த ஹீட் மீதான தற்காலிகத் தடை நீக்கப்பட்டது

த ஹீட் மீதான   தற்காலிக  தடை  விதிப்பை  அரசாங்கம்  அகற்றியுள்ளது. பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அவரின்  துணைவியாரும்   அளவுமீறி  ஆடம்பரச்  செலவு  செய்வதாகக்  கட்டுரை  வெளியிட்டதை  அடுத்து  அவ்விதழுக்குத்  தற்காலிக  தடை  விதிக்கப்பட்டிருந்தது.  தடைவிதிப்பு  நீக்கப்பட்டதைத்  தெரிவிக்கும்  கடிதம் ஒன்று  இன்று  மாலை  அந்த  வார இதழுக்கு …

குலா: அடித்த ஆசிரியரை அடிவாங்கிய துணை அமைச்சர் மன்னித்து விட்டேன்…

  அடித்தவர் ஆசிரியர். அடிவாங்கியவர் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன். அவரை இவர் மன்னித்து விட்டதாக கூறுவது ஏமாற்றமளிப்பதோடு ஒழுங்கின்னையைக் காட்டுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்  இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அடிவாங்கிய துணை அமைச்சர் கமலாநாதன் கூற்றுப்படி அது அவருக்கும் அடித்த உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர்…

10-அம்சத் தீர்வை மாநிலச் சட்டங்களுடன் இணைக்கலாம்

பிரதமர்துறையில் சமய  விவகாரங்களுக்குப்  பொறுப்பாகவுள்ள  அமைச்சர்  ஜோசப்  குருப், அமைச்சரவையின்  10-அம்சத்  தீர்வுக்கு  ஏற்ப  மாநிலச்  சட்டங்களில்  திருத்தம்  செய்வது  பற்றி  கூட்டரசு, மாநில  அரசுகள்  பேச்சு  நடத்தலாம்  என்று  பரிந்துரைத்துள்ளார்.   “இரண்டையும் (10-அம்சத் தீர்வையும்  மாநிலச்  சட்டங்களையும்) இணப்பதற்கு  ஒரு  தீர்வு   காண்பது  குறித்து  விவாதிக்கலாம்”, என்றவர்  …

பிகேஆர் காஜாங் பிரதிநிதி பதவி விலகல்: அங்கு அன்வார் போட்டியிடுவார்?

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல் காலிட்  இப்ராகிம்  பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என்ற  ஊகம்  பரவி  வரும்  வேளையில்  அதற்கு  மேலும்  வலுசேர்ப்பதுபோல்  பிகேஆர்  பிரதிநிதி  ஒருவர்  தம்  சட்டமன்ற  இடத்தைக்  காலி  செய்துள்ளார். காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  சின்  செ, இன்று  பிற்பகல் பெருந் தலைவர்  அன்வார் …

மஇகா ரமணன் பதவி விலகல்

மஇகா  தலைமை பொருளாளர்  ஆர். ரமணன், நான்காண்டுகளுக்குமுன்  உளவியல்  மருத்துவர்  ஒருவரிடமிருந்து   ரிம5 மில்லியன்  மோசடி  செய்து   பெற்றதாக அண்மையில்  உயர்  நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத்  தொடர்ந்து  பதவி  விலகினார். தீர்ப்பை  எதிர்த்து  ரமணன்  மேல்முறையீடு  செய்துள்ளார். அதில்  முடிவு  தெரியும்வரை  அவர்  பதவி  விலகி  இருப்பதாக  உத்துசான்  மலேசியாவின் …

தேவாலயத்துக்குள் மொலடோப் குண்டுகள் வீசி எறியப்பட்டன

இன்று  அதிகாலை  பினாங்கு  லெபோ  பார்க்குவார்  அஸ்ஸம்ஷன்  தேவாலயத்துக்குள்  பெட்ரோல்  குண்டுகள்  வீசி  எறியப்பட்டன. அதிகாலை  1.30 மணி அளவில்  மோட்டார்  சைக்கிளில்  வந்த  இருவர் இரண்டு பெட்ரோல்  குண்டுகளை  வீசி  எறிந்ததாக  பினாங்கு  போலீஸ்  தலைவர் அப்துல்  ரஹிம்  ஹனாபியை  மேற்கோள்காட்டி  த  ஸ்டார்  ஆன்லைன்  அறிவித்தது.…

