ஷுஹாய்மி: சினிமா அரங்குகள் அனுமதிகளை இழக்கலாம்

தண்டா புத்ரா திரைப்படம் கட்டாயமாக திரையிடப்பட வேண்டும் என்னும்  திட்டத்தின் கீழ் வருவதால் அதனை திரையிடாத சினிமா அரங்குகள் தங்கள்  உரிமங்களை இழக்க வேண்டியிருக்கும் என அதன் இயக்குநர் ஷுஹாய்மி பாபா  சொல்கிறார். "பினாஸ் எனப்படும் தேசியத் திரைப்படக் கழகத்தின் அனுமதி இல்லாமல் சினிமா  அரங்குகள் திரையிடுவதை ரத்துச்…

தண்டா புத்ரா இருட்டடிப்பு- புதிய கடிதம் வெளியிடப்பட்டது

பினாங்கு அரசாங்கம் சினிமா அரங்குகளுக்கு அனுப்பிய கடிதத்தை 24 மணி  நேரத்துக்குள் திருத்தியுள்ளது. தண்டா புத்ராவை திரையிட வேண்டாம் என அவற்றுக்கு 'ஆணையிடுவதற்கு'  பதில் அது இப்போது 'ஆலோசனை' கூறியுள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று நிருபர்கள் சந்திப்பில் புதிய  கடிதத்தைக் காட்டினார். முந்திய கடிதம்…

உள்துறை அமைச்சு 49 சட்டவிரோத குண்டர் கும்பல்கள் மீது போர்…

1966ம் ஆண்டுக்கான சங்கச் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமானவை என 49  குண்டர் கும்பல்கள் மீது உள்துறை அமைச்சு போர் பிரகடனம் செய்துள்ளது. அவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளின் தொடக்கம் அது எனக் கருதப்படுகின்றது. அது வெளியிட்டுள்ள பட்டியலில் கோலாலம்பூரிலும் ஜோகூரிலும் செயல்படும்  மிகவும் தீவிரமான குண்டர் கும்பல்களும் அடங்கும்…

2014 வரவு செலவுத் திட்டத்தில் ஜிஎஸ்டி சேர்க்கப்பவது பற்றி நஜிப்…

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவிப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை அமலாக்குவது மீது ஏதும் சொல்ல மறுக்கிறார். "ஜிஎஸ்டி என்பது புதிய விஷயமல்ல. நாங்கள் அது பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். அது வரவு…

நிதி அமைச்சு: ஜிஎஸ்டி அவசியமாகும், தேர்வு அல்ல

நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரியை அமலாக்குவது  அவசியமாகும். அது ஒரு தேர்வு அல்ல என நிதி அமைச்சின் தலைமைச்  செயலாளர் முகமட் இர்வான் சிரிஹார் அப்துல்லா கூறுகிறார். நாட்டைப் பாதுகாப்பதே அதன் முழுமையான நோக்கம் என வருணித்த அவர்,  நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு…

மெர்டேகா-கருப்பொருளில் அமைந்த நாடகத்துக்குத் தடை

மெர்டேகாவைக் கருப்பொருளாகக் கொண்ட "MERdEKAnya KITA" என்னும்  நாடகம் “உள்ளூர் மக்களை  ஆத்திரப்பட வைக்கும்” என்பதால் அது  “தேசியப் பாதுகாப்புக்கு ஒரு மருட்டல்”  என்றுகூறி  அரசாங்கம் அதற்குத் தடை விதித்துள்ளது. அந்நாடகம்  இன  இணக்கத்தைக் கெடுப்பதுபோலவும்  சிங்கப்பூரர்கள் மலேசியர்களைச் “சிறுமைப்படுத்துவதுபோலும்” உள்ளது எனத்  தொடர்பு, பல்லூடக அமைச்சு அதிகாரிகள்…

அரசாங்கம் வகுத்த பாதையில் செல்லுங்கள் என வேதாவுக்கு நஜிப் அறிவுரை

செனட்டர் பி வேதமூர்த்தி இப்போது அரசாங்கத்தில் ஒர் உறுப்பினர். அதனால்  அவர் அரசாங்கம் வகுத்த பாதையில் செல்ல வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். "அரசாங்க உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் அரசாங்கம் வகுத்த பாதையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒரே குரலாக…

நிதிச் சுமையை ஏற்படுத்தும் பெருந் திட்டங்கள் மறுஆய்வு

ஏற்கனவே  தீர்மானிக்கப்பட்ட  சில திட்டங்கள்  மறுஆய்வு செய்யப்படும்.  அரசாங்கத்தின் நிதிநிலையைச் சீர்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது. பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  தலைமையில்  திங்கள்கிழமை கூடும் நிதியியல் கொள்கைக் குழு   அதன்மீது முடிவெடுக்கும் என்றும் 2014  பட்ஜெட்டில் அது பற்றி அறிவிக்கப்படும் என்றும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்றைய த…

