சிலாங்கூர் அரசாங்கத்தின் நினைவூட்டலைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வணிக வளாகம், செல்லப்பிராணிகளை அதன் வளாகத்தில் அனுமதிக்கும் தனது நடவடிக்கையை மாற்றியுள்ளது. உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலாவுக்கான மாநில நிர்வாகக் கவுன்சிலர் இங் சூயி லிம், மாநில உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சுபாங்கின் சன்வே ஸ்கொயர்…
‘டாவ்லாட் நடவடிக்கை (Ops Daulat) தொடருகிறது, நிலைமை கட்டுக்குள்’
பெல்டா சஹாபாட் 17க்கு அருகில் உள்ள கம்போங் தண்டுவோ-விலிருந்து ஆயுதமேந்திய பிலிப்பினோ பயங்கரவாதிகளைத் தேடித் துடைத்தொழிக்கும் நடவடிக்கை தொடருகின்றது. லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பெர்னாமா கூறியது. கம்போங் தண்டுவோ-வைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டார் சுற்றளவுக்கு Ops Daulat (டாவ்லாட் நடவடிக்கை) மேற்கொள்ளப்படுகின்றது. அதனால்…
தப்பிச் சென்றவர்களைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது
சில ஊடுருவல்காரர்கள் கம்போங் தண்டுவோ-விலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தப்பியிருக்கலாம் எனத் தெரிய வந்த பின்னர் பாதுகாப்புப் படைகள் தங்களது நடவடிக்கைப் பகுதியை விரிவுபடுத்தியுள்ளன. "நாங்கள் அந்த நடவடிக்கையின் போது எதிரிகளுடைய நடமாட்டத்தைச் சில பகுதிகளில் கண்டு பிடித்தோம். அதனால் தொடக்கத்தில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட பகுதியை விரிவு செய்ய…
தவறான தொடக்க மதிப்பீடுகள் உயிர்களை பலி கொண்டு விட்டன
"அந்த படையெடுப்பின் கடுமையான நிலையை நமது அரசியல்வாதிகள் தொடக்கத்தில் தவறாக மதிப்பீடு செய்து விட்டனர். அதனால் அவர்கள் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது" நஸ்ரி: கம்போங் தண்டிவோ சம்பவம் ஒர் ஊடுருவலே போர் அல்ல தே தாரேக்: பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்துள்ள மடத்தனமான…
சுலு ஊடுருவல்காரர்களைப் பயங்கரவாதிகள் என கோலாலம்பூரும் மணிலாவும் கருதுகின்றன
சபா, லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் எட்டு மலேசிய பாதுகாப்பு படை வீரர்களைக் கொன்ற ஆயுதமேந்திய சுலு ஊடுருவல்காரர்களை பயங்கரவாதிகள் என மலேசியா கருதுகின்றது. அந்தக் கருத்தை பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சர் அல்பர்ட் எப் டி ரொஸாரியாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். "அந்தக் கும்பலை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதை அமைச்சர்…
ஜிபிஎம்: ஜனநாயகம் தேர்தல் நாளோடு முடிவடைந்து விடுவதில்லை; அது ஒரு…
ஜனநாயகத்தை நோக்கி நமது நாட்டு மக்கள் மேற்கொண்ட கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகால பயணத்தில் எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும். அந்த வரலாற்றுப்பூர்வ திருப்புமுனை நமது நாட்டை ஒரு நிலையான, முதிர்ச்சியடைந்த, ஜனநாயக தேசமாக்க வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொண்டு மலேசிய நாட்டு மக்களும்,…
தமிழ்ப் பேரவை: ஆறுமுகம் மீதான போலீஸ் புகார் தீய நோக்கம்…
தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட்டின் வாரிய உறுப்பினர் கா. ஆறுமுகத்திற்கு எதிராக மார்ச் 1 இல் செய்யப்பட்ட போலீஸ் புகார் மற்றும் அச்செய்தி மலேசிய நண்பன் மார்ச் 2 பதிப்பில் பெரிய அளவில் வெளியிடப்பட்டிருந்தது தீய நோக்கம் கொண்டது என்று தமிழ்ப் பேரவை தலைவர் மருத்துவர் நா. ஐயங்கரன்…
சூலு பிரதிநிதி: அஸ்ஸிமுடி உயிருடன் இருக்கிறார்
இன்று காலை லாஹாட் டத்துவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஆயுதம் தாங்கிய கும்பலுக்குத் தலைமைதாங்கும் அஸ்ஸிமுடி கிராம் கொல்லப்பட்டதாகக் கூறும் மலேசிய ஊடகங்களின் செய்திகளை சூலு சுல்தானின் அலுவலகம் மறுத்துள்ளது. பிலிப்பின் தொலைக்காட்சியான டிவி5--இன் இணையத்தளமான InterAksyon.com, இன்று பிற்பகல் மணிலாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் சூலு சுல்தான்…
