‘ஆடை அணியாத சக்கரவர்த்தியின் கதை நினைவிருக்கிறதா?’-ரபிடா

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அரசாங்கத்தின்  குறைபாடுகளைச்   சுட்டிக்காட்டினால்  குறை  கூறும்  அம்னோ  தலைவர்களை  நோக்கி  ‘ஆடை  அணியாத  சக்கரவர்த்தி  கதை  நினைவிருக்கிறதா’  எனக்  கேட்கிறார்  அம்னோ  மூத்த  தலைவர்  ரபிடா  அசீஸ். “ஒரு  மாறுபட்ட  கருத்தையோ  கேள்விகள்  கேட்பதையோ  அரசுக்கு  எதிரான  செயலாகக்  கருதுவது  எப்போதிருந்து? “ஒருவர் …

எதிரணியிடம் ஒத்த கருத்தில்லை, பிறகு எப்படி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவது?

உங்கள் கருத்து:  ‘ஐயா,  நீங்கள்  உங்களுக்குள்ளேயே  முட்டி  மோதிக் கொள்கிறீர்கள். பேசாமல்  பக்கத்தான்  ஹராபானைக்  கலைத்து  விடுங்கள்’. இயக்குனர்  பதவிகளை  இழந்த  பிகேஆர் மாநிலச்  சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு  பிகேஆர்  ஆதரவு அடிப்படையை ஆராய்வோன்:  பிகேஆர்  பிரதிநிதிகள்  தம்மைச்  சந்தித்தபோது  ஓன்றைச்  சொன்னதாகவும்  பிறகு  சட்டமன்றத்தில்  வேறு  விதமாக  நடந்து …

குவான் எங்: முதுகில் குத்துவோர் தரமற்றோர்

ஒரு  குழுவாக  இருந்து  எடுக்கப்பட்ட   நிலைப்பாட்டுக்கு  முதலில்  ஒத்துக்கொண்டு  பிறகு  கருத்தை  மாற்றிக்கொள்வோருக்கு  மதிப்புமில்லை, மரியாதையுமில்லை  என  பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்  கூறினார். பக்கத்தான்  ஹராபானில் “கெளரவமிக்க  ஆண்களும்  பெண்களும்”  ஒரு  குழுவாக  செயல்படுகிறார்கள்.  அதனால்தான்  ஒரு  மாநிலத்தை  ஆளவும் நிர்வாகம்  சம்பந்தப்பட்ட  முடிவுகள்  எடுக்கவும் …

சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்தது

சரவாக்கில்  நேற்றிரவு  5,769 ஆக  இருந்த  வெள்ள  அகதிகளின்  எண்ணிக்கை  இன்று  7,931 ஆக  உயர்ந்துள்ளது. துயர்த்துடைப்பு  மையங்களின்  எண்ணிக்கையும்  31-இலிருந்து  47 ஆக  உயர்ந்திருப்பதாக  சரசாக்   சிவில்  தற்காப்பு  அதிகாரி  சித்தி  ஹுஸைமா  இப்ராகிம்  தெரிவித்தார். கூச்சிங்கில்  நேற்றிரவு  8 துயர்த்துடைப்பு  மையங்கள்  இருந்த  இடத்தில்  இப்போது …

இயக்குனர் பதவி இழந்த பினாங்கு பிரதிநிதிகளுக்கு பிகேஆர் ஆதரவு

பிகேஆர்  துணைத்  தலைவர்  முகம்மட்  அஸ்மின், பினாங்கில்  மாநில  அரசு  தொடர்புடைய  நிறுவனங்களில்  இயக்குனர்  பதவிகளை  இழந்த  இரு  சட்டமன்ற  பிரதிநிதிகளுக்கு  ஆதரவுக்  கரம்  நீட்டும்  முடிவை   அக்கட்சியின்  அரசியல்  பிரிவு  நிலைநிறுத்தி  இருப்பதாக  இன்று  தெரிவித்தார். “அவர்களைத்  தற்காப்பது  என  அரசியல்  பிரிவு  முடிவு  செய்துள்ளது. அவர்களைப் …

