இன்னும் என்னவெல்லாமோ விலை உயரப் போகிறது

உங்கள் கருத்து  ‘ஏற்கனவே பலவித விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இது வேறு. பெட்ரோல் விலை உயர்வு எல்லா சேவைகளையும் பொருள்களையும் பாதிக்கும் என்பதால் எல்லாமே விலை உயரப் போகிறது’ டீசல் ரோன்95 20 சென் உயர்ந்தது ஸ்விபெண்டர்: 1மலேசியா பிரதமர் கூறுகிறார், பிஆர்ஐஎம்(பந்துவான் ரக்யாட்…

ஐஜிபி: பாக் சமட் போலீஸ் கண்ணில் படாமல் ‘பதுங்கி விட்டார்’

ஆகஸ்ட் 30-இல், டாட்டாரான் அருகே, சாங் சாகா மலாயா கொடி பறக்கவிடப்பட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவ போலீஸ் தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டைத் தேடி வருகிறது. நேற்றிரவு அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது சமட் அங்கில்லை என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…

பினாங்கு அம்னோ: தெங் மீண்டும் மாநில பிஎன் தலைவராகலாம், ஆனால்…….

தெங் சாங் இயோ மீண்டும் மாநில பிஎன் தலைவராவதில் பினாங்கு அம்னோவுக்கு  மறுப்பேதும் இல்லை, ஆனால் அவர் முதலில் மாநில கெராக்கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தெங், மாநில பிஎன்னின் நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார் என்று கூறிய பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், தெங் மாநில…

தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவ பினாங்கு அரசு முன்வந்தது

பத்து கவான் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு “ஒரு நல்ல தீர்வை”ப் பெற்றுத்தரும் முயற்சியில் பினாங்கு அரசு ஈடுபட்டுள்ளது. இரண்டு வாரங்களில் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என ஆகஸ்ட் நடுப்பகுதியில் அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர்  II பி.இராமசாமி கூறினார். ஆனாலும், அறிவிக்கை அனுப்பிய…

ஐயப்ப பக்தர் பழனிவேலு எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளியின் 3 ஏக்கர் நிலத்தை…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், செப்டெம்பர் 3, 2013. இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ம.இ.காவின்  தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கலின் போது போட்டியின்றி ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட  டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எனது வாழ்த்துகள்.   இந்திய சமுதாயம்  எல்லாவற்றிலும்  தோல்விக்கண்டு நிற்கும்  இவ்வேளையில், சமுதாய…

பக்காத்தான் கூட்டணியின் பதிவில் தாமதம் ஏன்? ஆர்ஓஎஸ் விளக்கம்

ஓர் அரசியல் கூட்டணியாக தன்னைப் பதிந்துகொள்ள மனுச் செய்த பக்காத்தான் ரக்யாட், தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தெரியப்படுத்தாத காரணத்தால் அது பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என சங்கப் பதிவகத் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறினார். பக்காத்தான் 2009-இல், கூட்டணியைப் பதிவுசெய்ய விண்ணப்பம் செய்தது. ஆனால், அதன்பின்னர்…

2,433 கள்ளக் குடியேறிகள் கைது

குடிநுழைவுத் துறை நாடு முழுவதும் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் 2,433 கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புத்ரா ஜெயா, சிரம்பான், கம்பார், மலாக்கா, ஜோகூர் பாரு, குவாந்தான், கூச்சிங் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாக த ஸ்டார் தெரிவித்தது. கைதானவர்களில் இந்தோனேசியர்களே அதிகம் என உள்துறை அமைச்சர்…

குண்டர் கும்பலுடன் பிஎன் தலைவர்கள் மூவருக்கு என்ன தொடர்பு?

