பாலாவின் 2வது சத்திய பிரமாணத்தை ஆராய வழக்குரைஞர்கள் வலியுறுத்து

14 வழக்குரைஞர்கள்  எதிர்வரும் வழக்குரைஞர் ஆண்டுக்கூட்டத்தில் ஒரு குழுவை அமைத்து தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இரண்டாவது சத்திய பிரமாணம் (எஸ்டி) செய்த சூழலை ஆராய வேண்டும்  எனக் கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். வான் ஹிதாயாதி நடிரா வான் அஹ்மட் நசிரால் முன்மொழியப்பட்ட அத்தீர்மானம் நேற்று வழக்குரைஞர் மன்றத்தில்…

சரணடைய மறுக்கும் ஜமாலுல், பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறார்

சுலு சுல்தான் என தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள ஜமாலுல் கிராம், நிபந்தனையின்றி சரணடையுமாறு கோலாலம்பூர் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். அதற்கு மாறாக பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்தார். சபாவில் தற்போது மலேசியப் பாதுகாப்புப் படைகளுடன் துப்பாகிச் சண்டையில் ஈடுபட்டுள்ள தமது ஆதரவாளர்கள் நான்கு…

பிரதமர் அவர்களே, சபாவை தீடீர் பிரஜைகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள்

'ஆம் நாம் சபாவை அவசியம் பாதுகாக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதுகாப்பு என்பது நமக்கு தெரியாமல் அந்த மாநிலம் திருடப்படுவதையும் கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும்.' சபா மலேசியாவில் என்றென்றும் இருக்கும் என நஜிப் பிரகடனம் மஹாஷித்லா: சபாவும் சரவாக்கும் நீண்ட காலத்துக்கு மலேசியாவில் இருக்கும். ஆனால் என்றென்றும் அல்ல.…

ஊடுருவல் மீதான பிரதமர் நிலையை லிம் கிட் சியாங் ஆதரிக்கிறார்

மிகவும் அரிதான ஒருமைப்பாட்டை காட்டும் வகையில்  டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த விவகாரத்தைச் சமாளிப்பதற்கு அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் எடுத்துள்ள எல்லா தேவையான நடவடிக்கைகளுக்கும்…

மலாக்கா பக்காத்தான் செராமாவின் போது வன்முறை

அரசியல்  வன்முறைகள் தொடருகின்றன. நேற்றிரவு மலாக்கா புக்கிட் கட்டில் நடந்த செராமா ஒன்றுக்கு அம்னோ குண்டர்கள் எனக் கூறப்பட்டவர்கள் இடையூறு செய்த போது பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார். கல் ஒன்றினால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் ஒர் ஆடவருடைய தலையிலிருந்து ரத்தம் கசியும் படத்தை பக்காத்தான் ஆதரவாளர்கள்…

“என்னை உடனடியாக விசாரியுங்கள்”, போலீசுக்கு ஆறுமுகம் வேண்டுகோள்

இன்று பிற்பகல் மணி 1.00 க்கு கிள்ளான் போலீஸ் நிலையத்திற்கு தாமாகவே சென்று தமக்கு எதிராகச் செய்யப்பட்டிருக்கும் போலீஸ் புகார் மீது தம்மை உடனடியாக விசாரிக்கமாறு போலீசாரை வழக்கறிஞர் கா. ஆறுமுகம் கேட்டுக் கொண்டார். மார்ச் 1 ஆம் தேதி, முரளி த/ப சுப்ரமணியம் என்பவர் கிள்ளான் போலீஸ்…

தீவிரவாதிகள் சரணடையாத வரையில் சண்டை நிறுத்தம் இல்லை

மூன்றாவது சுல்தான் ஜமாலுல் கிராமின் தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அவர் கோரினார். "சண்டை நிறுத்தம் செய்ய முன் வந்ததற்கு மலேசியாவின் பதில் என்ன…

ஸாஹிட்: தீவிரவாதிகள் சரணடைய வேண்டும், சண்டை நிறுத்தம் இல்லை

சுலு சுல்தான் மூன்றாவது ஜமாலுல் கிராமின் தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரித்துள்ளது. அந்த சுல்தானுடைய ஆதரவாளர்கள் சரணடைய வேண்டும் என அது விரும்புவதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார். "தீவிரவாதிகள் நிபந்தனையில்லாமல் சரணடைய வேண்டும். மலேசியா தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை நிராகரிக்கிறது." "சண்டை நிறுத்தம்…

சுலு சுல்தான் தன்மூப்பாக மலேசியாவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்

