திரெங்கானுவில் திடீர் தேர்தல்?

அம்னோவைக்   குறைகூறிய   கிஜால்   சட்டமன்ற    உறுப்பினர்   அஹமட்  சைட்    கட்சிநீக்கம்   செய்யப்படும்   சாத்தியம்  இருப்பதால்   திரெங்கானுவில்    திடீர்   தேர்தல்    நடக்கலாம். திரெங்கானு   சட்டமன்றத்தில்    பிஎன்னுக்கு   17  இடங்கள்.    பாஸ்   கட்சிக்கு  14.  பிகேஆருக்கு    ஒரே ஒர்    இடம். அஹமட்  சைட்   கட்சியிலிருந்து   நீக்கப்பட்டு    அவர்   எதிரணியில்   சேர்ந்து   கொண்டால்  …

என்எஸ்சி சட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை

தேசிய  பாதுகாப்பு  மன்ற(என்எஸ்சி)ச்  சட்டம்    நாடாளுமன்றத்தின்   கண்காணிப்புக்கு  உள்பட்டது    என்று    கூறப்படுவதில்   உண்மையில்லை    என்கிறார்    சுதந்திரத்துக்கான   வழக்குரைஞர்   அமைப்பின்   செயல்முறை  இயக்குனர்    எரிக்   பால்சன். “அதிகாரம்  பிரதமருக்குத்தான்.   பிரகடனம்  செய்யப்பட்ட  பிறகு  அது     நாடாளுமன்றத்துக்குத்   தெரியப்படுத்தப்படுகிறது. “எனவே,  நாடாளுமன்றத்துக்குக்  கண்காணிக்கும்   அதிகாரம்   இருக்கிறது  என்றோ  பாதுகாப்புப்  பகுதியாக    பிரகடனம்  …

குரங்குக் கூட்டம் அஞ்சல்காரரைத் தாக்கி இராணுவ இரகசியங்களைத் திருடிச் சென்றது

மலாக்கா    இராணுவ  முகாமுக்குள்   புகுந்த   குரங்குக்  கூட்டம்  ஒன்று      இராணுவத்தின்    இரகசிய    ஆவணங்கள்  சிலவற்றைத்   திருடிச்  சென்றதாம். திரெண்டாக்   முகாமில்   அஞ்சல்காரர்   ஒருவர்   கடிதங்களைப்   பட்டுவாடா   செய்து    கொண்டிருந்தபோது    அவரைத்   தாக்கிய    குரங்குக்   கூட்டம்  அவரிடமிருந்த   மூன்று   இரகசிய    ஆவணங்களைப்  பறித்துச்  சென்றதாக     த   ஸ்டார்    அறிவித்துள்ளது. சில …

நம்வீ அவரது புதிய காணொளி தொடர்பில் கைது செய்யப்படுவார்

நம்வீ  என்ற  பெயரில்   பிரபலமாக   விளங்கும்   சர்ச்சைக்குரிய  ரேப்   இசைக்கலைஞரான   வீ   மெங்  சீ   வெளிநாட்டிலிருந்து   நாடு   திரும்பியதும்  கைது   செய்யப்படுவார். நம்வீ      ஆகக்  கடைசியாக   வெளியிட்டிருக்கும்   காணொளியில்   இஸ்லாத்தையும்    மற்ற   சமயங்களையும்   இழிவுபடுத்தியிருப்பதால்    அது    குறித்து   விசாரிக்க    அவர்  கைது   செய்யப்படுவார்  என   பினாங்கு   வடகிழக்கு   போலீஸ்  …

அன்வார்: என்எஸ்சி செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும்

முன்னாள்     எதிரணித்    தலைவர்     அன்வார்   இப்ராகிம்,   நேற்று  அமலுக்கு    வந்த    தேசிய   பாதுகாப்பு   மன்ற(என்எஸ்சி)    சட்டம்      சட்டவிரோதமானது   என்று     அறிவிக்கக்   கோரி    மனு  தாக்கல்  செய்துள்ளார். அந்தச்   சட்டம்   அளிக்கும்   அதிகாரத்தை   என்எஸ்சி   பயன்படுத்தாமல்   தடுக்க   நீதிமன்றத்   தடையுத்தரவைப்  பெறும்   முயற்சியிலும்   அவர்  இறங்கியுள்ளார். மனு   தாக்கல்    செய்ய   …

‘ஐஎஸ் மிரட்டல்’ கடிதத்தில் நஜிப், ஜாஹிட் படங்கள்

நெகிரி   செம்பிலான்   போலீஸ்   நிலையத்துக்கு   வந்த    "IS Ancaman"(ஐஎஸ்  மிரட்டல்)   என்று  எழுதப்பட்டிருந்த   ஒரு  கடிதத்தில்    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்,   துணைப்   பிரதமர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடி    ஆகியோரின்   படங்கள்   இருந்ததாக   ஒரு  நாளேடு   கூறுகிறது. இரண்டு  பக்கங்கள்  கொண்ட   அக்கடிதம்   நீலாய்   போலீஸ்   தலைவருக்கு   அனுப்பப்பட்டிருந்தது. …

சாலே சமூக வலைத்தளங்களில் கருத்துவேறுபாடுகளை வரவேற்கிறார்

சமூக   வலைத்தளங்களில்   கருத்துவேறுபாடுகளைப்  பகிர்ந்து கொள்ளலாம்  ஆனால்,  அது  வெறுப்பைத்   தூண்டுவதாக   இருக்கக்  கூடாது  என்கிறார்    தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்    சைட்    சாலே   கெருவாக் . தொடர்பு,  பல்லூடக    அமைச்சராகி   நாளை  ஓராண்டு  நிறைவுபெறும்    வேளையில்  சாலே      பெர்னாமாவுக்கு    அளித்த   நேர்காணலில்     அவ்வாறு  கூறினார். “நாட்டுப்பற்று,    ஒற்றுமை,    நல்லிணக்கம்…

1எம்டிபிக்கு உதவுவதற்காக இரயில் திட்டச் செலவுத் தொகை உயர்த்தப்படவில்லை: சீன…

சீனாவின்  தொடர்புத்துறை   கட்டமைப்பு   நிறுவனம்(சிசிசிசி),   மலேசிய   அரசாங்கம்   1எம்டிபி  கடனைக்  கட்டுவதற்கு    உதவியாக  கிழக்குக்  கரை  இரயில்   திட்ட(இசிஆர்பி)த்தின்   செலவுத்   தொகையை  உயர்த்தத்   திட்டமிடப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவதை   மறுத்தது. “ அப்படிக்   கூறப்படுவது   குறித்து   எங்களுக்கு   எதுவும்  தெரியாது”  என  சிசிசிசி   தெரிவித்ததாக  ஆஸ்திரேலியன்  என்னும்    நாளேடு   அறிவித்துள்ளது. ஏற்கனவே  …

குறைகூறாமல் எங்கள் உரிமைக்குக் குரல் கொடுங்கள்’, சுஹாகாமுக்கு பெர்சே அறிவுறுத்து

  மனித   உரிமை   ஆணைய(சுஹாகாம்)த்தின்  புதிய   தலைவர்   ரசாலி  இஸ்மாயில்    பெர்சே   குறித்து   தெரிவித்துள்ள  கருத்துகள்   ஏமாற்றமளிப்பதாக    தேர்தல்  சீரமைப்புக்காக  போராடும்   அவ்வமைப்பு  கூறுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக்  கேலி    செய்வதையும்   பெர்சே  தெரு   ஆர்ப்பாட்டங்களில்   ஈடுபடக்   கூடாது   என்று    வலியுறுத்துவதையும்    விடுத்து,   சுஹாகாம்    ஆர்ப்பாட்டக்காரர்களைப்   பாராட்டி   இருக்க   வேண்டும்,    அமைதிப்  …

கோலாலும்பூரில் ‘மலேசிய முதல்நிலை அதிகாரியைக் கைது செய்’ பேரணி

ஆகஸ்ட்  27-இல்,    ஒரு   பேரணி    நடத்தி   ‘Tangkap Malaysian Official 1 (மலேசிய   முதல்நிலை  அதிகாரியைக்  கைது   செய்)’    இயக்கத்தைத்     தொடக்கிவைக்கப்    போவதாக    இளைஞர்   அமைப்புகளையும்    மாணவர்   அமைப்புகளையும்  கொண்ட   கூட்டமைப்பு   இன்று   அறிவித்தது. கோலாலும்பூரில்   உணவகம்   ஒன்றில்    நடைபெற்ற   அவ்வமைப்பின்   செய்தியாளர்   கூட்டத்தில்   பேசிய     அதன்   பேச்சாளர்  …

எம்பி: டான்ஸ்ரீ மூவர் பொய்யான தகவல் கொடுத்ததை நிரூபிப்பது எப்படி?

