மர்தியா ஜொஹாரி கூறுகையில், 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு DAP மற்றும் PH கட்சிகளுக்கு UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது, இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்றார். PAS பிரதிநிதி மர்தியா ஜோஹாரி கூறுகையில், UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது மௌனம் காத்த DAP, தற்போது விடுத்துள்ள அழைப்பு…
மலாய்க்காரர்கள் நஜிப்பையும் அம்னோவையும் ஆதரிக்கிறார்களா? யார் சொன்னது? ரபிசி வினவுகிறார்
அண்மையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தேர்தல் தொகுதிச் சீரமைப்பு நடவடிக்கை மலாய் வேட்பாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளை அதிகமாக உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று பலரும் கவலை தெரிவித்தார்கள். ஆனால், பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லிக்கு அந்தக் கவலை இல்லை. “மலாய்க்காரர்களை ஒன்று சேர்ப்பதன் மூலமாகவும் சீனர்கள் …
சமூக வலைத்தளச் செய்திகள் வேத உண்மைகள் அல்ல: ஜாஹிட்
வெளிநாடுகளில் உள்ள மலேசிய மாணவர்கள் வெளிவரும் செய்திகளைக் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் செய்திகளை அப்படியே நம்பிவிடக் கூடாது என்று துணைப் பிரதமர் ஜாஜிட் ஹமிடி கூறினார். சொல்லப்படுவதெல்லாம் உண்மைதானா என்பதை நுணுகி ஆராய வேண்டும். சமூக வலைத்தளங்களில் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை, மலேசியாவில் உள்ள வங்காள தேசிகள் …
1எம்டிபி மீது நூல்: ரியுகாசல் எழுதுகிறார்
1எம்டிபி ஊழல்களை விவரிக்கும் ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கும் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேய்ர் ரியுகாசல்- பிரவுன், தம் புலனாய்வு இதழியல் வாழ்க்கையில் அதுவே மிகப் பெரிய சாதனையாக அமையும் என்று நம்புகிறார். “இப்போதைக்கு நான் சரவாக் ரிப்போர்டில் எழுதுவது கொஞ்சமாக இருக்கலாம் ஏனென்றால், 1எம்டிபி புலனாய்வு குறித்த …
தான் ஊழல் செய்யவில்லை என்று நம்பும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்…
டிஏபி 50ஆம் ஆண்டு நிறைவு விருந்துபசரிப்பில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களும் ஆதரவாளர்களும் தலைமைச் செயலாளர் லிம்-முக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். நேற்றிரவு பாயான் பாரு ஸ்பைஸ் அரினா-வில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டார்கள். அதில் ரிம12,144.30 நன்கொடையும் திரட்டப்பட்டது. விருந்து முடிவில் லிம்முக்கு …
கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனுக்குக் கைது ஆணை: இந்தியா பிறப்பித்தது
புது டில்லி நீதிமன்றம் ஒன்று மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிரூஷ்ணனையும் அவரின் உதவியாளர் ரால்ப் மார்ஷலையும் பிடிப்பதற்குக் கைதாணை வெளியிட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் இண்டர்போலின் உதவியும் நாடப்பட்டுள்ளது. கடந்த ஈராண்டுகளாக அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு மலேசிய அதிகாரிகள் ஒத்துழைக்காததால் கைது ஆணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது …
நஜிப்: மற்றவர்களை வெறுப்புக்குரியவர்களாக சித்திரிப்பது எளிது, ஆனால் அது மகா…
“வெறுப்பு அரசியலை”க் கண்டித்துப் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அது நாட்டுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவராது என்றார். “எதிர்தரப்பு வெறுப்பு அரசியலை வைத்துதான் விளையாடுகிறார்கள். அவர்கள் நல்ல திட்டங்களை முன்வைப்பதில்லை”, என நஜிப் தெரிவித்தார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. “மற்றவர்களை வெறுப்புக்குரியவர்களாக சித்திரிப்பது எளிது. ஆனால், அது …
தேர்தல் தொகுதிச் சீரமைப்புக்கு எதிராக சிலாங்கூர் சட்ட நடவடிக்கை
