மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் கூறுகையில், காற்று மாசுபாட்டின் அளவீடுகள் அதிகமாகப் பதிவாகும் பகுதிகளில் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படுவதுடன், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் அவை வழங்கப்படும் என்றார். சிலாங்கூரில் உள்ள ஆறு கண்காணிப்பு நிலையங்களில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்றுத் தரம் பதிவாகியுள்ளதால், பொதுமக்கள் கடுமையான வெளிப்புற…
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி. கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது
சீனப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு “பற்றாக்குறை”: மசீச துணை அமைச்சரை அம்னோ…
சீனப்பள்ளிகளுக்கு மத்திய அரசு அளித்த முழு மானியமும் சீனப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்று கூறிய துணைக் கல்வி அமைச்சரும் மசீச இளைஞர் பிரிவு தலைவருமான சோங் சின் வூனை அம்னோ செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் அப்துல் மனாப் சாடினார். முன்னதாக, மசீச ஆட்சேபம் தெரிவித்த பின்னர் சீனப்பள்ளிகள்…
போலீஸ் புகார்: சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் “காணாமல் போய் விட்டது”
தேசிய பட்ஜெட் 2016 இல் சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் சம்பந்தமாக வெளியான முரண்பாடான அறிக்கைகள் பற்றி டிஎபி அரசியல் உதவியாளர் ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார். காணாமல் போய் விட்டதாக சோங் கூறும் ரிம50 மில்லியன் மோசடி செய்யப்பட்டதா அல்லது அதில் அதிகாரத் துஷ்பிரயோகம் நடந்துள்ளதா என்பதை…
பிரதமர் வேட்பாளர்: மகாதிர் கருத்தை அமனா ஏற்கிறது
எதிரணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போது அறிவிக்க வேண்டியதில்லை என்ற முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்டின் கருத்துடன் தாம் உடன்படுவதாக அமனா தலைமைச் செயலாளர் அனுவார் தாஹிர் கூறினார். “மகாதிர் கூறுவதை ஒப்புக்கொள்கிறோம். அவரது கருத்து சரியானதே . அமனா அவரை ஆதரிக்கிறது”, என்றவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் …
துணிச்சலாக பேசும் கவுன்சிலர் லிம் மா ஹூய் பணி விலகல்
பினாங்கு நகராட்சி மன்றத்தில் எட்டாண்டுகள் கவுன்சிலராக இருந்து துணிச்சலுடன் கருத்துச் சொல்லி வந்த லிம் மா ஹூய் பதவி விலகிக் கொண்டிருக்கிறார். 14 என்ஜிஓ-களின் கூட்டணியான பினாங்கு அரங்கத்தின் துடிப்புமிக்க உறுப்பினரான லிம், நேற்று நகராட்சி மன்றக் கூட்டத்தில் பணிவிலகும் முடிவைத் தெரிவித்தார். மீண்டும் கவுன்சிலராக நியமனம் செய்யப்படுவதை …
முகநூலில் இஸ்லாத்தை அவமதித்த பெண் கைது
சமுக வலைத்தளத்தில் தொழுகை அழைப்பையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்னை போலீசார் நேற்றிரவு தடுத்து வைத்தனர். செவ்வாய்க்கிழமை செய்யப்பட்ட ஒரு புகாரை அடுத்து நேற்றிரவு எட்டு மணிக்கு 26-வயது நிரம்பிய அப்பெண் குளுவாங் அருகில் சிம்பாங் ரெங்காம், தாமான் ரேகாமாஸில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார் என …
முன்னாள் ஏஜி அப்துல் கனிக்கு வழக்குரைஞராக அங்கீகாரம்
பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போது உடல்நலக் குறைவின் காரணமாக பதவியிலிருந்து விலக நேர்ந்த முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலுக்கு ஒரு வழக்குரைஞர் என்ற அங்கீகாரம் இன்று வழங்கப்பட்டது. அவரை அங்கீகரிக்கும் நிகழ்வுக்கு கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் லூய்ஸ் ஒ’ஹரரா தலைமை …
மகாதிர்: வேண்டாம், வேண்டாம்
எதிரணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போது அறிவிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் இன்றிரவு மலேசியாகினி அலுவலகத்தில் சந்தித்த போது கூறினார். "நாம் இப்போது பிரதமர் பெயரைக் குறிப்பிட்டால் வேறு சிலர் அதனால் ஏமாற்றமடைவார்கள்; நமக்குள்ளே சச்சரவுகள் ஏற்படும் என்றார். எதிரணியின் பிரதமர் தேர்வு பொதுத்…
