அந்நியர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகள் மறுஆய்வு

அந்நிய தொழிலாளர்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாவதைத் தடுக்க அவர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகள் அனைத்தையும் உள்துறை அமைச்சு மறுஆய்வு செய்யும். அவர்களுக்குக் காப்புறுதி உண்டா, பணிக்கேற்ற சம்பளம் கொடுக்கப்படுகிறா போன்றவையும் கவனிக்கப்படும் என அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறினார். மலேசியாவை மேம்படுத்த அவர்களின் உதவி தேவை என்பதால் அவர்கள்…

‘சீனர்களுக்குப் பிரதமர் பதவியில் ஆசை இல்லை’

மலேசிய சீனர்கள் பிரதமராவதற்கு நாட்டம் கொள்ளவில்லை என பெட்டாலிங்  ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். மாறாக மலேசியச் சீனர்கள் தங்களை முதலில் மலேசியர்களாகக் கருதுகின்றனர் என்றும் இன, சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுடைய நலன்களில்  அக்கறை கொண்டுள்ள எந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் பிரதமராக ஏற்றுக்…

அம்னோ இளைஞர் பகுதி உயர்பதவிக்கும் போட்டி இல்லையாம்

அம்னோவைப் பின்பற்றி அம்னோ இளைஞர் பகுதி தலைவர் பதவிக்கும் போட்டி இருக்கக்கூடாது என முன்மொழியப்பட்டுள்ளது. இளைஞர் பகுதியின் செயலவைக் கூட்டத்தில் அம்முடிவு செய்யப்பட்டதாக அப்பகுதியின் பொருளாதார, தொழில்முனைவர் பிரிவுத் தலைவர் சொஹாய்மி ஷஹாடான் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது. “பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கட்சி பிளவுபடாமல்…

வரவு செலவுப் பற்றாக்குறையை குறைக்கும் குழுவுக்கு பிரதமர் தலைவர்

2015ம் ஆண்டு வாக்கில் நாட்டின் வரவு செலவுப் பற்றாக்குறையை 3  விழுக்காட்டுக்குக் குறைப்பதற்கு முயற்சிகள் செய்யப்படும். அதற்கான வழிகளை காண்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  தலைமையில் ஒரு  குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி வேகத்தைப் பாதிக்காமல் அந்த இலக்கை அடைவதற்கு  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நஜிப் சொன்னார்.…

பக்காத்தான்மீது மலாய்க்காரர்கள் கொண்டுள்ள அச்சத்தை அம்னோ பயன்படுத்திக்கொண்டது

பக்காத்தான் ரக்யாட் வலுவானால் அதில் டிஏபி-இன் ஆதிக்கம் மேலோங்கும் என்று பெரும்பாலான மலாய்க்காரர்கள் கொண்டுள்ள அச்சத்தை அம்னோ அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது என்று கூறியுள்ளார் பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட். அந்த அணுகுமுறையைக் கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களிலும் அது கடைப்பிடித்ததன் காரணமாகத்தான் மலாய்க்காரர்கள்…

பாஸ் தலைவரின் பேச்சால் ஜெராம் வாக்காளர்கள் ஆத்திரம்

வாக்காளர்களுக்கு ரிம 1,000 கொடுக்கப்பட்டு பிஎன்னுக்கு வாக்களிப்பதாக அவர்களைச் சத்தியம் செய்ய வைக்கப்பட்டதுதான் தமது கோலாசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதித் தோல்விக்குக் காரணம் என்று பாஸ் கட்சியின் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறியிருப்பது குறித்து ஜெராம் வாக்காளர்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்களாம். ஆத்திரத்தை வெளிப்படுத்தி அவர்களிடமிருந்து “நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளும் குறுஞ் செய்திகளும்”…

எது முக்கியமானது: மெட்ரிக்குலேசன் இடங்களா அல்லது சபாநாயகர் பதவியா?

-எம். குலசேகரன், எம்பி. ஜூன் 18. 2013. இன்று ம.இ.கா வின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறும் போது முக்கிய அங்கமாக பேரா மாநில சபாநாயகர் பதவிக்கான விவாதம் இடம்பெறும் என்று அறிகிறோம். அந்தப் பதவி ஒன்றும் அப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக எனக்குப் படவில்லை. மக்கள் கூட்டணி தனது…

‘எங்களுக்கு சீனர் பிரதமராக வேண்டாம் தூய்மையான ஆட்சியே போதும்’

"சீனர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அது  முக்கியமல்ல. நாங்கள் சீனர் பிரதமராக வேண்டும் என ஒரு போதும் கேட்கவில்லை' அமைச்சர்: சீனர்கள் இனவாத உணர்வைக் கைவிட்டால் அவர்களும்  பிரதமராகலாம் பார்வையாளன்: ஒர் இனவாதக் கட்சியும் வாய்ப்புக் கிடைக்கும் போது ‘Untuk  Bangsa, Ugama dan Negara’ என்னும் சுலோகத்தை…

