‘நெகிழ்ந்துபோனேன் நான்’ – முஹைதீன்

கொள்கை மட்டத்தில் 2021 வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு தன்னை நெகிழ்வடையச் செய்ததாகப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார். “2021 பட்ஜெட்டிற்கு, மக்களவையில் ஒப்புதல் அளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றியுள்லவனாக இருப்பேன். பட்ஜெட்டை ஆதரித்த எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் நான் நெகிழ்ந்து போனேன். "அரசியல்வாதிகள்…

பட்ஜெட்டை ஆதரித்த எம்.பி.களுக்கு அகோங் நன்றி தெரிவித்தார்

இன்று மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வையும், நாட்டின் பொருளாதார மீட்சியையும் உறுதி செய்வதற்காக வழங்கப்பட்ட ஆதரவு இது…

2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க மஸ்லீ திட்டமிட்டுள்ளார்

இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில், 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்கப்போவதா முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் சுட்டிக்காட்டினார். அதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நாட்டின் கல்வியின் தலைவிதி இன்னும் "தெளிவற்ற" நிலையில் இருப்பதாக சிம்பாங் ரெங்கம் எம்.பி.யான அவர் தெரிவித்தனர். "இந்த உள்ளடக்கம் அனைத்தையும், தீவிரமாக கண்காணித்து,…

ஜோ லோ உண்மையில் சீனாவில்தான் இருக்கிறாரா என்று ஹிஷாமுதினுக்குத் தெரியாது

மக்களவை  | 1எம்டிபி ஊழலுடன் தொடர்புடைய, சர்ச்சைக்குரிய தொழிலதிபர் லோ தேக் ஜோ , உண்மையில் சீனாவில் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கூறினார். தப்பியோடிய அத்தொழிலதிபர் ஒருவேளை அங்கு இருந்தால், அவரை அழைத்து வர, விஸ்மா புத்ரா மலேசியக் காவல்துறைக்கு…

‘எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அரசாங்கத்திற்கு ஒரு வழி உண்டு’…

2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு, எதிர்க்கட்சி எம்.பி.க்களிடமிருந்து தேசிய கூட்டணி அரசாங்கம் (பி.என்.) ஆதரவு கேட்டுள்ளது என்ற பாவனையை அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அளித்துள்ளார். நேற்றிரவு, மலேசியா கேஸட்-க்கு அளித்த ஒரு நேர்காணலில், அஹ்மத் ஜாஹித், மக்களவையில் 220-ல், 111 எம்.பி.க்கள் மட்டுமே பி.என்.னுக்கு ஆதரவாக உள்ளதாகக்…

தாமஸ்சுக்கு எதிராக அடிப்’பின் தந்தை தாக்கல் செய்த வழக்கில், ஏ.ஜி.சி.…

முன்னாள் அட்டர்னி ஜெனரலுக்கு (ஏஜி) எதிராக தீயணைப்பு வீரர் முஹம்மது அடிப் மொஹமட் காசிம்மின் தந்தை தாக்கல் செய்த வழக்கில், அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (ஏஜிசி) தொடர்ந்து தோமி தாமஸைப் பிரதிநிதிக்கும். மொஹமட் காசிம் அப்துல் ஹமீத்தைப் பிரதிநிதிக்கும், வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா, தனது வாடிக்கையாளர்…

‘நானும் எனது நண்பர்களும் 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்க…

2021 வரவுசெலவுத் திட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, அவரும் அவரது "நண்பர்களும்" அதை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தேசியக் கூட்டணி (பி.என்) அரசு தயாரித்த பட்ஜெட், வாக்களிக்கப்படுவதற்கு முன்னதான அதைப் பற்றிய விவாத…

கோவிட் 19 : இன்று 970 புதியத் தொற்றுகள், நெகிரி…

நாட்டில், இன்று மதியம் வரையில், 970 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. புதியப் பாதிப்புகளில் பெரும்பாலானவை நெகிரி செம்பிலானில் (32.8 %) பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து சபா (30.2 %), சிலாங்கூர் (11.9 %) ஆகிய மாநிலங்களில் அதிகத் தொற்றுகள்…

