இப்போது 1எம்டிபியைத் தற்காக்கும் மாவீரர் ஹாடி, அம்னோ அல்ல என்கிறார்…

  பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் 1எம்டிபி ஊழலைத் தற்காத்திருப்பது குறித்து டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டின் புனித மாதம் பல வருந்தத்தக்க சம்பவங்களைக் கண்டுள்ளதாக கூறுகிறார். அதில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்)…

டிஓஜே வழக்குகள்: தேர்தலில் ‘அன்னியர் தலையீடு’ என்று ஹாடி கண்டனம்

அன்னியர்   தலையீடு   நாட்டுக்குக்  கெடுதலைதான்   கொண்டு   வரும்  என்பது   வரலாறு   புகட்டும்   பாடமாகும்   என்கிறார்   பாஸ்   தலைவர்   அப்துல்  ஹாடி    ஆவாங். மலாக்கா   அரசின்    வீழ்ச்சி   இதற்கு   ஓர்   எடுத்துக்காட்டு.  இப்போது   1எம்டிபி   தொடர்பில்    வெளிநாடுகள்   தொடுக்கும்    வழக்குகள். மலேசிய   விவகாரங்களில்    அன்னியர்   தலையீட்டை    விரும்புவோரின்   செயல்   கண்டிக்கத்தது    …

ஸெட்டி: பேங்க் நெகராவால் அதிகப்பட்ச அபராதம் மட்டுமே விதிக்க முடியும்

1எம்டிபிக்கு   எதிராக   பேங்க்  நெகாராவால்    அதிகமாக    எதுவும்    செய்ய    இயலாது     என்று   கூறும்   அந்த   மத்திய   வங்கியின்   முன்னாள்   கவர்னர்   ஸெட்டி   அக்தார்   அசீஸ்,     வேண்டுமானால்   மலேசிய     வரலாற்றிலேயே   முன் எப்போதுமில்லாத   அளவுக்கு  “மிகப்  பெரிய   அபராதம்”  விதிக்கலாம்   என்கிறார். சட்ட   நடவடிக்கை   எடுக்கும்     அதிகாரம்    பேங்க்   நெகராவுக்கு …

மஇகா – கோரப்படாத 2,575 குடியுரிமை பிரச்சனைகளை முதலில் தீர்க்க…

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியும் இன்னும் நிலுவையில் இருக்கும் 2575 குடியுரிமை பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படி மஇகா-வைக் கேட்டுக்கொண்டார். இவர்களில் சிலரின் விண்ணப்பங்களுக்குப் புத்ராஜெயா, தேசியப் பதிவு இலாகாவின் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், மாவட்டப் பதிவு இலாகாவிலிருந்து இன்னும்…

நஜிப்பிடமிருந்து மஇகா நிதி பெறுவது தவறல்ல, வேள்பாரி கூறுகிறார்

  மஇகா பிரதமர் நஜிப்பிடமிருந்து, அவர் பிஎன் தலைவரும் கூட, நிதி பெறுவதில் தவறு ஏதும் இல்லை என்று மஇகாவின் தலைமைப் பொருளாளர் எஸ். வேள்பாரி கூறுகிறார். "பிஎன்னில் அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் அதனிடமிருந்து பணம் பெறுகின்றன, அது அரசியல் ஆகும். "முதலாவது பிரதமரிலிருந்து, இரண்டாவது பிரதமர்…

விக்னேஸ்வரன் தேவான் நெகாரா தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்

  மஇகா உதவித் தலைவர் எஸ்.எ. விக்னேஸ்வரன் நாடாளுமன்ற மேளவையின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். முதலில், அவர் செனட்டின் உறுப்பினராக இரண்டாவது தவணைக்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். வினேஸ்வரன் தலைவர் பதவிக்கான சத்திய பிரமாணத்தை தேவான் நெகாராவின் துணைத் தலைவர் அப்துல் ஹலிம் அப்துல் சாமாட் முன்…

நஜிப் அன்னிய செலாவணி இழப்பு குறித்து இவ்வளவு காலம் மெளனமாக…

அன்னிய  செலாவணி(ஃபோரெக்ஸ்)  இழப்பு  குறித்து  இப்போது   விசாரிக்க    முயற்சி   மேற்கொள்ளப்படுவது   குறித்துக்   கருத்துரைத்த   முகைதின்   யாசின்,   இவ்விவகாரம்   தொடர்பில்    பிரதமர்     நஜிப்   அப்துல்    ரசாக்    இருபதாண்டுகளுக்குமேல்   மெளனமாக   இருந்தது    ஏன்    என்று   வினவுகிறார். நஜிப்   அவ்விவகாரத்தில்   நடந்தது   என்னவென்பதை    அறிய   விரும்பியிருந்தால்    அவர்   மகாதிர்   முகம்மட்    அமைச்சரவையில்   இருந்தபோதே  …

ஹராபான் தலைவர் விசயத்தில் பெர்சத்து ‘விட்டுக்கொடுக்கத் தயார்’

