சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சி சீராகப் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார் இப்ராஹிம், சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது அதன் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் என்றும் எச்சரித்தார். சட்டங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு அடிப்படைக் கொள்கையாக இது நீடிக்கிறது என்று பிரதமர் கூறினார். சர்வதேச உறவுகளில்…
குட் ஸ்டார் நிறுவனம் பெட்ரோசவூதிக்குச் சொந்தமானதே: அரசாங்கம் திட்டவட்டம்
அரசாங்கம் 1எம்டிபி-இலிருந்து யுஎஸ்1.03 பில்லியனைப் பெற்றுக்கொண்ட குட் ஸ்டார் லிமிடெட் நிறுவனம் பெட்ரோசவூதிக்குச் சொந்தமானதுதான் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது. பொதுக் கணக்குக்குழு உறுப்பினர் டோனி புவா, குட் ஸ்டார் நிறுவனம் பெட்ரோசவூதியுடன் தொடர்பில்லாத தனிநபர் ஒருவருக்குச் சொந்தமானது என்பது பேங்க் நெகாரா விசாரணைகளில் தெரிய வந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பின்னரும் …
எஸ்ஆர்சி பணம் பற்றிக் கேள்வி எழுப்புவதே நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் பற்றி அறிவாரா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த அரசாங்கம் அது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட்டிலிருந்து ரிம42 மில்லியன் நஜிப்பின் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டது பற்றி எதிரணி நாடாளுமன்ற …
எம்எசிசி: குவான் எங் மீதான விசாரணை முடிவுற்றது, வழக்குத் தொடர்வதா…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான விசாரணையை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) முடித்துக்கொண்டு விட்டதாகவும் அதன் விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவரிடம் (ஏஜி) தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது. குவான் எங்கிற்கு எதிரான எந்த விசாரணை…
‘நஜிப் ரிம2.6 பில்லியன் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை’
அரசியல் நன்கொடையாகப் பெற்ற ரிம2.6 பில்லியன் பற்றி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனச் சுற்றுலா, பண்பாட்டுத் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார். வெளிநாட்டிலிருந்து பெருந் தொகை நாட்டுக்குள் வருவதை பேங்க் நெகாராவிடம் மட்டுமே அவர் தெரிவிக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற …
கடிதக் கசிவால் அன்வாரின் வெளியுலகத் தொடர்பு முடக்கம்
அன்வார் இப்ராகிம் எழுதிய கடிதமொன்று வெளியானதை அடுத்து அவரது வெளியுலகத் தொடர்புகள் முடக்கிப்போடப்பட்டிருப்பதாக அவரின் மகளும் பிகேஆர் உதவித் தலைவருமான நுரூல் இஸ்ஸா அன்வார் கூறினார். கடிதம் கசிந்ததை அடுத்து குடும்பத்தினர்கூட அவரைச் சந்திப்பதற்குச் சிரமப்படுவதாக அவர் சொன்னார். “வழக்குரைஞர்களும் அவரைச் சந்திக்க சிரமப்படுகிறார்கள். தந்தைச் சந்தித்து அவரிடம் …
பேங்க் நெகாராவிடம் அபராதம் செலுத்திய 1எம்டிபி அபராதத் தொகை எவ்வளவு…
இன்று 1எம்டிபி, விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக பேங்க் நெகாரா விதித்த அபராதத்தை மத்திய வங்கியில் செலுத்தியது. “1எம்டிபி பேங்க் நெகாராவின் முடிவுக்கிணங்க அதற்கு விதிக்கப்பட்ட அபராதம் முழுவதையும் இன்று செலுத்தியது என்பதை இதன்வழி உறுதிப்படுத்துகிறோம்”, என அந்நிறுவனம் இன்று ஓர் அறிக்கையில் கூறியது. ஆனால், அபராதத் தொகை எவ்வளவு என்பதை …
நஜிப்: 1எம்டிபி நிர்வாகத்திலும் கணக்கிலும் முறைகேடுகள் இல்லை
1எம்டிபி-இன் கணக்குகளிலும் நிர்வாகத்திலும் முறைகேடுகள் நிகழ்ந்ததில்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். “பிஏசி (பொதுக் கணக்குக்குழு) 1எம்டிபி கணக்குகளிலும் நிர்வாகத்திலும் முறைகேடுகள் நிகழ்ந்ததில்லை என்று கூறியுள்ளது. அதில் சீர்கேடுகளும் இல்லை. “நிறுவனத்தின் நிர்வாகம் மட்டுமே பலவீனப்பட்டிருந்தது”, என நஜிப் (பொக்கோக் சேனா, எம்பி)…
அன்வாருக்கு ரிம200,000 இழப்பீடு கொடுக்க நீதிமன்றம் உத்துசானுக்கு உததரவு
அவதூறு வழக்கு தொடர்பில் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரிம200,000 கொடுக்குமாறும் உத்தரவிட்டது. உத்துசானின் வழக்குரைஞர் முன்வைத்த வாதங்களை ஏற்பதற்கில்லை என்று நீதிபதி பிரசாத் சந்தோசம் தம் தீர்ப்பில் கூறினார். உத்துசான் …
காலிட்: இடைத் தேர்தல் வேட்பாளர்கள் அமனாவின் பிரதிநிதிகளாக இருப்பதற்கு பிகேஆர்…
எதிர்வரும் இடைத் தேர்தல்களில் அவ்விரு தொகுதிகளிலும் பாஸ் அதன் வேட்பாளர்களை நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், அமனா அதன் வேட்பாளர்களை களமிறக்குவதற்கு பிகேஆர் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று பார்டி அமனா நெகாரா (அமனா)வின் தொடர்புத்துறை இயக்குனர் காலிட் சாமாட் கூறுகிறார். சுங்கை புசார் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து பாஸ்…
இன்றைய பிகேஆர் கூட்டத்தில் ரபிசியின் பதவி பறிக்கப்படுமா?
