ஆர்சிஐ அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஆனால் அதன் அதிகாரங்கள் இன்னும் பரிசீலிக்கப்படுகின்றன

அடையாளக் கார்டு திட்டம் தொடர்பில் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது அண்மைய சபா பயணத்தின் போது அறிவிக்கவில்லை. என்றாலும் அந்த ஆணையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதை சபா மாநிலத்தைச் சேர்ந்த பிஎன் தலைவர் ஒருவர் உறுதி…

ஹிம்புனான் ஹிஜாவ்:குவாந்தானுக்கு வெளியில் 4பேரணிகள்

ஞாயிற்றுக்கிழமை குவாந்தானில் நடத்தப்படும்  லினாஸ்-எதிர்ப்பு Himpunan Hijau 2.0 -க்கு ஆதரவாக நாடு முழுக்க பல பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. Read More

“HRP கட்சியின் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது என்ன அவ்வளவு சிரமமா ?”

"பதில் அளிக்குமாறு உள்துறை அமைச்சரைக் கட்டாயப்படுத்துவதற்கு ஒருவர் நீதி மன்றம் செல்ல வேண்டும் என்ற நிலை வெட்கக்கேடானது. அது அகங்காரம் இல்லையா ?" HRP கட்சியை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கு உள்துறை அமைச்சருக்கு 14 நாட்கள் காலக் கெடு விஜய்47: HRP என்ற மனித உரிமைக் கட்சி…

ஜாத்தி (Jati), இஸ்லாமியப் போராளியா அல்லது வெறும் அம்னோ கைப்பாவையா…

அண்மையில் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு சாரா அமைப்பான ஜாத்தி (Jalur Tiga-Jati) யின் உண்மையான நோக்கங்கள் குறித்து கிளந்தான் மூத்த ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாம், மலாய்க்காரர்கள், அரசர் அமைப்பு முறை ஆகியவற்றுக்குப் போராடுவதற்காக…

Himpunan Hijau பேரணியில் சேர வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு…

குவாந்தானில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் Himpunan Hijau என்னும் பசுமைப் பேரணியில் பாகாங்கில் உள்ள அரசாங்க ஊழியர்கள் பங்கு கொள்ளக் கூடாது. அவர்கள் அதற்குப் பதில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்கு சரியான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என மாநிலச் செயலாளர் முகமட் சபியான் இஸ்மாயில் கூறினார்.…

ஹிண்ட்ராப் மீதான வழக்கை மீட்க சுஹாக்காமிடம் குறிப்பாணை

இண்டர்லோக் நாவலை மலேசியப் பாட திட்டத்திலிருந்து அகற்ற கோரி போராட்டம் நடத்திய ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் மீதான வழக்கை மீட்க, அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் குறிப்பாணையை (memorandum) மலேசியா மனித உரிமை கழகத்திடம் (SUHAKAM) ஹிண்ட்ராப் பிரதிநிதிகள் வழங்குவர் என்று அதன் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மணிமாறன் தெரிவித்தார். மலேசிய…

FGVH-க்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை கிளந்தான் தடுக்கும்

கிளந்தான் மாநிலத்தில் உள்ள 55,500 ஏக்கர் நிலத்தை பெல்டா தோட்ட நிறுவனம் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு வழக்குரைஞர் குழு ஒன்றை மாநில அரசாங்கம் நியமிக்கும். அந்தத் தகவலை இன்று பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா வெளியிட்டார். வரும் மே மாதம் புர்சா மலேசியா…

FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை பெல்டா குடியேற்றக்காரர்கள் ஆட்சேபித்தனர்

FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு நெகிரி செம்பிலானில் உள்ள பாலோங் 4, 5, 6 ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடியேற்றக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ‘Umno-BN penipu’, ‘Felda penipu’, ‘Umno-BN died and RIP’,…

