திரங்கானுவின் மராங்கில் இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, பள்ளிகளில், குறிப்பாக விடுதிகள் உள்ள பள்ளிகளில், மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளை மறுபரிசீலனை செய்யுமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளி அமைப்புகளும் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
‘நண்பர்கள் சஞ்சீவனைச் சுட்டனர்’ என்ற செய்தியை போலீஸ் தலைவர் மறுக்கிறார்
மை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவனை 'நண்பர்கள்' சுட்டனர். கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலைக்காரர்கள் அல்ல எனத் தாம் சொன்னதாகக் கூறும் செய்தியை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் மறுத்துள்ளார். விசாரணைகள் தொடருகின்றன என்று மட்டுமே தாம் குறிப்பிட்டதாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். "அந்த…
விற்பனைச் சந்தைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: மைக்கி
மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கக் கூட்டிணைப்பு (மைக்கி), அரசாங்க ஆதரவுடன் நடக்கும் அனைத்துலக விற்பனைச் சந்தைகளால் தங்களுக்கு இழப்புகள் ஏற்படுவதாகக் கூறும் வியாபாரிகளுக்கும் வணிகர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது. அந்தச் சந்தைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மைக்கி தலைவர் கே.கே. ஈஸ்வரன், அதைப் பிரதமர் நஜிப்…
பிரதமர்: குற்றத்தை எதிர்க்க போலீசுக்கு தேவையான அனைத்தும் கொடுக்கப்படும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்கம் குற்றச்செயல்களைக் குறிப்பாக கடுமையான குற்றங்களை எதிர்ப்பதற்கு போலீசுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறது என்று கூறினார். துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருவது பற்றிக் கவலை தெரிவித்த அவர், அது மக்களின் நம்பிக்கையைப் பாதித்து அச்சத்தை அதிகரித்துள்ளது என்றார். மக்களின்…
சொய் லெக்: ஆசிரியர்களுக்கு மலேசிய நாகரிகம் பற்றிக் கற்றுக் கொடுங்கள்
கல்வி அமைச்சு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் வலியுறுத்தியுள்ளார். முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இனங்கள் தனித்தனியே பிரிந்து நிற்பதற்குக் காரணமாக இருப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் சொன்னார். மலேசியாகினியிடம் பேசிய அவர்,…
இஸ்லாம் அல்லாத பிற வழிபாட்டு மையங்களுக்கு ஆலோசனை மன்றம்
கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு, இஸ்லாம் அல்லாத பிற வழிபாட்டு மையங்களுக்கு ஆலோசனை மன்றம் ஒன்றை அமைக்கும். அந்த மையங்களைக் காலி செய்வதற்கான நோட்டீஸ்கள், அவற்றைக் கட்டுவதற்கான பகுதிகளை உறுதி செய்வது போன்ற விஷயங்களை அந்தக் குழு ஆராயும் என அதன் துணை அமைச்சர் ஜே லோக பாலன்…
‘balik China, India’ எனச் சொன்னதாக கூறப்படுவதை கல்வி அமைச்சு…
இடைநிலைப் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் ஒருவர் இனவாதக் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரிக்கும் என கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன் அறிவித்துள்ளார். அந்த விவகாரம் அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என்றும் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் அவர் அவ்வாறு…
சுப்ரா நிகழ்வைப் புறக்கணித்ததாக கூறப்படுவதை பினாங்கு மஇகா தலைவர் மறுக்கிறார்
புக்கிட் ஜம்புலில் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் நேற்றிரவு நடத்திய நிகழ்வில் மாநில மஇகா தலைவர் எஸ் கருப்பண்ணனும் பல கிளைகளும் கலந்து கொள்ளாதது 'புறக்கணிப்பு' நடவடிக்கை என்னும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நிகழ்வைத் தாம் புறக்கணித்ததாக கூறப்படுவதை தொடர்பு கொள்ளப்பட்ட போது கருப்பண்ணன் மறுத்தார். தாம்…
டிஏபி-இன் சிஇசி செல்லாதென ஆர்ஓஎஸ் முடிவு, ஆனால் கடிதம் கொடுக்கப்படவில்லை
