மர்தியா ஜொஹாரி கூறுகையில், 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு DAP மற்றும் PH கட்சிகளுக்கு UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது, இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்றார். PAS பிரதிநிதி மர்தியா ஜோஹாரி கூறுகையில், UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது மௌனம் காத்த DAP, தற்போது விடுத்துள்ள அழைப்பு…
பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்கு வியாழக்கிழமை வீர வரவேற்பு
வியாழக்கிழமை நாடு திரும்பும் மலேசிய பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்குக் கோலாகலமான வரவேற்பு காத்திருக்கிறது. அவர்கள் பிற்பகல் மணி 2-க்கு கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்துசேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பூங்கா ராயா வளாகத்தில் அவர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். அதன்பின் அவர்கள் ஜாலான் துன் ரசாக்கிலிருந்து ஜாலான் அம்பாங்கில் …
இதோ பேராக்கின் ஏழைகள்: அமனா வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறது
கஜானா ஆராய்ச்சிக் கழகம் (கேஆர்ஐ) ஆய்வு நடத்தி பேராக்கில் வறுமை நிலவுவதாகக் கூறியிருப்பதை எக்காரணம் கொண்டும் மாநில அரசு மறுக்கவியலாது என பார்டி அமனா நெகாரா கூறியது. பேராக் அமனா துணைத் தலைவர் ஹஸ்னுல் சுல்கர்னைன், லாருட் தொகுதியில் மட்டும் “மிகவும் ஏழ்மைநிலைமையில்” உள்ள பலர் இருப்பது தெரிய …
சித்திக்கைக் கைது செய்ய கைதாணை தேவையில்லையா? ஐஜிபிக்கு வழக்குரைஞர்கள் மறுதலிப்பு
தொடர்பு, பல்லூடகச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் முன்னாள் செய்தியாளர் சித்திக் கமிசோ-வைக் கைது செய்ய கைதாணை தேவையில்லை என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியது தவறு என்று வழக்குரைஞர்கள் குறிப்பிட்டார்கள். “தொடர்பு, பல்லூடகச் சட்டம் பகுதி 258. ஒருவரைக் கைது செய்ய கைதாணை அவசியம் …
போலீஸ் நடத்திய அதிரடி துப்பாக்கி தாக்குதலில் பலியான ஐவருக்கு நீதி…
ஆகஸ்ட் 13, 2013 இல் அதிகாலை பினாங்கு, செஞ்சுரி கார்டன் அடுக்குமாடி வீட்டில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் பலியான 5 இளைஞர்களுக்கு நீதி கோரி பினாங்கு உயர்நீதி மன்றத்தில் ஆகஸ்ட் 18, 2016 இல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் மன்ற உறுப்பினர் என். கணேசன் தெரிவித்தார். இதில் கோபி…
என்எஸ்சி சட்டத்துக்கு எதிராக மகாதிர், அன்வார் கூட்டறிக்கை
டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அன்வார் இப்ராகிமும் தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)ச் சட்டத்தைக் கண்டித்துக் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கம் கொண்டுவந்த அச்சட்டம் ஜனநாயகக் கட்டமைப்புக்கு எதிரானது என்றவர்கள் கூறினர். “எங்கள் பார்வையில், போலீஸ், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், பேங்க் நெகரா …
தேர்தல் தொகுதித் திருத்தங்கள்மீது பிஎன்/அம்னோ சிறப்பு கூட்டங்கள்
அம்னோவும் பிஎன்னும் தேர்தல் ஆணையம் (இசி) முன்மொழிந்துள்ள தேர்தல் தொகுதிச் சீரமைப்புப் பரிந்துரைகள் குறித்து விவாதிக்க செப்டம்பர் 23-இலும், 30-இலும் சிறப்புக் கூட்டங்களை நடத்தும் என பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். அக்கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவு இசி-க்குத் தெரிவிக்கப்படும் என்றாரவர். “தொகுதிகளின் எண்ணிக்கையும் …
ஐநா பேரவையில் நஜிப் கலந்துகொள்ளாதது வழக்கத்துக்கு மாறானதல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஐநா பொதுப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது வழக்கத்துக்கு மாறானதல்ல என்கிறார் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. ஐநா கூட்டத்துக்குச் செல்லும் மலேசியப் பேராளர் குழுவுக்குத் தலைமைதாங்கும் பொறுப்பைத் துணைப் பிரதமருக்குக் கொடுப்பது புதிதல்ல. பல நாடுகள் அதைத்தான் செய்துள்ளன என்றாரவர். “வெளியுறவு …
சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்துவது குறித்து ஹராபான் ஆராய வேண்டும்:…
சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்தலாமா என்று பக்கத்தான் ஹராபான் ஆராய வேண்டும். சிலாங்கூரில் ஆட்சி அதிகாரம் மீண்டும் அம்னோவின் கைக்குச் செல்லும் வகையில் தேர்தல் ஆணையம் (இசி) தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்திருப்பதால் அவ்வாறு செய்வது அவசியமாகிறது என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் …
கெடா எம்பி உடல்நலத்துடன் உள்ளார்: கெடா அம்னோ வலியுறுத்து
கெடா மந்திரி புசார் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா உடல்நலமற்றிருப்பதாகக் கூறப்படுவதை கெடா அம்னோ மறுத்தது. அஹ்மட் பாஷா உடல்நலம் குன்றியிருக்கிறார் என்பது வெறும் வதந்தி. தீய நோக்கத்துடன் அப்படி ஒரு வதந்தி பரப்பப்பட்டு வருவதாக கெடா அம்னோ இளைஞர் தலைவர் சைபுல் ஹஸிஸி சைனோல் அபிடின் கூறினார்.…
அலி திஞ்சுமீது விசாரணை நடக்கும், அதே வேளை விவகாரத்தை அரசியலாக்க…
இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி), காலிட் அபு பக்கார் போலீஸ் விசாரணைகளை “அரசியலாக்க வேண்டாம்” என எச்சரித்துள்ளார். குறிப்பாக, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு மரண எச்சரிக்கை விடுத்த முன்னாள் படைவீரர் முகம்மட் அலி பஹாரோமுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய கூலாய் …
குடிமக்கள் பிரகடனம் மலாய் ஆட்சியாளர்களை சந்திக்கும் நோக்கம் கொண்டுள்ளது
குடிமக்கள் பிரகடனம் குழுவினர் சீர்திருத்தங்களை கோரும், பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றுவது உட்பட, தங்களுடைய மனுவை மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திடம் தாக்கல் செய்யவிருக்கின்றனர். குடிமக்கள் பிரகடனத்தின் பிரதிநிதியை சந்திக்க இணங்கும் எந்த ஒரு மலாய் ஆட்சியாளரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த செய்தியாளர் காடிர்…
நியு யோர்கை அதிரவைத்த குண்டு வெடிப்பு; 29 பேருக்குக் காயம்
நேற்றிரவு நியு யோர்க், மேன்ஹட்டனில் ஷெல்சி குடியிருப்புப் பகுதிக்கு அருகில் நிகழ்ந்த ஒரு குண்டு வெடிப்பில் சுமார் 29 பேர் காயமடைந்தனர். அதிகாரிகள் அதை ஒரு கிறிமினல் செயலாகத்தான் கருதுகிறார்கள். அவ்வெடிப்புக்குப் பின்னணியில் ஒரு நோக்கம் இருப்பது தெரிகிறது என மேயர் பில் டி பிளாசியோ கூறினார். ஆனால், …
நான்கு மாநிலங்களில் எம்பிகள் மாற்றப்படலாம்
14வது பொதுத் தேர்தலில் பிஎன் அதிகாரம் மேலும் சரிவு காண்பதைத் தடுக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாற்றங்களில் நான்கு மாநிலங்களில் மந்திரி புசார்களை மாற்றுவதும் அடங்கும் என ஆங்கில நாளேடான த ஸ்டார் கூறியது. பாகாங், திரெங்கானு, கெடா, நெகிரி …
மகாதிர்- பேரரசர் சந்திப்பு குறீத்து ராஜா பெட்ரா கூறும் அனைத்தும்…
ஒரு வலைப்பதிவரான ராஜா பெட்ரா கமருடின், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் பேரரசருக்குமிடையிலான சந்திப்பின்போது நிகழ்ந்ததாகக் கூறியுள்ள அத்தனையும் அப்பட்டமான பொய் என அம்னோ பத்து கவான் தொகுதி முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் சாடியுள்ளார். ராஜா பெட்ராவை “ஒரு பொய்யர்” எனக் குறிப்பிட்ட …
சட்டச் சீரமைப்பு (எல்ஆர்எ), அரசு அனைத்துத் தரப்பினர்களின் கருத்தையும் பெற…
நான்கு நாட்களுக்கு முன்பு, புத்த, கிறிஸ்த்துவ, இந்து, சீக்கிய மற்று தாவ் ஆகியவற்றின் ஆலோசனை மன்றத்தின் செயலாளர் பிரேமதிலகா செரிசெனா அரசாங்கம் முன்மொழிந்துள்ள சட்டச் சீரமைப்பு (திருமணம் மற்றும் மணவிலக்கு) சட்டம் 1976 (எல்ஆர்எ) ஐ பார்க்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை என்று கூறியுள்ளார். நேற்று, கெராக்கான்…
‘இசி பல இனத் தொகுதிகளை மலாய் தொகுதிகளாக மாற்றி அமைத்துள்ளது’
