மர்தியா ஜொஹாரி கூறுகையில், 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு DAP மற்றும் PH கட்சிகளுக்கு UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது, இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்றார். PAS பிரதிநிதி மர்தியா ஜோஹாரி கூறுகையில், UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது மௌனம் காத்த DAP, தற்போது விடுத்துள்ள அழைப்பு…
போட்டியிடும் திறன் குறைந்ததற்கு காரணம் 1எம்டிபி; மலேசியர்கள் அல்ல
உலகளவில் மலேசியாவின் போட்டியிடும் திறன் ஏழு இடங்களுக்கு இறக்கம் கண்டிருப்பதற்கு 1எம்டிபிதான் காரணமே தவிர கூட்டரசு அமைச்சர் ஒங் கா சுவான் கூறிக்கொண்டிருப்பதுபோல் பொதுமக்களின் குறைகூறல் காரணமல்ல என பாண்டான் எம்பி ரபிசி ரம்லி கூறினார். உலகப் பொருளாதார அரங்கின்(WEF) 138 நாடுகளை உள்ளடக்கிய அனைத்துலக போட்டியிடும் திறன் …
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்; மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம்…
ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய "நல்லாட்சி" அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.…
கோயில் சிலைகளைச் சேதப்படுத்திய மருத்துவர் எதிர்வாதம் செய்ய பணிக்கப்பட்டார்
ஈப்போ செசன்ஸ் நீதிமன்றம், ஶ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயச் சிலைகளை உடைத்துச் சேதப்படுத்தியதாகவும் கையில் தாக்குதல் ஆயுதமொன்றை ஏந்தியிருந்ததாகவும் குற்றஞ்சாட்ட 29வயது மருத்துவரை எதிர்வாதம் செய்யும்படி உத்தரவிட்டது. டாக்டர் ஃபாத்தி முன்ஷிர் நட்ஸ்ரிக்கு எதிராகக் குற்றம் சுமத்த தேவையான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி இக்மால் ஹிஷாம் முகம்மட் தாஜுடின் கூறினார்.…
போலீஸ் காவலில் இறந்தவர் உடல் இரண்டாவது பிணப் பரிசோதனைக்காக எச்கேஎல்…
இரண்டு வாரங்களுக்கு முன் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்த அஸ்ரி முகம்மட்டின் உடல் இரண்டாவது பிணப் பரிசோதனைக்காக இன்று கோத்தா பாருவிலிருந்து கோலாலும்பூர் மருத்துவமனை(எச்கேஎல்)க்குக் கொண்டு வரப்பட்டது. முதலாவது பரிசோதனையில் திருப்தி இல்லை என்று அஸ்ரியின் சகோதரி நோர்ஸியாஸ்மீரா முகம்மட் கோத்தா பாரு உயர் நீதிமன்றத்தில் மனு செய்து …
மலாய்க்காரரிடையே பிளவு அடுத்த தேர்தலில் டிஏபி-க்கு வாய்ப்பாக அமையுமா?
மலாய்க்காரர்கள் அரசியலில் பிளவுபட்டிருப்பது டிஏபி அரசியல் அரங்கில் கொடிகட்டி பறக்க வழிகோலும் என்று கூறப்படுவது குறித்துக் கருத்துரைத்த அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, இப்போது ஐந்து மலாய் அரசியல் கட்சிகள் இருப்பது அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறினார். “இப்படிப்பட்ட நிலைமையில் அடுத்த பொதுத் தேர்தலில் ஆதிக்கம் …
ஜெட் இயந்திரக் களவு, பணச்சலவை குற்றச்சாட்டுகளிலிருந்து இருவர் விடுதலை
அரச மலேசிய ஆகாயப் படையின் சார்ஜெண்ட் ஒருவரையும் ஒரு வணிகரையும் ஆகாயப் படையின் ஜெட் விமான இயந்திரங்கள் களவிலும் பணச் சலவை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து புத்ரா ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது. என். தர்மேந்திரன், கே. இராஜேந்திரன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு …
ஜாஹிட்: வறுமையில் வாடும் எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கம்…
துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, வறுமைப் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள முன்னாள் தேர்ந்தெடுப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் கண்டிப்பாக உதவும் என்று உறுதி கூறினார். ரிம3,000-மும் அதற்குக் குறைவாகவும் பணி ஓய்வூதியம் பெறும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மன்ற (முபாராக்) உறுப்பினர்களுக்கு உதவி தேவை என்று அதன் தலைவர் …
‘இசி வாக்காளர் பதிவைத் தடுக்க முயல்கிறதா?’
