலைமையில் செயல்படும் சிவப்புச் சட்டையினரும் ஏக காலத்தில் பேரணி நடத்த முற்பட்டதால் கோலாலும்பூர் தெருக்களில் பதற்றம் மிகுந்துள்ளது. பெர்சே கூட்டமைப்பு தேர்தல் மற்றும் ஜனநாயக சீரமைபுக்காகவும் 1எம்டிபி ஊழல் தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி …
அமைதியான ஒருங்கு கூடுதல் சட்ட விதி 18 ஐ போலீஸ்…
ஒரு பேரணி நடக்கும் போது இன்னொரு எதிர்ப்பு பேரணி அதே நாளில், அதே நேரத்தில் நடத்த மாவட்ட போலீஸ் தலைவர் அனுமதிக்கக்கூடாது. மாறாக வேறொரு நாளையும் இடத்தையும் குறிப்பிட வகை செய்யும் அமைதியான ஒருங்கு கூடுதல் சட்டம் 2012, செக்சன்கள் 17 மற்றும் 18 ஆகியவற்றை போலீஸ் சனிக்கிழமை…
பெர்சே தலைவர்களை கைது செய்ததற்காக ஜமால் போலீஸை பாராட்டினார்
பெர்சே தலைவர் மரியா மற்றும் பெர்சே அலுவலக செயலாளர் மன்டீப் சிங் ஆகியோரை கைது செய்ததற்காக சிவப்புச் சட்டை தலைவர் ஜமால் யுனூஸ் போலீசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால், பெர்சே பேரணிக்கு எதிரான பேரணியை நாளை நடத்தவிருக்கும் ஜமால் தற்போது எங்கிருக்கிறார் என்பது எவருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது.…
பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய சாலைகள், போலீஸ் தகவல்
நாளை நடைபெறவிருக்கும் பெர்சே பேரணியால் பல சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 58 சாலை போக்குவரத்து திசை திருப்பங்கள் இருக்கின்றன. கீழ்க்கண்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு போலீஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது: டாத்தாரன் மேபேங்க் பங்சார், பிரிக்பீல்ட்ஸ் (லிட்டல் இந்தியா), மஸ்ஜித் நெகாரா மற்றும் மியூசியம் நெகாரா, சோகோ, டாத்தாரான்…
அனிஸ் கைது
மாணவர் ஆர்வலர் அனிஸ் ஷயாஃபிக் முகமட் யூசுப்பை கைது செய்வதற்கு போலீசார் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். தமது வழக்குரைஞர்கள் வந்து சேரும் வரையில் தாம் வெளியில் வரப்போவதில்லை என்று அனிஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இதனிடையே, பெரித்தா ஹரியான் செய்திப்படி சிவப்புச் சட்டையின் ரஸாலி ஸகாரியாவும் கருப்புச் சட்டை அயாப்…
மஸ்ஜிட் நெகாரா சிவப்புச் சட்டையினரின் கட்டுப்பாட்டில்
சிவப்புச் சட்டையினர் மஸ்ஜிட் நெகாரவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அது பெர்சே பேரணியின் ஐந்து ஒன்றுகூடும் இடங்களில் ஒன்றாகும். ஆனால், சிவப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் யுனூஸ் அங்கு காணப்படவில்லை. "நாளை வரையில் நாங்கள் இங்கு இருப்போம். அதிகமானோர் இங்கு வந்து கூடுவர்" என்று ஜாமாலின் உதவியாளர்…