பட்ஜெட் 2021 : தேசிய வகை, தேசிய வகை சீனப்பள்ளிகளுக்கான…

கல்வி அமைச்சின் பராமரிப்பு ஒதுக்கீட்டை விநியோகிப்பதற்கான புதிய சூத்திரத்தின் வழி, தேசியப் பள்ளிகள் மற்றும் தேசிய வகை சீனப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து தேசிய வகைப் பள்ளிகளும் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் குறைப்பைக் காணும், உறைவிடப் பள்ளிகள், முபாலிக் மற்றும் சீன இடைநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

அமைச்சர் : தொழிற்சாலை, விடுதி, எஃப் & பி துறைசார்ந்த…

வேலைவாய்ப்பு காப்பீட்டு திட்டத்தின் (இஐஎஸ்) பதிவுகளின்படி, 2020 ஜனவரி முதல் நவம்பர் 13 வரை, மொத்தம் 95,995 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரையில், அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாக இருந்தது, அதாவது 737,500 பேர் வேலையில்லாமல் இருந்தனர். நேற்று, கோல கெடா நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மான்…

‘பி.எல்.கே.என்.னுக்குச் செலவாகும் RM700 மில்லியனை, ஓராண்டு பட்டப்படிப்புக்குச் செலவளிக்கலாம்’ ,…

2018-ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நிர்வாகத்தால் இரத்து செய்யப்பட்டப் பின்னர், தேசியச் சேவை பயிற்சி திட்டத்தை (பி.எல்.கே.என்) மீண்டும் நிறுவுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முன்மொழிவை மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் நிராகரித்தார். சையத் சதிக்கின் கூற்றுப்படி, ஆண்டுக்குச் சுமார் RM 700…

பி.என். அமைச்சர்கள் ஜிஇ வரை முஹைதீனை முழுமையாக ஆதரிப்பர்

பிரதமர் முஹைதீன் யாசின் தலைமைக்கு, தேசிய முன்னணி (பி.என்.) அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் தங்கள் முழு ஆதரவையும் தருவதாக உறுதியளித்தனர். பி.என்.ஐச் சேர்ந்த 20 அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர்கள் இதைக் கூறினர். இருப்பினும், பொது சுகாதார நிலை…

கோவிட் 19 : இன்று 2,188 புதியத் தொற்றுகள், 4…

நாட்டில், இன்று நண்பகல் வரையில் 2,188 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக அதிகமான எண்ணிக்கையைக் காட்டுகிறது. மேலும், நேற்றையத் தினத்தைப் போலவே, சிலாங்கூர், கிள்ளானில் உள்ள ‘டோப் க்ளோவ்’ தொழிற்சாலைகளுடன் தொடர்புடைய ‘தெராத்தை திரளை’யால் இன்று அதிகமான பாதிப்புகள் நேர்ந்துள்ளன. இன்று…

புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு குடிநுழைவு முகாம்கள் பொருத்தமானதல்ல – பிஏசி

தடுத்து வைக்கப்பட்டும், புலம்பெயர்ந்தக் குழந்தைகள் தங்குவதற்குக் குடிநுழைவுத் துறையின் முகாம்கள் பொருத்தமானவை அல்ல என்று தேசியப் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) கண்டறிந்துள்ளது. பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், நாடாளுமன்றக் குழு நெகிரி செம்பிலானில் உள்ள லெங்கேங் குடிநுழைவு முகாமுக்குச் சென்று பார்வையிட்டப் பிறகு, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேர்…

முன்னாள் இராணுவத் தளபதி : மதுபான விற்பனைக்கானப் புதிய கட்டுப்பாடுகளை…

அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் மளிகை கடைகள், பல்பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் சீன மருந்துக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்பில், கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) விதித்துள்ள தடைகளுக்கு எதிராக, மலேசிய ஆயுதப்படையின் முன்னாள் தலைமை அதிகாரி ஹாஷிம் மொஹமட் அலி, இன்று ஓர் அறிக்கையில்…

‘முஹைதின் அதிக விலை கொடுத்துதான் ஆக வேண்டும்’

தனது அரசாங்கத்தைப் பாதுகாத்துகொள்ள, பிரதமர் முஹைதீன் யாசின் ஓர் "உயர் விலையை" செலுத்தியாக வேண்டும், அவசரகால அறிவிப்பு முயற்சிகள் தோல்வியுற்றது உட்பட. அரசியல் நேர்மை இல்லாததால், முஹைதீன் உயர்ந்த விலையைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகிப் போனது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டாக்டர் புவாட் சர்காஷி தெரிவித்தார். ‘முதுகில்…

