அடுத்த வாரம் முதல் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' கொள்கையை பஹாங் அரசு அமல்படுத்தும் என்று மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இன்று தெரிவித்தார். மத்திய கிழக்கு மோதலால் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு குறித்த பொதுமக்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு…
மகாதிர்: மார்ச் 27-இல் ‘பிரதமரை வெளியேற்று’ கூட்டத்தில் கலந்து கொள்வேன்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மார்ச் 27-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தினார். முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் அது. அதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள பெருமக்களில் மகாதிர் முக்கியமானவர். “அதில் அவர்கள் பேசச் சொன்னால் பேசுவேன்”,…
‘யாரைக் கேட்டு தெரு மோட்டார் பந்தயத்துக்கு இடம் ஒதுக்குனீர்கள்?’- குடியிருப்பாளர்கள்…
கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசீஸ் தாமான் மெட்ரோபோலிடன் பத்து-வில் மொட்டார்-சைக்கிள் பந்தயங்களுக்கு இடமொதுக்கிக் கொடுக்க முன்வந்ததற்கு அப்பகுதிவாழ் குடியிறுப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோட்டார்-சைக்கிள் பந்தயங்களூக்காக ஒதுக்கப்படும் சாலை டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் எங்கின் வீட்டு வழியேதான் செல்கிறது. கூட்டரசுப் பிரதேச அமைச்சர் …
மகாதிர்: உண்மையை மூடிமறைக்கவே டிஎம்ஐ இணையத்தளம் முடக்கப்பட்டது
அரசாங்கம் “உண்மையை மறைக்கவே” த மலேசியன் இன்சைடர் இணையத்தளத்தை முடக்கிப் போட்டிருக்கிறது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “மக்களுக்கு உண்மை தெரிய வந்திடும் என்ற பயம் அரசாங்கத்துக்கு. அதனால்தான் முடக்கி வைத்தார்கள். தாங்கள் செய்வதை மூடி மறைக்கவே அப்படிச் செய்தார்கள். “நாட்டில் நடப்பதை மக்களுக்குத் …
முக்ரிஸ்: முகைதினை விலக்குவது ‘அம்னோவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி’யாகும்
இன்று நடைபெறும் அம்னோ உச்சமன்றம் அதன் துணைத் தலைவர் முகைதின் யாசினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிவித்த முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், அப்படி எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதுவே ‘அம்னோவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி’யாக அமையும் என்று எச்சரித்தார். இன்று பிற்பகல் …
ஆகாயப்படை விமானம் கோலா சிலாங்கூரில் அவசரமாக தரை இறங்கியது
இன்று காலை மணி 8.50 அளவில் அரச மலேசிய ஆகாயப் படையின் சிஎன்235 ரக போக்குவரத்து விமானமொன்று கோலா சிலாங்கூர் அருகில் சதுப்பு நிலத்தில் அவசரமாக தரை இறங்கியதில் தீப் பற்றிக்கொண்டது. அதில் எண்மர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாய் பெர்னாமா கூறியது. சுபாங் விமானத் தளத்தைச் …
நஸ்ரி: மகன் மந்திரி புசாராக நீடிக்கவில்லையே என்ற ஆத்திரம் மகாதிருக்கு
தம் மகன் முக்ரிஸ கெடா மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்றப்பட்டதைப் பெரிய அவமானமாகக் கருதுகிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அதனால்தான் எவ்வகையிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதில் குறியாய் இருக்கிறார் என …
ஜேபிஏ உதவிச் சம்பளம் இப்போது கல்விக் கடனாக மாறியுள்ளதாம்
பொதுச் சேவைத் துறை(ஜேபிஏ) உயர்த் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவிச் சம்பளம் வழங்கும் கொள்கையை நிறுத்திக் கொண்டிருக்கிறதாம். அதற்குப் பதில் இனி கல்விக் கட்னகள் மட்டுமே வழங்கப்படுமாம். டிஏபி-இன் சிரம்பான் எம்பி அந்தோனி லோக் இவ்வாறு கூறினார். இம்மாற்றம் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் தம்மைத் தொடர்பு…
முகைதினைத் தற்காத்துப் பேசினார் அம்னோ உதவித் தலைவர்
நாளை கூடும் அம்னோ உச்சமன்றம் கட்சித் துணைத் தலைவர் முகைதினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று வதந்திகள் பெருகிவரும் வேளையில் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால். முகைதின், கடந்த ஆண்டு துணைப் பிரதமர் பதவியிலிருந்து…
இக்லாஸ் தலைவரைக் கண்டித்தார் ஜோகூர் சுல்தான்
ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர், அம்மாநிலத்தில் ‘வேப்’ பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பிய மலேசிய சிறிய, நடுத்தர தொழில்முனைவர்கள் கூட்டமைப்பின் (இக்லாஸ்) தலைவர் முகம்மட் ரிட்சுவான் அப்துல்லாமீது அதிருப்தி தெரிவித்துள்ளார். “....இக்லாஸ் தலைவர் ஒரு மில்லியன் பெயர்களைத் திரட்டியிருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கிறார். எங்கே …
ஜோகூர் மக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக நஸ்ரி மன்னிப்பு கேட்க வேண்டும்
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினை தொல்லை தரும் ஒரு நாய் என்று கூறியதன்வழி அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ் முகைதினை மட்டுமல்லாமல் ஜோகூர் மக்கள் அனைவரையுமே அவமதித்து விட்டார். அதற்காக அவர் ஜோகூர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகோ அம்னோ இளைஞர் …
மகாதிர்: நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால்தான் பதில் கூறுவேன்
சட்டத்துறை தலைவர் (ஏஜி) பிரதமர் நஜிப்பை பாதுகாக்கிறார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அவரது வலைத்தளத்தில் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு தாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் மட்டுமே பதில் கூறுவேன் என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். மகாதிர் அவரது வலைத்தளத்தில் ஏஜி முகமட் அபாண்டி அலி குறித்து செய்திருந்த…
தாய்மொழி பயிலுவதை நிறுத்த திட்டமிட்டே கட்டம் கட்டமாக பல தடைகளை…
இடை நிலைப்பள்ளிகளில் தாய் மொழிக் கல்வி என்பது எட்டாதக் கனியாகிவிடுமோ என்று அஞ்வேண்டிய நிலையில் இந்திய சமுதாயம் இப்பொழுது உள்ளது என்று வருத்தப்படுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன். இது குறித்து தமக்குக் கிடைத்த புகார்கள் பற்றி கூறிய குலா, “நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இடைநிலைப்பள்ளிகளில்…
அஸாலினா: முகைதின் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் அல்லது பதவி…
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினின் நடத்தையால் வெறுப்படைந்துள்ள பிரதமர்துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான், ஒன்று முகைதின் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் நஜிப்பை எதிர்க்க வேண்டும் என்றார். “அவரது நடத்தை அடிநிலைத் தலைவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இல்லை. கட்சிக் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றால் …
இட்ரிஸ் ஜூசோ: பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்துவது பல்கலைக்கழகங்களைப் பொறுத்தது
பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டதன் விளைவாக பொதுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் 156-பேரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததற்கு அரசாங்கத்தைக் குறை சொல்லக்கூடாது என உயர்க்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ கேட்டுக்கொண்டிருக்கிறார். ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதும் புதுப்பிக்காததும் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தது. அதற்கான அதிகாரம் அவற்றுக்குத்தான் உண்டு. அமைச்சுக்கு இல்லை என்றாரவர். “அந்த அதிகாரத்தைப் பல்கலைக்கழகங்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.…
இந்தோனேசியாவில் 2019–குள் எல்லா சிவப்பு-விளக்குப் பகுதிகளையும் மூடிவிட திட்டம்
இந்தோனிசியாவில் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்கும் முயற்சியாக 2019-க்குள் எல்லா சிவப்பு-விளக்குப் பகுதிகளும் அழிக்கப்படும் என அந்நாட்டு சமூக விவகார அமைச்சர் கூறியதாக ஜகார்த்தா போஸ்ட் அறிவித்துள்ளது. அரசாங்கம் ஏற்கனவே 68 சிவப்பு- விளக்குப் பகுதிகளை மூடிவிட்டதாகக் கூறிய அமைச்சர் கொபிபா இந்தர் பரவன்சா, அடுத்த மூன்றாண்டுகளில் மேலும் 100 …
