பிகேஆரின் தேர்தல் பரப்புரைகளில் ‘நேரடித் தொடர்புக்கு’ முன்னுரிமை

இன்னும் 10 நாள்களுக்குத்தான் தேர்தல் பரப்புரைகள் செய்யலாம் என்பதால் இந்தக் கடைசி 10 நாள்களில் பிகேஆர் அதன் பரப்புரைகளில் இரண்டு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும்- அதிகமான செராமாக்கள் ஏற்பாடு செய்யப்படும், வாக்காளர்களை நேரடியாக தொடர்புகொள்வது தீவிரப்படுத்தப்படும். விவாதிக்கப்படும் விவகாரங்களைப் பொறுத்தவரை, அன்றாட வாழ்க்கைப் பிரச்னைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். டிஏபியைப் பொறுத்தவரை…

சுயேச்சையாக போட்டியிடுவதற்காக கமிலியா மன்னிப்புக் கேட்கிறார்

கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக முன்னாள் அம்னோ மகளிர்  துணைத் தலைவி கமிலியா இப்ராஹிம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் தமது முகநூல் பதிவில் அவ்வாறு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் நாடாளுமன்றத்தில் மகளி பங்கேற்பை அதிகரிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். "என்னுடைய நடவடிக்கையால் காயப்பட்டவர்களிடம் நான் மன்னிப்புக்…

மகாதீரைப் பொறுத்த வரையில் எப்போதும் ‘அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்’

'உங்களுக்கு நேரம் நன்றாக இல்லை. சீனர்களும் இந்தியர்களும் இப்போது பாஸ் கட்சியையும் பிகேஆர்  கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கியிருப்பதும் மலாய்க்காரர்கள் டிஏபி-யை ஆதரிக்கத் தயாராக இருப்பதும் தான்  உண்மை நிலை.' டாக்டர் மகாதீர்: தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்க்காசா வேட்பாளர்கள் 'எங்களுக்காக செயல்படுகின்றனர்' மஹாஷித்லா: ஆகவே இப்போது யார் எஜமானர் ? முன்னாள்…

சுங்கத் துறையின் உயர் நிலை அதிகாரி ஒருவர் புத்ராஜெயாவில் சுட்டுக்…

சுங்கத்துறை துணைத் தலைமை இயக்குநர் ஷாஹாருடின் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள தமது  அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரன் ஒருவனால் சுட்டுக்  கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்ற அந்தத் தாக்குதல்காரன் புத்ராஜெயாவில் உள்ள லெபோ வாவாசானில் காலை  மணி 8.40 வாக்கில் அவரைச் சுட்டதாக ஊடகத்…

பிகேஆர் வேட்பாளருடைய புதல்வியின் கார் எரியூட்டப்பட்டது

பிகேஆர் வேட்பாளர் டாக்டர் சேவியர் ஜெயகுமாருடைய புதல்விக்குச் சொந்தமான இரண்டு கார்கள் மீது  கும்பல் ஒன்று நேற்றிரவு மண்ணெண்ணெய் கொள்கலங்களை வீசியது. அதனால் அந்தக் கார்கள்  சேதமடைந்தன. நேற்று கிள்ளான் தாமான் கொளாங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் இரவு மணி 11  வாக்கில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.…

ஆய்வு: மே 5 தேர்தல் பிஎன் பக்காத்தானுக்கு இடையில் நெருக்கமான…

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் இரு தரப்புக்கும் மக்கள் ஆதரவு 40 விழுக்காட்டுக்கு  மேல் இருப்பது ஒர் ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் மய்யம் (Umcedel) மேற்கொண்ட அண்மையை கருத்துக்  கணிப்பில் அது தெரிய வந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஏப்ரல்…

டாக்டர் மகாதீர்: பெர்க்காசா வேட்பாளர்கள் ‘எங்களுக்காக செயல்படுகின்றவர்கள்’

பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் போன்றவர்களை பிஎன் வேட்பாளர்களாகத் தெரிவு செய்ததை  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தற்காத்துப் பேசியிருக்கிறார். அவர்களை நிறுத்துவதின் மூலம் பிஎன் -னுக்கு வாக்குகள் கிடைக்கும் என அவர் என்டிவி7ல் நிகழ்ச்சி  ஒன்றில் சொன்னார். "பெர்க்காசாவைச் சேர்ந்த மக்களும் பிஎன் -னுக்குத்…