சரவாக்கில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது

சரவாக்கில் பல  இடங்களில்  கடுமையான  மழை  பெய்து  வருவதன்  விளைவாக  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை  உயர்ந்து  வருகிறது. நேற்றிரவு  486ஆக  இருந்த  அந்த  எண்ணிக்கை  இப்போது  2,869 ஆகியுள்ளது. உயர்ந்துவரும்  வெள்ள  அகதிகளுக்காக  மேலும்  22  துயர்துடைப்பு  மையங்கள்  இன்று  காலை  திறக்கப்பட்டதாக   சரவாக்  சிவில்  தற்காப்புத்  துறை …

ஜாஹிட்டின் அன்னிய தொழிலாளர் முடக்க ‘நாடகத்தை’ பெர்காசா தலைவர் நம்பவில்லை

பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி,  புதிதாக  அன்னிய  தொழிலாளர்களைக்  கொண்டு  வருவது   முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக துணைப்  பிரதமர்  கடந்த  வெள்ளிக்கிழமை  அறிவித்ததை  நம்பவில்லை. “இந்த  நாடகத்தில்  மயங்கி  விடாதீர்.   பொதுமக்களின்  ஆத்திரத்தை  அடக்குவதற்குத்தான்  இந்த  இடைநிறுத்தம். “எப்படியோ  1.5மில்லியன்  வங்காள  தேச  தொழிலாளர்கள்  கொண்டுவரப்படுவார்கள்  என்றுதான்  தோன்றுகிறது”, என …

ஸைட் இப்ராகிம்: போலீஸ் படைத் தலைவரே, எனக்கும் சட்டம் தெரியும்!

பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்ற அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யும் பணியில் இறங்கியிருக்கும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் விடுத்திருந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளார். "எனக்கு சட்டம் தெரியும்.…

வெளிநாட்டுத் தொழிலாளர்களை கொண்டுவருவது முடக்கப்பட்டுள்ளது என்ற மலேசியாவின் அறிவிப்பு “கண்துடைப்பு”,…

மலேசியாவுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் திட்டம் முடக்கப்பட்டிருப்பதாக மலேசியா வெளியிட்டுள்ள அறிவிப்பை ஒரு "கண்துடைப்பு" என்று பங்காள தேச வெளிநாட்டவர் அமைச்சின் இடைக்காலச் செயலாளர் வர்ணித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தப்படி பங்காள தேச குடிமக்கள் மலேசியாவில் வேலை செய்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்று பேகம் சம்சுனாஹர் கூறியதாக…

தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் உலக தாய்மொழி தினக் கொண்டாட்டம்

உலக தாய்மொழி தினம் ஐக்கிய நாட்டு மன்றத்தின் அமைப்பான யுனெஸ்கோவால் 1999 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அத்தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 21 ஆம் தேதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியாவில் தமிழ் அறவாரியம் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாட்டை முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் செய்தது.…

ஆட்சிக்குழுவில் மாற்றம் இல்லை என்பதால் கெடா எம்பி ஆதரவாளர்கள் அதிருப்தி

கெடாவின்  புதிய  மந்திரி  புசார்  அஹ்மட்  பாஷா  முகம்மட்  ஹனிபாவின்  ஆதரவாளர்களுக்கு  அவர்  முன்னாள்  மந்திரி  புசாரால்  நியமிக்கப்பட்ட  ஆட்சிக்  குழுவின்  ஒன்பது  பேரையும்  அப்படியே  வைத்திருப்பது  பிடிக்கவில்லை. ஆட்சிக்  குழுவிம்  மாற்றம்  செய்யப்பட  வேண்டும்  என்பது  அவர்களின்  எதிர்பார்ப்பு.  மூன்று  உறுப்பினர்களையாவது  அகற்ற  வேண்டும்  என்று  அஹ்மட் …

பெர்சே டி-சட்டை தடைநீக்க மனு நிராகரிக்கப்பட்டது

பெர்சே 4  டி-சட்டைகளுக்கு  விதிக்கப்பட்ட  தடை  செல்லாதென  அறிவிக்கக்  கோரி  பெர்சே  செய்திருந்த  மனுவை  நிராகரித்த  ஷா  ஆலம்  உயர்  நீதிமன்றம்  அரசாங்கத்தின்  முடிவை  நிலைநிறுத்தியது. பெர்சே 4  டி-சட்டைகளுக்கும்   அதனுடன்  தொடர்புகொண்ட  அச்சடிக்கப்பட்ட  பொருள்களுக்கும்  தடை  விதிப்பது  அமைச்சரின்  அதிகாரத்துக்கு  உள்பட்டதே  என்று  நீதிபதி  தம்  தீர்ப்பில் …

