பெர்க்காசா, செய்தால் ஒழுங்காகச் செய், இல்லாவிட்டால் அறவே செய்ய வேண்டாம்

"பொதுவாக மலேசியர்களைப் பொறுத்த வரையில் நாம் ஒருவர் மற்றொருவருடைய நம்பிக்கைகளை மதிக்கிறோம். ஆனால் பெர்க்காசாவைப் பொறுத்த மட்டில் அது ஒரு வழிப் பாதை." வெள்ளை அங் பாவ்: அரசாங்கம் தவறி விட்டது கர்மா: கீ துவான் சாய் 'நான் அவர்களை நிறுத்த முடியாது' என பிரதமர் நஜிப் ரசாக்…

கீத்தா கட்சி கலைக்கப்படும் என ஜைட் அறிவிப்பு

கீத்தா எனப்படும் Parti Keadilan Insan Tanah Air கட்சி விரைவில் நடத்தப்படவிருக்கும் சிறப்புப் பொதுக் கூட்டத்தின் மூலம் கலைக்கப்படும். அந்தத் தகவலை அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம்  கட்சியின் இணையத் தளம் வழி அறிவித்துள்ளார். "நாம் எதிர்த்தரப்பை ஆதரிக்கிறோம் என்பது தொடர்பான சந்தேகங்கள் அனைத்தையும் போக்கும் பொருட்டு"…

மலேசியா அவர்கள் நாடு, நாம் “பாலே இந்தியா”

கோவிந்தசாமி: ம.இ.கா-விலிருந்து நீக்கப்பட்டு, பக்காத்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, மீண்டும் ம.இ.கா-வில் இணைந்து பாக்காத்தான் அரசாங்கம் வாக்கு கொடுத்ததை செய்யவில்லை என்று கிள்ளான் வட்டாரத்தில் ஒருவர் கலையோடு சாமி ஆடுகிறாரே?   கோமாளி: சாமி ஆடுபவர்கள், அருள் போகும்போது மலையேறிவிடுவார்கள். மீண்டும் அருள் வந்ததும் ஆடுவார்கள். அவரின் ஆட்டத்தில் உண்மையும்…

டிஎபி, மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைத்து குடியரசாக்கும், ஹசான் அலி

நேற்று பாங்கியில் சுமார் 1,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹசான் அலி பக்கத்தான் ரக்யாட் எப்படி இஸ்லாத்தை மிரட்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். அவரது நாடுதழுவிய அளவில் கூட்டம் நடத்தும் திட்டத்தின் முதல் கட்டமான இக்கூட்டத்தில் டிஎபி கூடிய விரைவில்…

லிம்: பதற்றத்தைத் தூண்டுவதே பள்ளிவாசலில் பன்றித் தலை வைக்கப்பட்டதின் நோக்கம்

சிலாங்கூர் ரவாங் நுருல் இமான் பள்ளிவாசல் நுழைவாயிலில் பன்றித் தலை வைக்கப்பட்ட சம்பவத்தை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கடுமையாகச் சாடியுள்ளார். அது, வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக "இன சமய உணர்வுகளைத் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட  கோழைத்தனமான நடவடிக்கை" என டிஏபி தலைமைச் செயலாளருமான லிம்…

புவா: இபிஎப் பணத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது

குறைந்த-விலையிலும் அடக்க விலையிலும் வீடுகள் கட்டிக்கொடுக்கும் முயற்சிகளை வரவேற்றாலும் அத்திட்டங்களுக்காக ஊழியர் சேமநிதி(இபிஎப்) பயன்படுத்தப்படுவது குறித்து டிஏபி எச்சரிக்கிறது. “இத்திட்டங்களுக்கு இபிஎப்-பிலிருந்து நிதியுதவி செய்யக்கூடாது. குறைந்த அபாயம்கொண்ட திட்டங்களில் முதலீடு செய்து முடிந்தவரை உயர்ந்த ஆதாயம் பெற்று 11 மில்லியன் மலேசியர்களின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட பணத்தைக் காப்பதுதான்…

அன்வார்: தேர்தல் ஆணையம் சிறிய விஷயங்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது

இசி என்ற தேர்தல் ஆணையம் சிறிய, நடைமுறை விஷயங்கள் மீது நேரத்தை வீணாக்குவதை நிறுத்திக் கொண்டு தேர்தல் நடைமுறைகளைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "தேர்தல் ஆணையத்தின் பெரிய கடமை தேர்தலை தூய்மைப்படுத்துவதாகும். அது வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த வேண்டும்.…

