மகளிர் பேரணி: பாஹாசா மலேசியா, ஆங்கில மொழி நாளேடுகளில் இருட்டடிப்பு

நாட்டில் மாற்றங்கள் கோரி கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மகளிர் நடத்திய பேரணியை முக்கிய பாஹாசா மலேசியா, ஆங்கில மொழி நாளேடுகள் முற்றாகப் புறக்கணித்துள்ளன. அந்தப் பேரணியில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு ஏற்றனர். அந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்த நாளேடுகளில் தி ஸ்டார், நியூ ஸ்ட்ரெயிட்ஸ்…

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புகிறது, மன்மோகன் சிங்

ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள சிறிலங்கா மீதான தீர்மானம் இந்தியாவின் குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்குமானால் இந்தியா அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறது. "சமத்துவம், உண்மையான மதிப்பு, நீதி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சிறீலங்கா தமிழ் சமூகத்தின் எதிர்காலம் அமைய வேண்டும் என்ற நமது குறிக்கோள்களை…

டிஏபி தலைவர்கள் பிரச்னைகளைக் கட்சிக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும்

தேசிய தலைவர் கர்பால் சிங்குக்கும் பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமிக்குமிடையில் நிகழும் சர்ச்சையில் இதுவரை மெளனம் காத்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இப்போது மெளனம் கலைந்து கருத்துத் தெரிவித்துள்ளார். கட்சி விவகாரங்களை உள்ளுக்குள்ளேயே விவாதித்துத் தீர்வுகாண வேண்டும் என்றவர் குறிப்பிட்டார். உள் பிரச்னைகளை வெளியில்…

கிளந்தானில் “மலாய் ஒதுக்கீட்டு நிலங்கள் பூமிபுத்ரா அல்லாதாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது”

கிளந்தானில் மலாய் ஒதுக்கீட்டு நிலங்கள் 'மேம்பாட்டு' நோக்கத்துக்காக பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களுக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு விடப்படுவதற்கு மாநில ஆட்சி மன்றம் அங்கீகாரம் அளித்துள்ளதாக உத்துசான் மலேசியா இன்று முதல் பக்கச் செய்தியில் குற்றம் சாட்டியுள்ளது. அந்தத் திட்டங்களில் Lembah Sireh, Bandar Baru Tunjong, Muzium…

DAP: ‘மாஜு துரித நெடுஞ்சாலை பிஎன் நடத்தும் வழக்கமான நெடுஞ்சாலைக்…

சர்ச்சைக்குரிய மாஜு துரித நெடுஞ்சாலையின் (MEX) சலுகை உரிமை கொடுக்கப்பட்டுள்ள முறை,  மக்கள் வரிப்பணத்தைக் கொண்ட நிதிகளைத் தனது சேவகர்கள் உறிஞ்சுவதற்கு பிஎன் எப்படி அனுமதிக்கிறது என்பதற்கு "தெளிவான" எடுத்துக் காட்டு என டிஏபி பிஜே உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். "அந்த நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு மக்கள்…

காடிர் ஷேக் ஃபாட்சிர் அம்னோவிலிருந்து விலகினார்

56ஆண்டுகள் அம்னோ உறுப்பினராக இருந்துவந்த காடிர் சேக் ஃபாடிர் இன்று அதிலிருந்து விலகினார். “கடந்த வாரம், கூலிம் பண்டார் பாரு அம்னோ தொகுதியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகினேன்.இன்று கட்சி உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவதாக தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பி விட்டேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால்,…

பினாங்கு பேச்சாளர் சதுக்கத்தில் பிஎன்னை வறுத்தெடுத்தனர் மூத்த குடிமக்கள்

பினாங்கு எஸ்பிளேனேட்டில் 2010-இல் உருவாக்கப்பட்ட பேச்சாளர் சதுக்கம் பலரையும் கவர்ந்து வருகிறது.குறிப்பாக, மூத்த குடிமக்கள் அங்கு வருகிறார்கள். பல விவகாரங்கள் பற்றி நயமாகவும் நகைச்சுவையாகவும் பேசிப் பலரையும் கவர்கிறார்கள். நேற்று, ஓய்வுபெற்ற வணிகரான அல்பிரெட் சார்லி, பிஎன் ‘திறந்த இல்ல உபசரிப்பை’யும் அண்மையில் பினாங்கு டிஏபி நடத்திய நிதிதிரட்டு…

பிஏசி நாளை என்எப்சி-யை விசாரிக்கும்

பல மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள என்எப்சி  என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு நாளை என்எப்சி அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளது. "நாங்கள் சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம். நீதிமன்ற விசாரணையில் உள்ள விஷயங்களும் உள்ளன. என்றாலும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள…