பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைத் தொடர்ந்து பெற்றிருக்கும் வரையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை என்று DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை…
ஸுனார்: என் நூலுக்குத் தடை விதிக்கலாம்; சிந்தனைகளைத் தடுக்க முடியாது
சிறைக்குள் தள்ளப்படும் அபாயமிருந்தாலும் அதைக் கண்டு அஞ்சுபவரல்ல அரசியல் கேலிச்சித்திர ஓவியர் சுல்கிப்ளி அன்வார் அல்ஹாக். ஸுனார் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அக்கேலிச்சித்திர ஓவியர், “ஊழலையும் அநீதியையும் அம்பலப்படுத்தும்” பொறுப்பு தமக்குண்டு என்கிறார். “கலைத்திறன் என்பது ஒரு அருட்கொடையல்ல. அது ஒரு பொறுப்பு. சிறைசெல்ல அச்சமா என்று …
கிறிஸ்மஸுக்குமுன் குடிநீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பும்: சிலாங்கூர் எம்பி உத்தரவாதம்
சிலாங்கூரில் பல நீர் சுத்திகரிப்பு ஆலைகளையும் பாதிக்கக்கூடிய தெனாக நேசல் பெர்ஹாட்(டிஎன்பி)டின் மின் நிலைய பராமரிப்பு வேலைகளை செப்டம்பர் மாதத்திலேயே செய்திருக்க வேண்டும் ஆனால், மாநில அரசுதான் பராமரிப்பு வேலைகளைத் தாமதப்படுத்தும்படி கேட்டுக்கொண்டது என்பதை மந்திரி புசார் அஸ்மின் அலி ஒப்புக்கொண்டார். அப்படித் தாமதப்படுத்தப்பட்ட வேலைகளை இந்த வாரம் …
‘சீக்கிய சமயம் இஸ்லாத்திலிருந்து வந்ததாகக் கூறும் ஆசிரியரை விசாரிக்க வேண்டும்’
‘யூத மதம், கிறித்தவம், இந்து ,பெளத்த சமயங்கள் இஸ்லாத்திலிருந்து வந்தவையா?’ என்ற நூலில் பிழைகள் மலிந்திருப்பதால் நூலாசிரியர் அஹ்மட் இஹ்ராம் முகம்மட் நூரைப் போலீசார் விசாரிக்க வேண்டும் என மலேசிய தேசிய சீக்கியர் இயக்கம் விரும்புவதாக அதன் தலைமைச் செயலாளர் அமர்ஜிட் சிங் கில் கூறினார். “தலைப்பே தப்பு. …
ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 திருத்தங்களுக்கு பின் பங்களிக்கட்சிகள் ஆட்சேபிக்க…
ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் பரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) திருத்தங்கள் மசோதாவை பெடரல் அரசாங்கம் எடுத்துக் கொண்ட பின்னர் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகள் அத்திருத்தங்களுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. ஆளும் கூட்டணியின் பங்காளிகள் என்ற முறையில் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகள் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும்…
போலீஸ் அதிரடி நடவடிக்கைகளால் ரிம51,000 இழப்பு, ஸூனார் நன்கொடை கேட்கிறார்
போலீசார் மேற்கொண்ட அதிரடி பறிமுதல் நடவடிக்கைகளால் அரசியல் சித்திரக் கலைஞர் ஸூனார் ரிம51,000 மதிப்புள்ள அவரது சித்திரங்களை இழந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு, பினாங்கில் அவர் நடத்திய கண்காட்சியில் ரிம21,000 மதிப்புள்ள கலைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிதி திரட்டல் நிகழ்ச்சியில்…
“காக் வான் இடைப்பட்ட காலத்திற்கு பிரதமர்”, சிரித்து ஒதுக்கித்தள்ளினார் மாட்ஸிர்
பக்கத்தான் ஹரப்பான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இடைக்காலத்திற்கு பிரதமராக பதவி வகிக்கலாம் என்ற முன்மொழிதலை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மாட்ஸிர் காலிட் ஓர் "அரசியல் நகைச்சுவை" என்று வர்ணித்தார். லிம் கிட் சியாங் இந்த ஆலேசனையை…
சிறார் ஒருதலைப்பட்ச மத மாற்ற சட்டத் திருத்தத்தை மாற்றுவதற்கு மசீச…
பெர்லிஸ் மாநில அரசு இயற்றியுள்ள சிறார் ஒருதலைப்பட்ச மத மாற்ற சட்டத் திருத்தத்தை மாற்றுவதற்கு மசீச அம்மாநில மந்திரி புசாரின் ஆதரவை நாட வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார். இச்சட்டத் திருத்தம் பெர்லிஸ் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து விவாதிக்காமலும்…
ரபிசி: எம்ஆர்டி திட்டச் செலவு குறித்த என் அச்சத்தைப் பிரதமர்…
