ஜஹாரா: இனவாதப் பாட்டி என்று சொன்னதற்கு சிஎம் மன்னிப்பு கேட்க…

பினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாதப் பாட்டி” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக ஆத்திரமாக இருக்கிறார். சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது இனம்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி ஜஹாரி கேள்வி எழுப்பியதை அடுத்து முதலமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார். ஜஹாராவை…

பாஸ் கட்சியில் ஷியாக்களா? அமைச்சு ஆதாரம் காண்பிக்க வேண்டும்

பாஸ் கட்சித் தலைவர்கள் ஷியா கொள்கையைப் பின்பற்றுபவர்கள் என்று கூறும் உள்துறை அமைச்சு அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் என அக்கட்சியின் மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் முகம்மட் அப்து நிக் அப்துல் அசீஸ் சவால் விடுத்துள்ளார். பாஸ் கட்சி அறிந்தவரை, அக்கட்சித் தலைவர்களில் எவருமே ஷியா பிரிவைச்…

சரவாக் அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

கூச்சிங்கில், சரவாக்கின் பூர்விகக் குடிகளைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் ஒன்றுதிரண்டு  மாநில அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர். அதில் அவர்கள், சரவாக் முதலமைச்சர் அப்துல்  தாயிப் மஹ்மூட்  தங்களிடமிருந்து பறித்துக்கொண்ட நிலங்களைத் திருப்பித் தரவேண்டும் என்றும் பூர்விகக் குடியினரின் நில உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் பூரிவிகக்…

செர்டாங் மருத்துமனையில் உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்தது

நேற்று செர்டாங்  மருத்துவமனையில்  உள்கூரை  இடிந்து விழுந்ததில்  மருத்துவமனை  பணியாளர் ஒருவரின் துணைவியாரும்  அவரின் நான்கு  பிள்ளைகளும்  மயிரிழையில் காயமின்றித் தப்பினர். 2013-இல்,  அம்மருத்துவமனையில் கூரை இடிந்து விழுவது இது நான்காவது  தடவையாகும். நேற்று  பிற்பகல் மணிக்குப் பணியாளர் குடியிருப்புப் பகுதியில் ஒரு  கழிப்பறையில்  இச்சம்பவம் நிகழ்ந்ததாக உத்துசான் …

எங்கெங்கு காணினும் தீவிரவாதம்தான், ஆனால் தலைமை இடம் அம்னோவுக்குத்தான்

வார இறுதியில் அம்னோ பொதுப்பேரவையில் பல பேராளர்கள், இனம், சமயம் போன்ற விவகாரங்களில் ஆத்திரப்பட வைக்கும் வகையில் கருத்துக்களை அவிழ்த்து விட்டார்கள். இன, சமய விவகாரங்களில் தீவிரவாத கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது அம்னோவில் மட்டுமல்ல. பக்காத்தான் ரக்யாட்டிலும்  உண்டு. முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட், எல்லா மலேசியர்களுமே தீவிரவாதிகள்தாம் என்றுகூட…

சிங்கப்பூர் கலகம் தொடர்பில் ஒரு மலேசியர் கைது

சிங்கப்பூரில்,  லிட்டல் இந்தியா பகுதியில்  நிகழ்ந்த  கலகம்  தொடர்பில் போலீஸ் கைது செய்துள்ள  27 பேரில்  ஒரு  மலேசியரும்  உள்ளிட்டிருக்கிறார். அக்கலகத்தில்,  ஐந்து மலேசியரும் காயமடைந்தனர்.  அவர்கள் சிங்கப்பூரில் துணை போலீஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள்  என வெளியுறவு அமைச்சர் அனிபா  அமான் கூறியதாக  ஆஸ்ட்ரோ அவானி  அறிவித்தது.…

பூஜாங் பள்ளத்தாக்குச் சின்னங்களை இடம் மாற்றினால் அவற்றின் முக்கியத்துவம் குறைந்துபோகும்

பூஜாங் பள்ளத்தாக்கில் 200  சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிதறிக் கிடக்கும்  பழங்கால  நாகரிகத்தின் கட்டுமானங்களை  இடமாற்றம் செய்வதில்  பினாங்கு முதலமைச்சர் லிம்  குவான் எங்குக்கு உடன்பாடில்லை. பழங்கா ல நாகரிகச் சின்னங்களைக் கண்டெடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள்,  மண் பாண்டங்கள், களிமண் சிலைகள் போன்றவற்றைத்தான்  அப்புறப்படுத்துவார்கள். மற்றவற்றை  அப்படியே  இருந்த இடத்திலேயே…