அன்வார் “வாயை மூடிக் கொள்ளுங்கள்” என அந்த “முதியவர்” மகாதீரிடம்…

அந்த 'முதியவர்' டாக்டர் மகாதீர் முகமட் வீட்டில் அமைதியாக இருப்பது நல்லது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அந்த முதிய மனிதர் இன்னும் நிறுத்தவில்லையா? அது போதும். அவரது அவரது குடும்பத்தினரும்  ஏற்கனவே கொழுத்த பணக்காரராகி விட்டனர்," என அவர் கோலாலம்பூரில் பத்து பிகேஆர் ஏற்பாடு…

சீனர் பண்பாட்டை மதிக்கும் பாஸுக்குப் பாராட்டு

வாழ்த்து பாஸுக்கு, வசவு பெர்காசாவுக்கு. மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா,  ‘வெள்ளை அங் பாவ்’ பொட்டலங்களைக் கொடுத்ததற்காக பல தரப்புகளின் கண்டனத்துக்கு இலக்காகியுள்ள வேளையில் சீனர்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய பாஸ் கட்சி, ஃபேஸ்புக்கில் பலருடைய பாராட்டைப் பெற்றுள்ளது.  மாற்றரசுக் கட்சியான பாஸின் சீனப்…

வெள்ளை அங் பாவ்: அரசாங்கம் தவறு செய்து விட்டது, கீ…

பெர்க்காசா, சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட மக்களுக்கு வெள்ளை 'அங் பாவ்' கொடுக்கப்பட்டுள்ளது, அறியாமையால் நிகழ்ந்த தவறு என அந்த வலச்சாரி அமைப்பு கூறிக் கொண்டுள்ளது. அது, சில சமயங்களில் மற்றவர்களைப் பற்றி மலாய்-முஸ்லிம்கள் எண்ணுவதில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது. மற்ற இனங்கள், சமயங்கள்…

புதிய தமிழ் நாளேடு, தினக்குரல், உதயமாகிறது

ஒரு புதிய தமிழ் நாளேடு, தினக்குரல் பிப்ரவரி 9-இல் வெளியீடு காண்கிறது. அதன் நிர்வாக இயக்குனர் அருள்குமார்,29. இவர், காலஞ்சென்ற மலேசிய நண்பன் தலைமை ஆசிரியர் ஆதிகுமணன் அவர்களின் புதல்வராவார்.ஆதிகுமணன் பிறந்த நாளான பிப்ரவரி 9-இல், இப் புதிய நாளிதழ் வெளிவருவதாக அதன் தலைமை ஆசிரியர் பி.ஆர்.ராஜன் தெரிவித்தார்.…

வாக்காளர் பட்டியலில் ஐயத்துக்கிடமான 42,025 பெயர்கள் நீக்கம்

தேர்தல் ஆணையம்(இசி), வாக்காளர் பட்டியலில் உள்ள ஐயத்திற்டமான 42,025 பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது. 42,051 பெயர்களை இரண்டு மாதங்கள் காட்சிக்கு வைத்ததில் 26வாக்காளர்களை மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.எனவே, எஞ்சியுள்ள 42,025பெயர்களை நீக்குவதென முடிவு செய்யப்பட்டதாக இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தெரிவித்தார்.  “வழக்கமாக ஒரு…

பெர்க்காசாவின் வெள்ளை அங் பாவ்-வுக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை

பெர்க்காசா நடத்திய சீன புத்தாண்டு நிகழ்வின் போது பாரம்பரிய 'அங் பாவ்' சிவப்பு உறைகளுடன் வெள்ளை நிற கடித உறைகளும் பயன்படுத்தப்பட்டதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்த அரசு சாரா அமைப்பின் தலைவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர் என…

“போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்கச் சொன்னதில்லை’’, என்எப்சி

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) நிர்வாகத் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்குமாறு ஒரு வணிகரான ஷாம்சுபாஹ்ரினிடம் தாம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். இன்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் வெளிவந்திருந்த ஒரு செய்தியில் சாலே, போலீசார் அரசாங்கக் கடன்மீதான விசாரணையில் நியாயமாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குக்…

“நில மோசடி” குறித்த புலனாய்வுக்கு உதவ முன்னாள் பினாங்கு பிஎன்…

"பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரிங்கிட் செலவு வைத்த நில மோசடி எனக் கூறப்பட்ட ஒரு விவகாரம் மீதான விசாரணையில் ஒத்துழைக்க முன்னாள் பினாங்கு பிஎன் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தவறி விட்டனர். ' தான் ஹாக் ஜு 'மோசடி' என வருணிக்கப்பட்ட அதிலிருந்து தங்களை மீட்டுக்…

