நிதானம் தேவை: அரசு ஊழியருக்கு பிரதமர் அறிவுறுத்தல்

‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தும் விவகாரம் பதற்றமிக்க சூழல் உருவாக்கி இருந்தாலும் அரசுப் பணியாளர்கள் அமைதியாகச் செயல்பட்டு சமூகங்களிடையிலான  பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தினார். இன்று காலை பிரதமர்துறை ஊழியர்களிடையே மாதாந்திர உரை நிகழ்த்திய நஜிப்,  அப்படிப்பட்ட பிரச்னைகள் மிகவும் பாடுபட்டு…

புத்ரா ஜெயாவில் ஹாட்ரோக் கபே? கூடவே, கூடாது: பெர்காசா

புத்ரா ஜெயாவில் ஹாட்ரோக் கபே ஒன்றை நிறுவும் திட்டத்தை பெர்காசா இளைஞர் பகுதி எதிர்க்கிறது. அதன் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ், நேற்று விடுத்த அறிக்கையொன்றில்  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மதினா நகரை அடிப்படையாக வைத்து புத்ரா  ஜெயாவை உருவாக்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார். “எனவே, இஸ்லாத்தை…

523 தமிழ்ப்பள்ளிகள் இருக்குமா? இருக்காதா?

-மு. குலசேகரன், ஜனவரி 5, 2014.  நாட்டிலுள்ள 523 பள்ளிகளில் எந்தப் பள்ளியையும் நாங்கள் மூட விடமாட்டோம் என்று சூளுரைத்தவர்கள் இன்று பேரா மாநிலத்தில் இயற்கை சாவை எதிர் நோக்கியிருக்கும் சுமர் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு என்ன வைத்தியம் செய்து உயிர் கொடுக்கப் போகிறார்கள் ?   இன்னும் புதிதாக…

கிறிஸ்துவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கத்தை மரினா வன்மையாகக்…

  கடந்த ஒரு வார காலமாக கிறிஸ்துவ தேவாலயங்களுக்குமுன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக மிரட்டி வரும் மிதவாத தரப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்காக அரசாங்க தலைவர்களை சமூக ஆர்வலர் மரினா மகாதிர் வன்மையாக கண்டித்தார். செகிரிடேரியட் சோலிடேரிட்டி முஸ்லிம் கிள்ளான் போன்ற முஸ்லிம் அமைப்புகள் கிறிஸ்துவர்கள் அரசாங்கம்…

அச்சுறுத்தல் இருந்தாலும், தேவாலயம் “அல்லா” என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்துகிறது

  ஆர்ப்பாட்டத்திற்கான அச்சுறுத்தல்களுக்கிடையில், கிள்ளான், லேடி ஆப் லூர்ட்ஸ் சர்ச் இன்று அதன் மலாய் மொழி பிராத்தனையில்"அல்லா" என்ற சொல்லை தொடார்ந்து பயன்படுத்தியது. பிராத்தனையின் போது அச்சொல் குறைந்தது நான்கு முறை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், பிராத்தனையின் பெரும் பகுதியில் கடவுளைக் குறிக்கும் "துஹான்" மற்றும் "பாப்பா" என்ற சொற்கள்…

சிலாங்கூர் அம்னோ “அல்லா” எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தடையை மீறியது

  கிறிஸ்துவர்கள் "அல்லா" என்ற சொல்லை பயன் படுத்துவதை எதிர்க்கும் ஆர்பாட்டத்தில் கட்சி உத்தரவையும் மீறி இன்று சிலாங்கூர் அம்னோ உறுப்பினர்கள் கிள்ளானில் பங்கேற்றனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் லேடி ஆப் லூர்ட்ஸ் சர்ச்சின் முன்பு நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு எதிரான கடும் கண்டனங்களைத் தொடர்ந்து,…

தேவாலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கும் துணைப் பிரதமரை நஜிப் கண்டிக்க…

தேவாலயங்களுக்குமுன்  ஆர்ப்பாட்டம் செய்யும் அம்னோவின் திட்டத்துக்குத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆதரவு தெரிவித்திருப்பதை பிரதமர் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும். “பிரதமர் என்ற முறையில் நஜிப்  அப்துல் ரசாக்,  நாட்டில் இன, சமய  இணக்கநிலையை  உறுதிப்படுத்த  வேண்டும்”,  என டிஏபி  தேசிய  உதவித் தலைவர்  தெரெசா  கொக் இன்று…

ஊழலை எதிர்க்கும் புதிய அமைப்பு சி4

ஊழலை எதிர்க்க ஒரு புதிய மையம்- Centre to Combat Corruption and Cronyism (சுருக்கமாக  C4) ஜனவரி 16-இல் தோற்றம் பெறுகிறது.  சமூக ஆர்வலர்கள் பலர் சேர்ந்து அதை அமைக்கிறார்கள். C4 மையத்தைப்  பிரதிநிதித்துப் பேசிய அதன் இயக்குனர் சிந்தியா கேப்ரியல்  சிலாங்கூரில் அது  தோற்றுவிக்கப்படுவதாகக்  கூறினார். …

அதிரடிச் சோதனை ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையா?

மலேசிய பைபிள் கழகம் (பிஎஸ்எம்) மீது அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது,  டிசம்பர் 31 விலை உயர்வு-எதிர்ப்புப் பேரணியிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் ஒரு தந்திரமா? அது  சிலாங்கூர்  அரசுக்கும் தெரியாமல்   மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என மனித உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான சுவாராம் ஒரு அறிக்கையில்…

தேசிய ஒற்றுமையை உருவாக்க பாரிசான் மற்றும் பக்கத்தான் தலைவர்கள் உடனடியாக…

  நடப்பு ஆண்டுடன் மலேசியா உருவாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50 ஆவது ஆண்டில், மிக வருந்தத்தக்க, அதிர்ச்சி அளிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டிற்கும் கடும் மிரட்டல் அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது என்று கூறுகிறார் எதிரணியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங். நேற்று, சிலாங்கூர் இஸ்லாமிய…

பாஸ்: சொந்த சமயத்தை வலுப்படுத்துவீர், மற்றவர்களைக் கட்டுப்படுத்தாதீர்

முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தது அதன் விளைவாக மலேசிய பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது எல்லாமே அரசியல் நோக்கம் கொண்ட செயல்கள்  என பாஸ் கூறியது. சமயத்தைப் பாதுகாப்பது என்றால் அதை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டுமே  தவிர  மற்றவர்களைக்  கட்டுப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது…

த ஹெரால்ட் ஆசிரியரின் பாதுகாப்புக்கு போலீஸ் உத்தரவாதம்

கிள்ளானில் ஒரு தேவாலயத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முஸ்லிம் தரப்புகள் மிரட்டியுள்ள  வேளையில் த ஹெரால்ட் என்னும் கத்தோலிக்க வார இதழின் ஆசிரியர் லாரன்ஸ் அண்ட்ருவின் பாதுகாப்புக்கு போலீஸ் உத்தரவாதம் அளித்துள்ளது. இன்று  காலை, போலீஸ் சிறப்புப் பிரிவு அதிகாரி ஒருவர்   கிள்ளான்  மாவட்ட போலீஸ் தலைமையகத்துத் தம்மை…

மஸ்லான்: இவ்வளவு கடுமையான எதிர்ப்பு தேவையில்லை

உலகில் எந்த நாட்டையும்விட மலேசியாவே மக்களுக்கு  நன்மை செய்யும் திட்டங்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடு என்பதால்  விலை உயர்வுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றவை என்று கூறுகிறார் நிதி துணை  அமைச்சர் அஹ்மட்  மஸ்லான். பெட்ரோல், சீனி, மின்கட்டணம் என  மூன்று மட்டுமே விலை உயர்வைக் கண்டுள்ளன. மறுபுறம், கல்வி,…

பென்ஸ் காருக்கு ரிம100,000 கழிவு என்பது குவான் எங்குக்கு மட்டுமல்ல

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு விற்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்300எல் ரக காருக்கு மிகத் தாராளமாகக் கொடுக்கப்பட்ட ரிம100,000 கழிவு, சலுகைகளை எதிர்பார்த்து கொடுக்கப்பட்ட ஒன்றா என்று கேள்வி எழுந்துள்ளது. அப்படி அல்ல என்று கூறும் விற்பனை நிறுவனம், அது லிம்முக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட சலுகை அல்ல…

‘செங்கல் வாங்குவீர்’இயக்க நிதி ரிம1 மில்லியனைத் தாண்டியது

மலேசியாகினியின் கட்டிட நிதிக்கு ‘செங்கல் வாங்குவீர்’ திட்டத்தின்வழி சேர்ந்துள்ள பணம் 2014, ஜனவரி முதல்நாள் ரிம 1மில்லியனைத் தாண்டியது. “ஒரு மில்லியனை எட்டிப் பிடித்ததை எண்ணி மகிழ்கிறோம். இது வாசகர்களும் ஆதரவாளர்களும் அளித்துள்ள புத்தாண்டு பரிசு”, என மலேசியாகினி செய்தித்தளத்தின் தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறினார்.…

‘பிரதமர் செலவுகளைக் குறைப்பதால் எங்களுக்கு என்ன ஆதாயம்?’

