நாட்டின் சவால்களை எதிர்கொள்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பகைமைகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று ஈப்போவில் நடைபெற்ற மடானி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் அனாதை இல்லங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் உள்ளிட்ட தேவையுள்ளவர்களுக்கு ஷவ்வால் பங்களிப்பாக ரிம…
அன்வார்: சாபாவில் கைப்பற்றப்பட்ட பணம் புத்ரா ஜெயாவில் ஊழல் ஆழமாக…
சாபாவில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்- ஒழிப்பு நடவடிக்கை ஊழல் எந்த அளவுக்கு புற்றுநோய் போல் ஆளும் அரசாங்கத்தில் ஊடுருவியுள்ளது என்பதைக் காண்பிக்கிறது. அவ்வளவு பெரிய தொகை சம்பந்தப்பட்ட ஊழல் உயர் தலைவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்கிறது என்று கூறப்படுவதை நம்ப முடியவில்லை என சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் எதிரணித் தலைவர் …
பினாங்கில் பெர்சே 5 தொடக்கவிழா சிகப்புச் சட்டையினர் தொல்லையின்றி நடந்தது
இன்று பினாங்கில் பெர்சே 5 தொடக்கவிழா அமைதியான முறையில் நடந்தேறியது. பெர்சே நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசாங்க- ஆதரவு சிகப்புச் சட்டை இயக்கத்தினர் எவரும் அங்கு காணப்படவில்லை. இதனால் மிகவும் திருப்தியுற்றவராகக் காணப்பட்ட முதலமைச்சர் லிம் குவான் எங், “நாங்கள் பிரச்னைகளை விரும்பவில்லை. தூய்மையான தேர்தல்கள் தேவை என்ற …
பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதாக அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் கைது
புக்கிட் அமான் சிறப்புப் படையின் பயங்கரவாத-எதிர்ப்புப் பிரிவினர் சிலாங்கூர், கிளந்தான், பேராக், கெடா, பினாங்கு, சாபா ஆகியவற்றில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 20க்கும் 38வயதுக்குமிடைப்பட்ட பலரைக் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்டோரில் ஐவர் வணிகர், நால்வர் தொழில்நுட்பர்கள், இருவர் வேலையற்றோர், ஒருவர் அரசாங்கப் பள்ளி மதியுரைஞர், ஒருவர் செயல்முறை …
மகாதிர்: பெர்சத்துவுக்குத் தலைவராகும் தகுதி முகைதினுக்கு உண்டு ஆனால், நாட்டுக்கு…….
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இரண்டு வாரங்களுக்குமுன் லண்டனில் ஒரு கூட்டத்தில் பேசியபோது நாட்டின் பிரதமராவதற்கு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவர் முகைதினிடம் எல்லாத் தகுதியும் உண்டு என்று கூறியிருந்தார். ஆனால், புதன்கிழமை புத்ரா ஜெயாவில் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் முகைதின் அடுத்த பிரதமராவாரா என்று …
சிறுபிள்ளைத்தனமான அரசியல் நாடகத்தை சிவநேசன் நிறுத்திக்கொள்ள வேண்டும்
- எஸ். அருட்செலவம், மலேசிய சோசியலிசக் கட்சி, அக்டோபர் 9, 2016. எ. சிவநேசன் நான் எதிர்க்கட்சியை மிரட்டுவதாக கூறியிருந்த அறிக்கையை ஒரு தமிழ் நாளிதழில் படித்து என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அரசியலில் இத்தனை சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வேறு எவராலும் கொடுக்க இயலாது. என்னைப் பற்றியும், நான்…
சிகப்புச் சட்டையினர் குண்டர்கள்போல் நடந்து கொள்கிறார்கள்: பெர்சே சாடல்
சாபாக் பெர்ணத்தில் மஞ்சள்-நிறச் சட்டை அணிந்திருந்த பெர்சே பங்கேற்பாளர் ஒருவரிடம் சிகப்புச் சட்டையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருப்பதை பெர்சே கண்டித்தது. “அவர்கள் அவரைக் கொன்றிருக்கக் கூடும். இப்படிப்பட்ட செயல்கள் குண்டர்தனத்தைக் காட்டுகின்றன. இவை குற்றச் செயல்கள், மோசமான வன்முறைகள்”, என பெர்சே இன்று ஓர் அறிக்கையில் சாடியது. நேற்று …
பெர்சேக்கு போலீசில் ‘சிறப்புச் சலுகை’: ஜமால் குற்றச்சாட்டு
சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், போலீசார் பெர்சே வாகன அணி பங்கேற்பாளர்களுக்கு அதிகம் சலுகை கொடுக்கிறார்கள் என்று குறைகூறியுள்ளார். “நேற்றைய நிகழ்வுகள் போலீசார் வழக்கத்துக்கு மாறாக பெர்சே 5-க்குச் சிறப்புச் சலுகை கொடுப்பதைக் காண்பிக்கின்றன. “மறுபுறம் , சிகப்புச் சட்டை இயக்கத்தினரிடம் அவர்கள் …
அம்னோ எம்பி கூறுவதைப் பார்த்தால் எம்ஏசிசி நஜிப்பையும் விசாரிக்க வேண்டும்…
சாபா அம்னோ எம்பி ரேய்மி உங்கி, சாபாவில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) முன்னாள் அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டாலையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால் மற்ற அமைச்சர்களையும், ஏன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும்கூட விசாரிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு …
குடிமக்கள் பிரகடனத்தை ஆட்சியாளர் மன்றத்துக்கு அனுப்பினார் மகாதிர்
டாக்டர் மகாதிர் முகம்மட் , ஆட்சியாளர் மன்றத்துக்கு அம்மன்றம் அக்டோபர் 11-இல் அதன் கூட்டத்தை நடத்துவதற்குமுன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி விலகக் கோரும் குடிமக்கள் பிரகடனத்தை அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் பிரதமர், பிரகடனத்துடன் செப்டம்பர் 9-இல் தாம் பேரரசரை கெடா, அலோர் ஸ்டார், இஸ்தானா அனாக் …
சபாக் பெர்ணத்தில் பெர்சே ஆதரவாளர்களை சிவப்புச் சட்டையினர் தாக்கினர்
இன்று சபாக் பெர்ணத்தில் பெர்சே டி-சட்டை அணிந்திருந்த இருவரை சிவப்புச் சட்டையினர் முட்டைகளைக் கொண்டு தாக்கினர். அந்த இரு மோட்டோர்சைக்கிள்காரர்களும் சாலையைத் தாண்டி சிவப்புச் சட்டையினர் இருந்த பகுதிக்குச் சென்ற போது தாக்கப்பட்டனர். அவ்விருவரும் முட்டைகளால் தாக்கப்பட்ட பின்னர் சிவப்புச் சட்டையினரை அணுகினர் என்று சம்பவத்தை நேரில்…
உள்குத்து வேலைகள் வேண்டாம் : பிஎன் தலைவர்களுக்கு கெராக்கான் வலியுறுத்து
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற நினைத்தால் பிஎன் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும், ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என கெராக்கான் மகளிர் தலைவர் டான் லியான் ஹோ கூறினார். “14வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற பிஎன் பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் …
லங்காட், செராஸ் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் நேற்றிரவு மூடப்பட்டன
நீர் துர்நாற்றம் காரணமாக லங்காட், செராஸ் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டன செமந்தான் ஆற்று நீரில் துர்நாற்றம் அடிப்பதாக ஐயுறப்படுவதால் நேற்றிரவு 8.30க்கும் 10 மணிக்கும் அவை மூடப்பட்டதாக சிலாங்கூர் சுற்றுலா, சுற்றுச்சூழல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வொங் கூறினார்.…
மிரட்டல்களுக்கிடையிலும் பெர்சே வாகன அணிப் பயணம் தொடரும்
பெர்சேயின் வாகன அணிகள் நவம்பர் 19இல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பேரணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயணத்தைத் தொடர்கின்றன. திட்டப்படி பெர்சேயின் ஆறு வாகன அணிகளும் இன்று காலை மணி 9க்குப் புறப்பட்டிருக்க வேண்டும், வடக்கில் கெடா, கூலிமிருந்து புறப்படும் வாகன அணி பினாங்கு ஜார்ஜ்டவுனுக்குச் செல்கிறது, ஜோகூரின் கூலாயிலிருந்து …
பெர்சே நாளை சிலாங்கூரில் நுழைந்தால் அம்னோ இளைஞர் அதை எதிர்கொள்ளும்
சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு நாளை பெர்சே சிலாங்கூரில் நுழைந்தால் அதனை எதிர்கொள்ளப் போவதாக சூளுரைத்துள்ளது. நாளை சிலாங்கூர் ராஜா மூடா முடி சூடவிருப்பதால் அதை மதிக்காமல் பெர்சே அதன் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் அது அவமதிப்பதாகும் என்று அம்னோ இளைஞர் செயற்குழு உறுப்பினர் அர்மாண்ட் அஸ்ஹா அபு…
தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பின் மீது ம.இ.கா வின் நிலை…
- டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 7, 2016. மலேசியத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள சட்டமன்ற \ நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறு சீரமைப்பைக் கவனித்தால் அது தொகுதிகளின் எல்லை சீரமைப்பா அல்ல மக்களின் ஜனநாயக உரிமைகளின் சீரழிப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.…
மலேசியா: மாரிஷியஸில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த பகுதி எம்எச்370 விமானத்துடையதுதான்
மாரிஷியஸில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் உடைந்த பகுதி ஒன்று மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தினுடையதுதான் என்று மலேசியா இன்று அறிவித்தது. அந்த போயிங் 777, 2014 மார்சில், 239 பேருடன் கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் பறந்து கொண்டிருந்தபோது காணாமல்போனது. இரண்டாண்டுகள் ஆகியும் அது விழுந்த இடத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.…
பகாங் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் அட்னானுக்கு முழு ஆதரவு
மந்திரி புசார் அட்னான் யாக்குபுக்கு முழு அதரவு தெரிவித்துக்கொண்ட பகாங்கின் 29 பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களும் அவரே மாநில அரசாங்கத்துக்குத் தொடர்ந்து தலைமை தாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அட்னானின் சேவை இன்னமும் தேவை என தோங் சட்டமன்ற உறுப்பினர் ஷகிருடின் அப் மோயின் கூறினார். குறிப்பாக 14வது …
ஜோகூர் பிஎன் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது
ஜோராக் சட்டமன்ற உறுப்பினர் ஷாருடின் சாலே அம்னோவிலிருந்து வெளியேறியதால் மாநிலச் சட்டமன்றத்தில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்திருக்கிறது. ஜோகூரில் அம்னோ மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறை என அமனா அவைத் தலைவர் அமினோல்ஹுடா ஹசான் கூறினார். ஷாருடின் பெர்சத்து கட்சியில் சேர்ந்திருப்பதாக …
அம்னோ அச்சுறுத்தல் இருப்பினும் பினாங்கு பெர்சே வாகன அணி நடத்தப்படும்
அம்னோ இளைஞர் பிரிவும் அதன் சிவப்புச் சட்டை கூட்டத்தினரும் மருட்டல்கள் விடுத்துள்ள போதிலும், பினாங்கில் பெர்சே வாகன அணி திட்டமிட்டபடி சனிக்கிழமை நடைபெறும் என்று பெர்சே சூளுரைத்துள்ளது. அம்னோ மாநில இளைஞர் பிரிவு தலைவர் ரஃபிஷால் அப்துல் ரஹிம் கடந்த சனிக்கிழை நடைபெற்ற ஒரு பேரணியில் போலீசார்…
முகைதின்: தோல்வியை நினைத்து கலங்கவில்லை
பிளவுபட்டுக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது அச்சம்தரும் ஒரு மிகப் பெரிய பணி. ஆனாலும் அப்பணியை ஏற்கச் சித்தமாகவுள்ளார் முகைதின் யாசின். அதில் தோல்வி ஏற்பட்டாலும் அதற்கும் அவர் தயார்தான். “தோல்வி அடையுமோ என்ற கவலையெல்லாம் கிடையாது. முயற்சியே செய்யாமல் இருப்பதைவிட முயன்று பார்த்து அதில் தோல்வி கிடைத்தாலும் சரிதான்”, …
அன்வார்: புதிய கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூடிப் பேச…
நிலைத்து நிற்கக்கூடிய ஒரு கூட்டணி அமைக்க எதிர்கட்சிகள் அனைத்தும், பாஸ், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து), பக்கத்தான் ஹராபான் பங்காளிக் கட்சிகள் எல்லாமே கூடிப் பேச வேண்டும் என அனாவார் இப்ராகிம் கூறினார். “சம்பந்தப்பட்ட கட்சிகள் அனைத்தும் கலந்து பேசத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் தொடக்கம்”, என்றாரவர்.…
பிலிப்பீன்சிலும் சிங்கப்பூரிலும் புதிதாக சிலருக்கு ஸிக்கா நோய் கண்டிருக்கிறது
நேற்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம், பிலிப்பீன்சில் புதிதாக மூவருக்கு ஸிக்கா நோய் கண்டிருப்பதாக அறிவித்தது. அந்நாட்டில் அவர்களையும் சேர்த்து இவ்வாண்டில் மொத்தம் 15 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய பிலிப்பீன்சின் இலோய்லோ நகரிலும் அண்டிபோலோ நகரிலும் மூன்று பெண்களுக்கு அந்நோய் கண்டிருப்பதாக பிலிப்பின் சுகாதார அமைச்சர் போலின் உபியால் தெரிவித்தார் …
பேச்சு நடத்த வேண்டுமா, டிஏபி-யை உதறிவிட்டு வாருங்கள்: எதிர்க்கட்சிகளிடம் பாஸ்…
பாஸுடன் ஒத்துழைக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் முதலில் டிஏபி-யுடன் அவற்றுக்குள்ள தொடர்புகளை அறுத்தெறிய வேண்டும் என்கிறார் பாஸ் கட்சியின் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான். “டிஏபி இன்னமும் பாஸின் இஸ்லாமிய போராட்டத்தை எதிர்க்கிறது “அதனால், டிஏபியையும் அதனுடன் ஒத்துழைக்கும் கட்சிகளையும் நிராகரிப்பதே பாஸின் நடப்புக் கொள்கையாகும்”, என்றவர் கூறியதாக ஹராகா …


