தவளை தன் வாயால் கெடுகின்றது!

 -சீ. அருண், கிள்ளான்  அரசன், அரசு ஆகியோரின் தன்மையினைப்பற்றி திருவள்ளுவர் மிகத் தெளிவாக குறித்துள்ளார்:  அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு. (384) உரிய முறைமையைத் தவறாமல் அறம் அற்றதை நீக்கி வீரத்துடன் செயலாற்றுபவனே மானமுடைய அரசன் ஆவான். இத்தகைய அரசனைத் தலைவனாகக் கொண்டே அரசு…

தேர்தல் சீர்திருத்தம் மீதான குழு சுதந்திரமாக இயங்குவது முக்கியமாகும்

(சிம் குவாங் யாங்) மில்லியன் கணக்கான அஞ்சல் வாக்குகள், குளறுபடியான வாக்காளர் பட்டியல் ஆகியவை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இடையில் நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒரு வழியாக அமைக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்டது போல பெர்சே 2.0 இயக்கத்தின் முக்கியத்துவத்தை ஒரங்கட்டுவதற்கு அந்தத் தேர்வுக் குழு முயலுவது திண்ணம். நாட்டின் வரலாற்றில் நடப்பு…

சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கு எப்போது விடிவு பிறக்கும்?

"சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி முழு அரசு மானியம் பெறும் ஒரு தமிழ்ப்பள்ளி என்றாலும் இப்பள்ளி அனைத்து நிலையிலும் ஒதுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளியாகவே உள்ளது" என மனம் குமுறியிருக்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி. இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் மனம் நொந்து பேசியிருக்கிறார்…

போலீஸ் தடுப்பு காவலில் பாலியல் தொல்லையா?

போலீஸ் காவலில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது பாலியல் ரீதியில் தொல்லை கொடுக்கப்பட்டதாக பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோஷலிஸ்ட் கட்சியின் மூன்று பெண் உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் புக்கிட் அமானில் புகார் செய்தனர். இந்த செய்தியைப் படித்தபோது "போலீசார் பொதுமக்களின் பாதுகாவலர்கள்" என்ற வாக்கியம்தான் என் போன்றவர்களின் சிந்தனையை கிளறிவிடுகின்றது. போலீசார்…

4 ஏக்கர் நிலம் வழங்குவதால் அரசாங்கத்திற்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லை

(ஐயன்திருமேனி) புக்கிட் ஜாலில் தோட்ட மக்களுக்கு நியாயம் வேண்டும். புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு அரசும் அதிகாரிகளும் செவிசாய்க்க மறுத்து வருவது நியாயமான செயலாக இல்லை. காலங்காலமாக தோட்டங்களில் வேலைப் பார்த்து வரும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசு ஏற்க மறுப்பது எந்த வகையில்…

அந்நியத் தொழிலாளர் பதிவும் அரைஞாண் கயிறு கட்டியவர்களும்!

(சீ.அருண், கிள்ளான்) சட்டப் பதிவுடைய அந்நியத் தொழிலாளர், சட்டப் பதிவற்ற அந்நியத் தொழிலாளர் முதலியோரைக்  கைவிரல் ரேகை பதிவு (Biometrik) என்னும் தொழில்நுட்பம் வாயிலாகப் பதிவு செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது நம் அரசு. அந்நியத் தொழிலாளர்களைப் பதிவு செய்வது Read More

எங்கே நீதி? எங்கே நியாயம்?: உள்துறை அமைச்சரின் இரட்டைப் போக்கு!

- செனட்டர் டாக்டர் எஸ். இராம்கிருஷ்ணன் மனிதக் கடத்தலில் தொடர்பிருக்கும் சந்தேகத்தின் பேரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம்  உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட  8 குடிநுழைவுத் துறை அதிகாரிகளை, உள்துறை அமைச்சு விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக இம்மாத தொடக்கத்தில் தகவல் ஊடகங்களில் வெளியான செய்தி நம்மை திடுக்கிட…

இந்தோனிசியாவின் “34வது மாநிலத்துக்கு” உங்களை வரவேற்கிறோம்

- மரியாம் மொக்த்தார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் 'எம் திட்டத்தின்' தொடர்ச்சியாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் 'என் திட்டம்'  இருக்கும் என்றால் மலேசியா சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் ( Tourism Malaysia ) 'மலேசியா உண்மையிலேயே ஆசியா' என்னும் அர்த்தமற்ற சுலோகத்தைப் பயன்படுத்த வேண்டிய…

பழனிவேலை அமைச்சராக்குவது இந்தியர் பிரச்னைக்குத் தீர்வாகாது

- Jeswan Kaur உள்நாட்டிலும் உலக அளவிலும் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்திய பெர்சே 2.0 பேரணி நடைபெற்று நேற்றுடன் ஒரு மாதம் முடிந்தது. கூடவே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு தகுதியான தலைவர்தானா என்ற கேள்வியும் எழுகின்றது. ஜூலை 9 பேரணி பல உண்மைகளை வெளிப்படுத்தியது.…