பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர், பொதுச் சேவையில் தனது பணி திருப்திகரமாக இருந்ததாகவும், தமக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மே 12-ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின்…
பிடி இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளர், விரைவில் முடிவு செய்யப்படும்
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில், தனது வேட்பாளரை நிறுத்தலாமா , வேண்டாமா என்பதைப் பாஸ் விரைவில் முடிவு செய்யும் என அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார். “இன்னும் ஓரிரு நாளில், கட்சி இதுகுறித்து கலந்துபேசும், அதன்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என்றார் அவர்.…
அன்வார்: பிகேஆர் தேர்தல்கள் பாதிவழி கடந்துள்ள நிலையில் பெர்சே-யை அழைத்துக்…
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கட்சித் தேர்தலைக் கண்காணிக்கும் பொறுப்பை பெர்சேயிடம் ஒப்படைக்கலாம் என்ற பரிந்துரையை வரவேற்கிறார். ஆனால், தேர்தல் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதைச் செய்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறார். “பரிந்துரையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நடைமுறைப்படுத்துவது சிரமம். ஏனென்றால் தேர்தல் ஏற்கனவே தொடங்கி…
டோம் ரைட் : ஒரு மாறுபட்ட மனிதர் ஜோ லோ
தலைமறைவாக உள்ள தொழிலதிபர் ஜோ லோ “ஆபத்துகளைச் சந்திக்கத் தயங்காதவர்” என்றும் “ஒரு மாறுபட்ட மனிதர்” என்றும் ‘பில்லியன் டாலர் வேல்’ நூலின் இணை- எழுத்தாளர் டோம் ரைட் கூறினார். “உங்களைப் போன்றோ என்னைப் போன்றோ ஒரு சராசரி மனிதர் அல்லர் அவர்”, என்று ரைட் இன்று காலை…
அரசியல் செயலாளர் உள்ளூர் பிகேஆர் தலைவர்களுக்குக் குத்தகைகள், பணம் கொடுப்பதாகச்…
பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்றத்துக்குப் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தன்னுடைய அரசியல் செயலாளர் பதவியைப் பயன்படுத்தி குத்தகைகள் கொடுப்பதாகவும் அரசாங்க ஒதுக்கீடுகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் பகாங்கில் உள்ள கட்சித் தலைவர்களிடம் பேரம் பேசினாராம். இவ்வாறு குற்றஞ்சாட்டும் பிகேஆர் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் அஹ்மட் ஷ்க்ரி சே அப் ரசாக்,…
நாற்காலி வீசப்பட்ட சம்பவத்துடன் எங்களை இணைத்துப் பேசுவதா? அன்வார் மன்னிப்பு…
மஇகா ‘நாற்காலிகளை வீசி எறியும்’ கட்சி என்னும் பொருள்பட பேசியுள்ள அன்வார் இப்ராகிம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த பிஎன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிகேஆர் தலைவரின் பேச்சு ம இகாவை மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தையே இழிவுபடுத்துகிறது என்று மஇகா உதவித் தலைவர் டி.மோகன் கூறினார்.…
ரோஸ்மா மீதான எம்எசிசி புலன்விசாரணை முடிவுற்றது, அடுத்த நடவடிக்கை ஏஜியின்…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணையார் ரோஸ்மா மன்சோர் மீதான மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புலன்விசாரணை முடிவடைந்து விட்டது. அதன் அறிக்கை சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை அவர் கையில் என்று எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் சூக்ரி அப்துல் கூறினார். விசாரணை…
அரசியல் இலாபத்திற்காக இன-சமய விவகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது: பொன்.வேதமூர்த்தி
“அரசியல் இலாபத்திற்காக இன, சமய விவகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன; இத்தகையப் போக்கை அரசியல் தலைவர்கள் இனியும் தொடர்வது நாட்டிற்கு நல்லதல்ல” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார். மலேசிய தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் சார்பில் செப்.22 சனிக்கிழமை கொண்டாடப்பட்ட பன்னாட்டு அமைதி தின விழாவில் உரையாற்றியபோது பேசிய…