புதிய சாலைக்கட்டணமா? அது வெறும் வதந்தி

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 10 நெடுஞ்சாலைகளின் சாலைக் கட்டண விகிதம் குறித்து அமைச்சரவை விவாதிக்கவுமில்லை, முடிவு செய்யவுமில்லை. இதைத் தெரிவித்த பொதுப்பணி அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புதிய சாலைக்கட்டணம் என்று இணையத்தில் உலாவரும் தகவல்கள் வெறும் வதந்திகளே என்றார். இதன் தொடர்பில் பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப் அடுத்த…

ரோஸ்மாவைச் சிறப்புப் பணி அமைச்சராக நியமனம் செய்யலாமே

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மீது பல குற்றம்குறைகள் சொல்லப்பட்டு வருகின்றன. ரோஸ்மாவுக்கு எதிரான குறைகூறல்களை எதிர்க்கும் நோக்கில் அவர் இதுவரை வெளியில் தெரியாமல் செய்துள்ள பல நற் செயல்களை கடந்த சனிக்கிழமை அம்னோ பொதுப்பேரவையில் எடுத்துரைத்தார் நஜிப். எகிப்தில் உளவாளி என்ற ஐயத்தின்பேரில்…

குகன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு

போலீசும் அரசாங்கமும், போலீஸ் காவலில் இருந்த ஏ.குகன் இறந்ததற்கு அவர்களே பொறுப்பு என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கெதிராக மட்டுமல்லாமல் குகனின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுக்கு எதிராகவும் மேல்முறையீடு செய்துகொண்டுள்ளன. 1956 சிவில் சட்டத்தின்படி குகனின் குடும்பத்துகான இழப்பீடு ஒரு வரம்பு உட்பட்டது என்றும் ஆனால், நீதிமன்றம்…

அன்வார்: ஊழல் நிறையவே நடக்கிறது

அரசாங்கம் அரசியல், பொருளாதார உருமாற்றத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் ஊழல் ஒழியவில்லை அது பெருகிக்கொண்டுதான் இருக்கிறது என்கிறார் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம். இதற்கு 2013 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் நிறைய எடுத்துக்காட்டுகளைக் காணலாம். இன்று உலக ஊழல்-எதிர்ப்பு நாளையொட்டி வெளியிட்ட செய்தியில் பிகேஆர் நடப்பில் தலைவருமான அன்வார்…

நஜிப்பின் புதல்வர் துயர்துடைப்பு மையத்தைப் பார்வையிட்டார்

பிஎன் உதவி என்ற முத்திரையுடன் கூடிய உதவிப் பொருள்களுடன் அக்கூட்டணியின் பிரதிநிதிகளாக பிரமுகர்கள் பலர், கிழக்குக் கரையில் துயர்துடைப்பு மையங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். நேற்று மாலை 5மணிக்கு, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மூத்த புதல்வர் முகம்மட் நிஜார்,  பெரும் பரிவாரம் புடைசூழ குவாந்தான்  துயர்துடைப்பு மையத்துக்கு வருகை…

ஜாஹிட்: பாஸ் தலைவருக்கு ஷியாக்களுடன் தொடர்பு உண்டு என்பதற்கு ஆதாரங்கள்…

பாஸ் 2ஆம் நிலை தலைவர்  “ஷியா போதனைகளைப் பின்பற்றுவர்”  என்பதற்கு அதிகாரிகள் “படங்கள்” உள்பட  பல ஆதாரங்களை  வைத்திருப்பதாக உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். ஆனால் அவரால்  குறிப்பிடப்படுபவர்,  பாஸ் துணைத் தலைவர்  முகம்மட் சாபுதான் என்பதை  அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.  “பாஸின் இரண்டாவது தலைவர்”…

நஜிப், அம்னோவின் போராட்டம் மண்டேலாவின் போராட்டத்தைப் போன்றது அன்று

அம்னோ தலைவர்  நஜிப் அப்துல் ரசாக் தம் கட்சியின் போராட்டம் தென்னாப்ரிக்காவில் இனஒதுக்கல் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர மண்டேலா நடத்திய போராட்டத்துக்கு இணையானது என்று குறிப்பிட்டிருப்பது தவறு. அதை ஒரு “வெட்கக்கேடான” ஒப்பீடு என்று சாடிய பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், சரியாக சொல்வதாக இருந்தால், அம்னோவின் போராட்டம்…

வழக்கறிஞர் சீலதாஸின் நூல் வெளியீடு

நாட்டின் மூத்த எழுத்தாளரான வழக்கறிஞர் கி. சீலதாஸ் அவர்களின் ‘வருடிச் சூடிய வாழ்க்கைப் பூக்கள்’ என்ற நூல் வெளியீடு காண்கிறது. சீலதாஸ் அவர்கள் தான் கண்ட உண்மைகள், படித்த வரலாறுகள், நினைவில் நிற்கும் சிந்திக்க வேண்டிய சம்பவங்கள் என தனது காலச் சுவடியில் பதித்த பதிந்தவற்றை தொகுத்துள்ளார். அரசியல்,…