பார்டி    பிரிபூமி    பெர்சத்து மலேசியா (பெர்சத்து)     பக்கத்தான்   ஹராபானுக்குப்  புதிய   தலைமையை   ஏற்கத்   தயாராக  உள்ளதாய்   அதன்   தகவல்    தலைவர்   கமருடின்   முகம்மட்  நோர்    கூறினார். ஹராபானுக்கு  நிர்வாகத்   தலைவரும்    தலைவரும்   தங்கள்   கட்சியைச்  சேர்ந்தவர்களாகத்தான்   இருக்க    வேண்டும்    என்று  பெர்சத்து    விரும்புவதாகக்    கூறப்படுவதை     அவர்  மறுத்தார். “நிர்வாகத்   …

உண்ணாவிரதமிருந்த பிகேஆர் பிரதிநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

தேர்தல்  ஆணையம்(இசி)   தம்முடைய   கேள்விகளுக்குச்  சரியான   முறையில்   பதிலளிக்காததைக்  கண்டித்து    48-மணி   நேர   உண்ணாவிரதத்தில்   ஈடுபட்ட   பேராக்    சட்டமன்ற   உறுப்பினர்   மருத்துவ   மனைக்குக்   கொண்டு   செல்லப்பட்டார். பிகேஆரின்  ஹுத்தான்  மெலிந்தாங்    சட்டமன்ற    உறுப்பினர்   கேசவன்   சுப்ரமணியம்,  புத்ரா   ஜெயாவில்    இசி  தலைமையகத்துக்கு   வெளியில்   தமது   உண்ணாவிரதத்தைத்    தொடங்கினார்.    நேற்றிரவு  …

நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்காக சிவராசாவுக்கு அடி கொடுத்தேன் என்கிறார் கு நான்

  பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா தொடர்ந்துள்ள வழக்கு ஆணையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரை தாம் சாடியதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். கடந்த மாதம், மஸ்ஜிட் அன்-நூர் கம்போங் மெலாயு, சுபாங்கில் சிவராசா…

பிஎன் தோற்றால் அவசரகாலம் பிரகடனம் செய்யப்படும் சாத்தியத்தை மகாதிர் மறுக்கவில்லை

எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்   பிஎன்   குறுகிய   தோல்வி  காணும்   பட்சத்தில்     தேர்தல்   முடிவு  செல்லாது   என்று      அறிவிக்கப்படலாம்   என்று   நினைக்கிறார்   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   தலைவர் (பெர்சத்து)   டாக்டர்  மகாதிர்    முகம்மட். “அப்படிச்  செய்ய  அரசாங்கத்துக்கு      ஆதாரம்   எதுவும்   தேவையில்லை.  பிஎன்னில்   உள்ள    முரடர்கள்  நிலைத்தன்மையைக்  குலைக்க   தயாராக  …

1எம்டிபி விசாரணைக் கோப்புகளை மீண்டும் திறக்கக் கோரி போலீஸுக்கும் எம்எசிசிக்கும்…

அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபி சொத்து சம்பந்தமாக கடந்த வாரம் ஒரு சிவில் வழக்கைத் தொடங்கியுள்ளது. அதைப் பின்பற்றி 1எம்டிபி பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்கும்படி போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கருக்கும் எம்எசிசி தலைவர் ஸுல்கிப்லி அஹமட்டுக்கும் வழக்குரைஞர் ஹனிப் ஹாட்டிரி அப்துல்லா சவால் விட்டுள்ளார்.…

ஜோ லவ் இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளாரா? என்ஆர்டி ஆராயும்

பினாங்கில்   பிறந்த  செல்வந்தரான   ஜோ  லவ்   மலேசியக்  குடியுரிமையையும்    செயிண்ட்  கிட்ஸ்  மற்றும்  நெவிஸ்   குடியுரிமையும்   வைத்திருப்பதாகக்  கூறப்படுவதைத்      தேசிய  பதிவுத்துறை (என்ஆர்டி)  ஆராயும். அது  குறித்து   வினவியதற்கு,  “அது   உண்மையா  என்பதை    ஆராய்வோம்”,  என  என்ஆர்டி    தலைமை -இயக்குனர்   யாஸிட்   ரம்லி  கூறினார். அமெரிக்க   நீதித்துறை(டிஓஜே)   தொடுத்துள்ள  …

கட்சியிலிருந்து விலக பெர்சத்து இளைஞர்களுக்கு ரிம50,000?

பெர்சத்து   இளைஞர்   பிரிவினர்   அக்கட்சியிலிருந்து   விலக   பேரம்   பேசப்படுவதாக     டாக்டர்   மகாதிர்   முகம்மட்   குற்றஞ்சாட்டியுள்ளார். ரிம10,000-இலிருந்து    ரிம50,000  வரை  கொடுக்கப்படும்     என்று   கூறப்பட்டிருக்கிறதாம். “ரிம50,000   பெறுவோரிடம்   பிஎன்னுக்குத்தான்   வாக்களிக்க   வேண்டும்   என  ஆவணங்களில்  கையெழுத்தும்   வாங்கப்படுகிறது. “தேர்தலின்போது   மேலும்  பணமும்  நன்மைகள்  பலவும்  கிடைக்கும்   என   வாக்குறுதியும்   அளிக்கப்படுகிறது”, …

செகாம்புட்டைத் திரும்பவும் கைப்பற்றுவோம்: மசீச

காதுகொடுத்துக்  கேட்டல்,  ஆராய்தல்,   தீர்வு காணுதல்-  இம்  மூன்று   அணுகுமுறைகளைப்   பயன்படுத்தி     பாரிசான்   நேசனல் (பிஎன்)   எதிரணி  வசமுள்ள   செகாம்புட்   நாடாளுமன்றத்   தொகுதியைத்   திரும்ப    எடுத்துக்கொள்ளப்   போகிறதாம். அந்த  அணுகுமுறைகள்   மக்களின்   பிரச்னைகளைத்   தீர்த்து  வைக்கும்;   வாக்காளர்களின்   நம்பிக்கையைப்  பெறும்   என   செகாம்புட்    மசீச  தொகுதித்   தலைவர்    டேனியல்     …

‘வியாபாரிகளிடம் பரிவு, பயனீட்டாளர்களுக்கு எதுவும் இல்லை’

சந்தை   விலை   ஏற்ற இறக்கத்தால்   பாதிக்கப்படும்    பெட்ரோல்  நிலைய    உரிமையாளர்களுக்கு    உதவியாக    அரசாங்கம்     புதிய    விலை   நிர்ணயிப்பு  முறை  ஒன்றை   அறிமுகப்படுத்தத்   திட்டமிடுவதாக   அறிவிக்கப்பட்டிருப்பதற்குக்    கண்டனம்    தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்   விற்பனையாளர்களிடம்   பரிவு   காட்ட   வேண்டும்    என்று   உள்நாட்டு   வாணிக,   கூட்டுறவு    பயனீட்டாளர்    விவகார    அமைச்சர்    ஹம்சா   சைனுடின்    கேட்டுக்கொண்டிருப்பதைக்  …

நல்லகருப்பன்: அன்வாரே, அம்னோவுக்கு போங்கள், மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்துங்கள்

  எஸ். நல்லகருப்பன், செனட்டர், தமது முன்னாள் கூட்டாளி அன்வாருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்: அம்னோவுக்குத் திரும்பிப் போங்கள்; மலாய்காரர்களை ஒன்றுபடுத்துங்கள். அன்வாரை அம்னோவுக்கு கூட்டிக்கொண்டு போவதற்கானவற்றை அவர் செய்வாராம்.

மலேசிய அரசை கவிழ்க்கும் முயற்சி அல்ல, அமெரிக்க தூதரகம் கூறுகிறது

அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடர்ந்துள்ள 1எம்டிபி சொத்துகள் சம்பந்தப்பட்ட சிவில் வழக்கு மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல என்று கோலாலம்பூரிலுள்ள அமெரிக்க தூதரகம் கூறுகிறது. "இல்லை, இது மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல. "சொத்துகளைத் திரும்பப்பெற்று அவற்றை பாதிக்கப்பட்ட நாட்டின் மக்களிடம் திருப்பிக் கொடுப்பது இதன்…

கேமரன் மலை, பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்பு திட்டத்தைக் கைவிடுக,…

கேமரன் மலை - பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்புக்கு எதிராக அவ்வட்டார மக்கள் ஒன்றுகூடி, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இன்று காலை, சுமார் 500 பேர் கையெழுத்திட்ட     கொரிக்கை மனு ஒன்று, மலேசிய சோசலிசக் கட்சி, கேமரன் மலை கிளையின் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித் துறை…

எரிபொருள் விலை நான்காவது தடவையாக குறைகிறது

  இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் சில்லரை விலை கீழ்க்கண்டவாறு குறைகிறது. ரோன்95 மற்றும் ரோன்97 விலை ஒரு லீட்டருக்கு 7 சென் குறைகிறது. இதன்படி, ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.91 க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.17 க்கும் விற்கப்படும். டீசல் விலையில் மாற்றம் இல்லை.

ரோஸ்மாவை “பலிகடா”வாக ஆக்கியதற்காக எதிர்கட்சியினரை அம்னோ தலைவர் சாடுகிறார்

  அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபி சொத்துகள் சம்பந்தமாக தொடர்ந்துள்ள மிக அண்மைய சிவில் வழக்கில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தும் எதிர்க்கட்சியினரை ஓர் அம்னோ தொகுதி தலைவர் சாடியுள்ளார். சுயநலம் கொண்ட சில தரப்பினர் இந்த வழக்கில் ரோஸ்மாவை சம்பந்தப்படுத்துவது பற்றி…

ரிம9.5 மில்லியன் கட்டணம் மீதான அன்வாரின் வழக்கு: அரசாங்கமும் ஷாபியும்…

அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு IIஇல் அரசு தரப்பு வழக்குரைஞராக செயல்பட்ட முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம9.5 மில்லியன் பிரதமர் நஜிப் அளித்தார் என்ற குற்றச்சாட்டு வெளியானதைத் தொடர்ந்து அந்த வழக்கில் அன்வார் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு…