கிளந்தான் மற்றும் பேராக் இடையிலான காடுகளில் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது மாயமானதாகக் கூறப்பட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஆறு பேரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் இருந்த மலை வழிகாட்டிகளில் ஒருவரை காவல்துறை தொடர்பு கொண்டு பேசியதாக கெரிக் மாவட்ட காவல்துறை தலைவர் அப்துல்…
மஇகா: பணம் வந்தது நஜிப்பிடமிருந்து அல்ல, பிஎன்னிடமிருந்து
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து நேரடியாக பணம் பெற்றதாகவும் அப்பணம் கையாடப்பட்ட பொதுப்பணம் என்று கூறப்படுவதையும் மஇகா மறுத்தது. “என்னைப் பொருத்தவரை அது பிஎன் பணம்”, என்று மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். அது வழக்கமாக நடப்பதுதான் என்றும் அவர் சொன்னார். சுப்ரமனியம் இன்று சிலாங்கூர், செராசில் …
சுங்கத்துறை : ராடார் தொலையவில்லை, நெதர்லாந்தில் உள்ளது
புத்ராஜெயா - காணாமல் போன மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி, நெதர்லாந்தில் உள்ளதைச் சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது. “காணாமல் போனதாகக் கூறப்பட்ட அந்த உயர் தொழில்நுட்ப இராணுவ உபகரணம், அதன் இலக்கான நெதர்லாந்து, ரோட்டடாம் துறைமுகத்தைச் சென்றடைந்துவிட்டதால், முந்தையச் செய்திகளைச் சுங்கத்துறை மறுக்க விரும்புகிறது,” எனச் சுங்கத்துறையின் இயக்குநர்…
பெர்சே: கிளப்டோகிராசி- எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவு…
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே செப்டம்பர் மாதம் பக்கத்தான் ஹராபான் நடத்தும் பேரணியில் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. “அதன் தலைவர் மரியா சின் அப்துல்லாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது: “அரசியல் ரீதியில் அது அவசியம்தானா என்பதை ஆராய்வோம்”. மேலும் விவரித்த அவர், (பேரணியில்) முன்வைக்கப்படும் விவகாரங்கள் …
ராடார் கருவி ஒன்று ஜொகூர்பாரு துறைமுகத்தில் காணாமல் போனது
புத்ராஜெயா - நெதர்லாந்துக்குச் சொந்தமான, மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி ஒன்று, ஜொகூர் பாரு, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் காணாமல் போனது. ‘தி ஸ்டார்’ நாளிதழின் தகவல்படி, ஜொகூர் வழியாக நெதர்லாந்து செல்ல, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அக்கருவி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் (மித்தி) போக்குவரத்து…
1எம்டிபி ஊழல்: ‘ஒரு திட்டத்தோடு’ செயல்படுவோருடன் பாஸ் சேராது
1எம்டிபி ஊழல் குறித்து நிறைய பேசப்பட்டு வரும் வேளையில், அவ்விவகாரத்தை கையாள்வது எப்படி என்பது பாஸ் கட்சிக்குத் தெரியும் என்றும் அது “ஒரு திட்டத்தோடு” செயல்படும் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளாது என்றும் கூறப்பட்டுள்ளது. “பாஸ் சொந்த கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டிருக்கிறது. “பாஸுக்கு எந்தக் கட்சியுடனும் தொடர்பில்லை. உள்நோக்கத்துடன் அவர்கள் …
நெடுஞ்சாலை பேருந்து விபத்தில் இருவர் பலி
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 422.5 கிலோ மீட்டரில் விரைவுப் பேருந்து ஒன்று தடம்புரண்டது விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமுற்றார். அச்சம்பவம் காலை மணி 5க்கு நிகழ்ந்தது. அப்போது அப்பேருந்து 24 பயணிகளுடனும் இரண்டு ஓட்டுநர்களுடனும் பெர்லிஸ், கங்காரிலிருந்து ஜோகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விபத்தில் உயரிழந்த …
14 ஆவது பொதுத்தேர்தல் அக்டோபர் மற்றும் மே மாதங்களுக்கிடையில், கிட்…
அடுத்தப் பொதுத்தேர்தல் இவ்வாண்டு அக்டோபர் மற்றும் அடுத்த ஆண்டு மே ஆகியவற்றுக்கிடையிலான ஏழு மாதங்களுக்குள் நடைபெறும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சீன அதிபர் ஸீ ஜின்பிங் அக்டோபரில் வருகிறார்; முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த ஆண்டு ஜூனில்…
எரிபொருள் விலை தொடர்ந்து ஐந்தாவது முறையாக குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து, ரோன்95 மற்றும் ரோன்97 ஆகியவற்றின் விலை முறையே 2 சென் குறைகிறது. இதன்படி, ரோன்95 இன் புதிய சில்லரை விலை 1 லீட்டருக்கு ரிம1.89 ஆகவும், ரோன்97 இன் விலை 1 லீட்டருக்கு ரிம2.15 ஆகவும் இருக்கும். டீசல் விலை 4 சென் குறைந்து,…
மாடல் அழகி வைர நகைகளைக் கொடுத்திருக்க வேண்டியது ஜோ லவ்விடம்…
ஆஸ்திரேலிய மாடல் அழகி மிராண்டா கெர், வைர நகைகளை அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் அரசாங்கத்துக்குக்காக பரப்புரை செய்யும் சிறப்பு விவகாரத்துறை(ஜாசா)யைச் சேர்ந்த துன் பைசல் இஸ்மாயில் அசிஸ். ஜாசாவின் ஆலோசனை வாரிய உறுப்பினர்களில் ஒருவரான துன் பைசல், கெர் அந்நகைகளை ஜோ லவ்விடமே கொடுத்திருக்க …
கிட் சியாங்: அரசியலை மிகவும் சார்ந்துள்ள ஏஜி என்றால் அது…
அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) ஆகக் கடைசியாக தொடுத்துள்ள வழக்கை “அரசியல் நோக்கங்கொண்டது” என்று வகைப்படுத்தியுள்ள சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியை “அரசியலை மிகவும் சார்ந்துள்ள சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் சாடினார். “அமெரிக்காவோ அல்லது வேறு ஒரு நாடோ நம் …
செப்டம்பரில் ‘anti-kleptocracy’ பேரணி: எதிரணி ஏற்பாடு செய்கிறது
1எம்டிபி விவகாரம் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை மேலும் ஒரு வழக்கைத் தொடுத்துள்ள வேளையில் எதிர்க்கட்சிகள் செப்டம்பர் மாதத்தில் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிடுகின்றன. பேரணி "Sayang Malaysia, Hapuskan Kleptokrasi"(மலேசியாவை நேசிப்போம், திருட்டுத்தனத்தை அழிப்போம்) என்ற தலைப்பைக் கொண்டிருக்கும். 1எம்டிபி விவகாரத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டிருக்கும் …
போரெக்ஸ் இழப்பு பிஎன்எம்-இன் அன்னிய நாணயக் கையிருப்பைப் ‘பெரிதும் பாதித்து…
1990களில் பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட யுஎஸ்$10பில்லியன் அன்னிய செலாவணி இழப்பு அதன் இன்றைய அன்னிய செலாவணிக் கையிருப்பைப் பெரிதும் பாதித்து விட்டதென மத்திய வங்கியின் முன்னாள் உதவி கவர்னர் அப்துல் முராட் காலிட் கூறினார். அந்த யுஎஸ்$10 பில்லியனை அரசாங்கச் சேமிப்புத் திட்டங்களில் போட்டு வைத்திருந்தால் இந்த 25 …
டிஏபி எக்ஸ்கோகளுக்கு பினாங்கு பிஎன் கண்டனம்: சுரங்கத் திட்டம் குறித்து…
டிஏபி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பினாங்கில் கடலடி சுரங்கப் பாதை, மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் ஆகிய திட்டங்களுக்காக ஸெனித் கட்டுமான நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட தொகை குறித்து முரண்பாடான தகவல்களைத் தெரிவித்திருப்பதாக பினாங்கு பிஎன் சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார். அத்திட்டங்கள் தொடர்பில் செள கொன் இயோ கூறியிருப்பது அதே விவகாரம் தொடர்பில் …
பினாங்கு போலிடெக்னிக் உணவக விவகாரம்: இனவாதம் ஆக்காதீர்கள், பி.கமலநாதன் கோரிக்கை
கோலாலம்பூர்- செப்ராங் பிராய் போலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தை மூட பணித்ததன் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்த செய்தியை இனவாதம் ஆக்கவேண்டாம் என, துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் ஓர் அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார். அக்கல்லூரி இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒப்பந்த விதிகளை மீறியதால்,…
“இப்போது, எம்ஒ1-னின் மனைவி நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்”, கிட்…
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள சொத்துப் பறிமுதல் சிவில் வழக்கைத் தொடர்ந்து அமெரிக்க நடிகர் லெநார்டொ டிகாப்பிரியோ மற்றும் ஆஸ்திரேலிய மோடல் மிரண்டா கெர் ஆகியோர் டிஒஜே பட்டியலிட்டிருந்த சொத்துகளைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். இப்போது, மலேசியன் அதிகாரி1 இன் மனைவி அவ்வாறு செய்ய வேண்டும்.…
அகதிகளின் இளவரசி, எலிசபெத் அரசியின் விருது பெறுகிறார்
அகதிகளுக்கு உதவுவதற்காக தமது 18 ஆவது வயதில் ஓர் அரசுசார்பற்ற அமைப்பைத் தோற்றுவித்த ஹெய்டி குவா அவர் மலேசிய சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைக்காக பிரிட்டீஷ் அரசி எலிசபெத் II வழங்கும் இளந்தலைவர்கள் விருது பெறுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார். லண்டனுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மலேசியாகினி குவாவை…
இசாவின் நியமனத்தைத் தடுப்பீர்: அமைச்சரவைக்கு லிம் கோரிக்கை
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், தரைப் போக்குவரத்து ஆணைய(ஸ்பாட்)த்தின் இடைக்காலத் தலைவராக முகம்மட் இசா அப்துல் சமட் நியமனம் செய்யப்பட்டிருப்பதை அமைச்சரவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தவறினால் நாடாளாவிய முறையில் ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்றும் எச்சரித்தார். ஜூன் 19-இல், புத்ரா ஜெயா ஃபெல்டா …
கெர் யுஎஸ்$8.1மில்லியன் மதிப்புள்ள நகைகளை டிஒஜேயிடம் கொடுத்துவிட்டார்
1எம்டிபி சம்பந்தப்பட்ட நிதியிலிருந்து களவாடப்பட்ட பணத்திலிருந்து மலேசிய ஜோ லோ ஆஸ்திரேலிய மோடல் மிரண்டா கெர்ருக்கு கொடுத்த யுஎஸ்$8.1 மில்லியன் (ரிம35 மில்லியன்) மதிப்புள்ள நகைகளை கெர் அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) யிடம் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. "விசாரணை தொடங்கப்பட்டதிலிருந்து, கெர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததுடன் பரிசாகக்…
நீதிமன்ற வெற்றிக்குப்பின் தாவ்யிச கோவில் நிரந்தரத் தீர்வை நாடுகிறது
கோவில் உடைப்புக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து ஒரு தாவ்யிச கோவில், அதிகாரிகளுடனும் கோவிலை உடைக்கும் முயற்சியை மேற்கொண்ட நில மேம்பாட்டாளருடனும் கலந்துரையாடல் நடத்தி ஒரு நிரந்தரத் தீர்வைக் காண விரும்புகிறது. "மலேசியாவில் சமய சுதந்திரத்திற்கு இது ஒரு முக்கியமான தீர்ப்பு. "ஆனால், நாங்கள்…
பாக்சைட் தோண்டுவதற்கான தடைவிதிப்பு பொதுத் தேர்தல்வரை நீட்டிக்கப்பட்டது
பகாங்கில் இம்மாத இறுதியில் முடிவுக்கு வரவேண்டிய பாக்சைட் சுரங்கங்களுக்கான தற்காலிகத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் மந்திரி புசார் அட்னான் யாக்கூப் கூறினார். தடைவிதிப்பு நீட்டிக்கப்படுவதை யாரும் “அரசியல் விளையாட்டு” என்று எண்ணி விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர் இதை விரிவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றார்.…
எம்பி: ஃபோரெக்ஸ் பணிக்குழு தகவல் பெற சிரமப்பட்டதாகக் கூறப்படுவது அபத்தம்
கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங், மூன்று தசாப்தங்களுக்குமுன் அன்னிய செலாவணி (ஃபோரெக்ஸ்) வாணிகத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரித்த சிறப்புப் பணிக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப் பிரச்னைகளால் மத்திய வங்கியிடமிருந்து ஆதாரங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியதாக பணிக்குழு கூறியதை …
10 நாடுகள் குடியுரிமை கொடுக்க முன்வந்துள்ளனவாம்: ஜாகிர் நாய்க் கூறிக்கொள்கிறார்
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் பிரச்சாரகர் ஜாகிர் நாய்க் தமக்கு பத்து நாடுகள் குடியுரிமை வழங்க முன்வந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவற்றில் எதையும் ஏற்றுக்கொள்வது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. அவரது நாடான இந்தியாவில் பயங்கரவாதம், பணச் சலவை முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் ஜாகிர். “(இந்தியாவில்) அடிப்படையற்ற …
ஐஜிபி: 1எம்டிபி பற்றி ஏஜி ஆழமாக நோண்டிப் பார்க்கச் சொன்னார்
சட்டத்துறை அலுவலகம் (ஏஜி அலுவலகம்) 1எம்டிபி விவகாரத்தை மேலும் விசாரிக்கமாறு போலீஸைக் கேட்டுக்கொண்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறினார். "நான் இதை முன்பு சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எழுந்துள்ள சில கேள்விகள் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தும்படி ஏஜி அலுவலகம் எங்களிடம் கூறியிருந்தது.…