மகாதிர்: சிலர் எப்படி மனமுவந்து நஜிப்பிடம் அடிமைத்தனத்தோடு மண்டியிடுகிறார்கள் என்பது…
சில தனி நபர்கள், படித்த மற்றும் விவரமறிந்தவர்கள் உட்பட, எப்படி மனமுவந்து பிரதமர் நஜிப் ரசாக்கிடம் அடிமைத்தனத்தோடு மண்டியிடுகிறார்கள் என்பது வியப்பூட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார். "ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அவர்களின் தலைவர் போல, அவரது கையையும் முத்தமிடுகின்றனர்", என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு…
அமனா: பதவிப் போராட்டத்தைத் தவிர்க்க ஹராபானுக்கு பிரதமர் வேட்பாளர் அவசியம்
பக்கத்தான் ஹராபான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான வேட்பாளர் குறித்து முடிவெடுப்பது முக்கியம் என்கிறார் பார்டி அமனா நெகரா (அமனா) தொடர்பு இயக்குனர் காலிட் சமட். அது தேர்தலுக்குப்பின் பதவிப் போராட்டம் தலைதூக்குவதைத் தவிர்க்க உதவும். மேலும், அது பொதுமக்கள் அக்கறை காட்டும் ஒரு விவகாரமுமாகும் என அந்த ஷா …
ரிங்கிட் சரிவுக்கு ஏதோதோ காரணம் கூறுவதை நிறுத்துக: எம்பி சாடல்
ரிங்கிட்டின் மதிப்பு சரிந்து வரும் வேளையில் அது குறித்து ‘கவலை வேண்டாம்’ என்று கூறுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என டிஏபி எம்பி டோனி புவா கூறினார். ரிங்கிட் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆசியாவின் மிக மோசமான அடைவுநிலையைக் கொண்ட நாணயமாக விளங்குவதை புவா இரண்டாம் நிதி அமைச்சர் …
பாக்ஸைட் சுரங்கத் தொழில் தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு
மலேசியா பாக்ஸைட் சுரங்கத் தொழில் நடவடிக்கைகளுக்கு விதித்துள்ள தடையை டிசம்பர் 31 தொடங்கி மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இயற்கை வள, சுற்றுசூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் இதனைத் தெரிவித்தார். பாக்ஸைட் சுரங்கத் தொழிலுக்கு ஜனவரியில் முதன்முதலாக மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது …
கிட் சியாங்: மகாதிர்மீது சட்டப்பிரிவு 124சி-யைப் பயன்படுத்தினால் உலகம் கைகொட்டிச்…
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குக் குழிபறிக்க முயன்றதாக டாக்டர் மகாதிர் முகம்மட் மீது விசாரணை நடத்தப்படுமானால் அது உலகம் மலேசியாவைப் பார்த்துக் “கைகொட்டிச் சிரிப்பதற்கு” இன்னொரு வாய்ப்பாக அமைந்து விடும் என்கிறார் லிம் கிட் சியாங். “22 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மகாதிர் முதுமை நிலையில், 91ஆவது வயதில், ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு …
கேஎல், சிலாங்கூரில் தடைப்பட்ட நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது
சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலை முழுமையாக செயல்படத் தொடங்கியதால் மண்டலம் 1-இல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 99 விழுக்காட்டுக்கு இன்று காலை நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது. கோலாலும்பூர், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட், கோலா சிலாங்கூர் ஆகியவற்றிலும் பெட்டாலிங்கில் 98 விழுக்காட்டுப் பகுதிகளிலும் நீர் விநியோகம் …
கேஎல்ஐஏ 2-ல் , சென்னையிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தின்…
இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானம் கேஎல் அனைத்துலக விமான நிலையம் 2-இல் தரையிறங்கியபோது அதன் டயர் வெடித்தது. ஆனால், பயணிகள் பணியாளர்கள் எவருக்கும் காயமேற்படவில்லை. அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து இறங்கிச் சென்றதாக விமான நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறிற்று. “பயணிகளுக்கு ஏற்பட்ட …
14வது பொதுத் தேர்தல் மே மாதம் நடக்கலாம் : பாஸ்…
பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் சமட் , 14-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கிறார். அரசாங்கத் துறைகளிடமிருந்தும் இதர மூலங்களிலிருந்தும் கிடைத்த தகவல்களைக் கொண்டு அவர் அவ்வாறு நினைக்கிறார். “பல்வேறு கூட்டரசு அரசாங்கத் திட்டங்களின் அமலாக்கத்தைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட திட்டங்கள் தேர்தல் …
மெக்சிகோ பட்டாசுச் சந்தையில் பயங்கர வெடிப்பில் குறைந்தது 27பேர் பலி
நேற்று மெக்ஸிக்கோ பட்டாசு சந்தை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில குறைந்தது 29 பேர் பலியானதாகவும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அது, மெக்சிகோ நகருக்கு 32கிலோ மீட்டர் தொலைவில் துல்டெபெக்கில் உள்ள சென் ப்பளிடோ சந்தையில் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள மூன்றாவது வெடிப்பாகும். வெடிப்பு நிகழ்ந்த …
சிவப்புச் சட்டைக்குப் பதிலாக வெறும் துண்டுடன் தண்ணீர் தடைக்கு எதிராக…
சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனூஸ், வழக்கமாக அணியும் சிவப்புச் சட்டைக்குப் பதிலாக கட்டிய துண்டோடு சிலாங்கூரில் நீர் விநியோகத் தடைக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். இன்று காலை ஜாமால் 15 ஆதரவாளர்களுடன் ஷா ஆலம் மந்திரி பெசார் அலுவலகம் சென்று வீட்டில் குளிப்பதற்குத் …
2017-இல் பெட்ரோனாஸ் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும்
ஓபெக் நாடுகளும் ஓபெக்கில் இடம்பெறாத நாடுகளும் அண்மையில் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு ஏற்ப மலேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் 2017-இல் அதன் எண்ணெய் உற்பத்தில் நாளொன்றுக்கு 20,000 பீப்பாய்களைக் குறைக்கும். “2017 ஜனவரியிலிருந்து பெட்ரோனாஸ் மலேசியாவின் எண்ணெய் உற்பத்தியில் தானே முன்வந்து ஒரு திருத்தம் செய்யும்”, என அந்நிறுவனத்தின் அறிக்கை …
பொய்யான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளாவிட்டால் வழக்கு தொடுப்பேன்: ஆர்பிகே-க்கு மூசா எச்சரிக்கை
அன்வார் இப்ராகிமைச் சிறையிடுவதற்குத் தீட்டப்பட்ட சதித் திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாய் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின் கூறியுள்ள குற்றச்ச்சாட்டை மீட்டுக்கொள்ளாவிட்டால் அவர்மீது அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாக தேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் மூசா ஹசான் மிரட்டியுள்ளார். அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று மூசா கூறினார்.…
நாட்டுக்கு மேலும் கேடு விளைவிப்பதலிருந்து நஜிப்பை நிறுத்த வேண்டியிருப்பதால் பேரப்பிள்ளைகளுடன்…
வயதானவர்கள் செய்ய வேண்டியதை ஏன் தாம் செய்யவில்லை என்பதை முன்னாள் பிரதமர் மகாதிர் விளக்கினார். மகாதிரும் கிட் சியாங்கும் தங்களுடய பேரப்பிள்ளைகளுடன் விளையாடி காலத்தைக் கழிக்க வேண்டும் என்று அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறியிருந்தார். 90 வயதானவர் பேரப்பிள்ளைகளுடன் விளையாட்டிக் கொண்டு அடுத்த உலகத்திற்குச் செல்வதற்குத்…
உங்கள் அரசியல் வாழ்க்கையைப் பார்க்காதீர்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்: எதிரணிக்கு ஜைட்…
அரசியல்வாதிகள் நாட்டைக் காக்க முற்பட வேண்டுமே தவிர தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் கூறினார். “எல்லாருக்கும் பிரதமராக வேண்டும், துணைப் பிரதமராக வேண்டும் என்று ஆசைதான். ஆனால், நீங்கள் நாட்டைப் பற்றிக் கவலைப்படுவராக இருந்தால், உங்கள் பேரப் …
தப்பாக சொல்லியிருந்தால் என்மீது வழக்கு தொடுக்கலாம்: பிரதமருக்கு ரபிசி சவால்
பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி, எம்ஆர்டி திட்டச் செலவு குறித்து தாம் சொல்லியதில் தவறிருந்தால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மீது வழக்கு தொடுக்கலாம் எனச் சவால் விடுத்துள்ளார். “150கிலோ மீட்டர் எம்ஆர்டி திட்டத்துக்கான மொத்த செலவு ரிம100பில்லியனைத் தாண்டாது என்றால் நஜிப் ஏழு நாள்களுக்குள் என்மீது …


