தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இஸ்ரேலிய நபர் தொடர்பான வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பத்து நபர்கள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகமட் இசா கூறுகையில், மூன்று வெளிநாட்டவர்கள்…
சிங்கப்பூர்: தண்ணீர் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யும் உரிமை மலேசியாவுக்கு இல்லை
சிங்கப்பூரும் மலேசியாவும் செய்துகொண்ட தண்ணீர் ஒப்பந்தத்தின்படி 1987-இல் தண்ணீர் கட்டணத்தை மலேசியா மறுபரிசீலனை செய்திருக்கலாம் ஆனால், அப்படிச் செய்யவில்லை. அதனால், கட்டணத்தை மறுபரிசீலனை செய்யும் உரிமையை அது இழந்து விட்டது என்கிறார் சிங்கை வெளியுறவு அமைச்சர் கே.சண்முகம். “மலேசியா தண்ணீர் கட்டணத்தைத் திருத்தி அமைக்கும் உரிமையை இழந்துவிட்டது என்பதே …
துணை அமைச்சர்: மாணவர்கள் இல்லை; தமிழ்ப்பள்ளியும் இல்லை
பினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கக் கோரிக்கை விடுக்கும் மாநில அரசு முதலில், அங்கு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்வதற்கு உதவ வேண்டும் எனக் கல்வி துணை அமைச்சர் II, பி.கமலநாதன் வலியுறுத்துகிறார். பினாங்கு அரசும் சில என்ஜிஓ-களும், தமிழ் இடைநிலைப் பள்ளிக்குக் கோரிக்கை விடுத்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது …
பிரதமர்: செல்வாக்கு குறைந்தால் குறையட்டும், நாடு நன்றாக இருக்க வேண்டும்
உதவித்தொகை குறைப்பு, புதிய வரிகளின் அறிமுகம் போன்றவற்றால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்குக் கடுமையாக சரிந்திருந்தாலும் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. “நாட்டின் நீண்டகால நன்மைக்காக என் குறுகியகால செல்வாக்கை விட்டுக்கொடுக்க தயார்”, என்கிறார் அவர். அப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்காதிருந்தால் மலேசியாவின் இறையாண்மைக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றாரவர்.…
ஐயையோ! தாய்க் கட்சி மஇகாவின் கதி என்னவாகும்?
- மு. குலசேகரன், மார்ச் 6, 2014. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் இந்திய கட்சிகளை தேசிய முன்னணியில் சேர்க்கலாம் என்று பாரிசான் மேலிடம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளி வந்துள்ளது. இது எந்த வகையில் தேசிய முன்னணியை பலப்படுத்தப் போகிறது என்பது…
நிஜார் வழக்கு: நீதிபதியின் நேர்மைக்கு டிவி3 சவால் விடுகிறது
சமீபத்தில் பேராக் மாநில முன்னாள் மந்திரி புசாரும் பாஸ் கட்சி மேல்மட்ட குழு உறுப்பினருமான முகமட் நிஜார் ஜமாலுடினுக்கு சாதகமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரும் மனு ஒன்றை டிவி3 இன்று தாக்கல் செய்துள்ளது. இன்று காலையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவை…
இந்தியர் விவகார வாரியத்தை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சி ஏன்? வேதா…
இந்தியர் விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவை மீண்டும் உயிர்ப்பிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பும் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, அது, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு இந்தியர் ஆதரவை மீட்டுத்தரும் முயற்சியா என்றும் வினவுகிறார். ஆனால், அது நடக்காது. ஏனென்றால் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தை இலக்காகக் …
பெற்றோர் சீபோர்ட் பள்ளி விவகாரத்தை காஜாங் கொண்டுசெல்வர்
கூட்டரசு அரசாங்கமும் சிலாங்கூர் அரசும் எதுவும் செய்யாமலிருப்பதால் அதிருப்தி அடைந்துள்ள சீபோர்ட் பள்ளியைக் காப்போம் அமைப்பு அவ்விவகாரத்தை காஜாங் இடைத் தேர்தலுக்குக் கொண்டுசெல்ல தீர்மானித்துள்ளது. இடைத் தேர்தலுக்கான பரப்புரை நடக்கும் காலத்தில் காஜாங் வேட்பாளரான பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் இடமாற்றம் செய்யப்பட்ட அப்பள்ளி தொடர்பில் ஒரு …
