இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஓர் உலக மகா மோசடி! ராமதாஸ்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஓர் உலக மகா மோசடி என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற நாடகம் ரூ. 100 கோடி செலவில் திட்டமிடப்பட்டு ரூ.200 கோடி செலவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இம்மாநாட்டில் தமிழ்நாட்டில்…
காவிரி நீரை வழங்காவிட்டால் ஆணை பிறப்பிக்க நேரிடும்… கர்நாடகத்திற்கு பொன்…
தஞ்சை : காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காவிட்டால், மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் இருந்து தமிழகம் கூடுதல் தண்ணீர் கேட்கவில்லை என்றும், இறுதித் தீர்ப்பின்படி…
புகழ்பெற்ற நடிகர்கள் வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழக கிராமங்களை தத்தெடுக்க…
தமிழ் மொழியாலும், தமிழக திரைப்படத்துறையாலும் புகழ்பெற்ற நடிகர்கள் வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் வளர்ச்சிக்கு ஆதாராமாக இருந்த தமிழக கிராமங்களைத் தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் நடிகர்…
அரசு காரின் பதிவு எண் தமிழில் இருந்ததால் சுங்கச் சாவடியில்…
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் சேகர் மற்றும் சேலத்தில் உள்ள மண்டல துணை இயக்குனர் செழியன் ஆகிய இருவரும், செழியனுக்கு தனக்கு அரசு வழங்கிய, "தநா…
மொழியை காப்பாற்றினால் தான் தமிழர்களுக்கு மரியாதை: ஆட்சி மொழி பயிலரங்கத்தில்…
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஈரோட்டில், ஆட்சி மொழி பயிலரங்கம் நேற்று துவங்கியது. மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சந்திரா வரவேற்றார். இயக்குனர் சேகர், மண்டல துணை இயக்குனர் சேகர், உதவி இயக்குனர் குமார் ஆகியோர் பேசினர். கடந்த, 2013-ம் ஆண்டு ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தில்,…
தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் வேண்டும்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து
தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: தமிழ் இலக்கணத்தில் கீழ்க்கண்ட மாற்றங்களை கொண்டுவரலாம். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். கருத்துக்களை வரவேற்கிறேன். 1. உயிரெழுத்துக்களை இந்த வரிசையில் மாற்றி அமைக்கலாம். – அ, ஆ, இ, ஈ,…
தமிழகத்தில் செய்யப்படும் முதலீடு லாபமானதாக இருக்கும் என முதல்வர் ஜெயலலிதா…
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. 2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் பிரதிநிதிகளும், வெளிநாட்டில் இருந்து 1000 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்தார்.பின்னர்…
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான இணைய யுத்தத்தில் இந்தியாவுடன் கை கோர்க்கும்…
டெல்லி: உலகின் மிக கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக இந்தியாவுடன் ரஷ்யா கை கோர்க்க இருக்கிறது. உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த இயக்கத்தில் இணைந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்தாலும் அந்த இயக்கம் இங்கே…
காந்தியை சுட பயன்படுத்திய இத்தாலி பிஸ்டலை கொடுத்தது யார் ?
புதுடில்லி: தேச பிதா காந்தியை சுடப் பயன்படுத்திய இத்தாலி நாட்டு பெரட்டா பிஸ்டல், இந்தியாவுக்குள் வந்தது எப்படி என்றும் அது குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை என்றும் பா.ஜ, தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளளார். காந்தி கொலை குறித்து மீண்டும் விசாரிக்க முறையிடுவேன் என்றும் கூறியுள்ளார் .பா.ஜ, தலைவர்களில்…
முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு ஆய்வு: கேரளத்துக்கு மத்திய அரசு…
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு கடந்த ஆண்டு டிசம்பரில் அளித்த அனுமதியை தேசிய விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால், புதிய அணை கட்டும் அந்த மாநில அரசின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையிலான வழக்கு…
சர்வதேச விசாரணை கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஒரு…
இந்திய அரசே! இலங்கை மீதான போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பு தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றவும் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா.வி.ல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர கோரியும் செப்டம்பர் 21-ஆம் நாள் திங்கள்கிழமையன்று காலை…
காவலர்களைத் தாக்கினால் செம்மரக் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்
நெல்லூர்: காவலர்களைத் தாக்கினால் செம்மரக் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என ஆந்திர டிஜிபி ராமுடு எச்சரித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆந்திர காவல்துறை டிஜிபி ராமுடு. அப்போது அவர் கூறியதாவது:- திருமலை, சேஷாசல வனப் பகுதிகள் செம்மரங்கள் நிறைந்தவை. இந்த வனப் பகுதிக்குள்…
மீண்டும் சகாயத்திற்கு கொலை மிரட்டல்… ஆவணங்களையும் அழிக்க சதி… போலீஸ்…
மதுரை: மதுரை கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. அவரது குழு தயாரிக்கும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பான அறிக்கையையும் எரிக்கப் போவதாகவும் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, மதுரை கிரானைட் குவாரி முறைகேடுகள்…
சங்க கால பானைகள், உறைகிணறுகள்! தமிழர்களின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் மத்திய தொல்பொருள் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்க கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ்வாராய்ச்சிப் பிரிவு சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் பணிகள் நடைபெறுகிறது. இந்த…
வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாகும்: ஐஎம்எஃப் தலைவர்
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாகும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவரான கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார். ஜி20 அமைப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்ட மாநாடு, துருக்கி தலைநகர் அங்காரா நகரில் நடைபெற்றது. சனிக்கிழமை நிறைவடைந்த இந்த…
கடும் போராட்டத்தின் பின் படுகொலை செய்யப்பட்ட மோகனின் உடல் ஒப்படைப்பு!