பினாங்கு முதல்வரின் பேச்சு இன உணர்வுகளைத் தூண்டக்கூடியது என போலீஸ்புகார்

கடந்த சனிக்கிழமை, மசீச தலைவர் சுவா சொய் லெக்குடன் விவாதம் நடத்திய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார் என மசீச போலீசில் புகார் செய்துள்ளது. சிலாங்கூர் மசீச பொதுப் புகார் பிரிவின் துணைத் தலைவர் எல்லன் லியு சின்…

அந்நிய நேரடி முதலீடுகள் கூடியதற்காக பினாங்கு Miti, Mida ஆகியவற்றுக்கு…

2011ம் ஆண்டு தயாரிப்புத் தொழில் துறை முதலீடுகளில் பினாங்கு முதல் இடத்தைப் பிடிப்பதற்கு உதவி செய்ததற்காக அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட்-டுக்கும் Mida என்னும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்துக்கும் பினாங்கு மாநில அரசாங்கம் இன்று நன்றி தெரிவித்துக் கொண்டது. "பினாங்கு தொழிலியல் மாநிலமாக மேம்பாடு…

தேர்தல் ஆணையம் “கள்ளத்தனமாக தில்லுமுல்லு ” செய்வதாக பிகேஆர் குற்றச்சாட்டுகிறது

தேர்தல் ஆணையம் தொகுதி நடைமுறை என அழைக்கப்படும் ‘Belah Bahagi’ என்ற போர்வையில் சிலாங்கூரில் உள்ள  நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்குள் வாக்காளர்களை சட்ட விரோதமாக இடம் மாற்றி வருகிறது என பிகேஆர் கூறுகிறது. "வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் அளவுக்கு சட்டவிரோதமான ஒர் நடவடிக்கையை தேர்தல்…

பாலோங் பெல்டா அம்னோ கோட்டையில் விரிசல் ஏற்படுகிறது

நெகிரி செம்பிலான் பெல்டா பாலோங் நிலக் குடியேற்றத் திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக பிகேஆர் மேற்கொண்ட பிரச்சாரம் அரசியல் ரீதியில் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி, மகளிர் தலைவி சுராய்டா கமாருதின் ஆகியோர் கலந்து கொள்ளும்…

போலி நோட்டீஸ் “நஜிப்பின் மலாக்கா பயணத்தைச் சீர்குலைக்கும் முயற்சி”

வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலாக்காவுக்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொள்வதை ஒட்டி இரண்டு நாட்களுக்கு தங்களது வியாபாரத்தை மூடுமாறு உள்ளூர் அங்காடிக் கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டு மலாக்கா மேயர் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று இணையத்தில் பரவலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அத்தகைய ஆணை ஏதும்…

வன்முறை தலைவிரித்தாடப் போகிறது

“பிகேஆர் அலுவலகம் கொளுத்தப்படும் என்ற மிரட்டல்கள், இப்போது கார்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன.இத்தனை நடந்தும் போலீசார் கண்டுக்கொள்வதே இல்லை.” செம்ப்ரோங் தாக்குதல் குறித்து அன்வார் கலங்கவில்லை கர்மா: யாரோ எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்தை இரத்தக்களரியாக்க முயல்கிறார்கள். பிகேஆர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி அதைத் தீவைத்து கொளுத்தப்போவதாக மருட்டுகிறார்கள்;…

நிக் அஜீஸ்: பாஸ் ஒரு போதும் இஸ்ரேலை அங்கீகரிக்காது

பாஸ் கட்சி "தடை செய்யப்பட்ட இஸ்ரேலிய நாட்டை" ஒரு போதும் அங்கீகரிக்காது என அதன் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். முஸ்லிம் மக்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு பாலஸ்தீன மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட பின்னர் தோற்றுவிக்கப்பட்டது இஸ்ரேல் என்பதைக் கருத்தில் கொள்ளும் போது அதுவே…

ஐஎஸ்ஏ எதிர்ப்பாளர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

மூன்றாண்டுகளுக்குமுன்னர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட 16 பேர் குற்றவாளிகளே; அவர்கள் சட்டவிரோதக் கூட்டத்தில் கலந்துகொண்ட குற்றத்தைச் செய்தவர்கள் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வாதம் குற்றச்சாட்டின்மீது …