தேர்தல் ஆணையம் (இசி) தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதாகக் கூறிக்கொண்டு பல இனங்கள் கலந்திருந்த தொகுதிகளை ஒழித்துவிட்டு அங்கெல்லாம் மலாய்த் தொகுதிகளை உருவாக்கியிருப்பதாக ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் குற்றஞ்சாட்டுகிறார். தமது சட்டமன்றத் தொகுதி ஸ்ரீஅண்டாலாஸ் அதற்கோர் எடுத்துக்காட்டு என அந்த பிகேஆர் உதவித் தலைவர் கூறினார்.…
நஜிப்: ஹருன் டின் இறப்பு மலேசியாவுக்குப் பேரிழப்பு
இன்று காலை மரணமுற்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் ஹருன் டினின் மறைவுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இரங்கல் தெரிவித்துக் கொண்டார். “நாட்டுக்கு நிறைய பங்களிப்புச் செய்துள்ள, நான் மிகவும் மதிக்கும் ஒரு இஸ்லாமியத் தலைவரை மலேசியா இழந்து விட்டது. “தனிப்பட்ட முறையில் நானும் என் குடும்பத்தாரும் நெருக்கமான …
குடிமக்கள் பிரகடனம் பேரரசரிடம் ஒப்படைப்பு
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் மு’வாட்சம் ஷாவைச் சந்தித்து அவரிடம் குடிமக்கள் பிரகடனத்தைச் சேர்ப்பித்தார். அச்சந்திப்பு நேற்று மாலை கெடாவில், இஸ்தானா அனாக் புக்கிட்டில் நிகழ்ந்ததாக மகாதிருக்கு அணுக்கமான வட்டாரம் தெரிவித்தது. “அது இருவருக்குமிடையில் மட்டும் …
கெராக்கான்: மதமாற்ற விவகாரத்துக்குத் தீர்வுகாணும் சட்டமே விவகாரத்துக்குரியதுதான்
சிறார்களை ஒருதலைப்பட்சமாக மதமாற்றுவதால் எழும் விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக சட்டச் சீரமைப்பு (திருமணம், மணவிலக்கு)ச் சட்டம் 1976-க்குக் கொண்டுவரப்படும் திருத்தங்களால் ஆகப் போவது எதுவுமில்லை என்கிறார் கெராக்கான் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் எண்டி யோங். “கவனமாக ஆராய்ந்து பார்த்ததில் சட்டமுன்வரைவை மேலும் சீரமைக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வந்தோம்”, …
கேஎல்-இலும் திரெங்கானு-விலும் எல்லா நாடாளுமன்ற தேர்தல் தொகுதி எல்லைகளையும் மாற்றுவதற்குப்…
கோலாலும்பூரின் 11 நாடாளுமன்றத் தொகுதி எல்லைகளையும் திருத்தி அமைப்பதற்குத் தேர்தல் ஆணையம்(இசி) பரிந்துரைத்துள்ளது. திரெங்கானுவிலும் அதன் எல்லா எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் திருத்தி அமைக்கப்படும். அதிகமான தேர்தல் தொகுதிகள் திருத்தி அமைக்கப்படும் மாநிலமாக ஜோகூர் விளங்கும். அதன் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21 மாற்றத்துக்கு உள்ளாகும். அதற்கு அடுத்த …
‘சட்டவிரோத பேரணிகளில் பங்கேற்காதீர் அவை நம் நல்லிணக்கத்தைக் குலைக்கும்’
மலேசியர்கள் நாட்டின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் சட்டவிரோத பேரணிகள் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது. இன்று கோலாலும்பூரில் மலேசிய தினக் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் இவ்வாறு வலியுறுத்தினார். “மலேசிய மக்களாகிய நாம், சில தரப்பினர் ஏற்பாடு செய்யும் நாட்டின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் சட்டவிரோத பேரணிகள் போன்றவற்றில் …
பெரும்பான்மை கூடும் வாய்ப்பிருந்தாலும் தேர்தல் தொகுதி திருத்தி அமைக்கப்படுவதை புவா…
தேர்தல் ஆணையம் தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பது தமக்குச் சாதகமாக அமையும் என்றாலும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி அதை விரும்பவில்லை. அப்படித் திருத்தி அமைக்கப்படும் வேளையில் புவாவின் தொகுதி டமான்சாரா எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு அதன் வாக்காளர் எண்ணிக்கையும் இப்போதைய 85, 401-இலிருந்து 150,439 ஆக …
கூட்டணி அமைப்பதைவிட பிஎன்னை எதிர்ப்பதில் ஒத்துழைப்பதே முக்கியம்
அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலைத் கோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே கூட்டணியில் இருந்துதான் செயல்பட வேண்டும் என்ற அவசியமில்லை . கட்சிகள் ஒன்று சேர்வதைவிட ஒத்துழைப்பது அவசியம் என டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவு உதவித் தலைவர் சைரில் கீர் ஜோஹாரி கூறியதாக சினார் ஹரியான் தெரிவித்தது.…