`ஜோ லோ, 1எம்.டி.பி. பற்றி முதலாளிகளை எச்சரித்தேன்`, முன்னாள் கோல்ட்மேன்…

முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் குழுமத்தின் வங்கியாளர் ரோஜர் ங், மலேசிய நிதியாளரான ஜோ லோவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று சர்வதேச முதலீட்டு வங்கியை "எச்சரித்தேன்" என்றும், லோ’வை "நம்பக்கூடாது" என்றும் தனது முதலாளிகளிடம் தெரிவித்ததாகக் கூறினார். ப்ளூம்பெர்க்கின் ஓர் அறிக்கையின்படி, ங் 126 பக்கங்களைத் தாக்கல் செய்துள்ளார்,…

பி.கே.பி.பி. : நள்ளிரவு 12 வரை வணிகங்கள் செயல்பட அனுமதி

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) அமலில் இருக்கும் மாநிலங்களில், உணவகங்கள் மற்றும் பல்வகைப் பொருள் விற்பனைக் கடைகள் உட்பட, இன்று தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.…

மலேசியர்கள் வேலை நிமித்தம் தினமும் சிங்கப்பூர் சென்றுவர அனுமதிக்கும் திட்டம்,…

மலேசியர்கள் ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் வகையில், எல்லை வாயில்களைத் திறந்துவிடும் திட்டம் குறித்து, வெளியுறவு அமைச்சு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் முன்மொழியப்பட்ட செந்தர இயங்குதல் நடைமுறையை (எஸ்ஓபி) ஜொகூர் அரசாங்கமும் ஜொகூர் மாநிலச் சுகாதாரத் துறையும் இணைந்து தயாரித்துள்ளன. தற்போது…

கோவிட் 19 : நாட்டில் இன்று மிக அதிகமான புதியத்…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,884 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தினசரி பதிவுகளில் ஆக அதிகமாகும். முந்தைய பதிவுகளில், மிக அதிகமாக நவம்பர் 6-ஆம் தேதி, 1,755 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையே 883 நோயாளிகள் குணமடைந்து வீடு…

‘சிங்கப்பூரில் வீடற்ற மலேசியர்கள்’ – பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,…

அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, சிங்கப்பூரில் பணிபுரியும் சில மலேசியர்கள் வீடற்றவர்களாக இருக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர் என்ற பத்திரிக்கைச் செய்தியைத் தொடர்ந்து, கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். "இது ஒரு தேசிய அவமானம். "சிங்கப்பூரில் உள்ள தனது 'பொருளாதார அகதிகளை', மலேசியா கவனித்துக் கொள்ள…

மொஹமட் அமர் : அம்னோ மற்றும் பெர்சத்து இல்லாமல், பாஸ்…

அம்னோ மற்றும் பெர்சத்துவின் ஒத்துழைப்பு இல்லாமல், கட்சியால் முன்னோக்கி செல்ல முடியாது என்று பாஸ் துணைத் தலைவர் மொஹமட் அமர் நிக் அப்துல்லா கூறினார். பாஸ், அம்னோ மற்றும் பெர்சத்து இடையே, ஒருவருக்கொருவர் தேவை என்று அவர் கூறினார். அம்னோ அல்லது பெர்சத்துவுடன் தனித்து இருப்பதும் அவர்களுக்கு பயனளிக்காது…

எம்.பி: விவாதத்திற்கு இடமில்லை என்றால், பட்ஜெட்டை எப்படி ஆதரிப்பது?

மக்களவை | இந்த வியாழக்கிழமை வாக்களிக்கப்படுவதற்கு முன்னர், 2021 வரவுசெலவுத் திட்டத்தை எம்.பி.க்கள் விவாதிப்பதற்கான கால அவகாசத்தை, நான்கு மணிநேரமாக மட்டுப்படுத்த மக்களவை எடுத்த முடிவை பி.கே.ஆர். எம்.பி. விமர்சித்தார். விவாத நேரத்தைக் கட்டுப்படுத்துவது, நாடாளுமன்றத்தின் உண்மையான செயல்பாட்டிற்குப் பொருந்தாது என்று பத்து எம்.பி. பி பிரபாகரன் ஓர்…