அன்வார் குற்றவாளி என முடிவானால் காஜாங்கில் போட்டியிட முடியாமல் போகலாம்
இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டில் அரசுதரப்பு வெற்றிபெற்றால் அன்வார் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும் சாத்தியம் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார் பாயான் பாரு பிகேஆர் எம்பியான சிம் ட்ஸே ட்ஸின். முறையீட்டு நீதிமன்றம் இன்றும் நாளையும் …
யோங் பெங் தமிழ்ப்பள்ளி இடமாற்றம்: மஇகா மக்களை ஏமாற்றுகிறது
-முனைவர் எஸ். இராமகிருஷ்ணன், முன்னாள் செனட்டர், பெப்ரவரி 6, 2014. தோட்டங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளை அருகிலுள்ள நகர்களுக்கு இடமாற்றம் செய்வது சுலபமான செயலாகவே இல்லை. அதிகாரத்திலுள்ளவர்கள் இழுபறி செய்வதோடு இடமாற்றம் செய்வதில் ஈடுபாடு கொண்டிருப்பதில்லை. மஇகா, "தமிழ்ப்பள்ளிகளின் பாதுகாவலர்" , தமிழ்ப்பள்ளிகளை அதன் பிடியிலிருந்து நழுவ அனுமதிப்பதே இல்லை. பகுதி…
நீதிமன்றத்துக்கு வெளியில் பரபரப்பு
இன்று புத்ரா ஜெயாவில், நீதி மாளிகைக்கு வெளியில் போலீசார், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்கள் அங்கு ஒன்றுதிரள்வதைத் தடுத்தபோது பரபரப்பு ஏற்ப்பட்டது. இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுதரப்பு செய்த மேல்முறையீடுமீதான விசாரணை நடக்கும் நிதிமன்ற வளாகத்துக்குள், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரின் ஆதரவாளர் …
பாலிங்கான் இடைத் தேர்தல் மார்ச் 29-இல்
முன்னாள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட் காலி செய்த பாலிங்கான் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் மார்ச் 29-இல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காஜாங் இடைத் தேர்தல் முடிந்த ஒரு வாரத்தில் அந்தத் தேர்தல் நடைபெறும். சரவாக் ஆளுனர் பதவி ஏற்பதற்காக அப்துல் தாயிப், அத்தொகுதியை பிப்ரவரி …
சொய் லெக்: ‘கறை படிந்த’ அன்வாரின் கதை முடிப்பார் சியு
மசீச வேட்பாளர் சியு மெய் பன், “களங்கமில்லா ஸ்படிகம்”. அவர், “கறை படிந்த” அன்வார் இப்ராகிமை காஜாங் தேர்தலில் கபளீகரம் செய்வார். காஜாங் இடைத் தேர்தலில் சியுவின் வாய்ப்புப் பற்றி வினவியதற்கு முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இவ்வாறு சொன்னார். “குத்தலாகக் கூறவில்லை; உண்மையைத்தான் …
அன்வார் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடுமீதான விசாரணை தொடங்கியது
இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுதரப்பு செய்த மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வருகிறது. அதன் விசாரணைக்காக முறையீட்டு நீதிமன்றம்-இன்றும் நாளையுமாக- இரண்டு நாள்களை ஒதுக்கியுள்ளது. மேல்முறையீடு மீதான விசாரணைக்கு மூத்த வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா தலைமை தாங்க அனுமதிக்கக்கூடாது என்று அன்வார் …
தண்ணீர் கட்டணம் உயராது: காலிட்
சிலாங்கூரில் நீர்விநியோகத் தொழில் திருத்தி அமைக்கப்படுவதால் தண்ணீர் கட்டணம் உயரலாம் என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி விடுத்துள்ள எச்சரிக்கையை சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் தள்ளுபடி செய்தார். ரபிஸியின் எச்சரிக்கை பற்றி செய்தியாளர்கள் வின்வியதற்கு சுருக்கமாக “இல்லை” என்றவர் பதிலளித்தார். நீர் விநியோக …
மக்களைப் பாதுகாக்கவே மருத்துவக் கட்டண உயர்வு: அமைச்சர்
சுகாதார அமைச்சு, மக்கள் நலன் கருதியே கடந்த டிசம்பரில் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் உயர்வை அரசிதழில் பதிவு செய்தது என்கிறார் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். “அதில் இரகசியம் ஏதுமில்லை”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மலேசிய மருத்துவ சங்கம் இன்னும் கூடுதலான மருத்துவக் கட்டணத்துக்குக் கோரிக்கை விடுத்தது.…