விலை உயர்வுகளைக் கருத்தில் அரசாங்கச் செலவுகளைக் குறைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். 11 நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும் உணவகங்கள், சிறுகடைகள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் அதனால் கவரப்படவில்லை. மலேசியாகினி, கோலாலும்பூர், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் அங்காடி வியாபாரிகள், ஸ்டால் கடைகள், உணவக உரிமையாளர்கள் போன்றோரைச் சந்தித்துப் பேசியதில் அவர்களில் பலர்…

ஆயர்: ஜயிஸ் ஜெஸ்டாபோ போன்று நடந்துகொள்கிறது

கத்தோலிக்க ஆயர்  டாக்டர் பால் டான் சீ இங், நேற்று  சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) அதிகாரிகள்  மலேசிய பைபிள் கழகத்தில் நடத்திய அதிரடிச் சோதனையை,  “கிறிஸ்துவர்களின் சமய உரிமையில் அதிகாரிகளின் அத்துமீறிய தலையீடு அதிகரித்து வருவதைக் காண்பிக்கும்  மற்றுமொரு அத்தியாயம்” என வருணித்தார். “இந்தக் கிறுக்குத்தனத்தை…

மரத்தடியில் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

  சீ போர்ட் தொடக்க தமிழ்ப்பள்ளியின் சுமார் 20 மாணவர்கள் அப்பள்ளிக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் மரங்களின் கீழ் அமர்ந்து தாங்களாகவே கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியை கல்வி இலாகா திடீரென்று கடந்த மாதம் மூடிவிட்டது. இப்பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று இம்மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். 80 ஆண்டுகள்…

ஜயிஸ் சுல்தான்கீழ் செயல்படுகிறது, எம்பி-இன்கீழ் அல்ல

கிறிஸ்துவ அமைப்பு ஒன்றில்  சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்)  அதிரடிச் சோதனை நடத்திய விவகாரத்தில்  சிலாங்கூர் மந்திரி புசார் தலையிட வேண்டும் என்று  கோரிக்கை  விடுப்பவர்கள் விசயம் அறியாமல் பேசுகிறார்கள்  என்கிறார் சட்ட நிபுணர் ஒருவர். ஜயிஸ் மாநில அரசின் கட்டுப்பாட்டில்  இல்லை,  அது சிலாங்கூர்  சுல்தானின்…

மரத்தடியில் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

80ஆண்டுக்காலமாக கிளானா ஜெயாவில் செயல்பட்டுவந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி கடந்த மாதம் இழுத்து மூடப்பட்டது. இப்போது அப்பள்ளி அதே பெயரில் சுபாங், கம்போங் லிண்டோங்கில் இயங்கி வருகிறது. ஆனால்,அது வெகு தொலைவில் இருக்கிறது என்றுகூறி  கிளானா ஜெயா பெற்றோர்  தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்ப மறுக்கின்றனர். அப்பள்ளி கிளானா ஜெயாவுக்கே …

‘கொல்ல’த் தூண்டும் முப்திக்குக் கடும் கண்டனம்

புத்தாண்டுக்கு முதல்நாள் இரவில் டாட்டாரான் மெர்டேகாவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிய பேராக் முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவுக்கு எதிராக டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரைப் ‘போப்பாண்டவர்’ ஹருஸ்ஸானி என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வி மரினா மகாதிர் (இடம்).…

ஜயிஸ், பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை: மலாய்மொழி பைபிள்கள் பறிமுதல்

சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்), மலேசிய பைபிள் கழகத்தில்(பிஎஸ்எம்) அதிரடிச் சோதனை நடத்தி அங்கிருந்த  மலாய்மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது. மலேசியாகினி, பிஎஸ்எம் தலைவர் லீ முன் சூனைத் தொடர்புகொண்டு பேசியபோது இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள்  16 பெட்டிகளில் இருந்த 321 பைபிள் பிரதிகளை எடுத்துச்…

அல்லாஹ் சொல் தொடர்பில் த ஹெரால்ட் ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

சிலாங்கூர்  தேவாலயங்களில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதன்  தொடர்பில்  த ஹெரால்ட் வார இதழ் ஆசிரியர்  பாதர் லாரன்ஸ் அண்ட்ருவை போலீசார் விசாரணைக்கு அழைப்பர். அச்சொல் மாநில தேவாலயங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என அண்ட்ரு கூறியிருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்துடனும் ஆலோசனை கலக்கப்படும்  என  சிலாங்கூர்…