டிஏபி, அதன் மத்திய செயலவை (சிஇசி) தேர்தல் செல்லாது என சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) எழுத்துப் பூர்வமாக தெரிவிக்குமுன்னர் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி அதை அறிவித்ததால் கொதிப்படைந்துள்ளது. அஹமட் ஜாஹிட் நேற்று புத்ரா ஜெயாவில் நோன்பு திறக்கும் நிகழ்வு ஒன்றில் அதை அறிவித்தார். “அதைத் தெரிவிக்கும் ஆர்ஓஎஸ்…
இன ரீதியாக வேறுபடும் ( racial polarisation ) போக்கு…
அரசாங்கம் நல்ல நோக்கத்துடன் எடுக்கும் முயற்சிகள்- இன ரீதியாக வேறுபடும் போக்கினால் இனப் பிரச்னைகளாகி விடுவது குறித்து துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கவலை தெரிவித்துள்ளார். எடுத்துக்காட்டுக்கு 2013-2015 கல்வி மேம்பாட்டுப் பெருந்திட்டம் 'நல்ல நோக்கங்களை' கொண்டிருந்த போதிலும் அதனை சீனக் கல்விப் போராட்ட அமைப்பான டோங் ஜோங்…
‘மலேசியாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது’
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பெருகி வருவதைத் தொடர்ந்து மலேசியாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதோ என என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று கவலை கொண்டுள்ளது. மலேசியா பாதுகாப்பான நாடு என்ற கருத்தைத் துப்பாக்கிக் குண்டுகள் தவிடு பொடியாக்கிவிட்டன. “உள்துறை அமைச்சும் போலீசும் நாடு பாதுகாப்பாக இருப்பதாக சொல்கின்றன. ஆனால், மக்கள் பயப்படுகிறார்கள்.…
பெர்க்காசா: ‘புதுக் கிராமம்’ மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை மேம்படுத்தினால் அதனைத்…
'புதுக் கிராமம்' திரைப்படத்தில் கம்யூனிசத்தைப் புகழும் அம்சங்கள் உண்மையில் இருந்தால் அதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் எனப் பெர்க்காசா கூறுகின்றது. "அந்தத் திரைப்படத்தில் கீழறுப்பு அம்சங்கள் இருந்து அது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை மேம்படுத்தினாலும் அதனைப் புகழ்ந்தாலும் அது முற்றாகத் திரையிடப்படுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்," என…
‘balik India, China’ விவகாரத்தில் விரைவான நடவடிக்கை தேவை என…
தமது பள்ளிக்கூடத்தில் உள்ள சீன, இந்திய மாணவர்களை 'இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்' எனக் கூறிய தலைமை ஆசிரியையை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு கெரக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தலைமை ஆசிரியை அந்த வார்த்தைகளை சொல்லியிருப்பதை விசாரணைகள் கண்டறிந்தால் அவரை நீக்கவும்…
சிலாங்கூர் அம்னோ: கேண்டீன் பற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை தேசநிந்தனைச் சட்டத்தின்…
ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி குளியலறை கேண்டீன் சர்ச்சையை பெரிதுபடுத்தியதற்குப் பொறுப்பான பெற்றோர்களை 1948ம் ஆண்டுக்கான தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனச் சிலாங்கூர் அம்னோ கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு வேண்டுகோள் விடுத்த சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் நோ ஒமார், அந்தப் பள்ளிக்கூடத்தின்…
போலீசின் வேலை குற்றத்தை எதிர்ப்பது; பிஎன் எதிரிகளைத் துரத்திக்கொண்டிருப்பதல்ல :டிஏபி
போலீஸ் படை குற்ற-எதிர்ப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிஎன்னின் அரசியல் எதிரிகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், குற்றத்தடுப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையை 14 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.…
தர்மேந்திரனைக் கொலை செய்ததாக ஹரிகிருஷ்ணன்மீது குற்றச்சாட்டு
போலீஸ் காவலில் இருந்த என்.தர்மேந்திரனைக் கொன்றதாக இன்ஸ்பெக்டர் எஸ்.ஹரிகிருஷ்ணன்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஹரிகிருஷ்ணன் அவ்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நாலாவது நபராவார். வழக்கு விசாரணைக்கான நாள் பிண-பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னர் முடிவுசெய்யப்படும் என நீதிபதி நூர் அமினாதுல் மர்டியா முகம்மட் நூர் கூறினார். அது ஆகஸ்ட் 2…
