வெளிநாட்டில் கறுப்புப்பணம்: இந்தியர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியப் பணம்-- உச்சநீதிமன்றம் உத்தரவு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்தியாவுக்கு அளித்த, வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முழு பட்டியலையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை புதன்கிழமைக்குள்…

அருணாச்சல்லில் எல்லைச்சாவடி அமைக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில், 54 புதிய எல்லைச்சாவடி அமைக்கும்இந்தியாவின் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பிரச்னையை மிகவும் சிக்கலாக்கிவிடும் என கூறியுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், எல்லைப்பிரச்னையில், சீனாவில் நிலை தெளிவாக உள்ளது. விரைவாகவும், நட்புடனும் கூடிய பேச்சுவார்த்தை…

கேரளா, தமிழகத்தில் தற்கொலை அதிகம்: பீகார், உ.பி.,யில் மிக குறைவு

புதுடில்லி : உலகிலேயே, தற்கொலை அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. அதிலும், கேரளா, தமிழகம், ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் தான், நாட்டிலேயே அதிக தற்கொலைகள் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு இடம் : உலக சுகாதார நிறுவனம், தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலை…

இலங்கை – சீன உறவு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பழ.…

இலங்கை-சீன உறவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். தஞ்சாவூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 3 நீர்முழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிங்கள ராணுவத்துக்கு சீனாவிலும், சீன ராணுவத்துக்கு சிங்களத்திலும் பயிற்சியளிக்கப்படுகிறது.…

செட்டிபட்டி பழனி சுட்டுக்கொலை; மையப் புலனாய்வு விசாரணை கோரி 30ல்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை: ’’சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற இளைஞர் கர்நாடக வனத் துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டுப் பலியாகியிருக்கிறார்.  அவருடன் மேலும் இரண்டு தமிழ் இளைஞர்கள் கர்நாடக வனத்துறையினரின் தாக்குதலால் படுகாயமடைந்துள்ளனர். கர்நாடக எல்லையோரத்தில் கடந்த கால் நூற்றாண்டு…

காஷ்மீர் விவகாரம்: இந்தியா தன்னிச்சையாக தீர்வுகாண அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண பாகிஸ்தான் அனுமதிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்தார். இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண முயற்சித்து வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சியை வெற்றியடையச்…

இந்தியா-சீனா-இலங்கை: முக்கோண மோதலில் நடப்பது என்ன?

சீன அதிபர் இந்தியாவுக்கு வந்த சமயத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்த செயலை இந்திய பெருங்கடற்பரப்பில் இந்திய கடற்படை ஆதிக்கத்துக்கு எதிரான சவாலாக இந்தியா பார்க்கும் என்கிறார் இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயரதிகாரி கர்ணல். ஹரிஹரன். இது குறித்த…

ரூ.53 ஆயிரம் கோடியில் உள்நாட்டில் தயாராக உள்ள நீர் மூழ்கி…

புதுடில்லி: ரூ.80 ஆயிரம் கோடிக்கு, பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஆயுதங்கள் தொடர்பான திட்டங்களுக்கு, பாதுகாப்பு ஆயுதங்கள் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில். ரூ. 53 ஆயிரம் கோடி மதிப்பில் கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிலேயே கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவை முக்கியமான பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளன. பிரதமர்…

ரஜினியை சந்தித்த கார்த்தி சிதம்பரம்: கடும் கோபத்தில் பா.ஜ.

நடிகர் ரஜினியை, திடீரென நேற்று காலை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, ரஜினி மீது கடுமையான விமர்சனங்களையும் கிளப்பி இருக்கிறது. 'லிங்கா' படப்பிடிப்பு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, பெங்களூரு, மைசூரு…

குழந்தைகள் இறப்பை தடுக்க மோடி வேண்டுகோள்

மும்பை : மும்பையில், முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் சார்பில் செயல்பட்டு வரும் பழமையான, 'எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேஷன்' மருத்துவமனை, ஏராளமான பொருட ்செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நேற்று நடந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளை ஒப்பிடும்போது, நம்…