எம்ஆர்டி திட்டத்துக்கான மொத்த செலவு ரிம100 பில்லியனைத் தாண்டலாம் என்று தான் கொண்டிருந்த அச்சத்தைப் பிரதமர் தம்மை அறியாமலேயே உறுதிப்படுத்தி விட்டார் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார். “நேற்றிரவிலிருந்து அம்னோ இணையத்தள பிரச்சாரக் குழுக்கள் எம்ஆர்டி-இன் உண்மையான செலவு ரிம21 பில்லியன் மட்டுமே என்றும் …
இவ்வாண்டு 14 பயங்கரவாதத் தாக்குதல்களை போலீஸ் தடுத்து நிறுத்தியது
மலேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் அபாயம் இருப்பதை நம்மில் பலர் உணர்வதில்லை. நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலவுகிறது. நம் அன்றாடப் பணிகளைத் தாராளமாக செய்ய முடிகிறது. அதனால் அந்த அபாயத்தை நாம் உணர்வதில்லை. ஒரே ஒரு தடவை, ஜூன் 28-இல், பூச்சோங் கேளிக்கை விடுதி ஒன்றில் கை எறிகுண்டு …
இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ணாதீர்: கெராக்கானுக்கு சைட் அலி எச்சரிக்கை
பூமிபுத்ராக்களின் சிறப்புச் சலுகைகள் பற்றி விவரிக்கும் அரசமைப்பின் 153ஆவது சட்டப் பிரிவு குறித்து கெராக்கான் கட்சியின் எண்டி யோங் கேள்வி எழுப்புவது இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ணி விடலாம் என செராஸ் அம்னோ தலைவர் சைட் அலி அல்ஹப்ஷி எச்சரித்தார். “அது ஆபத்தான பேச்சு, தேசநிந்தனை செய்வது போலவும் தோன்றும் …
கிள்ளான் பள்ளத்தாக்கில் டிசம். 19-இலிருந்து 24 வரை நீர் விநியோகத்…
டிசம்பர் 19-இலிருந்து 24 வரை, கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் என ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது. ஹுலு சிலாங்கூரில் மின்விநியோகத் துணை நிலையமொன்றில் தெனாகா நேசனல் பராமரிப்பு வேலைகள் செய்வதால் பெட்டாலிங் கிள்ளான்/ஷா ஆலம், கோம்பாக், கோலா லங்காட், …
மலாய்க்காரர்கள் அன்வார் அல்லது ஹாடியை விட மகாதிர் அடுத்தப் பிரதமர்…
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகிய இருவரையும் விட மகாதிர் முகம்மட் மீண்டும் பிரதமர் ஆவதை மலாய்க்காரர்கள் விரும்புகின்றனர் என்பது இன்ஸ்டிடுட் டாருல் ஏசான் (ஐடிஇ) மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வின்படி, 29 விழுக்காட்டு…
சரவாக் ரிபோர்ட் ஆசிரியருக்கு சட்டரீதியான நோட்டீஸ் பாஸ் அனுப்பியுள்ளது
பிரதமர் நஜிப்பிடமிருந்து ரிம90 மில்லியனை பாஸ் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது என்று சரவாக் ரிபோர்ட்டின் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரௌன் கூறிக்கொண்டதற்காக அவருக்கு சட்டரீதியான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் கூறினார். அக்கடிதம் கடந்த செவ்வாய்க்கிழமை ரியுகாசலின் லண்டன் முகவரில் சார்பு செய்யப்பட்டது. பாஸ் அனுப்பியுள்ள…
இன்னொரு ரோஹிங்யா ஒற்றுமை பேரணி சிலாங்கூரில் நடத்தப்படும்
பெரிய அளவிலான ரோஹிங்யா ஒற்றுமை பேரணி டிசம்பர் 4 இல் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் பாஸ் தலைவர் அப்டுல் ஹாடி அவாங் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது. அது போன்ற இன்னொரு ரோஹிங்யா ஒற்றுமை பேரணி சிலாங்கூர் மாநிலத்தில் நடத்தப்படவிருக்கிறது என்று சிலாங்கூர் மனிதநேய நிதி நிறுவனர்…
பிகேஆர், அமனா இணைப்பு யோசனை நிராகரிப்பு
பிகேஆரையும் அமனாவையும் சேர்ந்த உயர்த் தலைவர்கள் இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பரிந்துரையைப் புறந் தள்ளினர். பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின் முன்வைத்த அப்பரிந்துரை குறித்துக் கருத்துரைத்த கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், இணைப்புக்கு “இன்னும் காலம் கனியவில்லை” என்றார். “அபிப்புக்குப் பரிந்துரைக்க உரிமை …
‘கொலை செய்ததை ’ ஒப்புக்கொண்ட டுடெர்ட்டேமீது குற்றச்சாட்டு கொண்டுவரப்படுமா?