நேப்பாளத்தில் பயணிகள் விமானத்தைக் காணவில்லை
மேற்கு நேப்பாளத்தில், இரு வெளிநாட்டவர் உள்பட, 21 பேருடன் பயணித்த சிறு விமானம் ஒன்று மாயமானது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாரா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த Twin Otter ரக விமானம் 18 பயணிகளையும் மூன்று விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு காட்மண்டுவுக்கு 125…
‘நஸ்ரி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், கவலை இல்லை’- ரபிடா
அம்னோ கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய தம்மை ஒரு “செல்லாக்காசு” என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ் சாடியிருப்பதை ரபிடா அசீஸ் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. “சிலருடைய பேச்சு இப்படித்தான் இருக்கும். இதுதான் அவர்களுக்குத் தெரிந்த …
தெரு மோட்டார்-சைக்கிள் பந்தயத்துக்கு கூ.பி. அம்னோ இளைஞர்கள் வரவேற்பு
கோலாலும்பூர் தெருக்கள் சிலவற்றை மூடி மாட் ரெம்பிட் மோட்டார்-சைக்கி்ள் பந்தயத்துக்கு இடமளிக்கலாம் என்ற பரிந்துரையைக் கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர் பிரிவு வரவேற்றுள்ளது. அதன் தலைவர் ரஸ்லான் ரபி, அது சட்டவிரோத மோட்டார்-சைக்கிளோட்ட பந்தயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இளைஞர்கள் ஆக்ககரமான முறையில் பொழுதைக் கழிக்கவும் உதவும் என்றார். “மாட் …
தெரு மோட்டார் சைக்கிள் பந்தயம்: கூ நானுடன் ஐஜிபி பேச்சு…
கோலாலும்பூர் தெருக்களில் அமெச்சூர் மோட்டார்-சைக்கிள் பந்தயத்தை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்த கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூருடன் அது பற்றிக் கலந்துரையாடப் போவதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் தெரிவித்துள்ளார். “அவரால் அதை நியாயப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். முதலில் அவரைச் சந்ந்தித்துப் …
அறிவுரை சொல்லும் தகுதி இல்லை: ரபிடாவைச் சாடினார் நஸ்ரி
அம்னோ உச்ச மன்றம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ் அம்னோ அறிவுறுத்தியிருப்பதை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ் நிராகரித்தார். ரபிடா விரும்பியதைப் பேசலாம். ஆனால், அவருடைய பேச்சு எடுபடாது என நஸ்ரி கூறினார்.…
முகைதின் விலக்கப்பட்டபோது எல்லாருடைய சம்மதமும் கேட்கப்பட்டதா? சாலே-க்கு தியோ பதிலடி
முகைதின் யாசின் துணைப் பிரதமர் பதவியிலிருந்தும் முக்ரிஸ் மகாதிர் கெடா மந்திரி புசார் பதவியிலிருந்தும் அகற்றப்பட்டது பிஎன் பங்காளிக்கட்சிகளின் கருத்திணக்கத்துடன்தான் நடந்ததா? டிஏபி பிரச்சாரப் பிரிவு உதவிச் செயலாளர் தியோ நை சிங், தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்கை நோக்கி இக்கேள்வியைக் கேட்டிருக்கிறார். பினாங்கில் பிகேஆர் …
கோலாலும்பூரில் புதிய தங்குவிடுதிகள் கட்டப்படாது
அளவுக்கு அதிகமாக தங்குவிடுதிகள் இருப்பதால் புதிய தங்குவிடுதிகள் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதை கோலாலும்பூர் மாநகர் ஆட்சி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது. கூட்டரசு அரசாங்கத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசீஸ் த ஸ்டார் நாளேட்டிடம் தெரிவித்தார். கோலாலும்பூரில் 400…
எம்பி: விமர்சனங்களை ஒடுக்குவதற்காக எம்சிஎம்சி சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டு வராதீர்
நாடாளுமன்றம், அரசாங்கத்துக்கு எதிரான குறைகூறல்களை ஒடுக்கும் நோக்கில் தொடர்பு, பல்லூடகச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவரக் கூடாது என எதிரணி எம்பி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இப்புதிய திருத்தங்கள் அரசமைப்பு வழங்கும் கருத்துச் சுதந்திரத்துக்கு வேட்டு வைப்பதாக பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன் கூறினார். “இந்தத் திருத்தங்கள் வலைப்பதிவர்கள், டிவிட்டர், முகநூல், …


