ஜொகூர், மாசாய் பகுதியில் உள்ள தாமான் மெகா ரியா உணவகம் ஒன்றில், மானிய விலையிலான சமையல் எண்ணெய் மூட்டைகள் முறைகேடு செய்யப்பட்டிருப்பதை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட…
கிட் சியாங்: அரசியலை மிகவும் சார்ந்துள்ள ஏஜி என்றால் அது…
அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) ஆகக் கடைசியாக தொடுத்துள்ள வழக்கை “அரசியல் நோக்கங்கொண்டது” என்று வகைப்படுத்தியுள்ள சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியை “அரசியலை மிகவும் சார்ந்துள்ள சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் சாடினார். “அமெரிக்காவோ அல்லது வேறு ஒரு நாடோ நம் …
செப்டம்பரில் ‘anti-kleptocracy’ பேரணி: எதிரணி ஏற்பாடு செய்கிறது
1எம்டிபி விவகாரம் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை மேலும் ஒரு வழக்கைத் தொடுத்துள்ள வேளையில் எதிர்க்கட்சிகள் செப்டம்பர் மாதத்தில் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிடுகின்றன. பேரணி "Sayang Malaysia, Hapuskan Kleptokrasi"(மலேசியாவை நேசிப்போம், திருட்டுத்தனத்தை அழிப்போம்) என்ற தலைப்பைக் கொண்டிருக்கும். 1எம்டிபி விவகாரத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டிருக்கும் …
போரெக்ஸ் இழப்பு பிஎன்எம்-இன் அன்னிய நாணயக் கையிருப்பைப் ‘பெரிதும் பாதித்து…
1990களில் பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட யுஎஸ்$10பில்லியன் அன்னிய செலாவணி இழப்பு அதன் இன்றைய அன்னிய செலாவணிக் கையிருப்பைப் பெரிதும் பாதித்து விட்டதென மத்திய வங்கியின் முன்னாள் உதவி கவர்னர் அப்துல் முராட் காலிட் கூறினார். அந்த யுஎஸ்$10 பில்லியனை அரசாங்கச் சேமிப்புத் திட்டங்களில் போட்டு வைத்திருந்தால் இந்த 25 …
டிஏபி எக்ஸ்கோகளுக்கு பினாங்கு பிஎன் கண்டனம்: சுரங்கத் திட்டம் குறித்து…
டிஏபி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பினாங்கில் கடலடி சுரங்கப் பாதை, மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் ஆகிய திட்டங்களுக்காக ஸெனித் கட்டுமான நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட தொகை குறித்து முரண்பாடான தகவல்களைத் தெரிவித்திருப்பதாக பினாங்கு பிஎன் சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார். அத்திட்டங்கள் தொடர்பில் செள கொன் இயோ கூறியிருப்பது அதே விவகாரம் தொடர்பில் …
பினாங்கு போலிடெக்னிக் உணவக விவகாரம்: இனவாதம் ஆக்காதீர்கள், பி.கமலநாதன் கோரிக்கை
கோலாலம்பூர்- செப்ராங் பிராய் போலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தை மூட பணித்ததன் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்த செய்தியை இனவாதம் ஆக்கவேண்டாம் என, துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் ஓர் அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார். அக்கல்லூரி இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒப்பந்த விதிகளை மீறியதால்,…
“இப்போது, எம்ஒ1-னின் மனைவி நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்”, கிட்…
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள சொத்துப் பறிமுதல் சிவில் வழக்கைத் தொடர்ந்து அமெரிக்க நடிகர் லெநார்டொ டிகாப்பிரியோ மற்றும் ஆஸ்திரேலிய மோடல் மிரண்டா கெர் ஆகியோர் டிஒஜே பட்டியலிட்டிருந்த சொத்துகளைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். இப்போது, மலேசியன் அதிகாரி1 இன் மனைவி அவ்வாறு செய்ய வேண்டும்.…
அகதிகளின் இளவரசி, எலிசபெத் அரசியின் விருது பெறுகிறார்
அகதிகளுக்கு உதவுவதற்காக தமது 18 ஆவது வயதில் ஓர் அரசுசார்பற்ற அமைப்பைத் தோற்றுவித்த ஹெய்டி குவா அவர் மலேசிய சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைக்காக பிரிட்டீஷ் அரசி எலிசபெத் II வழங்கும் இளந்தலைவர்கள் விருது பெறுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார். லண்டனுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மலேசியாகினி குவாவை…