டாவோ சிட்டி மேயராக இருந்த போது, ‘சொந்தக் கைகளால்’ குற்றவாளிகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டேமீது குற்றஞ்சாட்டப்படும் அபாயமிருப்பதாக பிலிப்பீன்ஸ் செனட்டர்கள் இருவர் தெரிவித்தனர். திங்கள்கிழமை மணிலாவில் வணிகர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய டுடெர்ட்டே, டாவோ சிட்டியின் மேயராக இருந்த போது குற்றவாளிகளைக் …
ரோஹின்யா பேரணியில் கொதித்தெழுந்த பாஸ் இப்போது வாயை மூடிக் கொண்டிருப்பது…
பாஸ் இளைஞர் பகுதித் தலைவர் நிக் அப்டு நிக் மாட் எங்கு போனார் என்று வினவுகிறார் அமனா இளைஞர் துணைத் தலைவர் பயிஸ் பாட்சில். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் போன்ற தலைவர்கள் கலந்துகொண்ட ரோஹின்யா ஒற்றுமைப் பேரணி முடிந்து ஒரு …
எக்ஸ்போ மிலானோவில் பிரதமரின் படம் அகற்றப்படவில்லை
கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற எக்ஸ்போ மிலானோவில் மலேசிய காட்சிக்கூடத்திலிருந்து பிரதமர் நஜிப் ரசாக்கின் படம் அகற்றப்பட்டது என்று கூறப்படுவதை அனைத்துலைக வாணிப மற்றும் தொழில் அமைச்சும் மலேசிய வெளிநாடு வாணிக மேம்பாட்டு கோர்புரேசனும் (மாடிரேட்) மறுத்துள்ளன. இன்று அமைச்சும் மாடிரேட்டும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் பிரதமரின் படம்…
ஹராபான் -பெர்சத்து உடன்பாட்டுக்கு அன்வார் வரவேற்பு
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) பக்கத்தான் ஹராபானுடன் ஒத்துழைக்க உடன்பாடு கண்டிருப்பதை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் வரவேற்றார். இனி, அதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார். நேற்று பெர்சத்து பக்கத்தான் ஹராபானில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளுடனும் தேர்தல் கூட்டணி …
ரொஹின்யா விவகாரம்மீது அவசரக் கூட்டத்துக்கு ஓஐசி அறைகூவல்
இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு நிறுவனம் (ஓஐசி) மியான்மாரில் ரொஹின்யா விவகாரம் குறித்து அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஓஐசி தலைமைச் செயலாளர் யூசுப் அல்- ஒதைமின், “ரொஹின்யா சமூகத்தின் மனித உரிமைகள் ஒடுக்குப்படுவதையும் மீறப்படுவதையும்” கண்டித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “அனைத்துலகச் சமூகத்தில் உறுப்பு …
‘ஒரே சீனா’ கொள்கையில் குறுக்கீடு அமைதியைக் கெடுக்கும்: சீனா எச்சரிக்கை
சீனாவின் தைவான் விவகார அலுவலகம், “ஒரே சீனா” கொள்கையில் மாற்றம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அது தைவான் நீரிணையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கெடுக்கும் என்று எச்சரித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் ட்ரம்ப் தைவான் அதிபர் ட்சாய் இங்-வென்னுடன் தொலைபேசி வழி பேசியதற்கே ஆத்திரங் கொண்டிருக்கும் சீனா, …
ஆய்வாளர்கள்: ஹராபான் -பெர்சத்து உடன்பாடு வெற்றிபெற பாஸின் உதவியும் தேவை
பக்கத்தான் ஹராபானும் பார்டி பிரிபூமி பெர்சத்து(பெர்சத்து)வும் அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்னைத் தோற்கடிக்க விரும்பினால் அவை பாஸ் கட்சியையும் தங்களுடன் சேர்த்துக்கொள்வதே உசிதமாகும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. “பாஸின்றி அவற்றுக்கு(பிஎன்னை எதிர்ப்பது) கடினமாக இருக்கும்”, என யுனிவர்சிடி மலேசியா சரவாக் விரிவுரையாளர் ஜெனிரி அமிர் கூறினார். பாஸைச் …
2016 ஜனவரி- செப்டம்பரில் ரிம150.8 பில்லியன் முதலீடு
மலேசியாவில் 2016 ஜனவரிக்கும் செப்டம்பருக்குமிடையில் தயாரிப்பு, சேவை, மூலப் பொருள் துறைகளில் மொத்தம் ரிம150 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் செய்யப்பட்ட ரிம156.6 பில்லியன் முதலீட்டுடன் ஒப்பிட்டால் இது 3.7 விழுக்காடு குறைவுதான் என்றாலும் இது 117,550 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என வர்த்தக, …