“ஆற்றைத் தடுக்கும்” யோசனையை கெராக்கான் எதிர்க்கிறது

சுங்கை மூடா ஆறு பினாங்கிற்குள் செல்வதை தடுக்கும் யோசனைக்கு கெடா  மாநில கெராக்கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அம்னோவின் பாக்கார் பாட்டா சட்டமன்ற உறுப்பினர்  அகமட் பாட்ஷா முகமட் ஹனீபா, அலோர் ஸ்டாரில் தெரிவித்த அந்த யோசனையை தாம் ஒப்புக் கொள்ளவில்லை  என அந்த கெராக்கான் மாநில இளைஞர்…

போலீஸ் 9 வயது பள்ளிப் பிள்ளைகளை ‘மிரட்டுகின்றது’

"போலீசார் வெட்கமே இல்லாத பள்ளிக்கூட முரடர்களாகியுள்ளனர். ஒசிபிடி  குண்டர் கும்பல்களைப் போன்ற உங்கள் அளவுள்ள ஒருவருடன் மோத  வேண்டும். 9 வயது பள்ளிப் பிள்ளைகளுடன் அல்ல" பெற்றோர்: மாணவரை விசாரிக்கவில்லை என ஒசிபிடி சொல்வது பொய் கிங்பிஷர்: பிள்ளைகளை கோழைத்தனமாக விசாரித்து விட்டு அதனை மறுத்துள்ள  ஒசிபிடி-யை வெட்கப்பட…

ஜிஎஸ்சி பினாங்கில் தாண்டா புத்ராவைத் திரையிடாது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கின் வேண்டுகோளுக்கிணங்க  கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (ஜிஎஸ்சி),  அம்மாநிலத்தில் தாண்டா புத்ரா படத்தைத் திரையிடுவதில்லை என முடிவு செய்துள்ளது. “அதற்காக நுழைவுச் சீட்டுகளை வாங்கியவர்களுக்குப் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்”, என அது ஓர் அறிக்கையில் கூறியது.

ஆற்றுநீரைத் தடுக்கும்’ பரிந்துரைக்கு கெராக்கான் எதிர்ப்பு

‘சுங்கை மூடா ஆறு பினாங்கு நோக்கி ஓடுவதைத் தடுக்க வேண்டும்  என்பதில் கெடா கெராக்கான் இளைஞர் பகுதிக்கு உடன்பாடில்லை. திங்கள்கிழமை அம்னோவின் பக்கார் பாத்தா சட்டமன்ற உறுப்பினர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபாவால் முன்வைக்கப்பட்ட அந்த ஆலோசனையைத் தாம் ஏற்கவில்லை என மாநில கெராக்கான் இளைஞர் தலைவர் டான்…

தாண்டா புத்ராவுக்குத் தடையில்லை: குவான் எங் விளக்கம்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தாண்டா புத்ராவை பினாங்கு திரை அரங்குகள் திரையிடக்கூடாது என்பது ஓர் ஆலோசனைதானே தடைவிதிப்பு ஆகாது என விளக்கமளித்துள்ளார். “அது ஒரு வேண்டுகோள், தடை அல்ல. அதைமீறி, தாண்டா புத்ராவைத் திரையிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.…

‘உங்கள் “அச்சத்தை” புதைத்து விட்டு தண்டா புத்ராவைப் பாருங்கள்’

தண்டா புத்ரா திரைப்படம் இன்று சினிமா அரங்குகளில் திரையிடப்படுகின்றது. அதனை குறை கூறுகின்றவர்கள் தங்கள் 'அச்சத்தை' புதைத்து விட்டு அந்த  படத்தை பார்க்க வேண்டும் என அதன் தயாரிப்பாளரான பெசோனா பிக்சர்ஸ்  கேட்டுக் கொண்டுள்ளது. "சிலர் அந்தத் திரைப்படத்தை தங்கள் எதிரிகளாக கருதிக் கொண்டு அது பற்றி  முடிவு…

குவான் எங் அவர்களே, மக்கள் முடிவு செய்ய விடுங்கள்

"மலேசியாவில் ராக் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு தடை விதித்த மத்திய  அரசாங்கத்தைப் போன்று குவான் எங்-கும் செயல்படுகிறார்" தண்டா புத்ராவை திரையிட வேண்டாம் என பினாங்கு சினிமா அரங்குகளை  கேட்டுக் கொள்கின்றது பினாங்குக்காரன்: இந்த முறை நான் முதலமைச்சர் லிம் குவான் எங் பக்கம்  இல்லை. 'தண்டா புத்ராவை'…

ரேலா தனி துறையின் கீழ் வைக்கப்படும்

ரேலா என அழைக்கப்படும் மக்கள் தொண்டர் படையை அதன் சொந்தத்  துறையின் கீழ் வைப்பதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்  கொண்டுள்ளது. அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி   வெளியிட்டார். அதே வேளையில் புதிய பதவிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  சொன்னார். "அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ள அந்த…

ரூபாய் வீழ்ச்சி, திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்?

