தமிழக மீனவர்களின் விடுதலையில் தாமதம்! இலங்கையுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்!…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவது புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று ராஜ்சபாவில் இதனை தெரிவித்தார். அதேநேரம் இந்திய மீனவர்கள் தமது எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று…

அருணாசலத்தில் சீனா ஊடுருவல்

சீன ராணுவ வீரர்கள் கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்தின் சக்லகாம் பகுதியில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு ஊடுருவி அங்கு இரண்டு நாள்கள் தங்கி சென்றது தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவத்துடன் மோதல் போக்கை தொடரும் விதமாக சீனா இந்த ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் லடாக்கிற்கு அருகில்…

கருணை மனு நிராகரிப்பு குறித்து பேரறிவாளன் மீண்டும் கேள்வி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் இன்று செவ்வாய் வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் மாநிலத் தகவல் ஆணையத்திடம் தனது கருணை மனு குறித்து பல்வேறு விவரங்களைக் கோரினார். மேலும் லீனா மேரி ஜார்ஜ் என்ற ஆராய்ச்சியாளருக்கு தன்னை சிறையில்…

மராட்டியத்தில் பில்லி சூனியம், மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம்

இந்தியாவின் மராட்டிய மாநிலம் பில்லி சூனியம் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்துள்ளது. அம்மாநிலத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்த செயற்பாட்டாளர் நரேந்திர டாபோல்கர் நேற்று-செவ்வாய்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. புனே நகரில் தனது காலை நடை…

சீனாவுக்கு ராணுவ பலத்தை காட்ட லடாக்கில் “ஹெர்குலிஸ்’ விமானம்

புதுடில்லி: சீனாவுக்கு, நம் ராணுவ பலத்தை காட்டும் வகையில், லடாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான, "சூப்பர் ஹெர்குலிஸ் விமானம்' நேற்று தரையிறக்கப்பட்டது. காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டியுள்ள, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவத்தினர், அடிக்கடி ஊடுருவுகின்றனர். இந்திய எல்லைக்குள்…

பயங்கரவாதி துன்டா மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல்

தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா அடையாளம் தெரியாத நபரால் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார். லோதி காலனியில் உள்ள போலீஸ் தனிப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு துன்டாவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் போலீஸார் அழைத்து…

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: பாகிஸ்தான் 9 பேருக்கு…

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக, யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் போராளிகள் பயிற்றப்படுவதாக இந்திய புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லஸ்கர் ஈ தாய்பா அமைப்பைச் சேர்ந்த 9 போராளிகள் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவ்வாறான 3 பாகிஸ்தானியர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.…

கச்சத் தீவை மீட்போம்: பெரீஸூக்கு கருணாநிதி பதிலடி

கச்சத்தீவை உச்ச நீதிமன்றம் மூலம் மீட்போம் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸூக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். கச்சத்தீவை ஒப்படைக்க முடியாது என்று பெரீஸ் கூறியதற்கு இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார் இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பெரீஸ் தில்லியில் அளித்த பேட்டியில்…

ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவுக்குள் 1,600 கோடி கள்ள நோட்டுகள் புழக்கம்

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (இண்டர் சர்வீஸஸ் இண்டலிஜென்ஸ்) உதவியுடன் ஆண்டுதோறும் இந்தியாவுக்குள் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தில்லி போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம்…

பீரிஸின் கருத்துக்களுக்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை நேரில் அழைக்க புதுடில்லி சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை அடுத்த தமிழக மீனவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது. இந்தியப் பிரதமர்…

ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் தாவூத் இப்ராஹிம்

இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானின் கராச்சியில் அந்நாட்டு உளவுத் துறையான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் இருப்பதாக லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா தெரிவித்தார். மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக 20…

இது வெற்றியாகாது!

இந்தியாவில் 21 குண்டுவெடிப்புக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்று கருதப்படும் அப்துல் கரீம் என்கின்ற துன்டா தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரும் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. துன்டாவை கைது செய்திருப்பதன் மூலம், தாவூத் இப்ராகிம் பற்றியும்,  இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் திட்டம் குறித்தும் தெளிவான விவரங்கள் கிடைத்துவிடும் என்று…

கச்சத்தீவை ஒப்படைக்க முடியாது: இலங்கை அமைச்சர் பெரீஸ் திட்டவட்டம்

கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ்தெரிவித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இலங்கை அதிபர்…

அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்த பேச்சு நடத்துவதே சிறந்த வழி:…

அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த வழி என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள டூன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியது: போர் எதற்குமே தீர்வு ஆகாது. பேச்சு நடத்துவதன்…

மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது: மன்மோகன் சிங் உறுதி

இந்தியாவில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 1991-ம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற ஏற்றுமதி - இறக்குமதியில் நிலையின்மை பிரச்னை மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)…

லஷ்கர் பயங்கரவாதி கைது

மும்பை, ஹைதராபாத், தில்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் (எ) துண்டா (70) கைது செய்யப்பட்டார். நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியும், தேடப்படும் முதல் 20…

இந்திய தளத்தை அமெரிக்க உளவு விமானங்கள் பயன்படுத்த நேரு அனுமதித்தார்

அமெரிக்க உளவு அமைப்பின் விமானங்கள் இந்தியாவில் உள்ள விமானப்படைத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்னாள் பிரதமர் நேரு அனுமதி அளித்தது இப்போது கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பிடம் இருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆவணக்…

கனடா நகர சாலைக்கு மகாத்மா காந்தி பெயர்

கனடாவில் வின்னிபெக் நகரில் உள்ள சாலை ஒன்றுக்கு தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 67வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை நடந்த விழாவில் வின்னிபெக் நகர மேயர் சாம் காட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மனித உரிமைகள் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டுவது…

இந்திய ரூபாயும், பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிவு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து எழுந்துள்ள கவலைகளால், நாட்டின் பங்குச் சந்தைகள் வெகுவாகச் சரிந்துள்ளன. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சிகண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 700 புள்ளிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. வர்த்தக முடிவில் 18,600 புள்ளிகள் என்ற அளவை அது எட்டியுள்ளது. இதனால் இன்றைய…

கச்சத்தீவு செல்ல முயன்ற 69 பேர் மதுரையில் கைது

மதுரையிலிருந்து கச்சத்தீவுக்கு சென்று இந்தியக் கொடி ஏற்றப்போவதாகக் கூறி புறப்பட்ட 69 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர்…

நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து விவாதிக்கத் தயாரா?

நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி குறித்து விவாதிக்கத் தயாரா என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து புஜ்ஜில் உள்ள கல்லூரியின் சுதந்திர தினவிழாவில் மோடி பேசியது: சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியா மீது தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் துணிச்சலான நடவடிக்கையை…

எல்லைப் பிரச்சினை : கலக்கத்தில் மோரே தமிழர்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கும் மியான்மாருக்கும் இடையேயான எல்லையில் முள்வேலிகளை அமைக்கும் பணியில் இந்தியத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பணியில் பெருமளவு முடிந்த நிலையில், எல்லப்புறத்தில் இருக்கும் மோரே நகரில் வசிக்கும் தமிழர்கள் கலக்கமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. எல்லைகள் குறிக்கப்பட்டு அந்தப் பகுதியிலும் வேலிகள் அமைக்கப்படும் போது மோரே…

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை: சிறப்பு தூதர் தேவையில்லை

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைத் தீர்க்க சிறப்பு தூதர் தேவையில்லை என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பலமுறை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வன்முறைச் சூழலில் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தமாட்டோம் என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.…