இன்று பிகேஆரின் அரசியல் பிரிவு கூடும்போது தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லியை மாற்றும்படி கோரிக்கை விடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு சர்ச்சைக்குரிய விவகாரங்கள்தாம் இதற்குக் காரணங்களாகும். ஒன்று சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கடிதம் அம்பலப்படுத்தப்பட்டது இன்னொன்று ஒரு வாட்ஸெப் உரையாடல். வெளியில் கசிந்த …
1எம்டிபி-யுடன் தொடர்புடைய வங்கியை மூடும்படி சிங்கப்பூர் உத்தரவு
சிங்கப்பூர் நாணய ஆணையம் 1எம்டிபி-யுடன் தொடர்புள்ள பிஎஸ்ஐ பேங்கை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. அந்த சுவீஸ் வங்கி சிங்கப்பூரில் ஒரு வர்த்தக வங்கியாக செயல்பட கொடுக்கப்பட்ட அனுமதியை சிங்கப்பூர் மத்திய வங்கி மீட்டுக் கொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் அறிவித்தது. வங்கி மூடப்படுவதற்குப் பணச் சலவைக் கட்டுப்பாடு மீறல், வங்கி நடவடிக்கைகளில் மேலாண்மைக் …
கிட் சியாங்: ரிம2.6 பில்லியன் தொடர்பாக பிரதமர் பேங்க் நெகாரா…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2013-இல் ரிம2.6 பில்லியன் நன்கொடையைப் பெற்றுக்கொள்ள முன்னாள் பேங்க் நெகாரா ஆளுனர் ஸெட்டி அக்தார் அசீஸ் அவருக்கு அனுமதி அளித்திருந்தார் என்று சிறப்பு விவகாரத் துறை (ஜாசா) இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி கூறியிருப்பதை டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் …
1எம்டிபி தொடர்புடைய குற்றங்களுக்காக BSI SA வங்கிமீது சுவிட்சர்லாந்து நடவடிக்கை
சுவிட்சர்லாந்தின் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (ஓஏஜி), 1எம்டிபி தொடர்புடைய குற்றச்செயல்கள் நிகழ்வதைத் தடுக்காத BSI SA வங்கிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. “BSI SA வங்கியில் உள்ளுக்குள் சில குறைபாடுகள் இருக்கலாம் என ஓஏஜி சந்தேகிக்கிறது. “இக்குறைபாடுகளின் காரணமாக இப்போது விசாரிக்கப்பட்டு வரும் 1எம்டிபி தொடர்புடைய குற்றச்செயல்கள் …
இடைத் தேர்தலில் அமானாவை ஆதரிக்கிறது சிலாங்கூர் டிஏபி
சுங்கை புசார் இடைத் தேர்தலில் பார்டி அமானா நெகாரா போட்டியிடுவதையே சிலாங்கூர் டிஏபி ஆதரிக்கிறது. பாஸ் அங்கு போட்டியிட்டால் அதன் அடிநிலை உறுப்பினர்கள் பிஎன்னுக்கு வாக்களிக்கக் கூடும். . எனவே, அங்கு பக்கத்தான் ஹராபான் பாஸுக்கும் பிஎன்னுக்கும் எதிராக அதன் வேட்பாளரை களமிறக்கத்தான் வேண்டும். அதனால் அங்கு மும்முனைப் …
நஜிப்: Aabar BVI நிறுவனத்துக்கு யுஎஸ்$3.5 பில்லியனை மாற்றிவிடும் ஆவணத்தில்…
1எம்டிபி, இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனியின்(ஐபிஐசி) துணை நிறுவனம் என்று நம்பி பிரிட்டிஷ் வர்ஜின் தீவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு யுஎஸ்$3.5 பில்லியன் அனுப்பப்பட்டதில் தாம் சம்பந்தப்படவில்லை என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறைமுகமாக உணர்த்தியுள்ளார். பணத்தை மாற்றிவிட தம் கையெழுத்து தேவையில்லை என்றாரவர். “உங்கள் தகவலுக்கு, …
பெருந்தலைவர் நஜிப்பை வானளவப் புகழப் போகிறேன், மகாதீர் சூளுரைக்கிறார்
தாம் வெளிநாட்டில் இருக்கையில் பிரதமர் நஜிப் ரசாக்கை புகழ்ந்து பேசப் போவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சூளுரைத்துள்ளார். "நான் வெளிநாட்டில் இருக்கையில், நஜிப்பையும் அவரது ரிம2.6 மில்லியன் கணக்கு பற்றியும் வானளவாகப் புகழ்வதின் மூலம் முன்னுதாரணத்தை உண்டாக்குவேன். "நான் வெளிநாட்டில் ஆற்றும் எந்த உரையிலும்,…
பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் நேரம் இருக்கிறது, வான் அசிஸா…
எதிர்வரும் இடைத் தேர்தல்கள் சம்பந்தமாக பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் இடமிருக்கிறது என்று பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகிறார். பாஸ் அதன் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காது. ஆகவே இது குறித்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பிகேஆரை அமனா கேட்டுக்கொண்டிருந்தது குறித்து…
நாடற்ற பிள்ளைகளுக்காக சட்டத் திருத்தம் தேவையில்லை-ஜாஹிட்
நாடற்ற பிள்ளைகள் விவகாரத்துக்காக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஜிட் ஹமிடி கூறினார். கூட்டரசு அரசமைப்பு குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளைத் தெளிவாகவே எடுத்துரைக்கிறது என்றாரவர். “மலேசியாவில் பிறக்கும் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர் அவர்களின் நாடுகளிடம்தான் பயணப் பத்திரங்களுக்கும் அடையாள ஆவணங்களுக்கும் விண்ணப்பித்துக் …
இடைத் தேர்தலை வைத்து அஸ்மினுக்குக் குழிபறிக்கும் வேலை நடக்கும்: அம்னோ…
சுங்கை புசார் இடைத் தேர்தலை வைத்து சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலிக்குக் குழிபறிக்கும் முயற்சிகளும் நடக்கலாம் என அம்னோ சட்டமன்ற உறுப்பினர் சாடியா பொஹான் ஆருடம் கூறியுள்ளார். பிகேஆர் துணைத் தலைவரான அஸ்மின் அலியை மட்டம் தட்டுவதற்காக பிகேஆரிலும் பக்கத்தான் ஹராபானிலுமுள்ள அவரின் எதிரிகள் முயல்வார்கள் என்றாரவர்.…
மகாதிர் குறித்து கடிதம் எழுதியது உண்மையே: ஒப்பினார் அன்வார்
டாக்டர் மகாதிருடன் இணைந்து பணியாற்றும் பிகேஆர் தலைவர்கள் கட்சியின் அடிப்படை நோக்கத்தைவிட்டு அதாவது மக்களுக்காக போராடும் நோக்கத்திலிருந்து விலகிச் சென்று விடக் கூடாது என்பதைச் சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நினைவுறுத்தினார். ஒரு சலசலப்பை ஏற்படுத்திய தம் கடிதம் பற்றி விளக்கிய அன்வார், குடிமக்கள் …
டூரிசம் மலேசியா தலைவர் விடாமல் தொல்லை தருகிறார்: டோனி பெர்னாண்டஸ்…
ஏர் ஏசியாவின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் அச்சிக்கனப் பயண விமான நிறுவனத்துக்குத் தொடர்ந்து தொல்லை தரும் டூரிசம் மலேசியா நிறுவனத்தின் தலைவர் வீ சூ கியோங்கைச் சாடினார். கடந்த வெள்ளிக்கிழமை பெய்ஜிங் அனைத்துலக சுற்றுலா கண்காட்சியில் வீ சினமடைந்த நிலையில் மலேசிய கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஏர் ஏசியா தோரணம்…
வழக்குரைஞர்: திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஊராட்சி மன்றங்கள்மீது வழக்கு தொடுக்கலாம்
அண்மையில் கோலாலும்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கலாம் என வழக்குரைஞர் ஷாரெட்சான் ஜொஹான் கூறினார். ஆனால், வழக்கு தொடுப்பவர்கள் மாநரரட்சி மன்ற அதிகாரிகளின் கவனக்குறைவுதான் வெள்ளம் ஏற்பட காரணம் என்பதற்கு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். “உதாரணத்துக்கு பொறியியல் நிபுணர்களைச் …
ரஹிம் தம்பி சிக் மீதான நிந்தனை வழக்கு: செப்டம்பர் 20-இல்…
முன்னாள் மலாக்கா முதலைமைச்சர் ரஹிம் தம்பி சிக் மீதான தேச நிந்தனை வழக்கு செப்டம்பர் 20இல் விசாரிக்கப்படும் என ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அறிவித்தது. சிலாங்கூர் ராஜா மூடா மதம் மாறினார் எனத் தம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுருந்ததற்காக அப்துல் ரஹிம் சிக் மீது தேச …


