கடந்த வாரம் தேசிய கால்பந்து வீரர் பைசல் ஹலீம் மீது அமிழம் வீசிய சந்தேக நபரின் புகைப்படத்தை போலீசார் தயாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 12க்கும் மேற்பட்டோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரஸாருதீன் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. பைசலைத் தவிர, தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த 25…
அம்னோவிலிருந்து இன்னொரு எம்பி வெளியேறினார்
அம்னோ இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரை இழந்து விட்டது. புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹுசின் ஹபிஸ் சசைட் அப்துல் பசால் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அம்னோ பிரிவுகளின் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அதனால் அம்னோவிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். இந்த…
கைப்பற்றப்பட்ட ரொக்கத்தில் ‘அம்னோ’ என்ற சொல் அச்சடிக்கப்படவில்லை, போலீஸ் கூறுகிறது
முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள சொத்துகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம், சில வட்டாரங்கள் கூறிக்கொள்வது போல், அம்னோவுக்குச் சொந்தமானதா என்பதை போலீஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று போலீஸ் கூறுகிறது. "எங்களுக்கு தெரியாது. 'அம்னோ' என்ற சொல் பணத்தில் அச்சடிக்கப்படவில்லை", என்று பெடரல் வாணிகக் குற்ற விசாரணை இலாகா (சிசிஐடி)…
நஜிப் தொடர்புடைய கொண்டோ வீடுகளில் கைப்பற்றப்பட்டவை: 2,200 மோதிரங்கள், 1,400…
கடந்த மாதம் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் தொடர்புள்ள வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் பற்றிய விவரங்களை போலீசார் இன்று வெளியிட்டனர். கைப்பற்றப்பட்ட அப்பொருள்களின் மொத்த மதிப்பு ரிம686.37 மில்லியன் என்று கூட்டரசு வணிகக் குற்றவியல் துறை இயக்குனர் போலீஸ் ஆணையர் அமர் சிங் …
தெங்கு ரசாலி: நான் அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிட காரணம்…
அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தெங்கு ரசாலி ஹம்சா, அரசியல் ஒய்விலிருந்து திரும்பி வந்து தலைவர் பதவிக்குப் போட்டியிட காரணமானவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் என்கிறார்.. தெங்கு ரசாலி, சேனல் நியுஸ் ஆசியா ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் வயது எதற்கும் ஒரு தடையல்ல என்றார். “வயது …
நஜிப் கைது செய்யப்படலாம் என்ற வதந்தியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் நஜிப்பின்…
இன்றிரவு ஜாலான் லங்காக் டூத்தாவிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியில் செய்தியாளர்கள் கூடியுள்ளனர். நஜிப் கைது செய்யப்படுவார் என்ற வதந்தியைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றுள்ளனர். சுமார் 30 செய்தியாளர்கள் அங்கு கூடியுள்ளனர். சாதாரண உடையில் காணப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் வீட்டின் நுழைவாயிலில்…
மகாதிர்: அன்வார் ஒரு மலேசிய குடிமகன், கருத்துச் சொல்லும் உரிமை…
அரசாங்கக் கொள்கைகள் குறித்து அன்வார் இப்ராகிம் அடிக்கடி கருத்துரைக்கிறார். அண்மையில் அவர், நிதி அமைச்சர் லிம் குவான் எங் முந்தைய அரசாங்கத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைப் பொறுத்தவரை அன்வாரும் நாட்டு மக்களில் …
வைரலாகும் அமைச்சரவைப் பட்டியல் சரியானதல்ல
