மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
5 தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமர் தலையிட வலியுறுத்துவேன்
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் நேரடியாகத் தலையிட வலியுறுத்துவேன் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தில்லியில் சாலைப் பாதுகாப்புத் திட்டம்…
பா.ஜ.க அரசும் பாராமுகமாக இருப்பது வேதனை!
மீண்டும் அவலக் குரல்கள் ஒலிக்கின்றன இராமேஸ்வரத்தில். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது இலங்கை நீதிமன்றம். அந்த ஐந்து பேரும் உண்மையிலேயே போதைப்பொருள் கடத்தியிருக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு என்ற வாதங்கள் முன்வைக்கப்படும் நிலையில்... இதை ஒரு தனி சம்பவமாக, துண்டித்துப்…
தாக்குதல் அச்சுறுத்தல்: போர்க்கப்பல்களை கடலுக்குள் அனுப்பியது இந்தியக் கடற்படை
திரும்பக் கடலுக்குள் அனுப்பப்பட்ட இந்திய கடற்படைப் போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.சுமித்ரா இந்தியாவின் கிழக்கு நகரான கொல்கத்தா துறைமுகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, துறைமுகத்திலிருந்த 2 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை மீண்டும் கடலுக்குள் அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் செயல்பாட்டு காரணங்களுக்காக கடலில் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக…
இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்களுடன் இந்தியத் தூதர் சந்திப்பு
இலங்கையில் வெலிக்கடை சிறையில் தமிழக மீனவர்களைச் சந்தித்துவிட்டு வெளியே வரும் இந்தியத் தூதர் யஷ் சின்ஹா. இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட (இடமிருந்து) அகஸ்டஸ், பிரசாத். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட (இடமிருந்து) செல்வன் லாங்கெட் லோயலோ, வில்சன், எமர்சன். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள…
ராமர் பாலத்துக்குப் பாதிப்பின்றி சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறும்: நிதின்…
மண்டபம் கடலோரக் காவல் படை அலுவலகத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. உடன், (இடமிருந்து) ராமர் பாலப் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் து.குப்புராமு, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன்,…
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகப் போர்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் “பென்டகன்’…
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத் தலைமையகம் (பென்டகன்), அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது அறிக்கைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை…
இஸ்ரேல், ஜப்பானை இந்தியா பின்பற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர்
நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் வழிமுறையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திங்கள்கிழமை தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், ஆஸ்தாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற "இளைஞர்கள் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி'யில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: உலகின் சக்தி…
கேரளத்தின் கோரிக்கை நிராகரிப்பு: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மூவர் குழு…
முல்லைப் பெரியாறு அணையில், கதவணைகள் செயல்பாடு குறித்து விவாதிக்கும் மூவர் குழுவினர். முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கும் அளவை 136 அடிக்கு குறைக்க வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழு நிராகரித்தது. முல்லைப் பெரியாறு அணையில், மூவர் கண்காணிப்புக் குழுவினர் திங்கள்கிழமை…
நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இந்தியா கலவரமடைய தேவையில்லை: சீனா
நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பல் என்பன கொழும்பு துறைமுகத்திற்கு வந்தமை தொடர்பில் இந்திய கலவரமடைய தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் வெளிநாடுகளின் துறைமுகங்களுக்கு நல்லெண்ண பயணங்களை மேற்கொள்வது வழமையான ஒன்று என சீன வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சீனாவின்…
தஞ்சை பெரிய கோவிலின் மராட்டிய அறங்காவலரை வெளியேற்றக் கோரி பேரணி!
தமிழினப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோவிலுக்கு மராத்திய பான்ஸ்லே பரம்பரை அறங்காவலரா? பான்ஸ்லேயை வெளியேற்றக் கோரி தஞ்சையில் எழுச்சிமிகுப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் சோழப் பேரரசர்கள் எழுப்பிய இதர கோயில்கள் உள்ளிட்ட 88 கோயில்களை கொண்ட…
இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி: இந்தியா…
இந்தியாவின் சுமர் உள்ளிட்ட பகுதிகளில் சீன இராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் ஊடுருவி இருந்தது. அதே நேரத்தில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 2 போர்க்கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்திய பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியிருந்த நேரத்தில், கொழும்பு துறைமுகத்தில் அந்த நாட்டு…
தமிழக மீனவர்களுக்காக வாதாட மஹிந்தவின் ஆலோசகர்: தமிழிசை
ஐந்து தமிழக மீனவர்களின் அப்பீல் மனுவுக்காக ஆஜராக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சவின் சட்ட ஆலோசகரான அனில் சில்வா என்பவரே வக்கீலாக ஆஜராகப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5…
ஊழல் வாதிகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் : பட்நாவிஸ்
மும்பை: மகாராஷ்ட்டிராவில் ஊழலில் சிக்கியவர்கள் பாரபட்சம் காட்டப்படாமல் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்நாவிஸ் தனது முதல் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு ( ஹெட்லைன்ஸ் டுடே ) அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும்…
சல்லிக்காசு கூட விட மாட்டோம் : கறுப்பு பணம் குறித்து…
புதுடில்லி: கறுப்பு பணத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று தனது ரேடியோ உரையில் தெரிவித்தார். வெளிநாட்டில் போடப்பட்டுள்ள கறுப்பு பணம் சல்லிக்காசு கூட விடாமல் திருப்பி கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தார். மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மக்களிடம் உரையாற்றுவேன் என்று…
5 மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகள் ஏற்படும்: சீமான் பேச்சு
குழித்துறை, நவ.2– நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா பொதுக்கூட்டம் மேல்புறம் சந்திப்பில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் ஜான்சிலின் சேவியர் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் மரியசந்திரன், செயலாளர் நாகராஜன், மேற்கு…
சதி வலையில் மீனவர்கள்!
போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக, தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும், அவர்களது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக…
மீண்டும் ஜெயலலிதா மீது வழக்கு தொடருகிறார் சாமி: மோதல் ஆரம்பம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு. ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. இந்நிலையில்…
தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை! மோடி – மஹிந்த…
இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் உடனடியான தீர்வை காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் சட்டமுறைப்படி 1976ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை நிறைவேற்றம் மேற்கொள்ளப்படுவதில்லை. எனினும் இந்திய மீனவர்களின் நிலை தொடர்பில் இந்தியா…
கறுப்புப் பணம்: 50 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ஏன் மீட்கவில்லை?…
போபால்:கறுப்புப் பணத்தை மீட்பது எளிமையானது என்றால், பிறகு ஏன் கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீட்கவில்லை என்றும் கருப்புப் பண விவகாரத்தில் பிரச்னை எழுப்புகிறவர்கள்தான், உண்மையில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்கள் என்று பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா குற்றம்சாட்டினார். மத்தியப்…
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அப்பாவிகள்! நடவடிக்கை எடுக்கப்படும்:…
ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இன்று வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு போதைவஸ்துவை கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த 5 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் ஐந்து…
இலங்கையில் இந்திய மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை எதிரொலி: போர்க்களமானது இராமேஸ்வரம்
இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் உட்பட எட்டுப் பேருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2011ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மரண…
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
கலாநிதி மாறன் - தயாநிதி மாறன் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர், அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை (சம்மன்) அனுப்ப,…
தமிழனை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க…
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: ’’சேலம் மாவட்டம் கொளத்தூரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் அடிப் பாலாறு எனுமிடத்தில் மீன் பிடிக்கச் சென்ற தமிழரை பிடித்து சித்ரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ள கர்நாடக வன அலுவலர் மீது கொலை வழக்குத் தொடர்ந்து, அதன்…