இசி: இடைத் தேர்தல்களில் குழப்பம் விளைவிப்பதற்கென்றே சிலர் உள்ளனர்

சில தரப்பினர் இடைத் தேர்தலில் குழப்பம் விளைவிப்பதற்காக ஒரு கூட்டத்தைத் தயார்ப்படுத்தி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் நினைக்கிறது.  அண்மையில் நடைபெற்ற  சுங்கை லிமாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின்போது அக்கூட்டத்தினர் தொல்லை கொடுத்தார்கள். அவர்கள் இடைத் தேர்தல்களில் குழப்பம் செய்து அவை நேர்மையாக நடத்தப்படவில்லை என்பதைப் போன்ற தோற்றத்தை  உருவாக்க …

வெள்ள அகதிகளிடம் மன்னிப்பு கேட்டார் துணைப் பிரதமர்

துயர்துடைப்பு மையங்களுக்கு உணவுப்பொருள்கள் அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு துணைப் பிரதமர் முகைதின் யாசின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்டார். வெள்ளப் பெருக்கு இவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றவர் விளக்கமளித்ததாக பெர்னா கூறியது. திரெங்கானு, கெமாமான், பாயான் பெரெஞ்சூட்டில் துயர்துடைப்பு மையமாக செயல்பட்டும் பங்கோல் இடைநிலைப்…

1மலாயு’ எனல் வேண்டும் என்றுரைத்த அம்னோ பேராளர் அதற்காக மன்னிப்பு…

அம்னோ பேரவையில் பினாங்கு பேராளர் மூசா ஷேக் பாட்சிர், இனி  1மலேசியா வேண்டாம்  1மலாயு  என்றுதான் முழங்க வேண்டும்  என்று  கூறியதற்காக மன்னிப்பு கேட்க  வேண்டும்  என கெராக்கான் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க மாட்டார். “கெராக்கான் ‘ஹீரோ’ ஆக முயல்கிறது......நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் தவறு ஏதும்…

அம்னோ ‘1மலாயு’-வை ஆதரிக்காது- அம்னோ தலைவர்கள்

அம்னோ பொதுப்பேரவையில் ‘1மலாயு’ பற்றிப் பேசப்பட்டாலும் அம்னோ  ‘1மலேசியா’ என்பதைக் கைவிடாது என அக்கட்சித் தலைவர்கள்  வலியுறுத்தினர். மலாய் ஆதரவை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஏற்கவில்லை. கட்சிக்கு  “மற்றவர் ஆதரவும் தேவை”. “இது அம்னோ பொதுப்பேரவை. பேராளர்கள் சொந்த கருத்துக்களை எல்லாம் எடுத்துரைப்பார்கள்”,  என்று…

முக்ரிஸ்: ‘1மலாயு’ எனல் வேண்டும் என்றுரைத்தவரைத் தண்டிக்க வேண்டியதில்லை

“1மலேசியா”-வுக்குப் பதில் இனி “1மலாயு” என்றுதான் சொல்ல வேண்டும் என முன்மொழிந்த புக்கிட் மெர்தாஜாம் தொகுதித் தலைவர் மூசா ஷேக் பாட்சிரைத் தண்டிக்க வேண்டியதில்லை என கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார். நேற்று அம்னோ பொதுப்பேரவையில் அவ்வாறு கூறிய மூசா அப்படிச் சொன்னதை மீட்டுக்கொள்ள வேண்டும்,…

நம் நாட்டு மாணவன் சிங்கப்பூர் மாணவனைவிட படிப்பில் நான்காண்டு பின்தங்கி…

சிங்கப்பூர், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளின் கல்வித் தரத்துடன் ஒப்பிட்டால் மலேசியாவில்  ஒரு சராசரி 15-வயது மாணவன்,  படிப்பில் நான்காண்டுகள் பின்தங்கி இருப்பதாக டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். அனைத்துல மாணவர் மதிப்பீட்டுச் சோதனை முடிவுகளை(PISA) அடிப்படையாக வைத்து அவர் இவ்வாறு கூறினார். 74-நாடுகளில்…

ஷரிசாட்: அன்வார்-நஜிப் கலந்துரையாடல் வீணான செயல்

அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில், கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமும் கலந்துரையாடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார். “அது நேரத்தை வீணாக்கும் செயல். பிரதமர் வேறு நல்ல காரியங்களைச் செய்யலாம்”, என்றவர் கூறினார். நேற்று நஜிப், அம்னோ…

உத்துசான் நிஜாருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்: நீதிமன்றம் தீர்ப்பு

கார் இலக்கத் தகடு (நம்பர் பிளேட்) விவகாரத்தில் முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின் பெயரைக் களங்கப்படுத்தியதற்காக உத்துசான் மலேசியா நாளேடு ரிம250,000 இழப்பீடு கொடுக்கத்தான் வேண்டும். இன்று முறையீட்டு நீதிமன்றம், உத்துசான் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை…