இந்தச் சிக்கல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்பாகத் தான் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா கூறுகிறார். கடந்த ஆண்டில் சிலாங்கூரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் ரிம 52.9 மில்லியனாக இருந்தன, இது 2024-ஆம் ஆண்டில் பதிவான ரிம 22.6 மில்லியனை விட…
நஸ்ரி, குவோக்கை இழிவுப்படுத்தியது சீன சமூகத்தையே இழிவுப்படுத்தியதாகும், சோங் கூறுகிறார்
சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை கடுமையாக இழிவுப்படுத்தி பேசியிருப்பது சீன சமூகத்தையே இழிவுபடுத்தியதற்கு ஒப்பாகும் என்று மசீச இலைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் கூறுகிறார். குவோக் சாதாரண மனிதர் அல்ல. அவர் உலகமுழுவதிலுமுள்ள சீன சமூகத்தினரால்…
தண்ணீர் கட்டணம் எகிறியது ஏன்? ஆயர் சிலாங்கூர்மீது வணிகர்கள் ஆத்திரம்
சிலாங்கூர் வணிகர்கள் சிலர் தங்களுக்கு வந்த தண்ணீர் கட்டண பில்லைப் பார்த்துக் கொதிப்படைந்துள்ளனர். முந்திய மாதத்துடன் ஒப்பிடும்போது சிலருடைய தண்ணீர் கட்டணம் 50 மடங்கு உயர்ந்திருந்தது. சிலாங்கூரில் நீர் விநியோகம் செய்யும் ஆயர் சிலாங்கூர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கெப்போங்கில் கடந்த 14 மாதங்களான …
22,000 வாக்காளர்களின் ஆட்சேபனைகள்: தேர்தல் ஆணையம் ஏன் மக்களின் ஆட்சேபங்களைக்…
மலேசியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தொகுதிகளுக்குப் பரிந்துரைத்துள்ள தொகுதி சீர்திருத்தங்கள் மீது பொது மக்கள் எழுப்பியுள்ள சட்டபூர்வமான ஆட்சேபங்களைச் செவிமடுக்க மறுப்பதன் இரகசியம் என்ன? தேர்தல் ஆணையம் அதனை அரசாங்கத்தின் ரப்பர் முத்திரையாகக் கருதுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவர் டாக்டர்…
மகாதிர்: நஜிப்புக்கு வாக்காளிக்காதீர் என்று சொல்லத்தான் பெக்கான் செல்கிறேன்
இன்று பெக்கான் செல்லும் டாக்டர் மகாதிர் முகம்மட், அதன் நடப்பு எம்பி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நிராகரிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளவே அங்கு செல்வதாகக் கூறினார். “நஜிப் பெக்கானைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும். உள்ளூர்க்காரர்தான். உள்ளூர்க்காரராக இருந்தாலும் தப்பு செய்தால் நிராகரிக்கத்தான் வேண்டும்”, என பக்கத்தான் ஹரபான் …
14வது பொதுத் தேர்தலில் சீனர் சுனாமி இருக்காது- லியோ
நாட்டில் இதுவரை நடந்துள்ள தேர்தல்கலில் எதிர்வரும் 14வது பொதுத் தேர்தல்தான் போட்டிமிகுந்ததாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார். “தேர்தல்களுக்கெல்லாம் தாய்” என வருணித்த அவர், புத்ரா ஜெயாவில் பிஎன் தொடர்ந்து இருக்குமா என்பதை முடிவு செய்யப்போகும் தேர்தல் இது …
அரசாங்க வீடுகள் கட்டித்தருவதாகச் சொன்னது என்னவாயிற்று? பினாங்கு கேட்கிறது
அரசாங்க வீடுகள்(பிபிஆர்) குறைந்த எண்ணிக்கையில் கட்டப்பட்டுள்ள மாநிலம் பினாங்குதான் என்கிறார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ. கூட்டரசு அரசாங்கம் கட்டிய 102,000 வீடுகளில் பினாங்குக்குக் கிடைத்தது 999 வீடுகள் மட்டுமே. இதன் தொடர்பில் முதலமைச்சர்(சிஎம்) லிம் குவான் எங்கும் தாமும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் …
பேராக் மந்திரி பெசார் செயல்திறனை மதிப்பிட, மக்கள் நடுவர் மன்றம்
மக்களிடையேயானப் பிரச்சினைகளைக் கையாள்வதில், பேராக் மாநிலத் தலைவராக இருக்கும், மந்திரி பெசார் ஷம்ரி அப்துல் காடிர்-இன் செயல்திறனை மதிப்பீடு செய்ய, ஒரு மக்கள் நடுவர் மன்றத்தை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அமைக்கவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 9.30 முதல் மாலை 4 மணிக்குள் நடைபெறவுள்ள அந்த…
நஸ்ரி அல்லது ஷாரீருடன் போட்டியிட விரும்பும் ஸைட் இப்ராகிம்
14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் டிஎபியின் ஸைட் இப்ராகிம் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஷரீர் அப்துல் சமாட் அல்லது பாடங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் ஆகிய இருவரில் ஒருவருடன் மட்டுமே போட்டியிட விரும்புகிறார். ஒரு பெர்சத்து அல்லது…
ஜிஇ14 : பக்காத்தான் ஹராப்பான் ஒரே சின்னத்தைப் பயன்படுத்தும்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ஒரே சின்னத்தைப் பயன்படுத்த பக்காத்தான் ஹராப்பான் முடிவெடுத்துள்ளது. ஹராப்பான் கூட்டணிக்கான அதிகாரப்பூர்வப் பதிவு விண்ணப்பத்திற்கு, இயக்கப் பதிவகத்திடமிருந்து, எந்தவொரு பதிலும் வரவில்லை என்றால், அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். “அனைத்து கட்சிகளும் ஒரே சின்னத்தைப் பயன்படுத்தும்,…
மகாதீர் : முக்ரிஸை நான் பிரதமராக்க முயற்சித்ததில்லை
தன் மகன் முக்ரிஸை, தனது அடிச்சுவடுகளைப் பின்பற்றி பிரதமராக்க வேண்டும் என தான் முயற்சித்ததில்லை என்று, டாக்டர் மகாதீர் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் டிஏபி தலைவர், துங்கு அஸிஸ் துங்கு இப்ராஹிமுக்கு எதிரான முக்ரிஸின் அவதூறு வழக்கில், இன்று நீதிமன்றத்தில் சாட்சியளிக்க வந்த அந்த முன்னாள் பிரதமர்,…
எனது காலத்தில் குவோக் பிஎன்னுக்கு நிதி கொடுத்ததே இல்லை, மகாதிர்
1957 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின்னர், அம்னோவுக்கும் மசீசவுக்கும் கணிசமான நிதி பங்களிப்புச் செய்யும்படி தாம் அடிக்கடி கேட்டுக்கொள்ளப்பட்டதாக கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் கூறியிருந்தார். ஆனால், தாம் பிரதமராக இருந்த 22 ஆண்டுகாலத்தில் குவோக் பிஎன்…
குவாக் டிஏபிக்குப் பண உதவி செய்யவில்லை என்பதைக் கேட்டு மகிழ்கிறார்…
கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக் பிஎன் அரசாங்கத்தைக் கவிழ்க்க டிஏபிக்குப் பண உதவி செய்வதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார் என்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொள்கிறார் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். ஆனால், அதற்குமுன் தொழிலதிபரை வசைபாடியதற்கு அவர் வருத்தப்படத் தயாராக இல்லை. “முன்பே அவர் மறுத்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காது.…
’ஐயா, நான் பெக்கானுக்கு ஆயுதங்களுடன் செல்லவில்லை’- மகாதிர் கிண்டல்
டாக்டர் மகாதிர் முகம்மட் நாளை பகாங்கில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கோட்டையான பெக்கானுக்குச் செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்லவில்லை என்றும் பேசுவதற்கு மட்டுமே செல்வதாகவும் கூறினார். தங்கள் தொகுதிக்கு வந்தால் கலகம் மூளலாம் என்று பெக்கான் அம்னோ எச்சரித்திருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது மகாதிர் அவ்வாறு கூறினார். “கலகம் …
ஒரு கோடீஸ்வரர்மீது வசைபாடிய நஸ்ரிக்கு இன்னொரு கோடீஸ்வரர் கண்டனம்
சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக்கை விமர்சித்துத் தள்ளியதை இன்னொரு கோடீஸ்வரர் கண்டித்திருக்கிறார். ஒரு திறந்த மடல் வரைந்த கண்டரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனரும் அதில் பெரும்பான்மை பங்கு வைத்திருப்பவருமான லீ கிம் இயு, அம்னோவின் மூத்த தலைவர் மிகவும் மரியாதைக் …
நஜிப்பின் டோல்-எதிர்ப்புப் பேச்சு, ஒரு தேர்தல் தந்திரம்- பிகேஆர் சாடல்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நெடுஞ்சாலை டோல் கட்டணங்களுக்கு எதிராக பேசுவது ஒரு தேர்தல் தந்திரம் என்கிறார் பிகேஆர் தகவல் தலைவர் சைட் இப்ராகிம் சைட் நோ. “நஜிப் பேசுவது கேட்பதற்கு இனிக்கிறது. ஆனால், எல்லாமே தேர்தல் பேச்சு. “பிஎன் டோலை ஒரு கருவியாக பயன்படுத்துவதைத் தடுக்க ஒரே …
சமயத்தைவிட்டு வெளியேறும் வழக்குகளை சிவில் நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது –…
இஸ்லாத்தைவிட்டு வெளியேற விரும்பும் நால்வர் அதற்காக சிவில் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது எனக் கூட்டரசு நீதிமன்றம் கூச்சிங்கில் தீர்ப்பளித்தது. சமயத்தை விட்டு விலகும் விவகாரங்களில் முடிவு செய்யும் அதிகாரம் சிவில் நீதிமன்றங்களுக்கு இல்லை எனக் கூட்டரசு நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழு ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளதாக போர்னியோ போஸ்ட் …
மலேசிய சட்டவிரோத தொழிலாளர்கள் 200 பேரை, நியூசிலாந்து வெளியேற்றியது
மலேசியா, சட்டவிரோதத் தொழிலாளர்களைக் கைதுசெய்துவரும் வேளையில், நம் மக்களில் அதிகமானோர் சட்ட விரோதமாக நியூசிலாந்தில் வேலை செய்துவருவது தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களில், சுமார் 200 மலேசிய சட்டவிரோத கட்டுமானத் தொழிலாளர்களை நாடுகடத்தியதாக அல்லது அந்நாட்டில் நுழைவதிலிருந்து தடுத்துள்ளதாக, நியூசிலாந்து குடிநுழைவுத்துறை கடந்த வாரம் அறிவித்தனர். அவர்களில் சுமார்…
குவோக், ஆண்மையற்றவராக இருக்காதீர், பொதுத் தேர்தலில் போட்டியிட வாரும், நஸ்ரி…
கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை சீண்டும் மிக அண்மைய அம்னோக்காரராக கிளம்பியிருக்கிறார் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ். ஹோங்காங்கில் வசித்து வரும் "சீனி மன்னன்" ரோபர்ட் ஹுவோக், 94, மலேசியாவுக்குத் திரும்பி வந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மலேசியகினியிடம் பேசிய…
பெப்ரவரி 28 – நஜிப்பின் கோட்டையில் மகாதிர்!
பிரதமர் நஜிப் ஓர் ஊழல் பேர்வழி, நாட்டின் கஜனாவை காலி செய்தவர். அவரை மக்கள் ஆதரிக்கக்கூடாது என்று நாடு தழுவிய அளவில் பயணம் மேற்கொண்டு, பேசி வரும் முன்னாள் பிரதமர் மகாதிர், எதிரியின் கோட்டைக்கே செல்கிறார். எதிர்வரும் புதன்கிழமை (பெப்ரவரி 28), 93 வயதான பாக்கத்தான் ஹரப்பான்…
பாஸ் கெடாவுக்கான தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது
பாஸ் கட்சி ககாசான் செஜாத்ரா கூட்டணியில் உள்ள அதன் பங்காளிக்கட்சிகளுடன் இன்று கெடா, அலோர் ஸ்டாரில் 14வது பொதுத் தேர்தலுக்கான அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது. கோட்டா சராங் சிமுட்டில் கெடா பாஸ் வளாகத்தில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அந்த அறிக்கையை வெளியிட்ட …
குவாக் பற்றிக் கூறப்படுவதை ஜோகூர் தலைவர்கள் நம்பவில்லை
மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக் எதிர்க்கட்சிக்கு நிதியுதவி செய்வதாகக் கூறப்படுவதை ஜோகூர் தலைவர்கள் இருவர் நம்பவில்லை. ஏழு தவணைகள் ஜோகூர் எம்பி-ஆகவுள்ள ஷாரிர் சமட், குவாக்கை ஒரு தொழில் அதிபராக நன்றாகவே தெரியும் என்றும் அவர் அரசியலில் தலையிடுபவர் அல்ல என்றும் கூறியதாக சைனா பிரஸ் …
‘மின்வெளிப் போரில் தோற்பதற்கு அம்னோ/பிஎன் விரும்பவில்லை’
14வது பொதுத் தேர்தலில் எதிரணியிடம் மின்வெளிப் போரில் தோற்றுப்போக அம்னோ/பிஎன் தயாராக இல்லை. எனவே, 191 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள ஐடி மற்றும் சமுக ஊடக அதிகாரிகள் எதிரணியினரின் இணையவெளித் தாக்குதல்களை முறியடிப்பதற்குத் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அம்னோ தகவல் தொழில்நுட்ப(ஐடி)ப் பிரிவுத் தலைவர் அஹமட் மஸ்லான் …
ஜாம்: குவாக்குக்கு எதிராக மலாய்க்காரர் உணர்வுகளைக் கிளறி விடுகிறார் நஜிப்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக்குக்கு எதிராக கருத்துரைத்ததன் மூலமாக மலாய்க்காரர்களின் உணர்வுகளைக் கிளறி விட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சைனுடின் மைடின் கூறினார். பிஎன் அரசாங்கத்தால்தான் குவாக் பெரும் செல்வந்தராக முடிந்தது என நஜிப் கூறியிருந்தார். குவாக் டிஏபிக்கு நிதியுதவி செய்வதாக …












