கையூட்டு கேட்ட டிஏபி ஆள் யார்? Banner King நிறுவனம்…

பதாதை தயாரிக்கும் நிறுவனம் அதன் இயக்குனரிடம் கையூட்டு கேட்டதாகக் கூறும் நபரை அடையாளம் காட்ட வேண்டும் என டிஏபி எம்பி ஒருவர் “இறுதி எச்சரிக்கை” விடுத்துள்ளார். 2008 பொதுத் தேர்தலின்போது டிஏபி வேட்பாளர் ஒருவர்  Banner King நிறுவனத்திடம் 30 விழுக்காடு கையூட்டு கேட்டதாக அதன் இயக்குனர் சான்…

பெர்சே-க்கு விரைவில் புதிய தலைவர்கள்

தேர்தல் சீரமைப்பு இயக்கமான பெர்சே-க்கு  விரைவில் புதியவர்கள் தலைமையேற்பார்கள். நவம்பர் 30-இல் அதற்கான தேர்தல் நடைபெறும் என பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் கூறினார். “பெர்சேயில் உள்ள என்ஜிஓ-களிலிருந்து அதற்கான நியமனங்கள் செய்யப்பட்டு விட்டன, முடிவு விரைவில் அறிவிக்கப்படும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். தேசிய நிலையில் ஐந்து…

நஜிப்: புரட்சி செய்ய வாங்க, பணம் தருகிறோம்

வாருங்கள், புரட்சி செய்யுங்கள் என்று பிரதமர் நஜிப் ரசாக் மலேசிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சி செய்யலாமா என்றெல்லாம் நினைப்பதற்கு வழி விடாமல், "அராப் வசந்தம்' போன்ற புரட்சியாக இருக்ககூடாது என்று கூறி நஜிப் முந்திக் கொண்டார். இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற உலக சமுதாய வாணிக…

முன்னாள்-இயக்குனருக்குக் கொடுக்கப்பட்ட டத்தோ பட்டம் திரும்பப் பெறப்பட்டது

ஜோகூர் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு இயக்குனர் ஹம்சான் சரிங்காட்டுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ‘டத்தோ’ பட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டரின் உத்தரவின்பேரில் அது உடனடியாக திரும்பப் பெறப்படுவதாக ஜோகூர் அரச மன்றச் செயலாளர் அப்துல் ரஹிம் ரம்லி கூறினார். “ஹம்சான்…

‘அல்லாஹ்’ தீர்ப்பு சாபா, சரவாக் கிறிஸ்துவர்களையும் கட்டுப்படுத்துவதாகவே இருக்கும்

அரசாங்கம் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பில் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சாபா, சரவாக் ஆகியவற்றையும் பாதிக்கவே செய்யும் என்கிறது சரவாக் வழக்குரைஞர் சங்கம். ஏனென்றால், அரசாங்கத்தின் உத்தரவாதம் “சட்டப்படியான ஒன்றல்ல” என அச்சங்கத்தின் தலைவர் கைரில் அஸ்மி முகம்மட் ஹஸ்பி கூறினார்.…

இசி: சுங்கை லிமாவில் ஆவி வாக்காளர்கள் இல்லை

சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் ஆவி வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பிரதமர்துறை அமைச்சரும்  பிஎன் உச்சமன்ற உறுப்பினருமான ஷஹிடான் காசிம், வாக்காளர் பட்டியல் “அடையாளம் காணமுடியாத” வாக்காளர்கள் பலரைக் கொண்டிருப்பதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என இசி தலைவர் அப்துல் அசீஸ்…

மகாதிர்: சாகும்வரை அரசியலை விட்டு விலகமாட்டார் போலிருக்கிறது கிட் சியாங்?

அன்பளிப்புக்களைப் பொருளாகவும் பணமாகவும்  அள்ளிக்கொடுப்பதால் மட்டும் வாக்குகளை வென்றுவிட முடியாது. திங்கள்கிழமை, நடந்துமுடிந்த சுங்கை லிமாவ் இடைத் தேர்தல் பற்றி தம் வலைப்பதிவில் கருத்துக்களை பதிவு செய்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இவ்வாறு கூறினார். “அரசியல் கட்சியின் ஆதரவுக்கு அடிப்படையாக இருப்பவை தலைவர்கள், வேட்பாளர்களின் போராட்டங்களும்…

கர்பால்: பாஸ் கட்சியின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று…

டிஏபி கட்சித் தலைவர் கர்பால் சிங், பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சியான பாஸ் கட்சியின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை என்பதால் அதனிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார். “இன-அடிப்படையில் அமைந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் பதிவை இரத்துச் செய்ய வேண்டும் என்று…