WSJ குற்றச்சாட்டு பொய் என்றால் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுப்பீர்:…

வால்  ஸ்திரிட்  ஜர்னல்(WSJ)  மீண்டும்  சுமத்திய  குற்றச்சாட்டு  பொய்யாக  இருப்பின்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் உடனடியாக  அதன்மீது  சட்ட  நடவடிக்கை  எடுக்க  வேண்டும். “WSJ   இரண்டாவது  முறையாக  பொய்யான  குற்றச்சாட்டைக்  கூறியிருக்கும்  பட்சத்தில்  அதன்மீது  வழக்கு  தொடுக்குமாறு  மக்கள்  பிரதமரைக்  கேட்டுக்கொள்கின்றனர்”, என  அமானா  வியூக  இயக்குனர் …

1.5 மில்லியன் வங்காள தேசத் தொழிலாளர்கள் என்பது சரியல்ல என்கிறார்…

மலேசியா  1.5 மில்லியன்  தொழிலாளர்களை  வங்காள  தேசத்திலிருந்து  அழைத்து  வரப்போவதாகக்  கூறப்படுவதை  மறுக்கிறார்  மனித  வள  அமைச்சர்  ரிச்சர்ட்  ரியோட். இன்று  செய்தியாளர்  கூட்டம்  ஒன்றில்  பேசிய  ரிச்சர்ட்   1.5 மில்லியன்  வங்காள  தேசத்  தொழிலாளர்கள்  கொண்டுவரப்படுவர்  என்று  பரவலாக  பேசப்படுவது  “சரியல்ல”  என்றார். 1.5 மில்லியன்  என்பது …

பிரதமர்: மேற்கொண்டு பட்ஜெட் சீரமைப்பு தேவையில்லை

கச்சா  எண்ணெய்  விலை  பீப்பாய்க்கு  யுஎஸ்$30-க்கும் யுஎஸ்$40-க்குமிடையில்  நிலைத்திருக்கும்  என்று  தோன்றுவதால்  2016  பெட்ஜெட்டை  மேலும்  சீரமைக்க  வேண்டிய  அவசியம்  இருக்காது  என்று  நஜிப்  அப்துல்  ரசாக்  நினைக்கிறார். கச்சா  எண்ணெய்  விலை  பீப்பாய்க்கு  யுஎஸ்$30-க்கும்  கீழே  குறையுமானால்  பட்ஜெட்டை  மேலும்  சீரமைப்பது  பற்றி  அரசாங்கம்  ஆலோசிக்கக்  கூடும் …

மலேசியப் பொருளாதாரத்துக்கு சவால்மிக்க எதிர்காலம்

2015-இல்  ஐந்து  விழுக்காடு  வளர்ச்சியைப்  பதிவுசெய்த  மலேசியப்  பொருளாதாரத்துக்கு  உடனடி  எதிர்காலத்தில்  பல  சவால்கள்  காத்திருப்பதாக  பேங்க் நெகாரா  மலேசியா(பிஎன்எம்)  கூறுகிறது. “நாட்டுக்கு  வெளியில்  உறுதியற்ற நிலை  நிலவுவதாலும்  உள்நாட்டுப்  பொருளாதாரத்தில்  பல  சீரமைப்புகள்  செய்யப்படுவதாலும்  வளர்ச்சி  இறங்குமுகமாகலாம்”, என  மத்திய  வங்கி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.…

சீர் கொடுப்பது கசக்ஸ்தான் மரபு- நஜிப்பின் மருமகன் விளக்கம்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  மருமகன்  டனியார்  கெஸ்ஸிக்பயேவ்  2011-இல், தம்முடைய  நிச்சயதார்த்த  சடங்கின்போது  மணமகளுக்கு  “ஆடம்பரமான”  பொருள்கள்  சீராகக்  கொடுக்கப்பட்டது  கடுமையாகக்  குறைகூறப்பட்டாலும்  அப்படிச்  சீர்  கொடுப்பது  கசாக்ஸ்தான்  மரபு  என்று  விளக்கமளித்துள்ளார். அந்த  நிச்சயதார்த்த  சடங்கின்போது  “16 பீப்பாய்களில்”  அன்பளிப்புகள்  வழங்கப்பட்டதாக  முன்னாள்  பிரதமர்  டாக்டர் …