அதிகார அத்துமீறல் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூன்று…
பல மில்லியன் ரிங்கிட் பெறும் உணவுத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட அதிகார அத்துமீறல் எனக் கூறப்படுவது மீதான விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூன்று முன்னாள் உயர் அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. அந்த மூவரும் நிறுவனத்தில் இயக்குநர், தலைமை…
அமைச்சரவை நியமனங்கள் மீது கேள்வி எழுப்பும் முயற்சியில் குலசேகரன் தோல்வி
இரண்டு அமைச்சர்களும் மூன்று துணை அமைச்சர்களும் செனட்டர்களாகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு முன்னரே நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவதற்கு அனுமதி கோரி டிஏபி ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் சமர்பித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஸாலேஹா யூசோப் நிராகரித்துள்ளார். நியமனங்களும் பதவி ஏற்பு…
பெயரில் என்ன இருக்கிறது ? கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் தான்
'ரோஜாப் பூவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது மணக்கும். அது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் எல்லாம் ஒன்றே தான்.' கைரி: கம்யூனிஸ்ட் கட்சி மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை போன்றதல்ல பார்வையாளன்: 'புதுக் கிராமம்' என்ற அந்தத் திரைப்படம் பற்றி மற்றவர்களைப் போல…
சுகாதார அமைச்சர்: பினாங்கு மருத்துவர்கள் இனவாதிகள் அல்ல
பினாங்கில் மலாய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இனவாத மருத்துவர்கள் 'மறுத்துள்ளதாக' கூறப்படும் புகார்களை சுகாதார அமைச்சு விசாரித்துள்ளது. அந்த விஷயத்தில் இனவாத அம்சம் ஏதுமில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறியுள்ளார். "அது இனவாதமாகத் தெரியவில்லை. என்றாலும் தொடர்புகள் மோசமாக இருந்ததற்கான அம்சங்கள் காணப்படுகின்றன. மருத்துவர்கள்…
தந்தை: அவர்கள் சஞ்சீவனைக் கொல்ல முயலுவர் என நான் எதிர்பார்க்கவில்லை
மை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் கொலை முயற்சிக்குப் பின்னர் செர்டாங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் வேளையில் அவரது நண்பர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். சஞ்சீவனுடைய சக தோழரும் அந்த குற்றச் செயல் கண்காணிப்பு அமைப்பின் ஆலோசகருமான எஸ் கோபி கிருஷ்ணன், மருத்துவமனைக்குச்…
அமைச்சர், துணை அமைச்சர்கள் நியமனம் சட்டப்படிச் செல்லுமா? நாளை விசாரணை
கடந்த மே மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக (செனட்டர்களாக) இல்லாத ஐவர் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது சட்டப்படிச் செல்லாது என்று டிஎபி பாரட் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அமைச்சர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அப்துல் வாஹிட் ஒமார் மற்றும் பால் லோ…
உதயாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லையா? மறுக்கிறது சிறைத்துறை
பி. உதயகுமாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஒரு நாளேட்டிலும் வலைப்பதிவிலும் வெளிவந்த தகவலை சிறைத்துறை மறுத்துள்ளது. உதயகுமார் நீதிமன்றத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி என்று சிறைத்துறை கொள்கைப்பிரிவு துணை இயக்குனர் சுப்ரி ஹஷிம் கூறினார். மற்ற கைதிகள் போலத்தான் அவரும். “சிறை மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக்கு…
எச்எம் மாணவர்களை நோக்கி ‘பாலேக் இந்தியா, பாலேக் சீனா’ என்றாராம்
குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஓயவில்லை. அதற்குள் ஷா ஆலம் இடைநிலைப் பள்ளி ஒன்றில் கடந்த திங்கள்கிழமை ஒரு தலைமையாசிரியர் மாணவர்களை இன ரீதியாக இழிவுபடுத்தியுள்ளார். “தாம் உரையாற்றிக்கொண்டிருந்தபோது மாணவர்கள் அதிகம் சத்தமிட்டதால் தலைமையாசிரியர் சினமடைந்தார். “எல்லா மாணவர்களையும் திட்டிய அவர் இந்திய, சீன மாணவர்களை…


