டிபிகேஎல், டத்தாரானை 48 மணி நேரத்துக்கு மூடுகிறது

டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நாளை காலை 6.00 மணி தொடக்கம் 48 மணி நேரத்துக்கு டத்தாரான் மெர்தேக்காவை மூடுகிறது. 1992ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்ற (டத்தாரான் மெர்தேக்கா) (கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம்)துணைச் சட்டங்கள், 1976ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றச் சட்டத்தின் 65வது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில்…

ஹிஷாம்: டத்தாரானில் பெர்சே பேரணி நிகழ்ந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்

பெர்சே 3.0 மீது அடக்குமுறை கட்டவிழ்த்துப்படப்படுவது திண்ணம் என்பதற்கான தெளிவான அறிகுறிகளை புத்ராஜெயா இன்று காட்டியுள்ளது. டத்தாரான் மெர்தேக்காவில் அந்தப் பேரணியை நடத்துவது என அதன் ஏற்பாட்டாளர்கள் 'பிடிவாதமாக இருந்தால்' அதனை தடுப்பதற்கு போலீஸ் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நிருபர்கள் சந்திப்பு…

செனட்டர் துங்கு அப்துல் அஸிஸ்: பெர்சேயின் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறேன்

பெர்சேயின் தூய்மையான, சுதந்திரமான, நியாயமான மற்றும் சுயேட்சையான தேர்தல் மற்றும் அமைதியாகக் கூடுவதற்கான அடிப்படை உரிமை ஆகிய கோரிக்கைகளை ஆதரித்து டிஎபியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ள கட்சியின் நிலைப்பாட்டை தாம் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதாக ("I fully subscribe and endorse) டிஎபி செனட்டர்…

அடையாளப்பத்திரம், குடியுரிமை பிரச்னைகளத் தீர்க்க பாடுபடுங்கள், எண்ணிக்கை முக்கியமல்ல

இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாளப் பத்திரம் மற்றும் குடியுரிமை பற்றிய பிரச்னைகள் மிகக் கடுமையானது. இப்பத்திரங்கள் மறுக்கப்படும் ஒவ்வொரு இந்தியரும் அவர் தம் குடும்பத்தினரும், இந்நாட்டில் கடுமையான கல்வி, பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற வேளையில், குடியுரிமை கிடைக்கப்பெற்ற ஒரு சிலரைப் பத்திரிக்கைகளில் படம் பிடித்துக் காட்டி,  பிரச்சனைகளைத் …

பெர்சே பேரணி மீது யூபிஎம் விதித்த தடையை Pro-Mahasiswa அமைப்பு…

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் கீழ் கூடுதல் சுதந்திரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படுள்ள போதிலும் யூபிஎம்  என்ற மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் சனிக்கிழமை நிகழும் பெர்சே 3.0 பேரணியில் தனது மாணவர்கள் பங்கு கொள்வதற்குத் தடை விதித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகத் தங்கும் விடுதிகளுக்கான…

என்எப்சி: பிகேஆர் வெளிப்படுத்திய விஷயங்கள் வங்கிகள் சட்டத்தை மீறுகின்றன

Bafia எனப்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் சட்டத்தை மீறியதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி மீது என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் இரண்டு போலீஸ் புகார்களைச் செய்துள்ளது. "ராபிஸி Bafia சட்டத்தை 21 முறை மீறியுள்ளதாலும் பல அவதூறுகளை கூறியுள்ளதாலும்" அந்தப் புகார்கள் கொடுக்கப்பட்டதாக…

கடற்படைத் தலைவர்: இன்னும் அதிகமான நீர்மூழ்கிகளை வாங்க எண்னியுள்ளோம்

அரச மலேசியக் கடற்படை (ஆர்எம்என்) தற்போது உள்ள இரண்டு ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளைப் பராமரிப்பதுடன் நாட்டின் கடல் தற்காப்பு ஆற்றலை மேலும் வலுப்படுத்த இன்னும் அதிகமான நீர்மூழ்கிகளையும் வாங்குவதற்கு எண்ணியுள்ளதாக அதன் தலைவர் அட்மிரல் அப்துல் அஜிஸ் ஜாபார் கூறியிருக்கிறார். என்றாலும் அந்தத் திட்டத்தை வரவு செலவுத் திட்டக்…

பஸ்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹிஜாவ் ஆதரவாளர்கள் கோலாலம்பூருக்குச் செல்வர்

கோலாலம்பூருக்கு ஹிம்புனான் ஹிஜாவ் ஆதரவாளர்களைக் கொண்டு செல்வதிலிருந்து சுற்றுலா பஸ் நிறுவனங்கள் விலகிக் கொண்ட போதிலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என அந்த அமைப்பின் தலைவர் வோங் தாக் கூறுகிறார். "இது மிகச் சிறிய பிரச்னை, எது எப்படி இருந்தாலும் மக்கள் அங்கு செல்வர். குவாந்தான் வெகு வெகு…

PTPTN தலைவர்: நாங்கள் கடன் முதலைகள் அல்ல

"PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதி சமூகப் பொறுப்புடன் இயங்குகிறது. அது வர்த்தக அமைப்பு அல்ல. அது கடன்களைத் திருப்பிச் செலுத்துமாறு பட்டதாரிகளை வேட்டையாடுவது இல்லை." இவ்வாறு அதன் தலைமை நிர்வாகி அகோஸ் சோலான் கூறுகிறார். கடன்களைத் திரும்பப் பெறுவதில் பல பிரச்னைகள் உள்ளன. அந்தக் கடன்கள்…

எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து அனைத்துலகக் குழு கவலை

மலேசியாவின் தேர்தல் முறையில் காணப்படும் மூன்று விஷயங்கள் குறித்து எழுவர் கொண்ட உண்மை நிலை அறியும் குழு ஒன்று பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸிடம் கவலை தெரிவித்துள்ளது. அந்த மூன்றில் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள குறுகிய 10 நாள் காலமாகும் என்று ஆஸ்திரேலிய செனட்டரான நிக்கோலஸ் செனோபோன்…