மலேசியாவின் அகதிகள் பதிவு ஆவணத் (DPP) திட்டம், நாட்டில் அகதிகள் நிரந்தரமாக தங்குவதற்கு உத்தரவாதம் அளிக்காது; ஏனெனில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் மேலாண்மை இறுதியாக மூன்று விளைவுகளில் ஒன்றில் மட்டுமே முடிவடையும்: தாயகம் திரும்புதல், மூன்றாம் நாட்டில் மறுகுடியமர்த்தம் செய்யப்படுதல் அல்லது நாடு கடத்தப்படுதல். இந்த ஆண்டு…
இவ்வாண்டு கூட்டரசு பிரதேச தினக் கொண்டாட்டம் இல்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிக்கனத்தை வலியுறுத்தி இருப்பதால் அரசாங்கம் இவ்வாண்டு கூட்டரசு தினத்தை விமரிசையாகக் .கொண்டாடப் போவதில்லை. கொண்டாட்டத்துக்குச் செலவிடும் பணத்தைத் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவப்போவதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். “கொண்ட்டாட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ரிம7 மில்லியனை ரிம1.5 மில்லியனாகக் …
பதவி துறக்கும் அரசியல்வாதிகளைத் தண்டிக்க சட்டம் தேவை
தகுந்த காரணமின்றி தொகுதிகளைக் காலி செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தலைமைத்துவ, மேம்பாட்டு ஆய்வுக் கழகம்(லீட்) பரிந்துரைத்துள்ளது. “தேவையற்று பதவிதுறப்பதைச் சட்டப்படி தடுப்பது அவசியம்”, என அதன் நிறுவனரும் இயக்குனருமான அமின் அஹ்மட் கூறினார். இடைத் தேர்தல் செலவில் ஒரு பகுதியைப் பதவிதுறக்கும் …
முருகேசன், மஇகா தலைமைப் பொருளாளராக நியமனம்
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எஸ். முருகேசன் மஇகா தலைமைப் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் இன்று இதை அறிவித்தார். சிவில் வழக்கைத் தொடர்ந்து ஆர். ரமணன் பொருளாளர் பதவியிலிருந்து விலகியதால் முருகேசன் (வலம்). 47, அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒரு வழக்குரைஞருமான முருகேசன், …
தி கியாட்: லியோ அன்வாரை எதிர்த்து போட்டியிடலாமே
முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், காஜாங் இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து மசீச தலைவர் லியோ தியோங் லாய் களமிறங்குவதே பொருத்தமாக இருக்கும் என்று மொழிந்துள்ளார். காஜாங்கில் தேசிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதால் அவரை லியோ போன்ற உயர் தலைவர் எதிர்ப்பதுதான் பொருத்தமாக …
எம்பி கட்சிக்காகக் கூடுதல் நேரத்தை ஒதுக்குவார்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், நிறுவனத் துறையிலிருந்து வந்தவர் என்பதால் எப்போதும் மாநில நிர்வாகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பார். “சிலாங்கூரைச் சீரமைப்பதுதான் என் குறிக்கோள். ஆதரவு வேண்டும் என்பதற்காக மக்களைத் திருப்திப்படுத்துவது இரண்டாம் பட்சம்தான்”, என்றவர் சொல்வார். ஆனால், இதுவே பலரும்…
காஜாங்கில் போட்டியிடுவது ஏன்? அன்வார் விளக்கமளிப்பார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் காஜாங்கில் போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பும் பக்காத்தான் பங்காளிகளையும் வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் போன்ற நண்பர்களையும் பெர்சே 2.0 அமைப்பு போன்றவற்றையும் சந்தித்து விளக்கமளிக்க முடிவு செய்துள்ளர். அவர்கள் கேள்வி எழுப்புவது நியாயம்தான் என்று கூறிய மக்களுக்கு விளக்கமளிக்கும் …
மசீச: பெருந் தலைவருக்கு சாத்தே நகரில் என்ன வேலை?