‘நாங்கள் வங்காள தேசிகள் அல்லவே, அதனால்தான் தடுக்கப்பட்டோம்’- எம்டியுசி காட்டம்

மலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ்  (எம்டியுசி)  உறுப்பினர்கள்  சுமார்  50  பேர்,   அடுத்த  மூன்றாண்டுகளில்  1.5 மில்லியன்  வங்காள  தேசத்  தொழிலாளர்களைக்  கொண்டுவரும்  திட்டத்திற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  இன்று மனிதவள,  உள்துறை  அமைச்சுகளுக்குமுன்  கூடினர். இன்று  காலை  மணி  10.30க்கு  அவர்கள்  அமைச்சகங்களுக்குள்  சென்று  மகஜர்  கொடுக்க  முனைந்தனர். அவர்களை …

கஞ்சா பற்றிய கட்டுரையை டிவிட்டரில் மறுபதிவு செய்த கேஜே-க்கு கண்டனம்

இளைஞர்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்  மலேசியாவில்  கஞ்சா  பயன்படுத்துவதைக்  குற்றமெனக்  கூறும்  சட்டத்தை  அகற்ற  வேண்டும்  என்று  மொழிந்ததைத்  தம்  டிவிட்டர்  பக்கத்தில்  எடுத்துரைத்த  இளைஞர்,  விளையாட்டுத்  துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடினை  அம்னோ- ஆதரவு  இணையத்தளமான MyKMU சாடியுள்ளது. அந்தக்  கருத்தை  தம்  டிவிட்டர்  பக்கத்தில்  வெளியிட்ட …

மகாதிர்: நான் நஜிப்பைக் குறை சொல்லலாம், லியோங் சிக் சொல்லக்கூடாதா?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறை  சொல்ல  தமக்கு   உரிமை  வழங்கப்படும்போது  முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  லிங்  லியோங்  சிக்குக்கு  அது  வழங்கப்படாதது  ஏன்  என்பதைத் தம்மால்  புரிந்து  கொள்ள  முடியவில்லை  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறியுள்ளார். நஜிப்பின்  அவதூறு  வழக்கைத் தள்ளுபடி  …

15 ஆண்டுகளாகிவிட்டன, தொழிலாளர்கள் வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை

  குறைந்த விலை வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்களில் 2001 ஆம் ஆண்டில் கையொப்பட்ட மொத்தம் 64 குடும்பங்கள் இன்று அக்குறைந்த விலை வீடு மேம்பாட்டாளருக்கு எதிராக போலீஸ் புகார் செய்தனர். கோலகுபு பாரு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அவர்கள் மொத்தம் 76 புகார்களைப் பதிவு செய்தனர். கடந்த 15…

பேங்க் நெகரா சுயேச்சையாகவே செயல்படும்: ஸெட்டி உறுதியாக நம்புகிறார்

ஸெட்டி  அஹ்தார்  அசீஸ்  பணி  ஓய்வு  பெற்ற  பின்னரும்  பேங்க்  நெகாரா  சுயேச்சையாகத்தான்  செயல்படும். ஸெட்டி  தாமே  இந்த  உத்தரவாதத்தை  அளித்தார். “பேங்க்  நெகாரா  இதுவரை  சுதந்திரமாகத்தான்  செயல்பட்டு  வந்துள்ளது”, என்று  இன்று  காலை  சஜானா கிஜாங்கில்  சந்தித்தபோது  அவர்  கூறினார். தமக்குப்  பிறகு  அரசியல்வாதி  எவரும்  பேங்க் …

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை என்று கேட்ட நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுவீர்:…

1.5 மில்லியன்  வங்காள  தேசத்  தொழிலாளர்கள்  தேவை  என்று  நிறுவனங்கள்  கேட்டிருப்பதாகக் கூறும்  உள்துறை  அமைச்சு  அந்த  நிறுவனங்களின்  பட்டியலை  வெளியிட  முடியுமா  என்று  சிறிய,  நடுத்தர  தொழில்முனைவர்  கூட்டமைப்பு(இக்லாஸ்)  சவால்  விடுத்துள்ளது. 1.5 வங்காள  தேசத்  தொழிலாளர்கள்  வருவதைத்  தொடக்கத்திலிருந்தே  இக்லாஸ்  எதிர்த்து  வந்துள்ளது. “நீங்கள்  வெளிப்படைத்தன்மையுடன் …