இசாவின் நியமனத்தைத் தடுப்பீர்: அமைச்சரவைக்கு லிம் கோரிக்கை
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், தரைப் போக்குவரத்து ஆணைய(ஸ்பாட்)த்தின் இடைக்காலத் தலைவராக முகம்மட் இசா அப்துல் சமட் நியமனம் செய்யப்பட்டிருப்பதை அமைச்சரவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தவறினால் நாடாளாவிய முறையில் ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்றும் எச்சரித்தார். ஜூன் 19-இல், புத்ரா ஜெயா ஃபெல்டா …
கெர் யுஎஸ்$8.1மில்லியன் மதிப்புள்ள நகைகளை டிஒஜேயிடம் கொடுத்துவிட்டார்
1எம்டிபி சம்பந்தப்பட்ட நிதியிலிருந்து களவாடப்பட்ட பணத்திலிருந்து மலேசிய ஜோ லோ ஆஸ்திரேலிய மோடல் மிரண்டா கெர்ருக்கு கொடுத்த யுஎஸ்$8.1 மில்லியன் (ரிம35 மில்லியன்) மதிப்புள்ள நகைகளை கெர் அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) யிடம் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. "விசாரணை தொடங்கப்பட்டதிலிருந்து, கெர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததுடன் பரிசாகக்…
நீதிமன்ற வெற்றிக்குப்பின் தாவ்யிச கோவில் நிரந்தரத் தீர்வை நாடுகிறது
கோவில் உடைப்புக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து ஒரு தாவ்யிச கோவில், அதிகாரிகளுடனும் கோவிலை உடைக்கும் முயற்சியை மேற்கொண்ட நில மேம்பாட்டாளருடனும் கலந்துரையாடல் நடத்தி ஒரு நிரந்தரத் தீர்வைக் காண விரும்புகிறது. "மலேசியாவில் சமய சுதந்திரத்திற்கு இது ஒரு முக்கியமான தீர்ப்பு. "ஆனால், நாங்கள்…
பாக்சைட் தோண்டுவதற்கான தடைவிதிப்பு பொதுத் தேர்தல்வரை நீட்டிக்கப்பட்டது
பகாங்கில் இம்மாத இறுதியில் முடிவுக்கு வரவேண்டிய பாக்சைட் சுரங்கங்களுக்கான தற்காலிகத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் மந்திரி புசார் அட்னான் யாக்கூப் கூறினார். தடைவிதிப்பு நீட்டிக்கப்படுவதை யாரும் “அரசியல் விளையாட்டு” என்று எண்ணி விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர் இதை விரிவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றார்.…
எம்பி: ஃபோரெக்ஸ் பணிக்குழு தகவல் பெற சிரமப்பட்டதாகக் கூறப்படுவது அபத்தம்
கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங், மூன்று தசாப்தங்களுக்குமுன் அன்னிய செலாவணி (ஃபோரெக்ஸ்) வாணிகத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரித்த சிறப்புப் பணிக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப் பிரச்னைகளால் மத்திய வங்கியிடமிருந்து ஆதாரங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியதாக பணிக்குழு கூறியதை …
10 நாடுகள் குடியுரிமை கொடுக்க முன்வந்துள்ளனவாம்: ஜாகிர் நாய்க் கூறிக்கொள்கிறார்
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் பிரச்சாரகர் ஜாகிர் நாய்க் தமக்கு பத்து நாடுகள் குடியுரிமை வழங்க முன்வந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவற்றில் எதையும் ஏற்றுக்கொள்வது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. அவரது நாடான இந்தியாவில் பயங்கரவாதம், பணச் சலவை முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் ஜாகிர். “(இந்தியாவில்) அடிப்படையற்ற …
ஐஜிபி: 1எம்டிபி பற்றி ஏஜி ஆழமாக நோண்டிப் பார்க்கச் சொன்னார்
சட்டத்துறை அலுவலகம் (ஏஜி அலுவலகம்) 1எம்டிபி விவகாரத்தை மேலும் விசாரிக்கமாறு போலீஸைக் கேட்டுக்கொண்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறினார். "நான் இதை முன்பு சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எழுந்துள்ள சில கேள்விகள் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தும்படி ஏஜி அலுவலகம் எங்களிடம் கூறியிருந்தது.…
1எம்டிபி மீதான விசாரணை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற வழக்குரைஞர்…