எஸ்.குருமூர்த்தி - 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது. 2004-2005…

ஒசிபிடி: மாணவர்களை விசாரித்தோம்: மிரட்டவில்லை

எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா மாணவர்களை விசாரித்தது உண்மைதான் என்பதை போலீசார் ஒப்புகொண்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யவில்லை, பிள்ளைகளை மிரட்டவும் இல்லை. மாணவர்களிடம், குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து “சாதாரணமாக பேசினோம் அவ்வளவுதான்” என சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனாய்டி பூஜாங் கூறினார்.

வழக்குரைஞர்கள்: பிள்ளைகளை விசாரிக்க வேண்டுமானால் போலீசார் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்க…

சட்ட அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் ஆற்றல் பிள்ளைக்கு இல்லாததால் போலீசார் பிள்ளையை விசாரிக்கும் முன்னர் பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என வழக்குரைஞர்கள்  கூறுகின்றனர். அந்த விஷயத்தில் 2001ம் ஆண்டுக்கான குழந்தைச் சட்டம் மௌனமாக இருந்தாலும் போலீஸ் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதிலிருந்து ஒதுங்கியிருப்பதற்கான தேர்வை தனிநபர்களுக்கு வழங்கும்…

கேமிரன் ஹைலண்ட்ஸ் முடிவுகளை ரத்துச் செய்வதற்கு சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நீதிமன்றம்…

தற்போது மஇகா தலைவர் ஜி பழனிவேல் வசமுள்ள கேமிரன் ஹைலண்ட்ஸ்  நாடாளுமன்றத் தொகுதிக்கான 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ரத்துச்  செய்யுமாறு டிஏபி சமர்பித்த மனுவை தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி  செய்துள்ளது. மனுதாரரான டிஏபி வேட்பாளர் எம் மனோகரன் தமது நடவடிக்கைக்கு போதுமான  விவரங்களைத் தரவில்லை என்றும்…

Ops Cantas நடவடிக்கை வெற்றி என துணை ஐஜிபி பிரகடனம்

போலீசார் மேற்கொண்ட Ops Cantas நடவடிக்கை வெற்றி என தேசியப் போலீஸ்  படைத் துணைத் தலைவர் (துணை ஐஜிபி) பாக்ரி ஜினின் பிரகடனம் செய்துள்ளார். ஆனால் அவர் புள்ளி விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை. "Ops Cantas நடவடிக்கை பலனளித்துள்ளது. வன்முறைக் குற்றங்கள் குறைகின்றன," என வெற்றி என துணை…

இன்று காலை திரையரங்குகளில் ‘நெகாராகூ’ இசைக்கப்படவில்லை

திரை அரங்குகளில் திரைப்படம் காட்டப்படுவதற்கு முன்னர் தேசிய கீதத்தை  இசைக்கும் ஏற்பாடு இன்று முதல் நடப்புக்கு வருகின்றது. ஆனால் கோலாலம்பூரில் உள்ள ஒரு சினிமா அரங்கில் அது இன்று காலை  அமலாக்கப்படவில்லை. மிட் வேலி மெகா மால் கடைத் தொகுதியில் உள்ள Golden Screen சினிமா அரங்கில் திரயிடப்பட்ட…

‘விமானத்தில் பன்றி இறைச்சி’ என்ற வலைப்பதிவுக்காக ஜைனுடின் மீண்டும் மன்னிப்புக்…

முன்னாள் தகவல் அமைச்சரும் மூத்த பத்திரிக்கையாளருமான ஜைனுடின் மைடின்,  தமக்கு எதிராக 5 மில்லியன் ரிங்கிட் வழக்கை தொடருவதை ஏர் ஏசியா நிறுத்திக்  கொள்ளும் என்றால் எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து மன்னிப்புக் கேட்கத்  தயாராக இருப்பதாகச் சொல்கிறார். ஏர் ஏசியா விமான நிறுவனம் தனது பயணங்களில் பன்றி இறைச்சியை…