தேர்தல் ஆணையம்(இசி) பல கட்டுப்பாடுகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்துவதன்வழி வாக்காளர் பதிவு நடவடிக்கைக்குக் குழி பறிக்கப் பார்க்கிறது என சிலாங்கூர் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. அக்டோபர் 3-க்குப் பிறகு சிலாங்கூர் டிஏபி-இன் வாக்காளர் பதிவு இயக்கங்கள் அத்தனையையும் நிறுத்திக் கொள்ளும்படி இசி தெரிவித்திருக்கிறாம். சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா …
ரோஸ்மாவின் பெர்மாத்தாவைத் தற்காத்துப் பேசுகிறார் டிஏபி பிரதிநிதி
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் தலைமையில் செயல்படும் பெர்மாத்தாவின் சிறார் செறிவூட்டும் திட்டத்தைத் தற்காத்துப் பேச புதிதாக ஒருவர் வந்துள்ளார். அவர்தான் சிலாங்கூர் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இயோ பீ இன். டமன்சாரா உத்தாமா பிரதிநிதியான இயோ, சிறார்களின் தொடக்கநிலை பராமரிப்பிலும் கல்வியிலும்(இசிசிஇ) அரசாங்கம் செய்துள்ள முதலீட்டால் வரிச் …
எம் எச் 47மீதான அறிக்கை இன்று வெளியீடு
2014-இல் கிழக்கு யுக்ரேய்ன் வான்வெளியில் மலேசிய விமான நிறுவனத்தின் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்மீது விசாரணை நடத்திய அனைத்துலக சட்டக் குழு அதன் விசாரணை முடிவுகளை இன்று அறிக்கையாக வெளியிடும். ஆனால், அதில் சட்ட, அரசியல் சிக்கல்கள் காரணமாக சம்பத்துக்கு எந்தத் தரப்பும் பொறுப்பாக்கப்பட்டு குற்றம் சுமத்தப்படாது என்று …
திடீர் தேர்தல் இல்லை என்கிறார் பிரதமர், ஆனால்………..
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்ட ஆளும் அதிகாரம் 2018-இல் முடிவுக்கு வரும்வரையில் திடீர் தேர்தல் நடப்பப்போவதில்லை என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெர்லினில் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது “எந்தவொரு தனிக் காரணத்துக்காகவும்” தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கில்லை என்று நஜிப் குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. ஆனால், …
ஜெர்மனிக்கு மேலும் அதிகமான மாணவர்களை அனுப்புவது குறித்து மலேசியா பரிசீலிக்கும்
மலேசியா மேல்படிப்புக்காக மேலும் அதிகமான மாணவர்களை ஜெர்மனிக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். இப்போதைக்கு 634 பதிவுபெற்ற மலேசிய மாணவர்கள் ஜெர்மனியில் கல்வி பயின்று வருகின்றனர். “ஜெர்மனியில் டியுஷன் கட்டணம் இலவசம் என்று அறிகிறேன். மொழி ஒன்றுதான் பிரச்னை. மாணவர்கள் ஜெர்மன் …
தியான் சுவா தேச நிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரை தேச நிந்தனைக் கருத்துகளைக் கொண்டது என கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தியான் சுவா பயன்படுத்திய சொல்கள் தேச நிந்தனைச் சட்டம் பகுதி4(1) (பி)-இன்படி நிந்தனைக்குரியவை என நீதிபதி சுல்கர்னைன் ஹசான் …
ஆண்டு இறுதிக்குள் புதிய எதிரணிக் கூட்டணி அமையும்: முகைதின் கணிப்பு
ஊழல் நிரம்பிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆளும் கட்சியிலிருந்து அதிகமான உறுப்பினர்கள் வெளியேறி வருவதால் ஆண்டு இறுதிக்குள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி அமைக்க முடியும் என முகைதின் யாசின் நம்புகிறார். புதிய கூட்டணி, பில்லியன் -டாலர் ஊழல் புரிந்துவிட்டு என்னதான் நெருக்குதல் கொடுத்தாலும் பதவியைவிட்டு அகல …
அன்வார் பிரதமராவதையே ஹராபான் விரும்புகிறது- புவா
பிரதமருக்கான பக்கத்தான் ஹராபானின் வேட்பாளர் அன்வார் இப்ராகிம்தான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்கிறார் டிஏபி பிரச்சாரப் பகுதித் தலைவர் டோனி புவா. ஹராபானின் புதிய தோழமைக் கட்சியான பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) ஆலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் …
வாக்காளராக பதிய பணம் கொடுப்பது பரிதாபகரமானது என்கிறது பெர்சே; அது…
பணம் கொடுத்து வாக்காளர்களாக பதிவுசெய்ய ஊக்கமளிப்பது நாட்டின் “பரிதாபத்துக்குரிய நிலையை”ப் பிரதிபலிப்பதாக பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா வருணித்தார். “வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதை ஊக்குவிக்கிறோம். ஆனால் , அதற்காக பணம் கொடுப்பதோ போட்டி வைப்பதோ சரியல்ல. “அது (பணம் கொடுப்பது) பரிதாபகரமானது”, என பெட்டாலிங் ஜெயாவில் …
குவான் எங்: ஜிஎஸ்டி-யால் சில தொழில்கள் ஆதாயம் பெற முடியாமல்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். அவ்வரியால் சில தொழில்கள் ஆதாயம் காண முடியாமல் போனது என்றாரவர். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2017 பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது தம் பொருளாதாரக் கொள்கை தோற்றுப்போனதை …
ஜோகூர் அரச குடும்பத்தைப் பழித்துரைத்த மேலும் ஒரு முகநூல் பயனர்…
ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதிக்கும் வகையில் முகநூலில் கருத்துப் பதிவு செய்திருந்த 25-வயது ஆடவர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பத்து காஜாவைச் சேர்ந்த அவர் கோலாலும்பூரில் செய்யப்பட்டார். அவர் விசாரனைக்காக ஜோகூருக்கு அழைத்து வரப்படுவார் என ஜோகூர் போலீஸ் தலைவர் வான் அஹ்மட் நஜ்முடின் …
பினாங்கு தயாரிப்புத் துறையில் ஆள்குறைப்பு தொடர்கிறது
பினாங்கு மாநிலத்தில் தயாரிப்புத் துறையில் மேலும் சுமார் 200 பேர் விரைவில் வேலை இழப்பர். டெக் செங் ஹோல்டிங்ஸ் துணை நிறுவனமான டிஎஸ் சோலார்டெக் சென். பெர்ஹாட் நாளை அதன் பணியாளர்களில் பலர் வேலை இழக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக பிசினஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது. தேவைக்குமேல் பணியாளர்கள் இருப்பதால் ஆள்குறைப்பு …
மகாதிர்: எதிரணி வென்றால் முகைதின் பிரதமராவார்…… ஆனால்
14வது பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இடைக்காலத் தலைவர் முகைதின் யாசின் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். “இப்போது பிரதமர் யார் என்று அறிவிப்பது சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். அது கட்சியைப் …
பிடிபிடிஎன்: கடன் வாங்கியவர்கள் வரலாம் கலந்தாலோசிக்கலாம்
தேசிய உயர்க் கல்விக் கடனுதவி நிதி நிறுவன (பிடிபிடிபிஎன்) த்திடம் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கினால் அது குறித்து பிடிபிடிஎன்னுடன் நேரடியாக கலந்து பேசலாம். பிடிபிடிஎன் அவர்களின் சிரமங்களைக் குறைக்க முயலும். பிடிபிடிஎன் அறிக்கை ஒன்று, கடனைத் திரும்பப் பெற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்தத் …
நோ ஒமார், நீர் விநியோகத் தடையை அரசியலாக்கக் கூடாது
சிலாங்கூரைத் தொல்லைக்குள்ளாக்கியுள்ள நீர் விநியோகத் தடையை வைத்து அரசியல் ஆட வேண்டாம் என அமைச்சர் நோ ஒமாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி நோ ஒமார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியை மட்டம் தட்டவும் சுய அரசியல் ஆதாயம் தேடவும் முனைந்துள்ளார் என டமன்சாரா உத்தாமா சட்டமன்ற …
குவான் எங்: பினாங்கில் நீர்ப் பங்கீடு அவசியமில்லை
பினாங்கில் நீர்ப் பங்கீட்டுக்கு அவசியமில்லாதபடி நீர் விநியோகம் தடையின்றிக் கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும். வறட்சிக் காலத்தில்கூட பினாங்கில் நீர்ப் பங்கீட்டை அமல்படுத்தியதில்லை என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இதற்கு பினாங்கு நீர் விநியோக கார்ப்பரேசனின்(பிபிஏபிபி) திறமையான நிர்வாகம்தான் காரணம். “பல மாநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன. …