1எம்டிபி   குறித்து     டான்ஸ்ரீ  மூவரும்       பொய்யான   தகவல்   கொடுத்தார்கள்  என்பது    அம்னோ    இளைஞர்   துணைத்   தலைவர்    கைருல்    அஸ்வான்   ஹருனுக்கு  எப்படித்   தெரியும்  என்று   வினவுகிறார்   கோலா    திரெங்கானு   எம்பி   ராஜா   கமருல்   பஹ்ரின்    ராஜா   அஹ்மட்   ஷா.  1எம்டிபி  மீதான   தலைமைக்  கணக்காய்வாளரின்   அறிக்கைதான்    அதிகாரத்துவ   இரகசியச்  …

டீசல் விவிலை உயர்கிறது

    இன்று நள்ளிரவிலிருந்து டீசல் விலை 1 லீட்டருக்கு 10 சென் உயர்த்தப்பட்டு ரிம1.70 விற்கப்படும். ரோன்95 மற்றும் ரோன்97 விலையில் மாற்றம் ஏதும் இல்லை. அவற்றின் விலை தலா ரிம1.75 மற்றும் ரிம2.10 ஆக தொடரும்.

ஊழல் ஹராமானது, நாட்டையே அழித்துவிடும் – மகாதிர்

தம்  முன்னாள்  கட்சியான   அம்னோவுக்கு  எதிராக   தொடர்ந்து  தாக்குதல்    தொடுத்துவரும்    முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,    மக்கள்   ஊழலை  நிராகரிக்க    வேண்டும்  என்று   கேட்டுக்கொண்டிருக்கிறார். அம்னோ    அதன்   தலைவர்   நஜிப்   ரசாக்   நீதிமன்றத்தில்   நிறுத்தப்படுவதைத்   தடுக்கப்    போராடி  வருகிறது    என்றாரவர். “அதுதான்  இப்போது  அம்னோவின்  போராட்டமாகும்.  அதனால்தான் …

அமைச்சர்: அம்னோவை ஒழிக்கவே மகாதிர் புதுக் கட்சி அமைக்கிறார்

முன்னாள்   பிரதமர்   மகாதிர்   முகம்மட்    புதிய  கட்சி   அமைக்க    முனைந்திருப்பது    அம்னோவுக்கும்  பிஎன்னுக்கும்  விடுக்கப்பட்டுள்ள  ஒரு  சவாலாகும்   என்கிறார்   தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்  சாலே   சைட்  கெருவாக். மகாதிரின்    முயற்சியை    வரவேற்ற    அவர்,   போட்டி   நல்லதுதான்,  அது   மேலும்  கடுமையாக  உழைக்க    அம்னோவையும்  பிஎன்னையும்   உசுப்பி  விடும்  என்றார்.…

பினாங்கில் திடீர் தேர்தல் இல்லை

பினாங்கில்    திடீர்   தேர்தல்   நடத்தும்    திட்டத்தை   டிஏபி  கைவிட்டிருப்பதாக    முதல்   அமைச்சர்   லிம்  குவான்   எங்  அறிவித்தார். “அத்திட்டத்துக்கு   பிகேஆர்  ஒத்துக்கொள்ளவில்லை,   அதுதான்  காரணம்”,  என்று  லிம்   இன்று   செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார். அத்திட்டத்துக்கு  பிகேஆரில்   ஆதரவு  இல்லை      என்பதை   அதன்   துணைத்  தலைவரும்   சிலாங்கூர்   மந்திரி   புசாருமான  …

குடிநுழைவுத் துறையைத் துப்புரவுபடுத்த ஆர்சிஐ தேவை: புதிய தலைவருக்கு அறிவுறுத்து

குடிநுழைவுத் துறை   நெருக்கடியில்    சிக்கிக்   கொண்டிருக்கிறது   என்று  குறிப்பிட்ட    புக்கிட்  மெர்தாஜாம்  எம்பி   ஸ்டீபன்  சிம்,   அத்துறையின்      புதிய  தலைமை  இயக்குனர்  முஸ்தபார்  அலி    அதனைத்   துப்புரவுபடுத்த    அரச   விசாரணை  ஆணையம்     தேவை  என்ற  கோரிக்கையை   ஏற்று   அதற்கு  ஆதரவாக   நடந்து  கொள்ள  வேண்டும்  எனக்   கேட்டுக்கொண்டார். அத்துறையில்    …

1எம்டிபி-இன் பெயர் டிஓஜே அறிக்கை முழுக்கக் காணப்படுகிறது

1எம்டிபிக்கும்   அமெரிக்க   நீதித்துறை (டிஓஜே)  வழக்குக்கும்    சம்பந்தமில்லை   என்ற  பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கின்   கூற்று     “அதிர்ச்சி   அளிக்கிறது”  என்று   கூறிய   டிஏபி,  அந்த   நிதி  நிறுவனத்தின்  பெயர்   நீதிமன்ற   ஆவணம்  முழுக்க     விரவிக்  கிடப்பதாக    தெரிவித்தது. “உண்மையைச்  சொல்லப்போனால்   1எம்டிபி   இன்றி   அந்த   136-பக்க    வழக்குக்கு  அடிப்படையே  …