அன்வார் இப்ராகிம் “உலகப் பெருந் தலைவராக”வே இருக்கட்டும் அந்த உலகப் பெருந் தலைவர் எதற்காக ஐயா, சிறிய சாத்தே விற்கும் நகருக்கு வருகிறார் என்று மசீசா வினவியுள்ளது. “அவரைப் பெருந் தலைவர் என்கிறீர்கள்.....பிறகு எதற்காக சாத்தே நகரில் வந்து போட்டியிடுகிறார்? இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், மந்திரி புசாராகவும் …
பள்ளிவாசலில் ஆர்ப்பாட்டம் செய்தோரிடம் போலீஸ் விசாரணை
பினாங்கு பாயான் பாரு பள்ளிவாசல் தாக்கப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறிக்கொண்டு நேற்றிரவு ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் என்ஜிஓ-க்ளிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. ஆர்ப்பாட்டம் செய்த சுமார் 150 பேர், 2012 அமைதிப்பேரணிச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவதாக தென்மேற்கு போலீஸ் மாவட்ட தலைவர் சுப்பிரெண்டெண்ட் லாய் பா ஹின் கூறினார். …
பிஎன் உணர்வை மதிப்பீர்: கைரிக்கு மசீச இளைஞர்கள் அறிவுறுத்தல்
காஜாங்கில் பிஎன்-னைப் பிரதிநிதித்து மசீசதான் போட்டியிடும். அதை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ஏற்க வேண்டும் என மசீச இளைஞர் தலைவர் சொங் சின் வூன் கூறினார். “காஜாங்கைக் வெல்வது நம் ஒருமித்த குறிக்கோளாகும். (அப்படி இருக்க) வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் பழைய முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றவர் …
தமிழ் மலர் அலுவலகம் தாக்கப்பட்டது
பாராங் கத்தி ஏந்திய மூவர், கோலாலும்பூர் தமிழ் மலர் அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்த அவர்கள் காலை மணி 11-க்கு ஜாலான் ஈப்போவில் உள்ள தமிழ் மலர் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நிர்வாக ஆசிரியர் எஸ்.எம்.பெரியசாமி கூறினார். அங்கிருந்தவர்களிடம் பெரியசாமி எங்கே என்று கேட்டிருக்கின்றனர். …
சபரி: பிகேஆரின் அரசியல் விளையாட்டுகளில் பிஎன் ஏமாறக் கூடாது
மாற்றரசுக் கட்சியான பிகேஆரின் அரசியல் விளையாட்டுகளில் பிஎன் சிக்கிக்கொள்ளக்கூடாது எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹமட் சபரி சீக் எச்சரித்துள்ளார். உள்கட்சி விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் விவேகமற்ற பிகேஆர் தலைவர்கள், கவனத்தைத் திசைதிருப்புவதற்காக இப்படிப்பட்ட அரசியல் ஆட்டங்களை ஆடத் தொடங்கியுள்ளனர் என்றாரவர். லீ சின் செ காஜாங் சட்டமன்றத் தொகுதியைத் …
சிலாங்கூர் டிஏபி பிகேஆருக்கு துரோகமிழைக்காது
பாஸ், காஜாங் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பது பற்றி அலோசித்தாலும் டிஏபி தன் நண்பனைக் கைவிடாது. “பக்காத்தான் ரக்யாட் பங்காளி என்ற முறையில் சிலாங்கூர் டிஏபி, இடைத்தேர்தலில் பிகேஆர் வெற்றிபெற தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கும். தேவையான நேரத்தில் அதைக் கைவிடாது, அதற்குத் துரோகம் இழைக்காது. “இடுக்கண் வரும்போது உதவுவதுதானே …
அம்பிகா: பிகேஆர் விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளது
பிகேஆரின் தகிடுதத்தங்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முன்னாள் பெர்சே.2 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், காஜாங் தொகுதி காலிசெய்யப்பட்டு அங்கு ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்னவென்பதை அது பொதுமக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளது என்றார். அது கட்சிக்குள் நிலவும் பூசலுக்குத் தீர்வுகாணும் முயற்சிபோன்று தோன்றுகிறது என்று …
பள்ளிவாசல் தாக்கப்படும் ‘சாத்தியம்’ இருப்பதை எதிர்த்து மலாய் என்ஜிஓ-கள் ஆர்ப்பாட்டம்
நேற்றிரவு பினாங்கு பாயான் பாரு பள்ளிவாசலில் திரண்ட மலாய் என்ஜிஓ-களைச் சேர்ந்த சுமார் 150 பேர், சில தரப்பினர் பள்ளிவாசலைத் தாக்கத் திட்டமிடுவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு வெளியில் கண்டெடுக்கப்பட்ட பதாதைகளில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் இருந்ததையும் அவர்கள் கண்டித்தனர். அல்லாஹ் என்னும் சொல் முஸ்லிம்களுக்கு …
பாபாகோமோவின் வழக்கை ஒத்திவைக்கும் முயற்சி நிராகரிக்கப்பட்டது
வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ் அல்லது பாபாகோமோ, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தமக்கு எதிராக தொடுத்துள்ள ரிம100மில்லியன் அவதூறு வழக்கை ஒத்திவைக்க செய்துகொண்ட விண்ணப்பத்தை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஒரு சாட்சியைக் கொண்டுவருவதற்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டிருந்தார். “வான் …
காஜாங்கில் பிஎன் போட்டியிடும்- முகைதின்
காஜாங் இடைத் தேர்தலில் போட்டியின்றி வெல்லலாம் என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நினைத்தால் அது நடக்காது. பிஎன் வேட்பாளர் அங்கு களமிறக்கப்படுவார். துணைப் பிரதமர் முகைதின் யாசின் அதை அறிவித்ததாக த ஸ்டார் கூறியது. “நாங்கள் வழக்கம்போல் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம். “எதிர்த்துப் போட்டியிடுபவர் யாராக இருந்தாலும் …
அஸ்மின்: காஜாங் தேர்தலுக்குப் பின்னே முக்கிய நோக்கமுண்டு
காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ பதவி துறந்தது, காலியான தொகுதிக்கு இடைத் தேர்தல் நடப்பது எல்லாமே எதிர்கால பலனைக் கருத்தில் கொண்ட ஒரு “தந்திர நடவடிக்கை” என்கிறார் சிலாங்கூர் பிகேஆர் தலைவர், அஸ்மின் அலி. “அன்வார் இப்ராகிம் அங்கு போட்டியிடுவது நாங்கள் சிலாங்கூருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும்…
பினாங்கு தேவாலய விவகாரத்தைக் கவனிக்க தனி போலீஸ் படை
பினாங்கில் தேவாலயங்களுக்கு வெளியில் “ஏசுநாதர் அல்லாவின் பிள்ளை” என்று வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகள் காணப்பட்டதன் தொடர்பிலும் அஸ்ஸம்ஷன் தேவாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பிலும் போலீஸ் இதுவரை 16 புகார்களைப் பெற்றுள்ளது. “நேற்றிரவு அசம்பாவிதம் எதுவும் இல்லை. அதற்கு இறைவனுக்கு நன்றி”, என மாநில போலீஸ் தலைவர் அப்துல்…
காஜாங்கில் போட்டியிடாதீர்: பிஎன்னுக்கு அன்வார் கோரிக்கை
காஜாங் இடைத் தேர்தலால் வீண் செலவுதான் என்று தேர்தல் ஆணையம் நினைக்குமானால் ‘பிஎன் அதில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கலாம்’. பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காஜாங்கில் களமிறங்க ஆயத்தமாகிவரும் அன்வார், பிகேஆர் “அதன் பணிகளைத் தொடர இடமளித்து” பிஎன் தேர்தலில் குதிக்காமல் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றார்.…
காஜாங்கில் அன்வார்தான் போட்டியிடுகிறார்: பிகேஆர்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் காஜாங்கில் போட்டி இடுகிறார். இதை அக்கட்சி இன்று உறுதிப்படுத்தியது. சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமே பிகேஆர் தலைமையகத்தில் அம்முடிவை அறிவித்தார். அன்வார் பொறுப்பேற்கும்வரை “இடைக்காலத்துக்கு” மந்திரி புசார் பணியைத் தாம் தொடரப்போவதாகவும் அவர் சொன்னார். காஜாங்கில் இடைத் தேர்தலுக்கு …
பொதுப்பணம் விரயம் செய்யப்படுவதைக் குற்றமாக்குவீர்
அரசுப் பணியாளர்கள் கவனக் குறைவால் பொதுப் பணத்தை விரயம் செய்தலைக் குற்றமாக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு தம் ஆதரவு நிச்சயம் உண்டு என்கிறார் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட். ஆனால், தவறிழைக்கும் அரசுப் பணியாளர்கள்மீது தலைமைச் செயலாளரோ, அமைச்சர்களோ நடவடிக்கை எடுப்பார்களானால் …
அன்வார் காஜாங்கில் களமிறங்க பிகேஆர் இளைஞர் ஆதரவு
பிகேஆர் இளைஞர் பகுதி, விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் காஜாங் இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதை மட்டுமே தான் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் விடுத்துள்ள அறிக்கை, அப்துல் காலிட் இப்ராகிமை மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்றும் நாடகம் விரைவில் …
பதவி பறிப்பா?, அப்படி ஒன்றும் இல்லை, காலிட்
காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திடீர் புரட்சியா என்ற கேள்விக்கு, "அப்படி ஒன்றும் இல்லை", என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார். "ஒரு மந்திரி புசாரின் நியமனத்திற்கு…