சிலாங்கூர் எம்பி பதவியை எடுத்துக்கொள்ளவில்லை: அன்வார் மறுப்பு

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவியை அப்துல்  காலிட்  இப்ராகிமிடமிருந்து   எடுத்துக்கொள்ளப்போகிறார்  என்று  உலவும்  செய்தியை மறுத்தார்.  அதை வெறும்  ஊகம்  என்று  ஒதுக்கித்தள்ளிய  அன்வார்,  கடந்த  வாரம்  காலிட்டைச்  சந்தித்தது  அவரது  பதவி  விலகல்  பற்றிப்  பேசுவதற்கு  அல்ல  என்றார். “ஒவ்வொரு …

அல்லாஹ் சர்ச்சைமீது நோ-காலிட் விவாதம் இரத்து

‘அல்லாஹ்’ சர்ச்சை  தொடர்பில்  சிலாங்கூர்  அம்னோ  தலைவர்  நோ  ஒமாருக்கும்  மாநில  பாஸ் தலைவர்  காலிட்  சமட்டுக்குமிடையில்  நடைபெறவிருந்த  விவாதம்  இரத்துச்  செய்யப்பட்டது.  மலாய்   நாளேடான   சினார்  ஹரியான்  ஏற்பாட்டில் இன்று  பிற்பகல்  மணி  2க்கு  அது  நடப்பதாக  இருந்தது. ஆனால், அது  இரத்துச் செய்யப்படுவதாக  நேற்றிரவு  அறிவிக்கப்பட்டது. …

பெர்னாஸை பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்படுவதை முக்ரிஸ் தடுக்க வேண்டும்

பாடிபிராஸ்  நேசனல்  பெர்ஹாட் (பெர்னாஸ்)-டைப்  பங்குச்சந்தை  பட்டியலிலிருந்து  அகற்றும்  முயற்சியை  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர்  தலையிட்டுத்  தடுக்க வேண்டும்  என்று  வலியுறுத்தப்பட்டுள்ளது.  மலேசியாவின்  நெற்களஞ்சியம்  என்று  போற்றப்படும்  மாநிலத்தின்  விவசாயிகளைப் பாதுகாக்க  அது  அவசியம்  என  அலோர்  ஸ்டார்  எம்பி  குய்  ஹிஸியாவ்  லியோங்  கூறினார்.…

பதற்ற நிலைக்கு பினாங்கு அம்னோ காரணமல்ல

பினாங்கு  அம்னோ, அங்கு பதற்றமிக்க  சூழல்கள்  உருவானதற்கு  அதுதான்  காரணம்  என்று  கூறப்படுவதை  மறுத்துள்ளது.  ஆனால்,  பதற்றத்தை  உண்டுபண்ணியவர்களின்  மனநிலையைப்  புரிந்துகொண்டிருப்பதால்  அவர்களுக்கு  ஆதரவளிப்பதாக  அது  கூறிக்கொண்டது.  செபராங்  ஜெயாவிலும்  அல்மாவிலும் நடந்த  பேரணிகளுக்கும்  தனக்கும்  தொடர்பில்லை  என்று  கூறிய  அது,  ஜனவரி  18  பேரணியில்,  ‘டிஏபி  தலைவர்களின் …

தம்மை தாக்கிய அம்னோகாரரை மன்னித்து விட்டார் கமலநாதன்

  தம்மை தாக்கிய உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு உதவி செயலாளர் முகமட் ரிஸுவான் சுகாய்மியை துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் மன்னித்து விட்டார். இவ்விவகாரம் தமக்கும் அவருக்கும் இடையிலானதாகும். நடந்த சம்பவம் நோக்கமற்ற உணர்ச்சி வசப்பட்ட செயல் என்று அவர் கூறினார்.

பதற்ற நிலை மே 13 அளவை நெருங்கி விட்டது, அன்வார்…

  இந்நாட்டில் பதற்ற நிலை மே 13 க்கு முந்திய கலவர அளவை எட்டியுள்ளது என்று கூறிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆளும் கூட்டணியுடன் ஒரு தேசிய உடன்பாடு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். "மே 13, 1969 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தேசிய பேரிடருக்குப் பின்னர் இப்போது…

“சுகாதாரமற்ற” சூழ்நிலையால் உதயகுமார் பாதிக்கப்பட்டுள்ளார்

  காஜாங் சிறைச்சாலையில் நிலவும் சுகாதாரமற்ற சூழ்நிலையால் தாம் சொறி சிரங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப்பும் உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடியும் தலையிட வேண்டும் என்றும் ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். மரண தண்டணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதில் ஜனவரி 15 ஆம்…

பாஸ் இளைஞர்: காலிட்-அஸ்மின் மோதல் பக்கத்தானின் தோற்றத்தை பாதித்துள்ளது

  சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவருக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் பக்கத்தானுக்கு பாதகமான விளம்பரத்தை தரும் என்பதால் அவர்கள் தங்களுக்கிடையிலான வேறுபாட்டை களைய வேண்டும். இன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர்…

“அல்லா” தடை சட்டங்கள் முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தாது

  தமது 10 அம்சத் திட்டம் முஸ்லிம்-அல்லாதவர்கள் 'அல்லா' என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மாநில சட்டங்களுக்கு ஆட்பட்டது என்று பிரதமர் நஜிப் அறிவித்த அடுத்த நாள் அச்சட்டங்களுக்கு முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். "மாநிலங்களின்…

பேரணி வேண்டாம் என்ற குவான் எங்-கின் வேண்டுகோளை என்ஜிஓ-கள் புறக்கணித்தன

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,   நாளை  செபராங்  ஜெயாவில்  விலை  உயர்வுக்கு  எதிராக சில  என்ஜிஓ-கள் ஒன்றுசேர்ந்து  திட்டமிட்டிருக்கும்  பேரணியைத்  தள்ளிவைக்குமாறு  அறிவுறுத்தியிருப்பதாக  அறியப்படுகிறது.  என்ஜிஓ-கள் லிம்மின்  அறிவுரையை  மதிக்கிறார்கள் என்று  கூறிய  மாநில  ஜிங்கா 13  ஒருங்கிணைப்பாளர்  அமிஸுடின்   அஹ்மாட்,  அத்தியாவசிய  பொருள்களின்  விலை  உயர்ந்திருப்பதை …

சீபோர்ட் பள்ளி மாணவர்களை மிரட்டும் வேலையை நிறுத்துக

கல்வி  அமைச்சும்,  மாநிலக்  கல்வித்  துறையும், சீபோர்ட்  பள்ளி  மாணவர்கள்  புதிய  பள்ளிக்கு  இடமாறிச்  செல்ல மறுத்தால்  அவர்கள்  பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள்  என்று  மிரட்டுவதை  நிறுத்த  வேண்டும். புதன்கிழமை மாநிலக்  கல்வி  இயக்குனர்  மஹ்முட்  கரீம்,  அவ்வாறு  மிரட்டியதாகக்  கூறப்படுகிறது. “மாநிலக்  கல்வித்  துறை  இப்படி  மிரட்டுவதை  விடுத்து …

சாபா ஆர்சிஐ அறிக்கை: தாக்கல் செய்வதில் மேலும் தாமதம்

சாபா  கள்ளக்குடியேறிகள்  மீதான  அரச  விசாரணை  ஆணைய  அறிக்கை கடந்த  டிசம்பர்  மாதத்தில்  தாக்கல்  செய்ப்பட்டிருக்க  வேண்டும். அது  முழுமை  பெறவில்லை  என்பதால்  அதை முடித்துக்  கொடுக்க மேலும்  மூன்றுமாதகால  அவகாசம்  வழங்கப்பட்டது. அதன்படி  இவ்வாண்டு  மார்ச்  24-க்குள் ஆணையம்  அறிக்கையைத்  தாக்கல்  செய்ய  வேண்டும், ஆணையத்துக்கு  இதுவரை …