1எம்டிபி மீதான பிகேஆர் விளக்கக் கூட்டங்களில் முகைதின்

1எம்டிபி   ஊழலை   எளிய  மொழியில்   பொதுமக்களுக்கு  எடுத்துரைக்க   பிகேஆர்   நாடு   முழுக்க   ஏற்பாடு    செய்யும்  விளக்கக்   கூட்டத்தொடரில்   முன்னாள்   துணைப்   பிரதமர்  முகைதின்   யாசினும்  கலந்து  கொள்வார். பிகேஆர்   தலைவர்    டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயிலுடன்   ஒரே  மேடையில்    காட்சியளித்த    முகைதின்,      நகர்புறங்களிலும்  புறநகர்   பகுதிகளிலும்    கவனம்   …

கேஜே: ‘டான்ஸ்ரீ மூவர்’மீதான போலீஸ் புகாருக்கும் அம்னோ இளைஞர் பகுதிக்கும்…

அம்னோ  இளைஞர்  பகுதி    துணைத்   தலைவர்   கைருல்   அஸ்வான்   ஹருன்   பிரதமரைக்  கவிழ்க்கும்   முயற்சி   என்று   கூறிக்கொண்டு   அதன்  தொடர்பில்   செய்த   போலீஸ்   புகாருக்கும்    கட்சிக்கும்   சம்பந்தமில்லை  என்று  அம்னோ   இளைஞர்    தலைவர்    கைரி   ஜமாலுடின்   கூறினார். அது   கைருல்   அஸ்வான்    தனிப்பட்ட    முறையில்  செய்த   போலீஸ்   புகார்    …

உளநோய் உள்ளவர்களுக்கு போக்கமோன் கோ விளையாட்டு உதவும்

இணையத்தில்   பிரபலமாக     விளங்கும்   போக்கமோன் கோ  விளையாட்டு உளநோய்    உள்ளவர்களுக்கு  அருமருந்தாக   அமையும்   என்கிறார்  உளநோய்  வல்லுனர்  ஒருவர். “மனக் கலக்கம்,  மனச் சோர்வு   முதலிய   மனநிலைகளைக்  குணப்படுத்த    இது   உதவுகிறது”,  என  கோலாலும்பூர்  அனைத்துலக  உளநோய்  மையத்தின்  தலைமை  உளநோய்   ஆலோசகர்  டாக்டர்  எட்வர்ட்  சான்   கூறினார்.…

எம்பி: கிளந்தான் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதா? அம்னோவின்…

கிளந்தானில்    திடீர்   தேர்தல்   நடத்தப்பட  வேண்டும்   என்ற   அம்னோவின்  கோரிக்கையை   மறுதலித்த   கிளந்தான்   மந்திரி   புசார்   அஹமட்  யாக்கூப்,   மாநில   அரசு  பிரச்னை   எதனையும்   எதிர்நோக்கவில்லை  என்றார். “திடீர்    தேர்தல்    நடத்தும்   அளவுக்கு   பாஸ்   மாநில   அரசு   மக்களின்   நம்பிக்கையை   இழந்து  விட்டது   என்பதற்கு   ஆதாரமில்லை.  வேண்டுமானால்   மற்ற  …

எம்ஏசிசி அதிகாரிகளிடம் வெறுப்பு காட்டப்படுகிறதே என பெர்சே தலைவர் வேதனை

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையத்திலிருந்து   இடமாற்றம்   செய்யப்படும்   உயர்  அதிகாரிகளுக்கு   வாழ்த்துகளைத்   தெரிவித்துக்  கொண்ட   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லா,    சில   தரப்புகளுக்கு   அவர்களின்   முயற்சிகள்   பிடிக்கவில்லை   என்பதை   அறிந்து   அதிர்ச்சி  அடைவதாகக்  குறிப்பிட்டார். “எம்ஏசிசி   அதிகாரிகள்  அர்ப்பணிப்புடன்   பணியாற்றுபவர்கள்,    ஊழலை  எதிர்க்கும்   கடப்பாடு    கொண்டவர்கள்.  அவர்களின்   முயற்சிகள் …

அபு காசிம்: ‘சதி’ புகார் குறித்து பேசாதீர் என்று வழக்குரைஞர்…

  மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அபு காசிம் முகமட் பிரதமர் நஜிப் ரசாக்கையும் மலேசிய அரசாங்கத்தையும் வீழ்த்துவதற்காக உயர்மட்ட அளவில் சதி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக எந்த ஓர் எதிர்வினையும் ஆற்றமாட்டார். "நான் எனது வழக்குரைஞனருடன் ஆலோசனை நடத்தினேன். அவர் என்னை பேசாமல்…