1எம்டிபி சொத்துகள் சம்பந்தமாக அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) வழக்கு தாக்கல் செய்துள்ளதால், மலேசிய சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி 1எம்டிபி விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் விடுத்திருந்த கோரிக்கையை ஏஜி அபாண்டி நிராகரித்து விட்டார். மலேசிய…
துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர், பாதிரியார் கோவின் கடத்தல் பற்றிய தடயம்…
கள்ளக்கடத்தல் கும்பலோடு நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக பாரியார் ரேமண்ட் கோ கடத்தலுக்கான தடயம் கண்டுபிடிக்கப்பட்டது. கெடா, கம்போங் வெங் டாலத்தில் ஜூன் 17 இல் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை போலீசாருடனான துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. அதில், சந்தேகிக்கப்பட்ட முக்கிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். அக்கூட்டத்தைச் சேர்ந்த…
ஜிஎஸ்டி இல்லாமல், பிரிம் கொடுக்க முடியும், உபரி பட்ஜெட்டையும் அடைய…
பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான ஒரு மத்திய அரசு பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) அகற்ற முடியும். அதே வேளையில், பிரிம் ரொக்க நிதி உதவியை அளிக்க முடியும் என்பதோடு உபரி வரவு செலவுதிட்டத்தை அளிக்க முடியும் என்று பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங் நம்புகிறார்.…
ஹரி ராயா 2017 நல்வாழ்த்துகள்
செம்பருத்தி. கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஹரி ராயா 2017 நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
இப்போது 1எம்டிபியைத் தற்காக்கும் மாவீரர் ஹாடி, அம்னோ அல்ல என்கிறார்…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் 1எம்டிபி ஊழலைத் தற்காத்திருப்பது குறித்து டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டின் புனித மாதம் பல வருந்தத்தக்க சம்பவங்களைக் கண்டுள்ளதாக கூறுகிறார். அதில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்)…
டிஓஜே வழக்குகள்: தேர்தலில் ‘அன்னியர் தலையீடு’ என்று ஹாடி கண்டனம்
அன்னியர் தலையீடு நாட்டுக்குக் கெடுதலைதான் கொண்டு வரும் என்பது வரலாறு புகட்டும் பாடமாகும் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். மலாக்கா அரசின் வீழ்ச்சி இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இப்போது 1எம்டிபி தொடர்பில் வெளிநாடுகள் தொடுக்கும் வழக்குகள். மலேசிய விவகாரங்களில் அன்னியர் தலையீட்டை விரும்புவோரின் செயல் கண்டிக்கத்தது …
ஸெட்டி: பேங்க் நெகராவால் அதிகப்பட்ச அபராதம் மட்டுமே விதிக்க முடியும்
1எம்டிபிக்கு எதிராக பேங்க் நெகாராவால் அதிகமாக எதுவும் செய்ய இயலாது என்று கூறும் அந்த மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ், வேண்டுமானால் மலேசிய வரலாற்றிலேயே முன் எப்போதுமில்லாத அளவுக்கு “மிகப் பெரிய அபராதம்” விதிக்கலாம் என்கிறார். சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பேங்க் நெகராவுக்கு …
மஇகா – கோரப்படாத 2,575 குடியுரிமை பிரச்சனைகளை முதலில் தீர்க்க…
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியும் இன்னும் நிலுவையில் இருக்கும் 2575 குடியுரிமை பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படி மஇகா-வைக் கேட்டுக்கொண்டார். இவர்களில் சிலரின் விண்ணப்பங்களுக்குப் புத்ராஜெயா, தேசியப் பதிவு இலாகாவின் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், மாவட்டப் பதிவு இலாகாவிலிருந்து இன்னும்…
நஜிப்பிடமிருந்து மஇகா நிதி பெறுவது தவறல்ல, வேள்பாரி கூறுகிறார்
மஇகா பிரதமர் நஜிப்பிடமிருந்து, அவர் பிஎன் தலைவரும் கூட, நிதி பெறுவதில் தவறு ஏதும் இல்லை என்று மஇகாவின் தலைமைப் பொருளாளர் எஸ். வேள்பாரி கூறுகிறார். "பிஎன்னில் அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் அதனிடமிருந்து பணம் பெறுகின்றன, அது அரசியல் ஆகும். "முதலாவது பிரதமரிலிருந்து, இரண்டாவது பிரதமர்…