ஐஜிபி: பாதுகாப்புப் படைகள் எதிரிகளைக் கவனத்துடன் தேடி வருகிறார்கள்
இன்று காலை சாபா, லாஹாட் டத்துவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் “எதிரிகளைக் கவனத்துடன் வேட்டையாடி” வருவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கூறினார். “இந்தத் தேடும் நடவடிக்கை 4 சதுர மைல் பரப்பளவில் நடந்து வருகிறது. அப்பகுதியில் பகைவர்கள் இன்னும் பதுங்கி இருக்கிறார்கள்”.…
பெர்சே 2.0 செயலக அலுவலகம் கொள்ளையிடப்பட்டது
பெட்டாலிங் ஜெயாவில் பெர்சே 2.0 செயலக அலுவலகம் இன்று காலையில் கொள்ளையிடப்பட்டது. அந்தச் சம்பவத்தில் 600 ரிங்கிட் ரொக்கமும், கைத்தொலைபேசிகளும் இலக்கவியல் கேமிராக்களும் குரல் பதிவு சாதனம் ஒன்றும் திருடப்பட்டுள்ளன. அந்தத் திருட்டுச் சம்பவத்திற்கு 'அரசியல் நோக்கம் காரணமாக இருக்க முடியாது' என சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும்…
மணிலாவில் ஆர்ப்பாட்டங்கள், நஜிப் படம் எரிக்கப்பட்டது
மணிலா மக்காத்தி சிட்டியில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு வெளியில் பிலிப்பினோ போராளிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சபாவில் சுலு சுல்தானுக்கு ஆதரவான ஆயுதமேந்தியக் குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையை நிறுத்துமாறு அவர்கள் கோரினர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோவுடன் கைகுலுக்கும் படம்…
‘சபாவில் மோரோ போராளிகளும் தாக்குவர் என்பதற்கு ஆதாரமில்லை’
MNLF எனப்படும் மோரோ தேசிய விடுதலை முன்னணி போராளிகள், சபா லஹாட் டத்துவில் "அரச சுலு இராணுவத்துடன்" தொடரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள மலேசியப் படைகளுடன் சண்டையிடுவதற்கு உதவக் கூடும் எனக் கூறப்படுவதை தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நிராகரித்துள்ளார். "நாம் அதனைப்…
‘சுலு படையெடுப்பாளர்களுக்கு மலேசியாவில் பயிற்சி பெற்ற மோரோ போராளிகள் உதவுவர்’
சபா நெருக்கடியில் மொரோ தேசிய விடுதலை முன்னணியும் (MNLF) சேர்ந்து கொண்டுள்ளது. மலேசியாவில் பயிற்சி பெற்ற அதன் போராளிகள் சபாவில் போராடிக் கொண்டிருக்கும் சுலு சுல்தான் படைகளுக்கு உதவி செய்வர் என அந்த முன்னணியின் முன்னாள் தலைமைப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் ஹாட்ஜி அக்மட் பாயாம் அறிவித்துள்ளார். MNLF…
இப்ராகிம் அலிமீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டது
ஒரு நீதிபதியின் தீர்ப்பு குறித்து ஒரு வலைத்தளத்தில் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்ததற்காக மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலிக்கும் ஒரு வலைப்பதிவருக்கும் எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கு தொடர கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வழக்கு தொடர அனுமதி கேட்டுச் செய்யப்பட்டிருந்த மனுவை ஏற்றுக்கொண்ட…
இசி: ‘நம்பத்தக்கதல்ல’என்ற குற்றச்சாட்டு அபத்தமானது
மக்கள் தன்னை நம்புவதில்லை என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம்(இசி) மறுக்கிறது. மக்களுக்குத் தன்மீது நம்பிக்கை உண்டு என்று கூறும் இசி அதை நிரூபிக்க ஆய்வுத் தகவல் ஒன்றையும் சுட்டிக்காட்டியது. “தேசிய பேராசிரியர் மன்றம் (என்பிசி) இசி அறிவிக்கும் முடிவுகளை மக்கள் நம்புகிறார்களா என்பதைக் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்தியது.…
சிவப்புப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு, லஹாட் டத்து நகரம் அமைதியாக…
லஹாட் டத்துவுக்கு அருகில் உள்ள கம்போங் தண்டுவோ-வில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சிவப்புப் பகுதிகள் எனப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சண்டை நிகழ்ந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். கம்போங் தண்டுவோ, லாபியான், தஞ்சோங் பத்து ஆகியவற்றின் நுழைவாயில்களுக்கு அருகே 'இடைப்பட்ட பகுதிகள்' ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொது…
‘செம்போர்ணா பாதுகாப்பாக உள்ளது, நேற்றிரவு துப்பாக்கிச் சூடுகள் ஏதும் இல்லை’
கடலோரத்தில் உள்ள செம்போர்ணா நகரத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சொல்லப்படுவதை அந்த மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பிராடுஸ் அப்துல்லா நிராகரித்துள்ளார். அந்தப் பகுதியில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.…
கம்போங் தண்டுவோவில் வான் தாக்குதலில் போர்விமானங்கள்
சாபாவின் லாஹாட் டத்துவில், கம்போங் தண்டுவோவில் பாதுகாப்புப் படைகள் தாக்குதலில் இறங்கியுள்ளன. இன்று காலை ஏழு மணிக்கு முதல்கட்டமாக வான் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கடலோர கிராமப்பகுதி பக்கம் மூன்று வெடிப்பொலிகள் செவிமடுக்கப்பட்டன. எஃப்/ஏ-18, ஹோக் ரக போர்விமானங்கள் வான் தாக்குதலில் ஈடுபட்டன. அதனை அடுத்து குழிபீரங்கிகள் குண்டுகள்…
டாக்டர் மகாதீர், ஊடுருவல்காரர்களுடைய சமயம் என்ன என்பது முக்கியமல்ல
'எட்டு மலேசியர்கள் உயிரிழந்துள்ளனர். அதனை அவர்களுடைய குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் விளக்குங்கள். அவர்களும் முஸ்லிம்கள் தான்' லஹாட் டத்து நிலவரத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதை டாக்டர் மகாதீர் ஒப்புக் கொள்கிறார் பிராமன்: "அதனால் தான் நாங்கள் முதலில் கவனமாகச் செயல்பட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் முஸ்லிம்கள், நாமும்…
கம்போங் தண்டுவோ-வில் குண்டு வீச்சு தொடங்கியுள்ளது, கிராமவாசிகள் அந்தப் பகுதியிலிருந்து…
கடந்த மூன்று வாரங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிக்காரர்கள் பதுங்கியுள்ள கம்போங் தண்டுவோ-விலிருந்து அந்நிய ஊடுருவல்காரர்களை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. அந்தத் தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை அறிவித்தார். அந்தப் பகுதியில் பதுங்கியுள்ள ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களைப் பிடிப்பது அந்த நடவடிக்கையின்…
மலேசிய இந்தியர்களின் விடியலுக்காக வேதமூர்த்தி உண்ணாவிரத பிரார்த்தனை
தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு மறுக்கப்பட்டிருக்கும் மலேசிய இந்தியர்களுக்கான நீதியையும், உரிமையையும் , தன்மானத்தையும் மீட்டு நிலை நிறுத்தும் நோக்கத்தில் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி உண்ணாவிரத பிரார்த்தனை மேற்கொள்வார் என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் நா. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார். ஹிண்ட்ராப் போராட்டத்தின் மிக முக்கிய திருப்பு முனையாக இது…
டாக்டர் மகாதீர்: ஊடுருவல்காரர்கள் இஸ்லாத்துக்கு முரணாக நடந்து கொள்கின்றனர்
சபாவில் ஊடுருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களுடைய நடவடிக்கைகள் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானவை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறியிருக்கிறார். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. அவர்கள் செம்போர்ணாவிலும் லஹாட் டத்துவிலும் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களில் எட்டு போலீஸ் அதிகாரிகளைக் கொன்றுள்ளதாக அவர் சொன்னார். "நாங்கள்…
வெ. 32 லட்சம் என்ன ஆனது? கா. ஆறுமுகம் விளக்கம்
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் வழங்கிய நிதி என்ன ஆனது? அந்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது பற்றி கா. ஆறுமுகத்தை போலிஸ் விசாரிக்க வேண்டும் என்று முரளி சுப்பிரமணியம் போலிஸ் புகார் செய்திருந்தார். இது குறித்து வழக்கறிஞர் கா.…
செம்பூர்னாவில் ஒரு போலீஸ்காரரின் தலை துண்டிக்கப்பட்டதா?
சனிக்கிழமை, செம்பூர்னா, கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுலில் ஆயுதம் தாங்கிய கும்பலுடன் நிகழ்ந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை போலீசார் மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை. இன்று லாஹாட் டத்துவில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் இஸ்மாயில் ஒமார், தாம் இன்னமும் பிண ஆய்வு அறிக்கையைப்…