முழு அமைச்சரவைப் பட்டியல் என்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒன்று சரியானதல்ல என அரசாங்கத்துக்கு அணுக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. “பெரும்பாலும் சரியாக இருந்தாலும் அது இறுதிப் பட்டியலாகத் தெரியவில்லை. “சில பெயர்களைக் காணோம். சிலரின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏற்கப்போவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பொறுப்புகள் சரியானவை …
முன்னாள் திரெங்கானு எம்பி 1எம்டிபிக்கு எதிராக எம்ஏசிசி-இல் புகார்
1எம்டிபிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதற்கெதிராக முன்னாள் திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் இன்று காலை புத்ரா ஜெயாவில் எம்ஏசிசி தலைமையகத்தில் புகார் செய்தார். இன்று பிற்பகல் கிஜால் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துகிறார். மூன்றாண்டுகளுக்குமுன்பே அஹமட் சைட், 1எம்டிபிக்கு முன்னிருந்த திரெங்கானு முதலீட்டு நிறுவனம்…
இங் சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர், கமருடின் துணைத்தலைவர்
இங் சுவி லிம் சிலாங்கூர் சட்டமன்றத்தின் புதிய அவைத் தலைவராக நியமனம் செய்யப் பட்டுள்ளார். இங் நான்கு முறை செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் துணைத் தலைவர் பாயா ஜராஸ் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் கைருடின் ஒத்மான். இவர் முன்பு பாஸ் கட்சியில் இருந்தார். …
ஹமிடி: ஹரப்பான் ஆட்டம் கண்டுவிட்டது; அம்னோ புத்ரா ஜெயாவை ஜிஇ…
15 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் ஆட்டம் கண்டுள்ள பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாக அம்னோ இடைக்கால தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். அம்னோவுக்கு மிகச் சிறந்தது எதுவோ அதை நான் செய்வேன். அதன்படி நாம் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம் என்று கூட்டரசுப்…
மகாதிர்: அமைச்சரவை பட்டியல் தயார், பதவிப் பிரமாணம் விரைவில்
புத்ரா ஜெயாவைக் கைப்பற்றி 47 நாள்கள் ஆகிவிட்டன. பக்கத்தான் ஹரப்பான் அரசு இன்னும் முழு அமைச்சரவை இல்லாமல் இருக்கிறது. ஏன் என்று கேட்டதற்கு, அமைச்சரவை பட்டியல் தயாராகி விட்டது. பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும் என்று பிரதமர் மகாதிர் கூறினார். ஆனால், எப்போது என்று அவர்…
குவான் எங் அதிகாரப்பூர்வமான அறிக்கையில் சீனமொழியைப் பயன்படுத்தியது ஒரு சாதாரண…
நிதி அமைச்சர் லிம் குவான் எங் அவரது அதிகாரப்பூர்வமான அறிக்கையில் சீனமொழியைப் பயன்படுத்தியது ஒரு பெரும் தவறல்ல என்றார் மகாதிர். அது ஒரு சிறிய தவறு. அதை நான் பெரிய பிரச்சனையாக்க விரும்பவில்லை. சில சமயங்களில் நாம் தவறு செய்கிறோம். சீனர்களிடம் பேசும் போது அவர் சீனமொழியைப்…
கேஜே: நிதி அமைச்சரின் மெண்டரின் மொழி அறிக்கையைத் தற்காத்துப் பேசுவதை…
நிதி அமைச்சர் லிம் குவான் எங் மெண்டரின் மொழியிலும் அறிக்கைகள் வெளியிடுவதைத் தற்காத்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என அம்னோ தலைவர் வேட்பாளர் கைரி ஜமாலுடின் கூறினார். லிம் மொழி விசயத்தில் ஒரு புதிய நடைமுறையை உண்டாக்கப் பார்க்கிறார் என்று கூறிய கைரி, இது பகாசா மலேசியாவைத் தேசிய …
கேளிக்கை விடுதிக்கு வெளியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு, யாரும் காயமடையவில்லை
புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஓரு கேளிக்கை விடுதிக்கு வெளியில் சரமாரியான துப்பாக்கிச் சூட்டைக் கேட்டு விடுதியின் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றிரவு 10.50 மணியளவில் நடந்த அச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 25 தடவை துப்பாக்கிச் சூடுநடத்தியதாக கோலாலும்பூர் சிஐடி தலைவர் ருஷ்டி முகம்மட் இசா தெரிவித்தார். …
உங்கள் கருத்து: சரி, நஜிப்புக்கு எது தெரியும், எது தெரியாது?