டிஏபி கட்சித் தேர்தல்: கூடுதல் ஆதாரங்களை ஆர்ஒஎஸ் கோருகிறது

டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தல்களில் வாக்குகளை எண்ணும்  போது தவறு நிகழ்ந்துள்ளது மீது கூடுதல் ஆதாரங்களை ஆர்ஒஎஸ் என்ற சங்கப்  பதிவதிகாரி அலுவலகம் கோரியுள்ளது. கணினிக் குளறுபடியா அல்லது ஏமாற்று வேலையா என்பதை உறுதி செய்ய  கூடுதல் ஆதாரங்கள் தேவை என அதன் பதிவதிகாரி அப்துல்…

‘அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிலாங்கூரில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள்’

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிலாங்கூரில் முதலாவது ஊராட்சி மன்றத்  தேர்தல்களை நடத்தப் போவதாக ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள  புதிய ஆட்சி மன்ற உறுப்பினர் தெங் சாங் கொம் சூளுரைத்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களை உருவாக்க சிலாங்கூர் வகுத்துள்ள  ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒரு பகுதியாக தாமும் அரசாங்கமும் அந்தக்  காலக்கெடுவை…

‘தேர்தல் ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைப்பது தேசத் துரோகமல்ல’

நாடாளுமன்றத்தின் கீழ் இசி என்ற தேர்தல் ஆணையத்தை வைப்பதில் தேசத்  துரோக அம்சம் ஏதும் சம்பந்தப்படவில்லை என ஜனநாயகம், தேர்தல் நேர்மை  மீதான தேசியக் கழகத்தின் தலைவர் கே ஷான் கூறுகிறார். இசி-யை மேற்பார்வை செய்யும் எந்த நாடாளுமன்றத் தேர்வுக் குழுவும் அந்த  ஆணையம் மீதான யாங் டி…

‘IPCMC அல்லது EAIC எதுவாக இருந்தாலும் உறுதியான நடவடிக்கையே அவசியம்”

போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களாக இருந்தாலும் அமலாக்க நிறுவனங்களின்  அதிகார அத்துமீறல்களாக இருந்தாலும் 'கடுமையான நடவடிக்கையே' முக்கியம்,  அதனை எடுக்கும் அமைப்பு அல்ல என இளைஞர், விளையாட்டு அமைச்சர்  கைரி ஜமாலுதின்  கூறுகிறார். IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம்  அல்லது EAIC…

அம்னோ உயர் பதவிகளுக்குப் போட்டி இல்லை: தெங்கு அட்னான்

தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி கூடாது என்பதை அம்னோ உச்சமன்றம் ஏற்கனவே தீர்மானித்து விட்டது. இதை உறுதிப்படுத்திய கட்சி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், அப்படி இருக்கையில் உச்சமன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஜூசோ அம்முடிவு “ஜனநாயகமற்றது” எனக் கூறுவது வியப்பாக இருக்கிறது என்றார்.  …

பிரதமர், துணைப் பிரதமர் மீதான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டன

இந்த நாட்டில் உள்ள எல்லா 523 தமிழ்ப் பள்ளிக் கூடங்களும் முழு உதவியைப்  பெற வேண்டும் எனப் பிரகடனம் செய்யும் பொருட்டு பிரதமர், துணைப் பிரதமர், அரசாங்கம் ஆகிய தரப்புக்களுக்கு எதிராகத் தாங்கள் தாக்கல் செய்த வழக்கை  இரண்டு வழக்குரைஞர்கள் இன்று மீட்டுக் கொண்டனர். அந்த வழக்கை மேலும்…

பிஎன்னை ஆதரிப்பதாக வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கப்பட்டதாம்

கோலா சிலாங்கூரில் நாடாளுமன்றத்துக்குப்  போட்டியிட்டு தோற்றுப்போன  டாக்டர் சுல்கிப்ளி அஹமட்,  வாக்காளர்களுக்கு ரிம1,000 கொடுக்கப்பட்டு பிஎன்னுக்கு வாக்களிப்பதாக அவர்களிடம் சமயமுறைப்படி சத்தியமும் வாங்கப்பட்டது என்கிறார்.  சில இடங்களில் ஏற்கனவே வாக்களித்தவர்களிடம் பிஎன்னுக்குத்தான் வாக்களித்ததாக சத்தியம் செய்யும்படியும் கூறப்பட்டதாம். இது  பெரும்பாலும் ஜெராம் பகுதியில் நடந்தது. “மலாய்க்காரர்கள் சத்தியத்துக்குப் பயப்படுபவர்கள்”,…