சிலாங்கூர் அரசு, தேர்தல் தொகுதிச் சீரமைப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் (இசி) தகுந்த விளக்கமளிக்கத் தவறியதால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. குறிப்பாக, தொகுதிச் சீரமைப்பு அரசமைப்பில் சொல்லியபடிதான் மேற்கொள்ளப்பட்டதா என்று சிலாங்கூர் அரசு அறிந்துகொள்ள விழைந்தது. “நேற்று இசி பதில் அனுப்பியிருந்தது. ஆனால், …
‘எனக்குக் கடனட்டைகள் மூலம் பண உதவியா?’- சிரிக்கிறார் சரவாக் ரிப்போர்ட்…
சரவாக் ரிப்போர்ட் செய்தியாசிரியர் கிளேய்ர் ரியுகாசல்- பிரவுன், மூடி மறைக்கப்படும் தகவல்களை அம்பலப்படுத்தும் தம்முடைய வலைத்தளத்தை நடத்த நிறைய பணம் பெறுவதாகக் கூறப்படுவதைக் கேட்டு வாய்விட்டுச் சிரிக்கிறார். அவர், அடையாளம் தெரியாதவர்களின் கடனட்டைகள் மூலமாக வலைத்தளத்தை நடத்துவதற்குத் தேவையான பணத்தைப் பெறுகிறார் என ஒரு புதிய இணையச் செய்திதளமான …
தொகுதிச் சீரமைப்பை அடுத்து நோ ஒமார்தான் சிலாங்கூரின் அடுத்த எம்பி:…
தேர்தல் ஆணைய(இசி)த்தின் தொகுதிச் சீரமைப்புத் திட்டம் அமல்படுத்தப்படுமானால் சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமார்தான் அம்மாநிலத்தின் அடுத்த மந்திரி புசார் என சிலாங்கூர் வாக்காளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். “சிலாங்கூரில் பிஎன் பொதுமான இடங்களைக் கைப்பற்றும் பட்சத்தில் நோ ஒமார்தான் மந்திரி புசாராவார் என்பது தெளிவு. “நம் பிள்ளைகளின் கல்விக்கு முன்னுரிமை …
நேற்றைய முக்கிய செய்திகளின் சுருக்கத் தொகுப்பு
முன்னாள் ஏஜி மெளனம் கலைந்தார் தாம் சட்டத்றைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரை மெளனம் காத்து வந்த முடிவாக, அப்துல் கனி பட்டேய்ல் முடிவாக அது பற்றிக் கருத்துரைத்துள்ளார். அப்பதவியிலிருப்ப்போரை நீக்குவது பிரதமரின் “விருப்புவெறுப்பை”ப் பொருத்தது என்றாரவர். இதனிடையே, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமரே …
தமது பதவி நீக்கம் சரியானதுதான், கனி வாய் திறந்தார்
ஒரு வருடத்திற்கு முன்பு பதவியிலிருந்து நீக்கப்பட்ட சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில், தமது பதவி நீக்கம் அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்பட்டது என்று இன்று கூறினார். மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கனி அவரது பதவி நீக்கம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
சட்ட ஆளுமையைப் பின்பற்றாதவர் நஜிப், மகாதிர் கூறுகிறார்
சட்ட ஆளுமையைப் பின்பற்றாதவர் பிரதமர் நஜிப்தான், மக்கள் அல்ல என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார். மகாதிரின் தலைமையிலான மக்கள் பிரகடனத்தை பேரரசர் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம் அது அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்றவாறு இல்லாததிருப்பதுதான் நஜிப் தெரிவித்திருந்த கருத்துக்கு மறுமொழியாக மகாதிர் இவ்வாறு கூறினார். நாடு எதிர்கொள்ளும் பல்வேறு…
‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக’ மூன்று வெளிநாட்டவரும் ஒரு மலேசியரும் கைது
சிலாங்கூரிலும் பகாங்கிலும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு மலேசியரையும் மூன்று வெளிநாட்டவரையும் போலீசார் கைது செய்தனர். மலேசியரான முகம்மட் வாண்டி முகம்மட் ஜெடி ஐஎஸ் தொடர்புள்ளவர் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். அவரே ஜூன் மாதம் பூச்சோங்கில் நிகழ்ந்த …
முன்னாள் மலாக்கா சிஎம்-முக்கு அபராதம் ரிம1,900 விதிக்கப்பட்டது சரியா?
சமூக வலைத்தளத்தில் எதிர்மறையான கருத்தைப் பதிவிட்டதற்காக ஆகக் கடைசியாக தண்டிக்கப்பட்டிருப்பவர் மலாக்காவின் முன்னாள் முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக். சிலாங்கூர் பட்டத்திளவரசர் தெங்கு அமிர் ஷா-வின் மனம் புண்படும் வகையில் கருத்துரைத்தார் என ரஹிம்மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மறுத்து எதிர்வாதம் செய்தார். முடிவில் அவருக்கு ரிம1,900 அபராதம் …
ஆர்ஓஎஸ்ஸில் ஷாபி: புதிய கட்சி உருவாகிறதா?
அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஷாபி அப்டால் இன்று புத்ரா ஜெயாவில் சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)த்துக்குச் சென்றார். ஒரு வேளை அவர் புதுக் கட்சி தொடங்குவதற்கு அங்கு சென்றிருக்கக் கூடும். சம்பூர்ணா எம்பி, காலை மணி 9.30க்கு ஆர்ஓஎஸ் கட்டிடத்துக்குள் நுழைய காணப்பட்டார். சாபாவில் ஒரு புதுக் கட்சியை அமைக்கப்போவதாக …
மேயர்: புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களுக்கு மக்கள் ஆதரவு
கோலாலும்பூரில் புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களைப் பொதுமக்கள் ஆதரிப்பதாகக் கூறுகிறார் மாநகர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அசீஸ். பங்சார், தாமான் துன் இஸ்மாயில் குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைத்த பின்னூட்டங்களிலிருந்து அது தெரிய வருவதாக மேயர் குறிப்பிட்டார். “பெரும்பாலோர் வாகன நிறுத்தக் கட்டண உயர்வை ஆதரிக்கிறார்கள். பத்திரிகைகள்தான் ஆதரிப்பதில்லை. எதிரணி …
ஒரே வகைப்பள்ளி, ஜோகூர் சுல்தான் மீண்டும் கூறுகிறார்
ஜோகூர்பாருவில் இன்று பின்னேரத்தில் சீன அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பில் மலேசியக் கல்வி அமைவுமுறையில் ஒரே வகைப்பள்ளியின் முக்கியத்துவதை ஜோகூர் சுல்தான் மீண்டும் வலியுறுத்தினார். நாட்டில் தேசிய ஒற்றுமை இன்னும் முழுமைபெறாமல் இருப்பது பற்றி கருத்துரைத்த சுல்தான் இதற்கு காரணம் பள்ளிகள் இனவாரியாகப் பிரிக்கப்பட்டிருப்பதுதான் என்றார்.…
தோட்டப்புறங்களின் வறுமை தொடர்கிறது, நம்பிக்கையற்ற வாழ்க்கையில் அதிக இந்தியர்கள்! –…
மலேசியர்களின் வளர்ச்சியை நாட்டின் மேம்பாட்டோடு ஒப்பீடு செய்யும் போது வறுமை நிலையில் உள்ளவர்களின் வளர்ச்சி கணிசமாக மாற்றம் கண்டுள்ளது. ஆனால், அதை நுண்ணியமாக பார்க்கையில் தோட்டப்புற மக்களின் வளர்ச்சி பின்னடைவில்தான் உள்ளது என்கிறது இவ்வாண்டின் ஒரு புதிய ஆய்வு. கஜானா ஆய்வு நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட…
டிஏபி: சிலாங்கூரில் திடீர் தேர்தல் தேவை; பின்னர் நடத்துவது அறிவுடைமையாகாது
தேர்தல் ஆணையம் தேர்தல் தொகுதிகளைச் சீரமைக்கும் பணியை முடிப்பதற்கு முன்பே சிலாங்கூரில் மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று டிஏபி வலியுறுத்துகிறது. நேற்று நடைபெற்ற டிஏபி அவசரக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா கூறினார். “தெருவில் போகும் யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்.…
மலேசிய வழக்குரைஞர் மன்றத்துக்குச் சட்ட ஆளுமைக்கான அனைத்துலக விருது
மலேசிய வழக்குரைஞர் மன்றத்துக்கு Union International des Avocats (UIA) என்னும் அனைத்துலக வழக்குரைஞர் சங்கம் சட்ட ஆளுமைக்கான விருதை வழங்கியுள்ளது. இதை மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் ஸ்டீபன் திரு இன்று கோலாலும்பூரில் 2016 அனைத்துலக மலேசிய சட்ட மாநாட்டில் அறிவித்தார். யுஐஏ உலகின் பழைமையான வழக்குரைஞர் …
மகாதிர் மன்னிப்பு கேட்கும் விவகாரம் குறித்து இனி பேச வேண்டாம்…
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் நூகா, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தம் தந்தையிடம் மன்னிப்பு கேட்கும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார். மகாதிர் அன்வாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை விடுத்தவரே நூருல் நூகாதான். “இந்த விவகாரத்தை இனியும் …
சுபாங் ஜெயாவிலும் பூச்சோங்கிலும் குடிநீர் விநியோகத் தடை
நேற்று பூச்சோங், பத்து 13, கம்போங் கினாங்கானில் குழாய் ஒன்று வெடித்ததால் சுபாங் ஜெயாவிலும் பூச்சோங்கிலும் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் நாளை இரவு 7.30க்குப் பிறகு குடிநீர் கட்டம் கட்டமாக திறந்துவிடப்படும் என்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்புத் தலைவர் …
தேர்தல் தொகுதி சீரமைப்புக்கு மசீச, கெராக்கான் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஆகப்…
மசீசவும் கெராக்கானும் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தொகுதி சீரமைப்புக்கு எவ்வளவுதான் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலனிருக்காது என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். “அவற்றின் தலைவர்கள் ‘ஒருமித்த கருத்து’ என்ற கோட்பாட்டைக் கைவிட்டு பிஎன்னின் உதவியாளர்கள்போலவும் கீழ்ப்படிந்து போவோராகவும் நடந்து கொள்வதால் அவற்றின்(மசீசவும் கெராக்கானும்) கருத்து எடுபடவா …


