கெடா காவல்துறை தெரிவித்ததாவது, குழந்தையில்லாத திருமணமான தம்பதியரிடம் தனது புதிதாகப் பிறந்த குழந்தையைப் பதிவு செய்வதற்காக, அதன் உயிரியல் தாய்க்கு ரிம 8,000 பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் தெரிவித்ததன்படி, அந்தக் குழந்தை தற்போது கெடா மாநிலம், சுங்கை பட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில், கோலா…
உயர்த்த வேண்டியது பணித்திறனை சொத்துவரியை அல்ல
கோலாலும்பூர் மாநராட்சி மன்றம்(டிபிகேஎல்) வரிகளை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதை விடுத்து பணித்திறனை உயர்த்த வழிவகை கண்டறிய வேண்டும் என்கிறார் கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் தலைவர் கைரில் நிஜாம் கைருடின். டிபிகேஎல், சிலாங்கூர் ஆகியவற்றின் வருமானம் ஏறத்தாழ சமம்தான் (முறையே ரிம1.69 பில்லியன், ரிம1.63 பில்லியன்). கோலாலும்பூரைக் காட்டிலும்…
ஆலயம் புதிய கட்டிடத் திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்தது
ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம், மேலும் உடைபடாமல் இருக்கவும் கோலாலும்பூர் மத்தியில் இந்துக்களின் வழிபாட்டு மையமாக தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தவும் புதிய திட்டங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஆலய நிர்வாகம் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரைச் சந்தித்துப் பேசியது என அதன் ஆலோசகர் எம்.மனோகரன் கூறினார். “குறுகிய…
ஷியாக்களுடன் தொடர்பில்லை என்றால் மாட் சாபுதான் அதை நிரூபிக்க வேண்டும்
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவுக்கு ஷியாக்களுடன் தொடர்புண்டு என்று கூறி அது உண்மை என்பதற்கு 10 சான்றாதாரங்களையும் உள்துறை அமைச்சு முன்வைத்துள்ளது. அது உண்மையல்ல என்றால் மாட் சாபுதான் அதை நிரூபிக்க வேண்டும் என அமைச்சின் சமய விவகார அதிகாரி உஸ்டாஸ் ஸ்மிஹான் மாட் ஸைன் அல்…
ஜிஎப்ஐ அறிக்கையை அரசாங்கம் மறுக்கவில்லை ஆனால் அதில் ஊழல் என்பது…
குற்றச்செயல்கள், ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றின் மூலமாக 2011-இல் ரிம173.84 பில்லியன் மலேசியாவிலிருந்து வெளியேறியது என நிதியியல் கண்காணிப்பு அமைப்பான Global Financial Integrity(ஜிஎப்ஐ) மதிப்பிட்டிருப்பதை “மறுக்கவில்லை” என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதில் ஊழல் சம்பந்தப்பட்ட பணம் ஒரு சிறு பகுதிதான். ரிம173. 84 பில்லியனில் ஊழல்…
அரசியல் எதிரிகளின் சம்பள உயர்வுக்கு அம்னோ பிரதிநிதிகள் ஆதரவு
பினாங்கு சட்டமன்றத்தில் ஓர் ஆச்சரியம். அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பரம வைரிகளான முதலமைச்சர் லிம் குவான் எங்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சம்பள உயர்வு பெறுவதற்கு ஆதரவு அளித்தனர். சம்பள உயர்வுமீதான விவாதத்தில் பேசிய முகம்மட் பாரிட் சாஆட் (பிஎன் -பூலாவ் பெத்தோங்), லிம்முக்கு எல்லாச் சட்டமன்ற உறுப்பினருக்கும்…
ஷியா விவகாரத்தில் பாஸ் அதன் துணைத்தலைவர் மாட் சாபுவுக்கு முழு…
முகம்மட் சாபு ஷியா கொள்கையைப் பின்பற்றுபவர் என்பதற்கு உள்துறை அமைச்சு பத்து ஆதாரங்களைப் பட்டியல் போட்டுக் காட்டினாலும் பாஸ் அதன் துணைத் தலைவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. அது முன்வைத்த ஆதாரங்கள் “பலவீனமானவை” என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி(இடம்) கூறினார். “ஏதோ வலுவான ஆதாரங்களைக்…
ஆர்ப்பாட்ட- வெறி வேண்டாம்: ஆத்திரம்கொண்ட கோலாலும்பூர் மக்களுக்கு கூ நான்…
கோலாலும்பூர் மாநராட்சி மன்றம் (டிபிகேஎல்) சொத்துமதிப்பீட்டு வரி உயர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி வரும் சொத்துடைமையாளர்கள் தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவுறுத்தியுள்ளார். சொத்துமதிப்பீட்டு வரி தொடர்பான புகார்களையும் பின்னூட்டங்களையும் பரிசீலிக்க அவகாசம் தேவை…
குவான் எங் ஒரு சர்வாதிகாரி -அம்னோ எம்பி
பினாங்கில் வீடு வாங்குவோர் குறிப்பிட்ட காலத்துக்குள் வாங்கிய வீட்டை விற்பதற்குத் தடைபோடும் புதிய விதிமுறை முதலமைச்சர் லிம் குவான் எங் ஒரு சர்வாதிகாரி என்பதை உறுதிப்படுத்துகிறது என அம்னோ தலைவர் ஒருவர் கூறினார். சொத்துடமை என்பதுதான் மக்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வதற்கான ஒரே வழி என்றுகூட சொல்லலாம் என…
நஜிப், ரோஸ்மா பற்றிக் கட்டுரை எழுதியதால் ஹீட் பத்திரிகைக்கு பிரச்னை?