சிஐஎம்பி வங்கி தலைவர் நஸிர் ரசாக் ஆண்டு இறுதியில் பதவிலிருந்து…
மலேசியாவின் இரண்டாவது பெரிய வங்கியான சிஐஎம்பி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைவர் நாஸிர் அப்துல் ரசாக், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சகோதரர், இந்த ஆண்டு இறுதியில் பதவி துறக்கிறார் என்று இன்று அறிவித்தது. 2014 ஆம் ஆண்டிலிருந்து நஸிர் சிஐஎம்பியின் தலைவராக இருந்து வருகிறார். அவ்வங்கியில் 29…
பிடி இடைத் தேர்தலை பிஎன் புறக்கணிக்கிறது
எதிர்வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க பிஎன் முடிவு செய்துள்ளது, ஏனென்றால் அது அரசாங்கப் பணத்தை வீணாக்குவதாகும் என்று பிஎன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இன்று மதியம், கோலாலம்பூரில் அம்னோ அரசியல் பிரிவின் கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். பிஎன்…
போர்ட் டிக்சனில் அம்னோ போட்டியிடாது: பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஆருடம்
பிகேஆரின் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ரவி, போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் அம்னோ அதன் வேட்பாளரைக் களமிறக்காது என்கிறார். மாறாக, பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளருக்கு எதிராக அங்கு பாஸ்தான் களமிறங்கும் என்றவர் நினைக்கிறார். “என் கணிப்பு அம்னோ விலகிக் கொள்ளும், பாஸ் களமிறங்கும்”, என்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது…
வீட்டு விலையைக் குறைக்காவிட்டால் எஸ்எஸ்டி விலக்களிப்பு மறுபரிசீலனை செய்யப்படும்: லிம்…
மேம்பாட்டாளர்கள் வீட்டு விலையைக் குறைக்காவிட்டால் கட்டுமான பொருள்களுக்கும் சேவைகளுக்குமான விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி) விலக்களிப்பை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று கூறினார். அரசாங்கம் வரியில் விலக்களித்து மேம்பாட்டாளர்கள் வீட்டு விலையைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றாரவர். “வீட்டு…
டானியல் செய்தியாளர் கூட்டமொன்றில் பதவி விலகலுக்கான காரணத்தை விளக்குவார்
போர்ட் டிக்சன் எம்பி பதவியிலிருந்து விலகிய டானியல் பாலகோபால் அப்துல்லா அப்பதவி விலகல் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விரைவில் செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டி விளக்கமளிப்பார். அக்கூட்டத்தில் அன்வார் இப்ராகிமும் கலந்துகொள்ளக்கூடும் என்றாரவர். “நான் இப்போது போர்ட் டிக்சன் எம்பி இல்லை என்றாலும் இன்னமும் போர்ட் டிக்சனில்தான் வசிக்கிறேன்.…
பெர்லிஸ் அம்னோ உறுப்பினர்கள் பலர் பெர்சத்துவில் சேர்வார்கள்- வான் சைபுல்
பெர்லிசில் அம்னோ உறுப்பினர் பலர் பெர்சத்துவில் சேரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியமும் உள்ளது என்றும் பெர்லிஸ் பெர்சத்து கூறிக்கொண்டது. அதன் செயலாளர் வான் சைபுல் வான் ஜான், அம்மாநிலத்தின் அம்னோ தலைவர்கள் பலரைச் சந்தித்ததாகவும் அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளனர் என்றும்…
வாக்களிப்பில் அஸ்மின் அணி முன்னணி, பிகேஆர் துணைத் தலைவர் பதவி…
பிகேஆர் தேர்தல் | பினாங்கில், அஸ்மின் அலி மற்றும் ரஃபிசி ரம்லிக்கு இடையிலான பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் உக்கிரமாக இருந்தது. இருப்பினும், அந்தப் பொருளாதார விவகார அமைச்சரின் அணி, வாக்குச்சீட்டு பெட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று பினாங்கில் நடந்த அக்கட்சி தேர்தலில், அஸ்மினுக்கு…
அன்வார் : நாற்காலியைத் தூக்கி வீசியவரை, கட்சியிலிருந்து தூக்கி வீசுவோம்
மக்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டுமென, நாடளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கைக் கொண்ட சபா பிகேஆர் உறுப்பினர்களைப் பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். அக்கட்சி மேல் வர்க்கத்தினருக்கு மட்டுமல்ல, மாறாக மக்களுக்காகப் போராடும் , மக்கள் நலனைப் பாதுகாக்கும் ஒரு கட்சி என்பதைக் கட்சி உறுப்பினர்கள்…
பிஎன்-ஐ கலைத்துவிடுங்கள், இல்லையேல் அம்னோவை நீக்கிவிடுங்கள் : அம்னோ-பாஸ் கூட்டணியை…
அம்னோ மத அரசியலை நோக்கி நகருமானால், பாரிசான் நேசனலில் இருந்து அம்னோவை விலக்கிவிடுவோம் என மசீச தேசியத் தலைவர் லியோ தியோங் லாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று, 2018 சிலாங்கூர் மசீச கொன்வென்சனில் பேசிய லியோ, பாரிசான் நேசனல் பண்பாட்டு பன்முகத்தன்மையைக் கடைப்பிடித்து, இந்நாட்டு மக்களின் நல்லிணக்கத்தைக் காக்க…
Close to a Million Ringit Grant to MySkills…
MySkills Foundation (MSF), an organisation committed to providing vocational training to under-privileged youths, and Global Banking and financial services provider J.P. Morgan launched a demand-led workforces readiness initiative to empower at-risk youth…
பிடி-யில் இராணுவ வீரர்களின் வீடுகளைப் பழுது பார்க்க RM500,000 ஒதுக்கீடு
போர்டிக்சனில் (பி.டி.) இராணுவ வீரர்களின் வீடுகளைப் பழுது பார்க்கவும் அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைச் செய்யவும் பாதுகாப்பு அமைச்சு RM500,000-ஐ ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்று, அவ்வமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு இராணுவத் தள மையத்திற்கு (புசாஸ்டா) நேரிடையாக மேற்கொண்ட ஒரு பயணத்திற்குப் பின்னர்…
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆதரிக்க முன்னாள் அமைச்சர் தயாராக உள்ளார்
நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் மசீச-வின் ஒரே பிரதிநிதியான டாக்டர் வீ கா சியோங், தற்போதைய அரசு நிறுவனத்தைச் சீர்திருத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எதிர்க்கட்சி பிரதிநிதியாக இருந்தபோதிலும், மக்கள் மற்றும் நாட்டிற்கு நன்மைகளைக் கொடுக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.…
கிட் சியாங்: மகாதிருடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டால் குவான் எங்…
டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், டாக்டர் மகாதிர் முகம்மட்டுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி இறக்கும் முயற்சியையும் நிறுத்திக் கொண்டால் தம் மகன் லிம் குவான் எங்மீதான வழக்குகள் கைவிடப்படுமென 2016இல் தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக மீண்டும் கூறியுள்ளார்.…
பிகேஆரில் தேர்தல்
பிகேஆர் கட்சித் தேர்தல் இன்று தொடங்கியது. முதன்முதலாக கெடா, பினாங்கு உறுப்பினர்கள் காலை மணி 9க்கு வாக்களிக்கத் தொடங்கினர். பிகேஆரில் அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 5-இல் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இப்போது அனைவரின் கவனமும் துணைத் தலைவர் பதவிமீது பதிந்துள்ளது. துணைத் தலைவர் பதவி கொம்பாக் எம்பியும்…
விஷ மது : முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களைக் கண்காணிக்க வேண்டும்
விஷ மது அருந்தி, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட சிலர் இறந்ததன் காரணமாக, அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் முதலாளிகள் அவர்களைக் கண்காணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம். குலசேகரன், குறைந்த விலையிலான மதுபானம் பெரும்பாலும் வெளிநாட்டவர்களின் தேர்வாக இருப்பதுடன், அவர்களில் சிலர் சுயமாகவே மதுபானம்…
விஷத்தன்மை கொண்ட மதுபானம் அருந்தியதால் மாண்டோர் எண்ணிக்கை 29 ஆக…
இன்று நண்பகல்வரை மேலும் எழுவர்- கோலாலும்பூரில் அறுவர், பேராக்கில் ஒருவர்- விஷத்தன்மை கொண்ட மதுபானம் அருந்தியதால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. செப்டம்பர் 15இலிருந்து சிலாங்கூர், கோலாலும்பூர், பேராக் ஆகியவற்றில் 76பேர் விஷத்தன்மை கொண்ட மது அருந்தியதால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா…
