மகாராஷ்டிரம்: தலித் குடும்பத்தினர் மூவர் கொலை; உடல்கள் கிணற்றில் வீச்சு

மகாராஷ்டிர மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தின் ஜாஹிதி கல்சா கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் வறண்ட கிணற்றுக்குள் வீசியெறியப்பட்டன. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லட்சுமி கெளதம் கூறியதாவது: ஜாஹிதி கல்சா கிராமத்தின் பதேர்டி பகுதியில் சஞ்சய் ஜாதவ் (49),…

தமிழக மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத் துறை சோதனைச்…

கர்நாடக எல்லையில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பொருள்களைச் சேதப்படுத்திய கிராம மக்கள். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பாலாறு வனப் பகுதியில் நடமாடிய தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச்…

சீன எல்லையில் 54 புதிய ராணுவச் சாவடிகள்: இந்தியா அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ""சீனாவையொட்டிய அருணாசலப் பிரதேச மாநில எல்லையில் 54 புதிய ராணுவச் சாவடிகள் அமைக்கப்படும்; ரூ.175 கோடி…

தமிழகம் முழுவதும் பலத்த மழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

சென்னை, அக். 24- தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை கடந்த 1 வாரமாக நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பவானி ஆற்றில்…

கர்நாடக வனப்பகுதியில் சுடப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உடல் கண்டெடுப்பு:…

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா (32), செட்டிப்பாடியைச் சேர்ந்த பழனி (40), நெட்டைக்காளன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (35) மூவரும் கடந்த 21ஆம் தேதி அன்று இரவு வனப்பகுதியில் சென்றனர் மாதேஸ்வரன் மலை வனப் பகுதிக்குள் சென்றனர். அவர்கள் வேட்டையாடவே மாதேஸ்வரன்…

ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேல் பயணம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தில்லியில் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இஸ்ரேலில் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது அவர் நவம்பர்…

சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி: காஷ்மீர் புறப்பட்டார் பிரதமர் மோடி

தீபாவளியை காஷ்மீரில் கொண்டாடுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை காஷ்மீர் கிளம்பிச் சென்றார். காலை 7.30 மணி அளவில் தில்லியிலிருந்து தனது சியாச்சின் பயணத்தை தொடங்கினார் மோடி. காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனும், சியாச்சினில் பனிமலையில் வாடும் ராணுவ வீரர்களுடனும் இன்று தனது தீபாவளியைக் கொண்டாடுவதாகக்…

பாஜக பாசறைக்குத் திரும்பிய சிவசேனா: தீபாவளிக்குப் பின் அரசில் பங்கேற்க…

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் தீரும் விதமாக, சிவசேனா மீண்டும் பாஜக பாசறைக்குத் திரும்பியுள்ளது. தீபாவளி முடிந்த உடன் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் தங்களுக்கு உரிய பங்கு குறித்தி விரிவான திட்டங்களுடன் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அரசில் பங்கேற்றாலும்,…

காஷ்மீர் இளைஞர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ்-வுடன் தொடர்பா? முதல்வர் விளக்கம்

காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் கொடியுடன் சென்ற இளைஞர்களுக்கும், அந்த இயக்கத்துக்கும் தொடர்பில்லை என அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் ஐம்மு- காஷ்மீரில் பக்ரித் தொழுகை முடிந்தவுடன், சில இளைஞர்கள் பேரணியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் சென்றனர். இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை…

தாக்குதல் நடத்தினால், அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும்: பாகிஸ்தானுக்கு இந்தியா…

புதுடில்லி: எல்லையில் தொடர்ந்து அத்துமீறினால், அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரித்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை துவங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது பாகிஸ்தானின் பொறுப்பு எனவும் கூறியுள்ளது. அணு சக்தி மிகுந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் உள்ள 200 கி.மீ., எல்லையில், கடந்த…

தீபாவளி கொண்டாட்டத்தில் விலங்குகளை துன்புறுத்தினால் புகார் தெரிவிக்க எண்கள்!

விலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கால்நடை துயர்துடைப்புக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக அந்த கழகத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளி தினத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். இது குறித்து சென்னை கால்நடை துயர்துடைப்புக் கழகத்தின் செயலாளர் தியாகராஜன் கூறியது:- தீபாவளி…

கருப்புப் பண விவரங்களை வெளியிட்டால் காங்கிரஸூக்கே பாதிப்பு: அருண் ஜேட்லி

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்குதான் தர்மசங்கடம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இதுகுறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.…

ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது: சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மகிந்த ராஜபக்ச பங்காற்றியுள்ளார்.…