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் “கேங் 36” ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பிஎன் தலைவர்கள் மூவர் கலந்துகொண்டதாகக்  கூறும் அனாமதேய கடிதம் குறித்து   ஒரு என்ஜிஓ போலீசில் புகார் செய்துள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதப்பட்ட அக்கடிதத்தை முகநூலில் கண்டெடுத்ததாகக் கூறிய தமிழர் நடவடிக்கைப் படையின் செயல்குழு…

இஓ ரத்துச் செய்யப்பட்டதில் குற்றத்தைத் தடுக்கும் பயனான கருவி பறிபோனது

அவசரகாலச் சட்டம்(இஓ) அகற்றப்பட்டதன்வழி போலீசார் குற்றங்களைத் தடுப்பதற்கு உறுதுணையாக இருந்த  ஒரு கருவியை இழந்து விட்டனர் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறுகிறார். “இப்போது இஓ இல்லாததால் முன்பு செய்ததைச் செய்ய முடியவில்லை. “சிறுசிறு குற்றவாளிகளைப் பிடிக்கலாம். ஆனால், ‘தலைகள்’ தப்பி விடுகின்றனர்”,…

பாஸ் இளைஞர்கள்: பிஎன்னுடன் கலந்துரையாடல் ஏன்?

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பின்னுடன் கலந்துரையாடல் நடத்த  ஆர்வம் காட்டுவது குறித்து பாஸ் இளைஞர் பகுதி கேள்வி எழுப்பியுள்ளது. “முன்பு பாஸ் தலைவரும் மற்றவர்களும் பிஎன்னுடன் பேச்சு நடத்த விரும்பியபோது கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அன்வார் அரசாங்கத்துடன் கலந்துரையாட மிகவும் ஆர்வம் காட்டுகிறாரே,…

டிபிகேஎல்-இக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோயில் ஆலோசனை

தங்க முக்கோணத்தில் உள்ள முனீஸ்வரர் ஆலய நிர்வாகக் குழு, கோயில் சிலைகளை அகற்றியதுடன் ஒரு பக்கத்து நிலத்தையும் எடுத்துக்கொண்ட கோலாலும்பூர் மாநகர் ஆட்சிமன்றத்துக்கு (டிபிகேஎல்) எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறது. அது எடுத்துக்கொண்டது அரசின் நிலம், அருகில் மேம்பாட்டுப் பணியில் ஈடுபடும் மேம்பாட்டாளருக்குச் சொந்தமானது…

குண்டர்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் ஜம்பு கேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்

நேற்று ஈப்போவில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் ஆகாயப்படை பணியாளர் எஸ்.ஜம்புகேசன்,39, குண்டர் கும்பல்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேற்று காலை மணி 7.15க்கு முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என த ஸ்டார் அறிவித்திருந்தது. “அவர் கொல்லப்பட்டதற்கு கேங் 04-க்கும் 08-க்குமிடையில் இடத்துக்காக நடந்த…

செயல்திட்டத்தைத் தாமதப்படுத்துவது ஏன்? பிரதமருக்கு பினாங்கு இண்ட்ராப் கேள்வி

பினாங்கு  இண்ட்ராப் தலைவர் கே.கலைச்செல்வம்,  இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான ஐந்தாண்டுச் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏன் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். “பிஎன் ஏமாற்றிவிட்டதா?” என்று பலரும் இண்டாராபைக் கேட்கிறார்கள் என்றாரவர். “செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன இடர்பாடு? பிஎன் அல்லது நஜிப் கொடுத்த…

போலீஸ்: டிபிகேஎல் பழுது பார்த்தது, உடைக்கவில்லை

கோலாலம்பூர், ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் 101 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்படுவதாகக் கூறும் செய்தியை போலீசார் மறுத்துள்ளனர். கோயிலின் அருகில் ஒரு நடைபாதையை சீர்படுத்துவதற்கு ஏதுவாக சில விக்கிரகங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டன என்று அவர்கள் கூறுகின்றனர். பழுது பார்க்கும் வேலையை மேற்கொண்டிருக்கும் டிபிகேஎல்…

முன்னாள் தலைமை நீதிபதி: அதிகமான தேர்தல் மனு செலவுத் தொகை…

தேர்தல் மனுக்களை விசாரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள் விதிக்கும் அதிகமான  செலவுத் தொகைகளை முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி ஆதரித்துப்  பேசியிருக்கிறார். தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு அவை உதவும் என்றும் அவர் கூறிக்  கொண்டார். அதிகமான செலவுத் தொகை தீவிரமாக இல்லாத மனுதாரர்களை தடுத்து நிறுத்தி  விடும் என…

