GISB உறுப்பினர்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது மனைவி உட்பட 22 நபர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவியல் குழுவைச் சேர்ந்தவர்கள் என இன்று செலாயாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 130V(1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ரஸாருதீன் ஹுசைன்…
ஈப்போ இரண்டு மாவட்ட போலீஸ் தலைமையகங்களைப் பெறும்
ஈப்போ மாநகர் விரைவில் இரண்டாவது மாவட்ட போலீஸ் தலைமையகத்தைப் பெறவிருக்கிறது. பொது மக்களுக்கு விரைவான மேலும் திறமையான சேவையை வழங்குவது அதன் நோக்கம் என போராக் போலீஸ் தலைவர் சுக்ரி டாஹ்லான் இன்று கூறினார். இப்போது ஈப்போவுக்கு ஒரே ஒரு மாவட்டப் போலீஸ் தலைமையகம் மட்டுமே உள்ளது. அது…
கெடா பாஸ் இளைஞர்கள்: பாஹ்ரோல்ராஸி போக வேண்டும் என நாங்கள்…
கெடா பாஸ் தலைமைத்துவத்திலிருந்து துணை ஆணையர்களான பாஹ்ரோல்ராஸி ஸாவாவி-யும் இஸ்மாயில் சாலே-யும் விலக வேண்டும் என கெடா பாஸ் இளைஞர் பிரிவு விரும்புகிறது. மாநில பாஸ் இளைஞர் பிரிவின் மூத்த தலைவருமான அந்த வட்டாரம் அதனைத் தெரிவித்தது. அந்த முடிவு இளைஞர் பிரிவின் சொந்த முடிவு என்றும் வெளியார்…
இஸ்ரேலிய யூதர்களுடன் வர்த்தகம் செய்தல் கூடாது, பேராக் முப்தி
பேராக் முப்தி ஹருஸ்ஸானி சக்கரியா, இஸ்ரேலிய யூதர்களுடன் ஒத்துழைப்பது, அவர்கள் ஜயோனிச கொள்கைகளை ஏற்பவர்கள்(Zionist ) அல்லர் என்றாலும்கூட தடுக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறார். ஏனென்றால் இஸ்ரேலில் உள்ள யூதர்கள் முஸ்லிம்களிடம் விரோதம் கொண்டவர்கள் என்று ஹருஸ்ஸானி கூறியதாக இன்றைய உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. “நபிகள் காலத்தில் யூதர்கள்…
என்எப்சி மீதான பிஏசி விசாரணையில் தலைமை நிர்வாகி மௌனமாக இருந்தார்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீது நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு நடத்தும் விசாரணையில் சாட்சியமளிக்குமாறு அழைக்கப்பட்ட அந்த நிறுவனப் பேராளர் தமது வாக்குரைஞர்களுடைய ஆலோசனையைத் தொடர்ந்து மௌனம் சாதித்ததார். அதனால் இன்று அந்த விசாரணைக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. "வான் ஸுரினா சாஆரன் அந்த…
உங்கள் கருத்து: 2008 ஒரு தவறா, யார் பேசுவது பார்த்தீர்களா?
"ஒரே தப்பை இரண்டு முறை செய்யாதீர்கள்! நல்லது அதே தவறை 13வது பொதுத் தேர்தல் வரும் போது 13வது முறையாக நாம் செய்யக் கூடாது என நான் சொல்வேன்." 2008 தவறை திரும்பச் செய்ய வேண்டாம் என்கிறார் ஷாரிஸாட் புத்திசாலி வாக்காளர்: அந்த வெட்கமில்லாத பெண்மணி, வாக்காளர்கள் என்ன…
தொங்கு நாடாளுமன்றம் மலேசியாவுக்கு பேரிடரைக் கொண்டு வரும் என்கிறார் நஜிப்
ஆளும் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் நல்ல பெரும்பான்மையைப் பெறத் தவறி அதன் விளைவாக தொங்கு நாடாளுமன்றம் உருவானால் நாட்டுக்கு பேரிடர் ஏற்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். "நிலைத்தன்மை கொண்ட நியாயமான வலிமையைக் கொண்ட அரசாங்கத்தைப் பெற்றிருப்பது மிக முக்கியமாகும். அது மூன்றில் இரண்டு…