மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
தீவிரவாதிகள் ஊடுருவலை கட்டுப்படுத்த இந்தியா- மியான்மர் உறுதி
இந்தியா - மியான்மர் எல்லையில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்துதில் இணைந்து செயல்பட இரு தரப்பு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதுதொடர்பாக, இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளிடையே மியான்மரில் நான்யான் பகுதியில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அருணாசலப் பிரதேசத்தின் சங்லாங்…
ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக…
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக, நேற்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அதிபர் செயலகம் நிராகரித்துள்ளது. ஐந்து மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக, ஊவா மாகாண…
கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 13 பெண்கள் உயிரிழப்பு! மருந்து…
சத்தீஸ்கரில் கருத்தடை செய்துக்கொண்டதால் 13 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில், தரமற்ற மருந்துகளை சப்ளை செய்ததாக தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில அரசின் சார்பாக கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இதில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட 13 பெண்கள்…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது
தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியுள்ளதால், நீர் திறப்பு வினாடிக்கு 900 கனஅடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அதற்கான பணிகள் மேற்பார்வை குழு முன்னிலையில் நடைபெற்று வருகின்றன. …
5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து!
5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாக மலையக தமிழ் எம்பியும், அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை…
இந்தியாவில் அனைவருக்கும் வீடு: மலேசிய பிரதமர் உதவிட மோடி கோரிக்கை
நைபைதா: ''இந்தியாவில், 2022க்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மலேசியா உதவ வேண்டும்,'' என, பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் நஜீப் தன் ரசாக்கிடம் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, 10 நாள் அரசுமுறைப் பயணமாக, மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய…
சீன ஊடுருவல் தீவிரமான பிரச்னை அல்ல: பாரிக்கர்
அருணாசலப் பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவுவது தீவிரமான பிரச்னை அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அவர் முதன் முறையாக தன் சொந்த மாநிலமான கோவாவுக்கு வந்தார். தலைநகர் பனாஜியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீன ஊடுருவல் என்பது ஒரு…
ராஜபக்சவின் பொது மன்னிப்பு யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது!
5 மீனவர்களையும் உடனடியாக, எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். அதற்கான வழிமுறைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். இந்நிலையில், பொது மன்னிப்பு யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன இராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மெர்சன்,…
காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு புதிய அணைகள் கட்ட கர்நாடகா…
காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு புதிய அணைகள் கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதால், வளர்ர்ச்சி காலங்களில் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக மாநில நிர்வளத்துறை அமைச்சர் பட்டேல், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார். மாண்டியா மாவட்டம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மேக்கத்தாத் என்ற இடத்தில் 48டிஎம்சி…
உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி! தருண் விஜய் எம்.பி. கோரிக்கை
உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக இல்லாதது வருத்தமளிக்கிறது என மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு கவிஞர் வைரமுத்து தலைவராக…
குடும்ப நல அறுவைச் சிகிச்சை: 11 பெண்கள் சாவு
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் குடும்ப நல சிகிச்சைக்குப் பிறகு, உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்த மாநில முதல்வர் ரமண் சிங். சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த குடும்ப நல முகாமில், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11…
ராமர் பாலம் சேதமின்றி சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற கோரிக்கை: இல.கணேசன்
ராமர்பாலம் சேதமின்றி சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். பழனிக்கு கட்சி பிரமுகர் இல்ல திருமணத்துக்கு வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கணேசன் பழனி மலைக்கோயிலுக்கு வந்துவிட்டு பின்னர் தண்டபாணி நிலையத்தில் அளித்த பேட்டியில்,…
மீனவர்களை மீட்டு வரும் முயற்சியில் மகிழ்ச்சி தரும் நிலையை இன்னும்…
இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை, இந்திய அரசிடம் ஒப்படைக்க அந்நாட்டு அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் மீனவர்களை பத்திரமாக மீட்டு வரும் முயற்சியில் மகிழ்ச்சி தரும் நிலையை இன்னும் எட்டவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சார்க்…
5 மீனவர்களை மீட்க மோடி தீவிரமாக உள்ளார்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை, நவ. 10–தூக்கு தண்டனை பெற்று இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 5 பேர் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:– தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களை வழக்குகளில்…
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஐடியா தருகிறார் மோடி
ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழ்வதற்கு ஆயுர்வேதமே சிறந்தது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 8வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆயுர்வேதம், ஒரு வாழ்க்கை முறை. ஆயுர்வேதத்துக்கான பெரிய சவாலே, அதற்கு…
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்தியாவுக்கு மாற்ற நடவடிக்கை: சு.…
இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இணங்கியுள்ளது என்று பா.ஜ.கவின் மூத்த பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதியும் பேசிக்கொண்டதற்கிணங்க இவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர் விவகாரம்…
சகாயம் ஆய்வுக் குழுவுக்கு ஆதரவாக புதிய இயக்கம் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு குறித்து சகாயம் தலைமையிலான விசாரணைக்குழு இன்னும், ஒரிரு தினங்களில் விசாரணையை தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த குழுவினருக்கு தேவையான தகவல்களை தர சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் கூட்டம் மதுரை…
அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி:2000 கி.மீ., பாய்ந்து தாக்கும்
பலசோர் : 2000 கி.மீ.,க்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையான அக்னி 2 ஏவுகணையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஓடிசா கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நிலத்தில் இருந்து நிலத்திற்கு சென்று இலக்கை தாக்கக் கூடிய…
5 மீனவர்களை விடுவிக்க இலங்கையில் நாளை மேல்முறையீடு
இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட (இடமிருந்து) அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட், வில்சன், எமர்சன். தமிழக மீனவர்கள் ஐந்து பேரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (நவ.10) மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. மேல்முறையீடு உள்ளிட்ட வழக்குச் செலவினங்களுக்காக, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு…
எல்லை அருகே உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: அருண் ஜேட்லி
அண்டை நாடுகள் தங்கள் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது போல் நமது தரப்பிலும் அவ்வாறு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். "அண்டை நாடுகள்' என்று சீனாவையே அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக,…
இந்தியப் படை மீது கருணா குற்றச்சாட்டு; புகார் வரவில்லை- இந்தியா
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர், 1980களின் இறுதியில் அமைதிக்கும் பணியில் இந்தியாவுக்குச் சென்ற இந்தியப் படையினர், தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இலங்கை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து இந்திய அரசாங்கத்திற்கு எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவு துறை…
சுத்தமான இடத்தை சுத்தப்படுத்திய அரசியல்வாதி
நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மீதே தவறு என்கிறார் சதிஸ் உபாத்யாய் இந்தியத் தலைநகர் டில்லியின் புறநகர்ப்பகுதியில் உள்ள சுத்தமான இடமொன்றில், குப்பைகளை சுத்தம் செய்வது போல நடிக்கும் அரசியல்வாதி ஒருவரின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்துவருகின்றன. காய்ந்த இலைகுலைகளை வீல்-பரோ (பொருட்களை சுமக்கும் வண்டி) ஒன்றில் பணியாளர் ஒருவர்…
பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த விடாமல் கேரளா…
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ள கேரள அரசு, அதன் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டடங்களைப் பாதுகாக்க, பல காரணங்கள் கூறி தண்ணீரை வெளியேற்ற முயன்று வருகிறது. கடந்த அக்டோர் 18ம் தேதிக்கு…