சுல்கிப்லியை முத்தமிட்டது குறித்து இந்தியர்களுடைய ‘ஜுடாஸ்’ கவலைப்படவில்லை

வேட்பாளர் நியமன நாளன்று சர்ச்சைக்குரிய பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டினை கன்னத்தில் முத்தமிட்டதின் மூலம் இந்திய சமூகத்தின் எரிச்சலை சம்பாதித்து கொண்டு 'ஜுடாஸ்' என முத்திரை  குத்தப்பட்டுள்ள மனிதர், அது பற்றிக் கவலைப்படவில்லை. மஇகா உறுப்பினர் எனத் தன்னைக் கூறிக் கொள்ளும் என் தேவேந்திரன் என்ற அவரை…

பிகேஆர்: வாக்குப் பெட்டிகளைக் கொண்டு வந்த வாகனம் ஒன்று வேறு…

புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்துக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு சென்ற  வாகனம் ஒன்று 'ரகசிய' இடம் ஒன்றுக்கு மாற்றி விடப்பட்டதாக தான் கூறிக் கொண்டுள்ளது மீது பிகேஆர்  கேள்வி எழுப்பியுள்ளது. "வாக்குப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு புத்ராஜெயாவில் உள்ள இசி தலைமையகத்துக்கு சென்ற ஒரு  வாகனத்தை இசி-யின்…

அன்வார் : ‘வன்முறை’ ஆதரவாளர்களை பக்காத்தான் பாதுகாக்காது

அரசியல் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டு  பிடிக்கப்படும் பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்களுக்கு உதவி கிடைக்காது என எதிர்த்தரப்புத் தலைவர்  அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார். "பக்காத்தானைச் சேர்ந்தவர்கள் யாரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் நாங்கள் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை," என அவர் சொன்னார். பிஎன் கூட்டணியின்…

இடது கை விளம்பரம் தேவைதானா?

தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார பதாகைகளில் தமிழ்மொழி சிதைக்கபட்ட விடயமே இதுவரை பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தமிழனின் பண்பாடும், நாகரிகமும் அவமானப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) உலகத்திற்கே நாகரிகத்தை கற்றுத் தந்தவன் தமிழன் என நாம்…

‘வாக்குகள் வாங்கப்படுவதற்கான ஆதாரங்களை பிகேஆர் வெளியிடும்’

சபாவிலும் பினாங்கிலும் வாக்குகள் வாங்கப்படும் சம்பவங்களை தான் ஆவணப்படுத்தியுள்ளதாக  எதிர்க்கட்சியான பிகேஆர் இன்று அறிவித்துள்ளது. அந்தச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது தெரிவித்தது. "எங்களிடம் பற்றுச்சீட்டுக்கள் உள்ளன. பினாங்கில் 50 ரிங்கிட்டும் சபாவில் 1,000 ரிங்கிட்டும் கொடுக்கப்பட்டுள்ளன," என்று பிகேஆர் மூத்த தலைவர் அன்வார்…

தியான் சுவா : அங்கீகாரம் இல்லாத மாற்றங்களைச் சரி செய்ய…

இசி என்ற தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கடைசி நிமிட மாற்றங்கள் எனக்  கூறப்படும் புகார்களை இசி உடனடியாகக் கவனிக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது. வாக்காளருக்குத் தெரியாமல் அவருடைய விவரங்கள் மாற்றப்படும் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என  பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா…

சுஹாக்காம் அறிக்கையை வெளியிடுமாறு டிஏபி நஜிப்புக்கு சவால்

மலேசியாவில் உள்ள சுதேசி சமூகங்களுடைய நில உரிமைகள் மீது சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித  உரிமை ஆணையம் தயாரித்த அறிக்கையை வெளியிடுமாறு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பராமரிப்பு  அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு சவால் விடுத்துள்ளார். அந்த அறிக்கையை வெளியிடுவதை நிறுத்தி வைக்கும்…

மகாதீர் அவர்களே, உங்கள் நேரம் வந்தது இப்போது போய் விட்டது

'இந்த நாட்டில் செய்யப்பட்ட எல்லாத் தவறுகளையும் சரி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள்  ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என நாங்கள் பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். மலேசியாவை மீண்டும்  மகத்தான நாடாக மாற்ற எங்களை அனுமதியுங்கள்' டாக்டர் மகாதீர்: பக்காத்தான் ஆட்சி நாட்டை 'தோல்வி அடைந்த இஸ்லாமிய…