தீ ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை துறக்க மாட்டார்

மசீச கொள்கைகளுக்கு 'கீழ்ப்படியாததற்காக' தமக்கு எதிராக நடவடிக்கை  எடுப்பதற்காக கூடிய கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு எடுக்கும்  முடிவை முன்னாள் மசீச தேசிய அமைப்புச் செயலாளர் தீ கியூ கியோங் ஏற்றுக்  கொள்வார். ஆனால் தாம் ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்  போவதில்லை…

அம்னோ உயர் பதவிகளுக்குப் போட்டி கூடாது என்பதை மகாதிர் ஆதரிக்கிறார்

அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி கூடாது என்று கூறப்படுவதை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் வரவேற்கிறார் என உத்துசான் மலேசியா கூறுகிறது. போட்டி இல்லையென்றால் நஜிப் அப்துல் ரசாக் தலைவராகவும் முகைதின் யாசின் துணைத் தலைவராகவும் தொடர்ந்து இருப்பர். “போட்டி இருந்தால் அம்னோ பிளவுபடலாம்.…

‘இந்தியாவிலிருந்து வந்தார் இரண்டே ஆண்டுகளில் குடியுரிமை பெற்றார்’

இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தவரான பீர் முகம்மட் காடிர்,  1984-இல் தம் உறவினருடன் சாபா வந்தார். இரண்டே ஆண்டுகளில் மலேசிய குடியுரிமை பெற்றார். பிறகு ரேலாவில் சேர்ந்தார். அரசாங்கம் குறைந்த வருமானம் பெறுவோருக்குக் கொடுக்கும் ரிம500 உதவித் தொகையையும் பெற்றார். “என் உறவினர் அடையாள அட்டை பெற உதவினார்”, என…

எம்ஏசிசி -யின் அதிகாரங்களை அதிகரிக்கக் கூடாது என்கிறார் ஒர் அமைச்சர்

ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் தங்கள்  சொத்துக்களை அறிவிப்பதைக் கட்டாயப்படுத்த கூடுதல் தனக்கு கூடுதல்  அதிகாரங்கள் தேவை என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  கூறியுள்ளது. ஆனால் அந்தக் கோரிக்கை அதிகாரம் தவறாகப்  யன்படுத்தப்படுவதற்கு வழி  வகுத்து விடலாம் என பிரதமர் துறை அமைச்சர் நான்சி…

டோனி புவா: ஐபிசிஎம்சிக்கு எதிராக மீண்டும் போலீஸ் கிளர்ச்சியா?

போலீஸ் புகார் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமலாக்கம் செய்யப்படுவதற்கான நடவடிக்கை எதனையும் அன்றைய பிரதமர் அப்துல்லா படாவி நிருவாகம் மேற்கொள்ளுமேயானால் மலேசிய போலீஸ் படை கிளர்ச்சியில் ஈடுபடும் என்று 2006, மே மாதத்தில் மிரட்டியிருந்தது. தற்போது, ஐபிசிஎம்சி அமைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் எழும்பியுள்ள புதிய…

இசி தலைவர்: அழியா மை அழிந்தது என் வாழ்க்கையில் சோகமான…

13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மையை எளிதாக அழிக்க  முடிந்தது குறித்து தாம் மிகவும் ஏமாற்றமடைந்ததாக தேர்தல் ஆணையத் தலைவர்  அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் சொல்கிறார். "என் வாழ்க்கையில் எது சோகமான கட்டம் எது என யாராவது கேட்டால் நான்  'அழியா மை' என்று தான்…

‘இசி பதவி விலக மோசடியை நிரூபியுங்கள்’

இப்போதுள்ள தேர்தல் ஆணைய(இசி) உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமானால் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததை நிரூபியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார் இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப். “சில தரப்பினர் கேட்டுக்கொள்வதால் பதவி விலக முடியாது. அப்படிச் செய்தால் உலகம் சிரிக்கும். “முதலில், நாங்கள் ஏமாற்றினோம், சட்டத்தை மீறினோம் என்பதைத்…

செய்தியாளர் கூட்டத்தில் மலேசியாகினிக்குத் தடை

கோலாலும்பூர் இபிஎப் கட்டிடத்தில் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானின் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடக்க விருந்தது. செய்தி சேகரிக்க மலேசியாகினியும் அங்கு சென்றது. இபிஎப் தலைமையகத்துக்கு வருகை புரிந்த அஹ்மட், வருகை முடிந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசியாகினி செய்தியாளர்கள் காத்திருந்த இடத்துக்கு முதலில் அனுமதிக்கப்பட்டது.…