ஸ்கார்ப்பின் விசாரணை தொடருகிறது என்கிறார் பிரஞ்சு வழக்குரைஞர் போர்டோன்

மலேசியாவுக்கு இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் விற்கப்பட்டதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர் ஒருவரை பாரிஸில் உள்ள நீதிமன்றத்தில் அந்த வழக்கைச் சமர்பித்துள்ள வழக்குரைஞர் சாடியுள்ளார். பிரான்ஸுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய அந்தக் கொள்முதல் மீதான வழக்கிற்கு நியமிக்கப்பட்ட இரண்டு பிரஞ்சு…

அம்பிகா: மோசடிகளை முறியடிக்க அனைவரும் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், 1999ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது புதிதாக வாக்காளர்களாக பதிந்துகொண்ட 650,000 வாக்காளர்களால் வாக்களிக்க முடியாமல் போனதை நேற்று நினைவுபடுத்தினார். கணினி பதிவுமுறை அமலுக்கு வருமுன்னர், வாக்காளராகப் பதிந்துகொண்டவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஆறு மாதங்கள்…

மலேசிய வழக்குரைஞர் மன்றத்திடம் அதிருப்தியுற்றவர்கள், வழக்குரைஞர் சங்கம் அமைத்தனர்

பல விவகாரங்களில் மலேசிய வழக்குரைஞர் மன்றம் நடந்துகொண்ட விதத்தில் வெறுப்புற்ற வழக்குரைஞர்கள்  ஒன்றிணைந்து வழக்குரைஞர்களுக்குப் புதிய அமைப்பாக வழக்குரைஞர் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். அச்சங்கம் குறித்து த ஸ்டார் நாளேட்டிடம் பேசிய அதன் நிறுவனர் நோர்டின் யூசுப், சங்கப் பதிவகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அது, வழக்குரைஞர்…

சாமில் வாரியாவும் உத்துசானும் தெரேசா கொக்கிடம் மன்னிப்பு கேட்டனர்

மலேசிய பத்திரிகையாளர் கழகத் தலைவர் சாமில் வாரியாவும், உத்துசான் மலேசியாவும், 2008 அக்டோபர் 12-இல் அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேட்டில் 'Politik Baru YBJ' (மாண்புமிகுவின் புதிய அரசியல்) என்ற தலைப்பில் சீபூத்தே எம்பி தெரேசா கொக்கை அவமதிக்கும் வகையில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டனர். இன்று…

பிரஞ்சு வழக்குரைஞர்: ஸ்கார்ப்பின் மீது வழக்கு விசாரணை நடைபெறவில்லை

2002ம் ஆண்டு மலேசியா இரண்டு பிரஞ்சு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்தது தொடர்பில் பிரஞ்சு நிறுவனம் ஒன்று ஊழல் புரிந்துள்ளதாகக் கூறப்படுவது மீது வழக்கு விசாரணை நிகழ்வதாக பல மலேசிய இணையத் தள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதை பிரபலமான பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர் ஒருவர் மறுத்துள்ளார். மலேசிய…

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் ‘இறுதியாக்கப்படுகின்றன’

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதற்கு வகை செய்யும் திருத்தங்கள் நடப்பு நாடாளுமன்றக் Read More

டாக்டர் மகாதீர்: PKFZ விவகாரத்தில் நான் ஏமாற்றப்படவில்லை என நான்…

சர்ச்சைக்குரிய PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி விவகாரத்தில் தாம் ஏமாற்றப்படவில்லை என தாம் போலீசாரிடம் சொன்னதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் கூறியிருக்கிறார். "என் நினைவுக்கு எட்டிய  வரையில் அந்தத் திட்டத்துக்கு எந்த அமைச்சரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை," என மகாதீர் இன்று கோலாலம்பூர்…

தெங்: பினாங்கு பிஎன் கூட நிழல் ஆட்சி மன்றத்தை பெற்றிருக்கவில்லை

பினாங்கு பிஎன் -னிடம் நிழல் அமைச்சரவையோ மாநில ஆட்சி மன்றமோ கிடையாது என அதன் தலைவர் தெங் சாங் இயாவ் கூறியுள்ளார். புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள பக்காத்தானிடம் நிழல் அமைச்சரவை கூட இல்லாதது பற்றி குறை கூறப்பட்டுள்ளது தொடர்பில் அவர் கருத்துரைத்தார். என்றாலும் பல்வேறு மாநில அரசாங்கத்…