டிபிகேஎல்: பொதுப்பணம் அமைச்சர் நிகழ்வுக்குச் செலவிடப்படவில்லை

கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம்(டிபிகேஎல்), குடியிருப்பாளர் சங்கங்களுக்கு(ஆர்ஏ) ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்து கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியதில்லை. இதனை, நேற்று மலேசியாகினிக்கு அனுப்பிய அறிக்கையொன்றில் வலியுறுத்திய டிபிகேஎல்,லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்(வலம்) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில்…

முப்தி: நமது ஜிஹாட், மலாய்க்காரர்களையும் ஆட்சியாளர்களையும் இஸ்லாத்தையும் அடிப்படையாக கொண்டிருக்க…

இஸ்லாம், மலாய்க்காரர்கள், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியவற்றைத் தற்காப்பதற்கான போராட்டம் ஜிஹாட் அல்லது புனிதப் போர் என இன்று மாலை நிகழ்த்திய உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றில் பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா பிரகடனம் செய்துள்ளார். "எப்போதும் ஜிஹாட்-டை நடத்துமாறு முஸ்லிம் உம்மா கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜிஹாட் ஒரு கடமையாகும்", என…

பெல்டா நீதிமன்ற தடை உத்தரவுக்குப் பின்னர் இஜிஎம்-மை ரத்துச் செய்தது

KPF என்ற Koperasi Permodalan Felda Malaysia Bhd நாளை நடத்தப்படவிருந்த தனது அவசரப் பொதுக் கூட்டத்தை ரத்துச் செய்துள்ளது. அந்தக் கூட்டத்தில் FGVH என்னும் Felda Global Ventures Holdings Bhd-டை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பது குறித்து விவாதிப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட பின்னர்…

முக்ரிஸ்: இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வணிகம் செய்வது தப்பில்லை

தனியார் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை அரசாங்கம் தடை செய்யவில்லை என்பதைத் துணை பன்னாட்டு வணிக, தொழில் அமைச்சர் முக்ரிஸ் மகாதிர் வலியுறுத்தியுள்ளார். வணிக நிமித்தம் இஸ்ரேலிய கப்பல்கள் மலேசிய துறைமுகங்களில் வந்தணைவது தடுக்கப்படுவதில்லை ஆனால், இஸ்ரேலிய குடிமக்கள் தரை இறங்குவது தடுக்கப்பட்டிருக்கிறது என்றாரவர். இஸ்ரேலிய அரசுக்குச்…

தேர்தலில் பிஎன்னுக்கு நல்ல வெற்றி கிடைக்கலாம், பாக்’ லா ஆருடம்

2008 பொதுத்தேர்தலைவிட 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்கிறார் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி. அதற்கு பிஎன் தலைவர்களின் முயற்சிகளும் கடின உழைப்பும் தொடர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். “வேட்பாளர்கள் மக்களுக்குச் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்”.அப்துல்லா, இன்று கோலாலம்பூரில்,…

அட்னான்:நஜிப்-அன்வார் விவாதம் தேவை என்று சொல்லவில்லை

அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மாற்றுக் கட்சிகளுடன் பொதுவிவாதங்களில் ஈடுபட பிஎன் தயார் என்று தாம் கூறியதை வைத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கிடையில் விவாதம் நடப்பதை வரவேற்பதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது என்று விளக்கமளித்துள்ளார். “அது, பிரதமருக்கும்…

மசீச-டிஏபிக்கிடையில் இன்னொரு விவாதம்-நெகிரி செம்பிலானில்

நெகிரி செம்பிலான் மசீச தலைவர் டாக்டர் இயோ சாய் தியாம், அம்மாநில டிஏபி தலைவர் விடுத்துள்ள சவாலை ஏற்று பொதுவிவாதத்தில் கலந்துகொள்வார். ஆனால் ஒன்று, தலைப்பு உள்பட விவாதம் பற்றிய விவரங்களை மசீச-தான் முடிவு செய்யும். இதற்கு நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பதை…