பெரும் கூட்டங்கள் நெகிரி செம்பிலானை பக்காத்தான் கைப்பற்றப்போவதை காண்பித்தது

திங்கள்கிழமை இரவு சிரம்பானில் டிஏபி செராமாவுக்குத் திரண்ட மாபெரும் கூட்டம், மே 5 தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் சிரம்பானிலும் ராசாவிலும் வெல்லும் என்பதை மட்டுமல்ல அது மாநில ஆட்சியைக் கைப்பற்றப்போவதையும் காண்பித்தது என்கிறார் நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக். அன்றிரவு சிரம்பான் மார்கெட்டுக்கு எதிரில் டிஏபியின்…

தாயிப் ஒய்வு பெறுவது பற்றிப் பேசுவதற்குத் தயாராக இல்லை

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், இரண்டு ஆண்டுகளில் ஒய்வு பெறுவதாக 2011ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் வாக்குறுதி அளித்த போதிலும் தாம் ஒய்வு பெறும் தேதி குறித்து எதுவும் இப்போது உறுதியாகச் சொல்ல  மறுக்கிறார். சிபுவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது ஒய்வு பெறும் திட்டம்…

கோட்டா ராஜா வேட்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்!

கோட்டா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் ஒரு சுயேச்சையாகக் களமிறங்குவதால் ஒரு காலத்தில் தன் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியைத் திரும்பக் கைப்பற்ற முழுமூச்சான முயற்சியில் இறங்கியுள்ள மஇகாவுக்கு ஒரு சிக்கல். இப்போது அங்கு வெற்றிபெற அத்தொகுதி  இந்தியர்களை மட்டும் அது நம்பி இருக்க இயலாது. இந்தியர்-அல்லாத…

இசி-க்கு எதிரான நீதித் துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

வாக்காளர் பட்டியலிலிருந்து தமது பெயரை அகற்றுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) கட்டாயப்படுத்துவதற்கு பிரிட்டனில் வசிக்கும் பொறியியலாளர் சமர்பித்த நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பத்தை ஷா அலாம் உயர்  நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நீதிபதி வெர்னோன் ஒங் தமது அறையில் அந்த முடிவைச் செய்தார். இசி-யையும் சிலாங்கூர் இசி…

‘லஹாட் டத்து ஊடுருவல் சபா பிஎன் பிரச்சார அம்சம்’

லஹாட் டத்து ஊடுருவல் சபாவில் வாக்குகளைக் கவருவதற்கு பிஎன் செய்து வரும் பிரச்சாரத்தில் முக்கியக் கருப்பொருளாகத் திகழ்கின்றது. குறிப்பாக பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அந்த மாநிலத்துக்கு நேற்று  தொடக்கம் மேற்கொள்கின்ற இரண்டு நாள் பயணத்தின் போது அந்த விவகாரம் முக்கியப் பிரச்சார அம்சமாக  திகழ்ந்தது. நேற்றும்…

இசி: பல வாக்காளர்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் அவர்களை அடையாளம்…

வாக்காளர்களின் பெயர்கள் ஒரேமாதிரியாக இருந்தாலும் அவர்களின் அடையாள அட்டை எண்களை வைத்து அவர்களை வேறுபடுத்த முடியும் என்கிறது தேர்தல் ஆணையம்(இசி). மூன்று அடையாள அட்டைகள் அப் ரபர் ஆவாங் என்ற பெயரைக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டிருப்பதற்கு இசி செயலாளர் கமருடின் முகம்மட் பாரியா மறுப்புத் தெரிவித்தார் என…

‘ரோஸ்மா மான்சோர்’ பெயரில் அபராதம் செலுத்தப்படாத இரண்டு ஏஇஎஸ் சம்மன்கள்

பாகாங் பெக்கானில் பதிவு பெற்ற வாக்காளரான ரோஸ்மா மான்சோர் என்பவர் சர்ச்சைக்குரிய ஏஇஎஸ்  எனப்படும் தானியங்கி அமலாக்க முறையின் கீழ் அபராதம் செலுத்தப்படாத இரண்டு ஏஇஎஸ் சம்மன்கள்  இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் XIASEAN360 என்ற எண் தகடைக் கொண்ட வாகனம் ஒன்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரும் ஆவார்.…

முன்னாள் அட்மிரல் லுமுட் கடற்படைத் தளத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை

37 ஆண்டுகளுக்கு லுமுட் கடற்படைத் தளத்தை தமது இல்லம் என முதல் அட்மிரல் முகமட் இம்ரான் அப்துல்   ஹமிட் அழைந்து வந்தார். நேற்று லுமுட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் அவர் அந்தத் தளத்துக்குள் பிரச்சாரம் செய்ய முயன்ற போது அதன் கதவுகள் அவருக்கு மூடப்பட்டன. இம்ரானுடைய…