‘செலாயாங்கில் ‘டிஏபி ஹுடுட் வேண்டாம்’ என்ற சுரொட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன

டிஏபி சின்னத்துடன் 'ஹுடுட் வேண்டாம்' எனக் கூறும் சுவரொட்டிகள் செலாயாங் வட்டாரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி கூறிக் கொண்டுள்ளது. பள்ளிவாசல்களிலும் சூராவ் அறிவிப்புப் பலகைகளிலும் அவை ஒட்டப்பட்டுள்ளதாக சிலாங்கூர் டிஏபி குழு உறுப்பினர் எரிக் தான் கூறினார். "தவறான புரிந்துணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க அந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு…

நஸ்ரி: இசி, பிரதமர்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல

தேர்தல் ஆணையம் (இசி) ஒரு சுயேச்சை அமைப்பு. பேரரசரால் நியமிக்கப்பட்ட அது அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்பதை அரசாங்கம் வலியுறுத்துகிறது. “அதன் அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்பார்வை இடுவது மட்டுமே பிரதமர்துறையின் பணியாகும்”, என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் மக்களவை கேள்வி நேரத்தின்போது கூறினார்.…

சிலாங்கூர் எம்பி தொகுதியில் கணக்கறிக்கை கொடுக்கப்படவில்லை எனப் புகார்

கோலா சிலாங்கூர் பிகேஆர் தொகுதி செயல்குழு உறுப்பினர் ஒருவர், தொகுதியில் கணக்கறிக்கை கொடுக்கப் Read More

போலீசார் பிஎன் -னுக்குத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்றனர்

"முதியவர்களை முட்டாளாக்க முடியவில்லை. அதனால் போலீசார் இப்போது பிள்ளைகளை முட்டாளாக்க முயலுகின்றனர். காரணம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தங்கள் காப்பாளர் பதவியில் இருப்பர் என அவர்கள் நம்புகின்றனர்.' "பெர்சே, சுவாராம், பிஎஸ்எம் ஆகியவை தீயவை என போலீஸ் பள்ளிப் பிள்ளைகளிடம் கூறியது. ஈப்போகிரைட்: அந்தப் போலீஸ் அதிகாரிகள் நாட்டின்…

பிலிப்பைன்ஸில் முஸ்லிம் பகுதிக்கு தன்னாட்சி வழங்க இணக்கம்

பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் முஸ்லிம் கிளர்ச்சிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் அமைதி ஒப்பந்தமொன்றுக்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிங்கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார். பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை…

டாக்டர் மகாதீர்: எதிர்க்கட்சிகளுக்கு போடப்படும் வாக்கு சோரோஸுக்கு செலுத்தப்படும் வாக்கு

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பது, மலேசியாவை காலனியாக்குவதற்கு செல்வந்தர் ஜார்ஜ் சோரோஸ் Read More

‘பெர்சே, சுவாராம், பிஎஸ்எம்’ ஆகியவை தீயவை என பள்ளிப் பிள்ளைகளிடம்…

சிலாங்கூர் செமினியில் உள்ள தொடக்கத் தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட போலீஸ் விளக்கக் கூட்டம், பெர்சே, சுவாராம், பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி ஆகிய 'தீய சக்திகள்' பற்றிய பாடமாக மாறியது. அந்தத் தகவலை பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் வெளியிட்டார். லாடாங் செமினி…

மலாக்கா முதலமைச்சர் புதல்வர் திருமண விருந்து 2.0ல் பிரதமர் கலந்து…

மலாக்கா முதலமச்சர் முகமட் அலி ரூஸ்தாம் தமது மூத்த புதல்வர் திருமணத்தை ஒட்டி நேற்று நடத்திய இரண்டாவது விருந்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பல அமைச்சர்கள் உட்பட 900 பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 130,000 விருந்தினர்களுடன் நடத்தப்பட்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற முதலாவது…