சுலு சுல்தான் எனத் தம்மை சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராம் இன்று தன்மூப்பாக சண்டை நிறுத்தத்தைப் பிரகடனம் செய்துள்ளார். மலேசியாவுக்குள் ஊடுருவிய அவரது ஆதரவாளர்களை மலேசியத் துருப்புக்கள் தொடர்ந்து வேட்டையாடும் வேளையில் அவர் அந்த அறிவிப்பை செய்துள்ளார். சுலு சுல்தான் ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஊடுருவலைத் தொடர்ந்து…

ஹிண்ட்ராப் உண்ணாவிரதம் காலத்தின் கட்டாயம்

-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப். மார்ச் 6, 2013. மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார பின்னடைவுகளுக்கு நிரந்தர தீர்வைக் கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தேக்கம் கண்ட பின்னரே உண்ணாவிரத பிரார்த்தனைக்கு ஹிண்ட்ராப் இயக்க பொறுப்பாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத வகையில், இந்தியர்களின் விடியலுக்காக தீட்டப்பட்டதுதான் ஹிண்ட்ராப்…

சேவியர்: குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதவர்களிடம் பொது விவாதமா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். நேற்றும், இன்றும் பத்திரிக்கைகளில்  பொது விவாதம் பற்றியும், இந்தியர்கள் மீதான  இரக்கம், அத்திப்பட்டி பற்றியும், புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசுடன் பேசி 70 ஆயிரம் வெள்ளிக்கு வீடு கட்டுவதை பற்றி எல்லாம் தேர்தல் குளிரில் கதை…

ஹம்சா: எதிரிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர், உணவு விநியோகம் தடுக்கப்பட்டுள்ளது

தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்கு உணவுப் பொருளும் ஆயுதங்களும் கிடைக்காமல் தடுப்பதற்கு பாதுகாப்புப் படைகள் எல்ல கடல், தரை வழிகளையும் அடைத்து விட்டன. கம்போங் தண்டுவோ, கம்போங் தஞ்சோங் பத்து ஆகியவற்றுக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் முயன்ற பல ஊடுருவல்காரர்களை போலீசாரும் ஆயுதப்படைகளும் கடற்படையும் சிறைப் பிடித்துள்ளதாக சபா…

நஜிப், லஹாட் டத்து மோதல் நிகழ்ந்த பகுதிக்குச் செல்கிறார்

லஹாட் டத்துவில் மோதல் நிகழ்ந்த பகுதிக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று வருகை புரிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கம்ப்போங் தண்டுவோ மீது பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்திய இரண்டு நாளைக்குப் பின்னர் அவர் அங்கு செல்கிறார். "Ops Daulat நடவடிக்கையை நேரில் காண பிரதமர் விரும்புகிறார். போலீசிலும்…

அன்வார்: இந்தியர் பிரச்னைகள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் பட்டியலிடப்படும்…

பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை மீதான இந்திய சமூகத்தின் கருத்துக்களைத் தாம் செவிமடுத்துள்ளதாகவும் அந்த சமூகத்தின் தேவைகள் மீதான சிறப்பு விவரங்கள் பக்காத்தான் கொள்கை அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "இந்திய சமூகத் தலைவர்களுடைய எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக நான் கடந்த வாரத்திருந்து…

சபா மீது கலந்துரையாடல் தொடங்க வேண்டும் என ஐநா தலைமைச்…

சபாவில் வன்முறைகள் நிற்க வேண்டும் என்றும் மலேசியப் படைகளுக்கும் சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் மூண்டுள்ள பூசலை தீர்க்க கலந்துரையாடல் தொடங்க வேண்டும் என்றும் ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார். சபா நிலவரத்தை பான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் வன்முறைகள் பொது மக்கள்…

செம்போர்ணாவில் சடலங்கள் சிதைக்கப்பட்டதை போலீஸ் உறுதி செய்தது

செம்போர்ணாவில் மார்ச் 2ம் தேதி கம்போங் சிமுனுலில் கொல்லப்பட்ட ஆறு போலீஸ் அதிகாரிகளுடைய சடலங்கள் சிதைக்கப்பட்டதை போலீஸ் முகநூல் பதிவில் உறுதி செய்துள்ளது. சபா நெருக்கடி நிகழ்வுகளை வெளியிட்ட அந்தப் பதிவில் தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் நடத்திய மறைவுத் தாக்குதலில் கொல்லப்பட்ட தங்கள் சகாக்களுடைய சடலங்களை மீட்கவும்…

எந்த சண்டையிலும் உண்மைக்குத்தான் முதல் சேதம்

"நமது ஆயுத வலிமை மேலோங்கியுள்ளது. படையெடுப்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம். என்றாலும் நாம் ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுகிறோம். வீழ்த்தப்படுகிறோம்." 9 சடலங்களும் வெள்ளிக் கிழமை மோதல்களுக்குப் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டவை என்கிறார் படைத் தளபதி கைரோஸ்: உண்மையில் அவமானம். அரச மலேசிய ஆகாயப் படை செவ்வாய்க்கிழமையன்று…

கம்போங் தண்டுவோ ‘பாதுகாப்பான பகுதியில்’ சிஐடி, தடயவியல் குழுக்கள் தாக்கப்பட்டன

'மிக அண்மையில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஒரு பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட சூழ்நிலையில் எங்களுடைய சிஐடி என்ற குற்றப்புலனாய்வுத் துறை, (சிஐடி) தடயவியல் துறை குழுக்கள் அங்கு சென்றன. ஆனால் அவை அங்கு தாக்குதலுக்கு இலக்காகின." துடைத்தொழிப்பு நடவடிக்கைக்கான ஆதாரங்களை திரட்டுவதற்காக கம்போங் தண்டுவோ-க்குள் அனுப்பப்பட்ட தடயவியல் அதிகாரி…

கொல்லப்பட்ட 12 ஊடுருவல்காரர்களின் படங்கள் வெளியிடப்பட்டன

கம்போங் தண்டுவோ-வில் மேற்கொள்ளப்பட்ட துடைத்தொழிப்பு நடவடிக்கையில் எதிரிகளில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதை அரசாங்கம் இன்று உறுதி செய்தது. கொல்லப்பட்டவர்களில் 12 பேர்களுடைய படங்களையும் அது வெளியிட்டது. "உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இது காட்டுகின்றது. ஜோடனை அல்ல. களத்தில் காணப்படும் நிலவரம் இதுவாகும்." என உள்துறை அமைச்சர்…

சூலு ஊடுருவல்காரர்களை வலுப்படுத்தும் முயற்சிகளை பிலிப்பீன் போலீசார் தடுத்தனர்

சூலு  ஊடுருவல்காரர்களைப்  பலப்படுத்த மேலும் பல பிலிப்பினோக்கள் முயற்சி மேற்கொண்டதாகவும் பிலிப்பீன் போலீசார் அவற்றைத் தடுத்து விட்டதாகவும் பிலிப்பீன்ஸ் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. “அவர்களைத் தடுக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவு”,  என தாவி-தாவி மாநில போலீஸ் இயக்குனர் ஜோசலிடோ சலிடோ பிலிப்பீன் ஸ்டார் செய்தித்தாளிடம் கூறினார். சூலு சுல்தானின்…

லஹாட் டத்து விவகாரத்தை அரசாங்கம் எதிர்கொண்ட முறையை அன்வார் சாடுகிறார்

லஹாட் டத்து நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பிஎன் அரசாங்கம் விரைவாகவும், திறமையாகவும், உறுதியாகவும் செயல்படவில்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார். ஈராயிரத்தாவது ஆண்டு அல் மாவ்னா இயக்கம் சம்பந்தப்பட்ட சாவ்க் ஆயுதக் கொள்ளை சம்பவம் நான்கு நாட்களில் தீர்க்கப்பட்டது எனக் குறிப்பிட்ட அந்த பெர்மாத்தாங்…

பக்காத்தான் எம்பிகள் அவசரக் கூட்டத்துக்குக் கோரிக்கை

மாற்றரசுக் கட்சியான பக்காத்தான் ரக்யாட்டின் எம்பிகள், லாஹாட் டத்து நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். “222 எம்பிகள் உள்ளனர். (லாஹாட் டத்து பற்றி) பிஎன் எம்பிகள் மட்டும் தெரிந்துகொண்டால் போதாது”, என்று பிகேஆர் சுங்கை பட்டாணி எம்பி…

தெளிவான தளபத்திய இணைப்பு இல்லை என முன்னாள் இராணுவத் தளபதி…

லஹாட் டத்துவில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் தெளிவான தளபத்திய இணைப்பு இல்லை என ஒய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் (ஒய்வு பெற்ற) முகமட் ஹஷிம் ஹுசேன் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில் தெளிவான தளபத்திய அமைப்பு முறை இருக்க வேண்டும் என் அவர் சொன்னார்.…