நீர் விநியோகம் மீதான எம்ஓயு: ஒரு வாரத்தில் வெளியிடப்படும்
சிலாங்கூர் அரசு, சர்ச்சைக்குரிய நீர் விநியோகத்தைச் சீரமைக்க கடந்த வாரம் மத்திய அரசுடன் கையொப்பமிட்ட புரிந்துணர்வுக் குறிப்பின் உள்ளடக்கத்தை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடும். இன்று புத்ரா ஜெயாவில், எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், மற்றும் நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலியையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் சந்தித்த பின்னர் …
எம்எம்ஏ: 12 ஆண்டுகளாக மருத்துவக் கட்டணம் உயர்த்தப்படவில்லை
தனியார் மருத்துவக் கட்டணங்கள் திருத்தப்பட்டதற்கு ஒரு பக்கத்தில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கும்வேளையில் மறுபக்கம் மலேசிய மருத்துவச் சங்கம், நீண்டகாலத்துக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் 12 ஆண்டுகளாக மருத்துவக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது. “ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அதைப் பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், அது …
புகைமூட்டம் கலைகிறது
புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருகிறது. இன்று காலை 7மணிக்கு எந்த இடத்திலும் காற்றின் தூய்மைக்கேட்டு அளவு (ஏபிஐ) சுகாதாரத்துக்குக் கேடு செய்யும் அளவுக்கு இல்லை. 28 இடங்களில் ஏபிஐ மிதமான அளவில் இருந்ததாகவும் 23 இடங்களில் ஏபிஐ நல்ல நிலையில் இருந்ததாகவும் சுற்றுச்சூழல் துறை இணையத்தளம் …
மருத்துவக் கட்டணம் உயர்ந்திருக்கிறது…..சேவை மேம்பட்டுள்ளதா?
சேவைகளின் தரம் உயர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தனியார் மருத்துவக் கட்டணத்தை உயர்த்தி இருக்கக்கூடாது என்று மலேசிய பயனீட்டாளர் சங்கக் கூட்டமைப்பு (போம்கா) கூறுகிறது. 2011-இல், போம்கா மருத்துவக் கவனிப்புப் பற்றி 882 புகார்களைப் பெற்றதாகக் கூறிய அதன் உதவித் தலைவர் ரத்னா தேவி நடராஜன், அவற்றில் பெரும்பகுதி தனியார்துறை …
சுஹாகாம்: போலீஸ் பிஏஏ-யைச் சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும்
போலீசார் 2012 அமைதிப்பேரணிச் சட்டத்தை (பிஏஏ) அமல்படுத்துவதில் “சிந்தனைப் போக்கை மாற்றிக்கொண்டு” அமைதியாக ஒன்றுகூட மக்களுக்குள்ள அரசமைப்பு உரிமையை மதிக்க வேண்டும். நேற்றிரவு, போலீஸ் சீரமைப்புமீதான கருத்தரங்கில் பேசிய மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) துணைத் தலைவர் காவ் லேக் டீ இவ்வாறு கூறினார். “ஒரு பேரணி நடந்தால்…
அல்லாஹ் வழக்கு: தேவாலய மனு மீது இன்று பெடரல் நீதிமன்ற…
த ஹெரால்ட் வார இதழுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரி தேவாலயம் செய்துள்ள மனுவை இன்று பெடரல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. புத்ராஜெயாவில் இன்று காலையிலிருந்து பெடரல் நீதிமன்றத்தின் முன்பு இவ்வழக்கின் ஆதரவாளர்களும்…
பேராக் எம்பி நிறுவனம் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப்…
பேராக் மந்திரி புசார் இன்கோபொரேடட், ரிம6 பில்லியன் செலவில் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள ஒரு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளது.. அதன் தலைமை செயல் அதிகாரி அமினுடின் ஹஷிம், கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி மூன்று தடவை இடத்தைக் காலிபண்ணச் …
அஸ்மின்: ஓஎஸ்ஏ-யைக் காரணம்காட்டி நீர்நிர்வாக ஒந்தத்தை மறைக்காதீர்
மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் அதிகாரப்பூர்வ இரகசிய சட்ட(ஓஎஸ்ஏ)த்தின் பின்னால் பதுங்கிக் கொண்டு இரகசிய ஒப்பந்தங்களைச் செய்யக்கூடாது என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார். நீர்நிர்வாக ஒப்பந்தம் பற்றி மாநில மந்திரி புசார் கட்சிக்கும் சிலாங்கூர் மக்களுக்கும் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றாரவர்.…