இனத் தீவிரவாதம் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல, முன்னாள் இராஜதந்திரி எச்சரிப்பு

மலேசிய அரசியல் இன மற்றும் சமய தீவிரவாதங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருமானால், அது அதன் பொருளாதாரப் போட்டித் திறனை இழக்கச் செய்யும் என்று முன்னாள் மூத்த இராஜதந்திரி ஒருவர் இன்று எச்சரிக்கை விடுத்தார்.. பல இனங்களையும் பல சமயங்களையும் கொண்ட மலேசியாவில் விவாதங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால்,…

பிஎன் எம்பி: “சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?” என்று கேட்பதை…

வெளிநாட்டு கல்வி தகுதிச் சான்றுகளை அங்கீகரிப்பது குறித்து செய்யப்பட்டுள்ள ஏராளமான புகார்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்து வேண்டும். அதை விடுத்து, தொடர்ந்து சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பாரிசான் பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினரான தியோங் கிங் சிங் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் உரையின் போது கூறினார்.…

பள்ளி, விரைவு பேருந்து கட்டணம்: இன்னும் முடிவுசெய்யப்படவில்லை

நிலப் போக்குவரத்து ஆணையம் (Spad) விரைவுப் பேருந்துகளுக்கும் பள்ளிப் பேருந்துகளுக்குமான கட்டணங்களை இன்னமும் ஆராய்ந்து வருகிறது.  புதுக் கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. புதிய கட்டணங்களை இறுதிசெய்ய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதாக ஸ்பாட் தலைவர் சைட் அமிட் அல்பார் கூறினார். “செய்யும் முடிவு எல்லாருக்கும் திருப்தி…

இனத் தீவிரவாதம் பொருளாதாரத்துக்குக் கேடு: முன்னாள் அரசதந்திரி எச்சரிக்கை

அரசியலில் இன, சமய தீவிரவாதங்களுக்குத் தொடர்ந்து இடமளித்து வந்தால் மலேசியா அதன் பொருளாதார போட்டியிடும் திறனை இழக்கும் என்று முன்னாள் அரசதந்திரி ஒருவர் எச்சரித்துள்ளார். 38 ஆண்டுகளாக அரசதந்திரியாக பணியாற்றி 1998-இல் பணிஓய்வு பெற்றவரான ரசாலி இஸ்மாயில், பல இனங்களையும், பல சமயங்களையும் கொண்ட நாட்டில் அரசியல் வாதங்களும்…

என்எப்சி குத்தகை வழங்கப்பட்டதில் ஏன் கவனக்குறைவு? துணைப் பிரதமர் விளக்க…

நேசனல் பீட்லோட் செண்டர் )என்எப்சி) குத்தகை வழங்கப்பட்டதில் “கவனக்குறைவாக நடந்துகொள்ளப்பட்டது” ஏன் என்பதைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் விளக்க வேண்டும் என  அம்பாங் எம்பி சுரைடா கமருடின் கேட்டுக்கொண்டிருக்கிறார். அக்குத்தகை வழங்கப்பட்டதில் பல கோளாறுகள் நிகழ்ந்திருப்பதாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அதன் 2012 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிய…

எம்பி: மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டும்தான் ஆங்கிலக் கல்வியா?

மலேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்களில் சுமார் 2 விழுக்காட்டினருக்கு மட்டுமே கிடைக்கும் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பு எல்லா தேசியப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என டிஏபி கம்பார் எம்பி கோ சுங் சென் கூறினார். மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரி(MRSM)களுக்குச் செல்லும் மாணவர்கள் மட்டுமே எஸ்பிஎம்,…

முகிலன் மஇகா இளைஞர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார்

மஇகா இளைஞர் பகுதி துணைத் தலைவரான வி.முகிலன்,  இளைஞர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்தார். “கட்சியை வலுப்படுத்தவும் ஒன்றுபடுத்தவும் தலைமைக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.”, என்று பெர்னாமாவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார். முகிலனை எதிர்த்துப் போட்டியிடுபவர் மஇகா…

பாஸ்: ‘ஆவி வாக்காளர்களா?’ பிஎன்னின் கூற்று அபத்தமானது

சுங்கை லிவாவ் இடைத் தேர்தலில் பாஸின் வெற்றிக்கு “ஆவி வாக்காளர்கள்” உதவினார்கள் என்று பிஎன் கூறிக்கொண்டிருப்பதில் உண்மை இல்லை என்று கெடா பாஸ் ஆணையர் மாபுஸ் ஒமார் இன்று கூறினார். “கண்ணில் படாத வாக்காளர்கள்” என்று பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறும் அந்த வாக்காளர்கள் இதற்குமுன் பல…

‘சொல்வதைச் செயலில் காட்டுங்கள்’-கர்பாலுக்கு மசீச பதிலடி

மற்றவர்களைக் குறைசொல்லுமுன்னர் டிஏபி தலைவர் கர்பால் சிங் சொந்த கொல்லைப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூத்த அரசியல்வாதியான கர்பால் “உண்மை நிலையை அறியாதிருக்கிறார்” என மசீச மத்திய செயலவை உறுப்பினர் லொ செங் கொக் சாடினார். இவ்வளவு பேசும் கர்பால் டிஏபி-இல் மலாய்க்காரர்களைக் கூடுதலாக சேர்க்கும்படி கூற வேண்டியதுதானே…

என்எப்சி போன்ற குளறுபடிகளைத் தடுக்க எம்ஏசிசி-இன் பரிந்துரைகள்

நேரடிப் பேச்சுகளின்வழி  கொடுக்கப்படும் குத்தகைகளையும் அக்குத்தகைகளுக்கு வழங்கப்படும் கடன்களையும், அதிலும் “அரசாங்கத்தில் உள்ளவர்களின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட”திட்டங்களை அமைச்சரவை  நுணுகி ஆராய வேண்டும் என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி)  பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நேற்று வெளியிடப்பட்ட அதன் 2012 ஆண்டறிக்கையில்  முன்வைத்துள்ள  எம்ஏசிசி, அதில் ஆதாய முரண் ( conflict of…

கேமரன் மலை வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு ஜ.செ.க-வின் நன்கொடை

அண்மையில் கேமரன் மலையில் நீர் அணைக்கட்டு திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பெர்த்தாம் வேலி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பினாங்கு ஜ.செ.க RM 50,000.00 வெள்ளியை நன்கொடையாக வழங்கியது. இந்நிதியை கேமரன் மலை ஜ.செ.க தலைவரான ஜெ.சிம்மாதிரி, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் லியோங் ஙா, மெந்தகாப்…

புவா: சுப்ரா பொய் சொல்லுகிறாரா அல்லது புரியாமல் பேசுகிறாரா?

பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சுகாதார சேவையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சுகாதார அமைச்சர் கூறியிருப்பதை டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சாடியுள்ளார். டாக்டர் எஸ். சுப்ரமனியம் ஒன்று பொய் சொல்கிறார் அல்லது புரியாமல் பேசுகிறார் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கூறினார்.…

எம்ஏசிசி: என்எப்சி குத்தகை வழங்கப்பட்டதில் பல கோளாறுகள்

விவசாய அமைச்சு, நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டத்துக்கான குத்தகையைத் தொழில்நுட்பமோ, நிதிவசதியோ இல்லாத ஒரு நிறுவனத்துக்கு வழங்கியது என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியுள்ளது. அந்தக் குத்தகை வழங்கப்பட்டதில் பல கோளாறுகள் காணப்படுவதாக அவ்வாணையம் அதன் 2012 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கக் கடன்கள்…

பாஸ் இளைஞர்கள்: ‘செலவுமிக்க’ இடைத்தேர்தல்கள் வேண்டாமே

இடைத் தேர்தல்கள்,  பெரும்பாலும்  “செலவுமிக்கவை” என்பதாலும்  பொதுவளங்களும் வீண் விரயமாகின்றன என்பதாலும் அவற்றைக் கைவிட்டு விடலாம் என்று பாஸ் இளைஞர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஒவ்வொரு இடைத் தேர்தலும் போட்டியிடும் கட்சிகளுக்கு மிகுந்த பொருள்செலவை ஏற்படுத்துகிறது என்று பாஸ் இளைஞர் பகுதி நிர்வாக மன்ற உறுப்பினர் சுஹாய்சான் கயாட் கூறினார். திங்கள்கிழமை…

எம்ஏசிசி-க்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுத்தால் அதிகார அத்துமீறல் நிகழ்ந்து…

அரசாங்கம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கு வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தைக் கொடுக்காது. அது “அதிகார அத்துமீறல்”களுக்கு இடமளித்து விடலாம். இவ்வாறு நாடாளுமன்றத்தில் கூறிய பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், அப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தால் எம்ஏசிசி-யே விசாரணையாளராகவும் வழக்குத் தொடுப்பாளராகவும் ஆகிவிடும் என்பதால் குறுக்கிடு கட்டுப்பாடுகள் ( checks and…