நேற்று அதிகாலை அடித்து கொல்லப்பட்ட ஈழத்தமிழர் மோகனின் உடலை உடற்கூறாய்வு செய்தும், மற்றும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் இருதரப்பில் விசாரணைக்குப் பின்னர் உடலை ஒப்படைப்பதுமாக காவல்துறை சொல்லி இருந்தது. இதனால் காலை 9 மணியளவில் தோழர்கள் ராயப்பேட்டை பிணவரையில் காத்திருந்த பின்னர் 12 மணிவரை மாஜிஸ்ட்ரேட் வருவதற்கான அறிகுறி இல்லாத…
அமெரிக்கா அரசுக்கு எதிராக கேஎப்சி (KFC) உணவு விடுதிக்குள் மனிதகழிவுகள்…
இலங்கையில் நடந்ததாக கூறும் மனித உரிமை மீறல் பற்றின விசாரணையை இலங்கையே விசாரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைபாட்டை 100 மணிநேரத்தில் திரும்ப பெற வேண்டியும் இலங்கையில் சர்வதேச சுதந்திர இனப்படுகொலை விசாரணையை கொண்டு வரவேண்டியும் கடந்த 01.09.2015 அன்று சென்னை அமெரிக்க தூதரகத்தில் மனு மற்றும் எச்சரிக்கை…
அறிமுகம் – தமிழகத்தின் நிலவியல் அமைப்புகள்
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் முன்பு, நாம் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழகம், எத்தகைய இயற்கைச் சூழலைக் கொண்டு அமைந்துள்ளது என்றும், எத்தகைய தட்பவெட்ப நிலை மாற்றங்களைப் பெற்றது எனவும், அவை எந்தெந்தக் காலங்களில் எவ்வாறெல்லாம் வேறுபட்டவை என்பதையும், நம் நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் எவ்வாறு துணை நின்றன என்பதையும்…
கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்க வலியுறுத்தல்… மீனர்வர்கள் கால வரையற்ற…
ராமேஸ்வரம் : கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அன்றாடம் மீன் பிடிக்கச் செல்லும் சுமார் 1,200 படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்சங்க…
முல்லைப் பெரியாறில் அணைகட்டும் முயற்சி மீண்டும் தொடங்கப்படும்.. கேரளா தொடர்ந்து…
டெல்லி : முல்லை பெரியாறு அணைபகுதியில் புதிய அணை கட்ட மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கேரள சுற்றுச்சூழல் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்டும் முடிவுக்கு தமிழக கஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில்…
இந்தியாவின் போர் வெறிக்கு நாங்களும் தயார்… பலத்த இழப்பை சந்திக்க…
இஸ்லாமாபாத் : இந்தியாவின் போர் வெறி மேலோங்கினால் சிறிய அல்லது நீண்ட போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அந்த போர் இந்தியாவுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தும் எனவும், அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக், எல்லையில்…
தமிழக மக்களின் தலைவிதி 110… திசைதிருப்பும் டிவி சீரியல்கள்.. அன்புமணி…
டிவி சீரியல்கள், ஊழல்களையும், நாட்டின் அவலங்களையும், திசை திருப்பி வருகிறது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில், இதுவரை, 500 முறை, 110 விதியில் அறிவித்த திட்டங்களில், வெறும், 3 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால், '110' சட்டசபை விதியல்ல; அது தமிழக மக்களின்…
இன்று முதல் சசிபெருமாள் குடும்பத்தினர் மீண்டும் தொடர் உண்ணாவிரதம்
சேலம் : மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினர் இன்று முதல் மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் மதுபான கடையை அகற்ற கோரி, கடந்த ஜுலை 31 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது செல்போன் டவரில்…