'ஊழலுக்கு 1எம்டிபி இயக்குனர் வாரியம்தான் காரணம் என்று சொல்லவில்லை என நஜிப் மறுப்பு' பெயரிலி _1371465729: முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களே, 1எம்டிபி-இல் ஒன்று சரியாக இல்லை என்றால் அது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அது 1எம்டிபி வாரியம் மற்றும் நிர்வாகத்தின் பொறுப்பு. அது பற்றி உங்களுக்கு …
அம்னோவிலிருந்து விலகிய எம்பியை வரவேற்கிறார் வான் அசிஸா
இன்று அம்னோவிலிருந்து வெளியேறி பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு தெரிவித்த பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலிக்கு துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் வரவேற்பு தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு தெரிவிப்பது அவரது தேர்வு என்று கூறிய வான் அசிஸா, நாட்டிற்கு…
பிஎன்னிலிருந்து வெளியேறிய கெராக்கான் செனட்டர் பதவிகளையும் துறக்க வேண்டும்
பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேறிய கெராக்கான் பிஎன்னில் இருந்தபோது கிடைத்த செனட்டர் பதவிகளையும் கைவிட வேண்டும் என பக்கத்தான் ஹரப்பான் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். “பிஎன்னிலிருந்து வெளியேறிய கெராக்கான், அடுத்து செய்ய வேண்டிய மேலான காரியம் அதன் இரு செனட்டர்களையும், கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக(டிபிகேஎல்) ஆலோசனை வாரியத்திலும் மற்றும் கூட்டரசு, …
ரிம300 மில்லியன் வைத்திருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் அஸ்மின்
பொருளாதார விவகார அமைச்சர் முகம்மட் அஸ்மின் ரிம300 மில்லியனை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுவதை அபத்தம் என்று கூறி உதறித் தள்ளினார். இன்று ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு ஒன்றில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார், அக்குற்றச்சாட்டைச் சாக்கடை அரசியல் என்று வருணித்தார். அவ்வளவு …
போலீஸ் வலையில் சிக்காமல் தண்ணி காட்டும் ஜமால்
போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய ஜமால் முகம்மட் யூனுஸ் இன்னும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். அவரைப் பிடிக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அம்னோ தேர்தலுக்கு வருவார் என்று கட்சித் தேர்தல் நடைபெறும் அம்னோ தலைமையகத்தில் காத்திருந்ததாகவும் அங்கும் அவர் வரவில்லை என்றும் சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அஹ்மட் கூறினார். ஜமால் …
அம்னோ பிரிவுகளின் தேர்தல் முடிவுகள் மாலை மணி 5க்கு அறிவிக்கப்படும்
அம்னோவின் மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளுக்காக நடந்த தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று மாலை மணி 5க்கு அறிவிக்கப்படும் எனக் கட்சி நிர்வாகச் செயலாளர் அப் ரவுப் யூசுப் கூறினார். “இணையத் தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல”, என்றவர் நேற்றிரவு கூறினார். நேற்று மாலையிலிருந்தே அதிகாரப்பூர்வமற்ற …
பாகன் செராய் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறி மகாதிருக்கு ஆதரவு அளிக்கிறார்
பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலி அம்னோவிலிருந்து வெளியேறி விட்டார். இப்போது அவர் டாக்டர் மகாதிரையும் பக்கத்தான் ஹரப்பானின் பெடரல் மற்றும் மாநில அரசுகளை ஆதரிப்பதாக கூறுகிறார். தற்போதைக்கு தாம் ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும், ஆனால் பெர்சத்துவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகவும்…
தமிழர்களின் அறமா..? ஆகம அணியின் ஆணவமா..?
உலக புகழ் பெற்ற பத்துமலை தமிழர் திருக்கோவிலை களங்கப்படுத்தும் வகையில் திட்டமிட்ட ஆகம அணி பேரணியையும் தமது உலக தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை இழிவாக முகநூலில் எழுதிய அருண் துறைசாமியையும் எதிர்த்து நாளை 24/6/2018 காலை 7.00 மணியளவில் தமிழர் சமயம் நடவடிக்கை குழு ஏற்பாட்டில்…
ஸாகிட்: ‘பிஎன் போன்ற’ புதிய கூட்டணி அமைக்க வேண்டும்
பிஎன் போன்ற ஒரு புதிய பல்லின கூட்டணியை அமைக்க வேண்டும் என்று பிஎன் இடைக்காலத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். 14 ஆவது பொதுத் தேர்தலில் அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து முன்னாள் ஆளுங்கூட்டணி சிதறிப் போய் விட்டதால் இவ்வாறு கூறப்படுகிறது. பல அரசியல் கட்சிகள் அடங்கிய ஒரு…