அல்லாஹ் விவகாரத்தில் நஜிப்பின் நிலைப்பாட்டைச் சாடியது பெர்காசா

மலாய்க்காரர்  உரிமைக்காகக்  குரல்கொடுக்கும்  பெர்காசா     பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மீது  ஆத்திரம்  கொண்டுள்ளது.  கிறிஸ்துவர்கள்  ‘அல்லாஹ்’  என்னும் சொல்லைப்  பயன்படுத்துவதை  அவர்  கடுமையாகக்  கண்டிக்கவில்லையாம்.  அல்லாஹ்  விவகாரத்தில்  தொடர்ந்து  சர்ச்சை  நிலவிவரும்  வேளையில்  இதுவரை  மவுனமாக  இருந்த  நஜிப்,  நேற்று அம்னோ  உச்சமன்றக்  கூட்டத்துக்குப்  பின்னர் செய்தியாளர்களைச் …

இப்போது போலீஸ், டி-சட்டை அச்சடிப்பவர்களைக் குறி வைக்கிறது

புத்தாண்டின்போது  விலைவாசி  உயர்வை  எதிர்த்து  ஆர்ப்பாட்டம்  செய்தோர்  அணிந்திருந்த  டி-சட்டையை  அச்சடித்த  ஆடவரிடம்  போலீஸ்  விசாரணை  செய்ததை  சுவாராம்  குறைகூறியது. அதிகாரிகள்  குற்றவியல்  மற்றும்   பாதுகாப்புக்  குற்றங்கள்  சட்ட (சொஸ்மா) த்தில்  இணைக்கப்பட்ட  புதிய  பகுதிகளைப்  பயன்படுத்தி  மக்களை  அச்சுருத்தி  வருவதாக  அது  கூறிற்று. வியாழக்கிழமை  ஜுல்  ரெய்டி …

காடிர்: பிரதமர் மாற வேண்டும்; இல்லையேல் மாற்றப்படுவார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  போக்கை  மாற்றிக்கொண்டு  மக்களின்  சுமையைக்  குறைக்க  சரியான  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும்,  தவறினால்  பிஎன்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  கவிழ்ந்து  விடும்  என  அப்துல்   காடிர்  ஜாசின்  தம்  வலைப்பதிவில்  எச்சரித்துள்ளார். பெரித்தா  பப்ளிஷிங்  சென்,  பெர்ஹாட்டில்  தலைமை  செய்தியாசிரியராக  உள்ள…

ரோன் 95 ஏழைகளை மட்டுமே என்று சொல்லவில்லை: கேஜே-யும் கூ…

ரோன் 95  பெட்ரோலை  ஏழைகளுக்கு  மட்டுமே  விற்பதென  அரசாங்கம் வரையறுக்கப்  போவதாகக்  கூட்டரசுப்  பிரதேச  அமைச்சரை  மேற்கோள்காட்டி  நாளேடுகளில்  வெளிவந்த  செய்திகளை  இளைஞர்,  விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  அபு  பக்கார்  மறுத்தார். தெங்கு  அட்னான்  மன்சூரிடமே  அதைக்  கேட்டுத்  தெரிந்து  கொண்டதாக  கைரி  கூறினார். “குறைந்த  வருமானம் …

புதிய ரயில்வண்டிகளால் கேஎல் மொனோரெயில் உருமாறும்

இன்று   நான்கு-பெட்டிகள்  கொண்ட  12 புதிய ரயில்வண்டிகள்  வந்துசேர்வதைத்  தொடர்ந்து  கேஎல்  மொனோரெயில்  சேவை  உருமாறப் போகிறது.  புதிய  ரயில்வண்டிகளால்  மொனோரெயிலின்  பயணிகளை ஏற்றிச்செல்லும்  திறன் 214-லிருந்து  430 ஆக  அதிகரிக்கும்  என ஷியாரிகாட்  பிராசரானா  நெகாரா பெர்ஹாட்  ஓர்  அறிக்கையில்  கூறியது. இதனால் இனி  மொனோரெயில்களில் இப்போது …