பத்திரிகைகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாரி இறைத்துச் செலவு செய்வது பற்றியோ அவரின் துணைவியாரின் ஆடம்பர வாழ்க்கைமுறையைப் பற்றியோ விமர்சித்தால் தொல்லைதான் போலும். த ஹீட் வார இதழ் நவம்பர் மாதம் “அனைவர் கண்களும் வாரி இறைத்துச் செலவு செய்யும் நஜிப்பின்மீது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை…
ஷியாக்களை எதிர்க்க ‘ஷியாரியா’ போலீஸ் அமைக்கலாமா என ஜாஹிட் ஆலோசனை
ஷியா கொள்கைகள் உள்பட மாறுபட்ட போதனைகளின் பரவலைத் தடுக்க தனி போலீஸ் பணிப்படை ஒன்றை அமைக்கலாமா என்பதை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஆராய்வார். அது பற்றி பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோமுடன் கலந்து பேசப்போவதாக அஹ்மட் ஜாஹிட் நேற்றிரவு பெர்னாமாவிடம் தெரிவித்தார். “தவறான போதனைகளைப்…
செர்டாங் மருத்துவமனை தொடர்பில் குத்தகையாளர் விசாரிக்கப்படுவார்
செர்டாங் மருத்துவமனையில் உள்கூரை இடிந்து விழுந்த சம்பவங்களுக்கு குத்தகையாளர் பொறுப்பாக்கப்பட்டு சேதங்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடுப்பது பற்றி அரசாங்கம் ஆராயும். மருத்துவமனையில் சீரமைப்பு வேலைகளுக்கும் கட்டிடப் பராமரிப்புக்கும் ரிம30 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். 2011 தொடங்கி குறைந்தது ஏழு தடவை அம்மருத்துவமனையின்…
எம்டியுசி தேர்தல்: ஊழல் குற்றச்சாட்டுகள்
இப்போதெல்லாம் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) ஒரு துடிப்பான தொழிலாளர் அமைப்பாக இல்லை என்றாலும், எதிர்வரும் டிசம்பர் 22 இல் நடைபெறவிருக்கும் அதன் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் அரசியல் ஆட்டங்களுக்கும் குறைவில்லை எனத் தெரிகிறது. எம்டியுசியின் கடந்த 2011 ஆண்டு தேர்தலில் அப்போதைய மூத்த தலைவர் சைட்…
2014-இல், மலேசியர்களுக்கு சிரமம்தான்
2014, மலேசியர்களுக்கு ஒரு சிரமமான ஆண்டாகத்தான் இருக்கும். இது, ஜோதிடமல்ல. உலகப் பொருளகம் கூறும் ஆருடம். அரசாங்கம் தொடர்ந்து உதவித் தொகையைக் குறைத்துக்கொண்டும் மற்ற கொள்கைகளை அமல்படுத்திக்கொண்டும் வந்தால் குடும்ப வருமானம் பெரிதும் பாதிக்கப்படும் என அப்பொருளகத்தின் பொருளாதாரக் கண்காணிப்பு அறிக்கை கூறுகிறது. பந்துவான் ரக்யாட் 1மலேசியா (பிரிம்)…
2014 ‘விலை உயர்வு ஆண்டாக’ விளங்கும்
பிஎன் 2014-ஐ‘விலை உயர்வு ஆண்டாக்க’ திட்டம் போட்டுவைத்துள்ளது. இவ்வாறு கூறிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிசி ரம்லி, அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் போக்குவரத்துக் கட்டணங்கள் உயரும் சாத்தியம் இருப்பதே இதற்குத் தக்க சான்று என்றார். இது, 2015, ஏப்ரல் முதல் தேதி பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலுக்கு…
ஒப்ஸ் சாண்டாஸில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்
நாட்டின் கடும் குற்றவாளிகளைக் களையெடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் சாண்டாஸ் நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். 30 விழுக்காட்டினர் இந்தியர்கள். இவர்கள் போக மற்றவர்கள் சீனர்களும் இதர இனத்தவருமாவர். ஆகஸ்ட் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட அந்நடவடிக்கையில் 1.1மில்லியன் சந்தேகப்…
லிட்டல் இந்தியா பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள்
சிங்கப்பூரில், ஞாயிற்றுக்கிழமை கலவரம் நடந்த லிட்டல் இந்தியா பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பல இடங்களிலும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு கேமிராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டதை அப்பகுதிவாழ் மக்களும் வர்த்தக நிறுவனங்களும் பெரிதும் வரவேற்கின்றனர். வார இறுதிகளில் அப்பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த கண்காணிப்பு கேமிராக்கள் தேவை என்பதை அவர்கள் நெடுங்காலமாகவே…
உதயகுமாரின் மேல்முறையீடு ஜனவரி 15-இல் விசாரணைக்கு வருகிறது
இண்ட்ராப் நடப்பில் தலைவர் பி.உதயகுமார், அரச நிந்தனை குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செய்துள்ள மேல்முறையீடு ஒருவழியாக ஜனவரி 15-இல், கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி அஸ்மான் ஹுசேன் முன்னிலையில் அது விசாரிக்கப்படும். உதயகுமார் 2007-இல் தேசநிந்தனை கருத்துக்களைத் தெரிவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு இவ்வாண்டு…
மாட் சாபுவுக்கு ‘ஷியா’க்களுடன் தொடர்புண்டு; ஆதாரங்கள் இன்று வெளியிடப்படும்
பாஸ் உயர் தலைவர் ஒருவருக்கு ஷியா நடவடிக்கைகளில் ஈடுபாடு இருப்பது இன்று பிற்பகல் 3 மணிக்குச் செய்தியாளர் கூட்டமொன்றில் அம்பலப்படுத்தப்படும். இதை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். பாஸ் தலைவர் என்று அவர் குறிப்பிட்டது பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவையா என்று வினவியதற்கு, “அவரின்…
பக்காத்தானோ பிஎன்னோ பாலின அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பது தப்பு
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், மாநில சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட்டை “இனவாத பாட்டி” என்று வருணித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும்கூட பல தரப்பினரின் குறைகூறலுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார். . ஆகக் கடைசியாக லிம்முக்கு கண்டனம் தெரிவித்திருப்பவர் முன்னாள் பெர்சே தலைவர் எஸ்.அம்பிகா. “பாலியல் அடிப்படையில்…
பூஜாங் பள்ளத்தாக்கு சம்பவம் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பணிக்குழு அமைக்க…
எட்டாம் நூற்றாண்டு கோயில் ஒன்று பூஜாங் பள்ளத்தாக்கில் உடைக்கப்பட்ட சம்பவம் போன்ற ஒன்று மீண்டும் ஏற்படாதிருக்கவும், அங்குள்ள தளங்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு பணிக் குழு அமைக்க வேண்டும் ஹிண்ட்ராப் மலேசியா கூறுகிறது. பாரம்பரிய வழிகாட்டு குழு தேசிய பாரம்பரிய இலாகா, மாநில மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அதிகாரிகளோடு…
லிம்: நான் ஒரு சீன முதலமைச்சர் என்பதால் அம்னோ இனவாத…
பூலாவ் ஜெரஜாக் மாழுத் தீவு என்று மாற்றப்பட்டதாக பினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட் கூறியிருப்பது “ஆபத்தான” விவகாரம் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். அந்த “தப்பான தகவல்”, மாநில அரசின் தோற்றத்தைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் அம்னோ- ஆதரவு” வலைப்பதிவுகளிலும் பரப்பப்பட்டு வருகிறது என்றவர்…
முன்னாள் ஐஜிபி: பேசக்கூடாததைப் பேசி மலாய்க்காரர் மனத்தைப் புண்படுத்துகிறார்கள்
முன்பு பூமிபுத்ராக்களின் சிறப்புரிமை பற்றியோ, மலாய் ஆட்சியாளர் பற்றியோ இஸ்லாம் பற்றியோ மக்கள் கேள்வி எழுப்ப நினைத்துப் பார்த்ததுகூட இல்லை, இன்றோ அது சாதாரணமாகி விட்டது என முன்னாள் போலீஸ் படைத் தலைவர் முகம்மட் ஹனிப் ஒமார் கூறினார். இதற்கு “மாற்று ஊடகங்களும்”, சமூகத் தலைவர்களும், இதனால் மலாய்க்காரர்…
ஒங்: மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது உறுதி; பின்வாங்க மாட்டேன்
முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், தாம் எதிர்வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதினின்றும் பின்வாங்கப்போவதாகக் கூறப்படுவதை மறுத்தார். தம் முடிவு அறுதியானது என்றுரைத்த ஒங், நாடு முழுக்க பயணம் செய்து பேராளர்களின் ஆதரவைத் தேடிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். முடிவு உறுதியானது என்பதைக் காண்பிக்க ஒங், கோழி…