கோயில் ‘உடைக்கப்பட்ட’ போது பத்து பேர் கைது (அண்மைய செய்தி)

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) ஜாலான் பி ரம்லியில் உள்ள 101  ஆண்டுகள் பழமையான கோவிலில் சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்த முயன்ற  போது மஇகா இளைஞர் தலைவர் டி மோகன், பிகேஆர் போராளி எஸ் ஜெயதாஸ்  உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து மணி நேரத்திற்கு…

மஇகா தலைவர்: டிபிகேஎல் உடைத்தது கடைகளை கோவிலை அல்ல

கோலாலம்பூர் ஜாலான் பி ரம்லியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தங்க முக்கோண முனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில், கோவில் தொடப்படாத  வரையில், மேற்கொள்ளப்பட்ட உடைப்பு வேலைகள் சரியானது தான் என்று  மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார். மஇகா தலைவராக போட்டியின்றி தேர்வு பெற்ற பின்னர் அந்தச் சம்பவம்…

அம்னோ குடும்பத்தில் பிறந்தவர், இன்று டிஏபி-இன் வளரும் நட்சத்திரம்

டயனா சோப்யா முகம்மட் டாவுட், அம்னோவில் தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.  ஆனால், இன்று அவர், கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளர். சட்டம் பயின்றவரான டயனாவுக்கு, பூமிபுத்ராக்களுக்கென்றே உள்ள யுஐடிம்-இல் ஏற்பட்ட அனுபவம் இதற்கு ஒரு காரணம். “எனக்கு யுஐடிஎம்-இல்…

பழனிவேல் போட்டியின்றி மஇகா தலைவராக தேர்வு

ஜி.பழனிவேல்  மஇகா தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.  இன்று நண்பகல் வேட்பாளர் நியமனம் முடிவு வந்தபோது அவருக்கு எதிராக எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. பழனிவேலை எதிர்ப்பார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் எஸ்.சுப்ரமணியம், அவரை வழிமொழிபவராக மாறியுள்ளார். பழனிவேல் 617 நியமனங்களைப் பெற்றார்.

கலந்துரையாடல் நடத்த அன்வார் முன் வந்ததை அம்னோ நிராகரிக்கிறது

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில்  விவாதிக்கப்படுவதற்குத் தேசியப் பிரச்னைகள் ஏதுமில்லை என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சொல்கிறார். "எல்லாம் வெறும் அரசியல். அன்வார் விவாதம் நடத்த விரும்பினால் அதனை  நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்." "அவரைப் பொறுத்த வரையில் எல்லாம் அரசியலே.…

கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆர் ஜெயதாஸ் கைது

கோலாலம்பூர், ஜாலான் பி.ரமலியில் அமைந்துள்ள ஓர் இந்து கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆரின் எஸ். ஜெயதாஸ் மற்றும் கோயில் பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அவ்விருவரும் தற்போது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவர்…

தமிழ்ப்பள்ளிகளுக்கு 2,000 ஏக்கர் நிலம்: ஏன் சீனப்பள்ளிகளைப் பின்பற்றவில்லை?

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 31, 2013.    2000 ஏக்கர் நிலத்தை பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் நிர்வகிக்கும் என்று இன்று அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.   கடந்த இரு வருடங்களாக இந்த நிலம் அரசியல் சார்புடையவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று நான் தொடர்ந்து…

நாடு மெர்தேக்காவைக் கொண்டாடும் வேளையில் எதிர்காலம் நன்றாக இல்லை என…

மலேசியாவின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்காது என பினாங்கு முதலமைச்சர்  லிம் குவான் எங் சொல்கிறார். காரணம் 'நாட்டில் தீவிரவாதப் போக்கும் இனவாதப் பிளவுகளும்' தொடருவதே  அதற்குக் காரணம் என அவர் சொன்னார். மலேசியர்கள் இன்று மெர்தேக்கா தினத்தைக் கொண்டாடும் வேளையில்  விடுத்துள்ள உரையில் லிம் அவ்வாறு கூறியிருக்கிறார். பொது…