கிளந்தானில் இரண்டு இடங்களில் போட்டியிட பிபிபி விருப்பம்

அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் தனக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி)  விரும்புகிறது. பிபிபி உதவித் தலைவர் நிக் சாபியா நிக் யூசுப், கிளந்தானில் பிபிபி-க்கு நிறைய செல்வாக்கு இருப்பதாகவும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெல்லும் ஆற்றல் அதற்குண்டு என்றும் கூறினார். “பிபிபி…

அசீஸ் பாரி: யுஐஏ என்னைச் சங்கடப்படுத்தப் பார்க்கிறது

அரசமைப்பு சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, தம்மைச் சங்கடப்படுத்தும் நோக்கத்தில்தான் தம் "பேராசிரியர்" பட்டம் மீட்டுக்கொள்ளப்படுவதாக யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா ஒரு பொது அறிவிப்பைச் செய்திருக்கிறது என்கிறார். “யுஐஏ-இன் போக்கை எண்ணி வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.மற்றவர்களால் இயக்கப்படும் ஒரு கருவிபோல் அது செயல்படுவது தெளிவாக தெரிகிறது”, என்றாரவர். “பணி…

மகாதீர் அன்வாரை யூத ஆதரவாளர் எனச் சொல்வது வினோதமாக இருக்கிறது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யூதர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக கடைப் பிடிக்கும் நிலை, அவர் அதிகாரத்தில் இருந்த போது அவர்களுடன் அணுக்கமாக இருந்ததற்கு நேர்மாறாக உள்ளது என பிகேஆர் இன்று கூறியுள்ளது. "யூதர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக இப்போது மகாதீர் வெளிப்படையாகப் பேசலாம். ஆனால் அவர்…

இஸ்ரேல் மீது அன்வார் விளக்கமளிக்க வேண்டும் என நிக் அஜிஸ்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்னைக்கு இரண்டு நாட்டுத் தீர்வுக்கு தாம் அளித்துள்ள ஆதரவை விளக்க வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் கேட்டுக் கொண்டுள்ளார். அன்வார் விளக்கமளிப்பது அவசியம் எனக் கூறிய அவர், காரணம் பரவலாக பல…

ரவாங் பள்ளிவாசலில் பன்றித் தலை கண்டு பிடிக்கப்பட்டது

சிலாங்கூர் ரவாங், பத்து 18ல் உள்ள நுருல் அமான் பள்ளிவாசலின் நுழைவாயிலில் பன்றித் தலை ஒன்று இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டது. முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்ட போது பள்ளிவாசல் குழு உறுப்பினர் ஒருவர் காலை 5 மணி வாக்கில் அதனைக் கண்டதாக  பிகேஆர் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் கான்…

மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவையில்லை; இப்ராஹிம் அலி அப்படிப்பட்டவர்தான்

"கெட்ட நோக்கம் ஏதும் இல்லை என்றாலும் கூட பெர்க்காசா உறுப்பினர்கள் வெளியில் வந்து மற்றவர்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஒரளவு கற்றுக் கொள்ள வேண்டும்." வெள்ளை அங் பாவ்: ஏதும் தெரியாது என பெர்க்காசா மன்றாடுகிறது மலேசியாவில் பிறந்தவன்: அந்த உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் வெள்ளை நிற அங் பாவ்…

“பெர்க்காசா சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் நான் பாதிக்கபட்டவனாக்கப்பட்டேன்”

கம்போங் பாருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்க்காசா நடத்திய திறந்த இல்ல உபசரிப்புக்கு 50 பேரைக் கொண்டு வந்ததால் நான் "'பாதிக்கபட்டவனாக்கப்பட்டேன்". சர்ச்சைக்கு இலக்காகி இருக்கும் மசீச செபூத்தே தொகுதிக் குழு உறுப்பினர் கொலின் தியூ எடுத்துள்ள நிலை அதுவாகும். மலாய் வலச்சாரி அரசு சாரா அமைப்பான  பெர்க்காசா அந்த நிகழ்வுக்கு…

டிஏபி: புதிய நெடுஞ்சாலைக்கான செலவுகள் ஏன் 134 விழுக்காடு கூடின…

உத்தேச மேற்குக் கடலோர துரித நெடுஞ்சாலைக்கான செலவுகள் 3.015 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 7.07 பில்லியன் ரிங்கிட்டாக கூடியதை அரசாங்கம் விளக்க வேண்டும் என டிஏபி கோரியுள்ளது. 215.8 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தச் சாலையை 3.015 பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டுவதற்கான உடன்பாடு ஒன்றில் Kumpulan Europlus Bhd (Keuro)வும்…